மிழ்நாடு முதலமைச்சர் வெளிநாட் டிலிருக்கும் தருணத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் அவரது உறவினர்களுக்கும், நெருக்கமான பல இடங்களில் ரெய்டு நடத்த, 60 இன்னோவா கார்களில் வந்து இறங்கினர் வருமான வரித்துறை அதிகாரிகள்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்கு வரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித்தருவதற்கு லஞ்சம் வாங்கிய தாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. மேலும், தற்போது தமிழக மின்துறை, கலால்துறை, ஆயத்தீர்வை துறை அமைச்ச ராகவும் செந்தில் பாலாஜி உள்ளார். தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறையில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் மீது வரி ஏய்ப்புப் புகாரும் வருமான வரித்துறைக்கு வந்துள்ளது. இவை இரண்டுக்குமான ஆவணங்கள் கிடைக் குமா என்ற அடிப்படையில் நடைபெற்றதுதான் இந்த சோதனை.

ss

Advertisment

கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே ராமேஸ்வரப்பட்டியிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வீட்டிலும், கரூரில் தம்பி அசோக் வீட்டிலும், ராமகிருஷ்ண புரத்திலுள்ள அமைச்சர் இல்லத்திலும் அதிகாரி கள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் ஸ்ரீகணேசன் முருகன் பஸ் சர்வீஸ் உரிமையாள ரான குணசேகரன் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகள், “"நீங்கள் சோதனைக்கு ஒத்துழைப்புத் தருகிறோம் என்று சொன்னீர்கள். ஆனால் கடைசி நேரத்தில் தொண்டர்களைத் திரட்டி தகராறு செய்கிறீர்கள்''’என்று கூறிவிட்டு எஸ்.பி. அலுவலகத்திற்குச் சென்றனர். இது குறித்து நாம் குணசேகரனிடம் பேசியபோது, “"அலுவலகத்திலிருந்து எதுவும் கைப்பற்றப்பட வில்லை. ஆனால் எங்கள் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தராமல் தொண்டர்களைத் திரட்டி யுள்ளீர்கள் என்று எஸ்.பி. அலுவலகத்திற்குப் புகார் அளிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்றுள்ள னர்''’என்றார்.

வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்த உடனேயே, கரூர் மாநகராட்சிக் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் இல்லத்துக்கு வந்ததால் பரபரப்பு எழுந்தது.

கரூர் ராமகிருஷ்ணபுரத்திலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டிற்குள் சுவரேறிக் குதித்து 4 அதிகாரிகள் நுழையும்போது, காரிலிருந்து ஒரு பையை எடுத்துக் கொண்டுவந்த காயத்ரி என்ற பெண் அதிகாரியை தி.மு.க. தொண்டர்கள் தடுத்து நிறுத்தி "பையில் என்ன உள்ளது?' என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டதில் அவர் கீழே விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். தொண்டர்கள், ssவருமான வரித்துறை அதிகாரியின் காரை உடைத்து சேதப் படுத்தினர். இதனால், வருமான வரித்துறை அதி காரிகள் சோதனையிடாமலேயே திரும்பிச் சென்றனர்.

ஐ.டி. அதிகாரி காயத்ரி உள்ளிட்ட 8 அதி காரிகள், தங்கள் மீது தாக்குதல் நடந்ததாகக் கூறி மருத்துவமனையில் சேர, அவர்கள் தற்போது ஐ.சி.யு.வில் சிகிச்சை பெறுவதுபோல் செட்டப் செய்து, அவர்களுக்கு துணை ராணுவப்படை பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. மாநகராட்சி துணைமேயர் தாரணி சரவணன் வீட்டில் சோதனை செய்ய முயன்ற அதிகாரிகளை தி.மு.க.வினர் தடுத்துநிறுத்தியதால், வீட்டைப் பூட்டி சீல் வைத்து அதற்கான நோட்டீசை அதிகாரிகள் சுவரில் ஒட்டிவிட்டுச் சென்றனர். இதையறிந்த மேயரின் ஆதரவாளர்கள் மேயரின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் கொங்கு உணவக உரிமையாளர் மணி, காளி பாளையம் பெரியசாமி ஆகி யோரின் வீடுகளில் சோதனை மேற்கொள்ள வந்த வரு மானவரித்துறை அதிகாரி களை தி.மு.க.வினர் விரட்டினர். இதனால், அந்த பகுதிகளில் சோதனை நடத்தாமல், அதிகாரிகள் திரும்பிச்சென்றனர்.

கோவையில் அமைச்சர் செந்தில் பாலா ஜிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்கள் மற்றும் நண்பர்களுக்குச் சொந்தமான 22 இடங்களில் சோதனை நடைபெற்றது. கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் செந்தில் பாலாஜியின் ஆதர வாளரான செந்தில் கார்த்திகேயனின் வீடு மற்றும் அலுவலகங்களில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினார்கள்.

பொள்ளாச்சி அருகேயுள்ள காளியா புரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நண்பர் அரவிந்தின் பண்ணை வீடு மற்றும் கிணத்துக் கடவு அருகேயுள்ள பணப்பட்டியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினருடைய கல்குவாரி யிலும் சோதனை நடைபெற்றது.

கரூரில் தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வருமான வரி சோதனையை அதி காரிகள் நிறுத்தினர். சோதனைக்கு வந்த அதி காரிகளை தி.மு.க.வினர் தடுத்ததால் பாதுகாப்பு கேட்டு அவர்கள் காவல் நிலையத்தில் தஞ்ச மடைந்தனர். அதன்பின்னர் கரூர் மாவட்ட எஸ். பி.யின் உதவியுடன், ஒவ்வொரு அதிகாரிகளின் குழுக்களுக்கும் ஒரு போலீஸ் டீம் அனுப்பி அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையானது கரூர் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும், கேரள மாநிலம் பாலக்காடு, கர்நாடக மாநிலம் பெங்களூர், ஆந்திர மாநிலம் ஹைதராபாத் பகுதி களில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்க மானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், நிறுவனங்களிலும் ரெய்டு நடைபெற்றது.

சோதனை செய்யச் சென்ற இடங்களில் சோதனை நடத்தவிடாமல் தொண்டர்கள் கூடி தடுத்ததால், மத்திய தொழில் பாதுகாப்பு படை யினர் வரவழைக்கப்பட்டு, அவர்களின் பாது காப்புடன் தொடர்ந்து ரெய்டு நடைபெற்று வருகிறது.

இந்த சோதனை குறித்து தி.மு.க. தரப்பில் கடும் கண்டனம் எழுந்தது. பா.ஜ.க. வேண்டு மென்றே எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பார்க்கிறது என்ற குற்றச்சாட்டை தி.மு.க. தரப்பில் முன் வைத்தனர். 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் தாமரை மலருவதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆளும் கட்சியினரை இதுபோன்ற சோதனை களால் ஒன்றிய அரசு அடிக்கடி பயமுறுத்தும் நட வடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், மீண்டும் தங்களுடைய ஆட்சியமைந்தால், தங்களை ஆதரிக்காதவர்களை சட்டரீதியான நடவடிக்கை களால் திணறடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க. காய்நகர்த்தி வருகிறது. அதன் ஒரு அம் சமே செந்தில்பாலாஜிக்கு வரும் அடுக்கடுக்கான சோதனைகள் என்று எதிர்க் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து பேட்டியளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, “"என் சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது. என் வீட்டில் சோதனை நடக்கவில்லை. நடந்தாலும் எதிர் கொள்ளத் தயாராக இருக்கிறேன். வருமானவரித் துறை அதிகாரிகள் எனது தம்பி வீட்டுக்கு சோத னைக்கு வந்தபோது, தம்பி வீட்டில் இல்லை. மற்றவர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலை நேரத்தில் சென்று கதவைத் தட்டிய அதிகாரிகள், அவர்கள் எழுந்து முகம் கழுவி வந்து திறக்கும்வரை சில நிமிடங்கள் காத்திருந்திருக்கலாம். கதவைத் திறக்கும் முன்பே கேட்டில் ஏறிக்குதித்து உள்ளே சென்றிருக்கின்றனர்.

கடந்த 2006 சட்டசபை தேர்தல் தான் என் முதல் தேர்தல். அந்த தேர்தல் வேட்புமனுவில் என்ன சொத்து விவரம் தாக்கல் செய்தேனோ அதுதான் இப் போதும் உள்ளது. இன்றுவரை நானோ, என் குடும்ப உறுப்பினர்களோ கூடுதலாக ஒரு சதுர அடி நிலம்கூட வாங்கவில்லை. இருக்கிற சொத்துக்களும்'' மக்கள் தருகிற அங்கீ காரமுமே போதுமானது” என்று விளக்கமளித்தார்.

தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி ஊடகங்களிடம் இந்த வருமான வரிச் சோதனை குறித்துப் பேசினார். அப்போது, "கர்நாடகத் தேர்தல் முடிந்தவுடன் அண்ணா மலை நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், ‘பா.ஜ.க.வின் அதிகாரம் என்ன? அதன் விளைவுகளை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்னும் பத்து நாட்களில் சந்திப்பார்''’ என்று பகிரங்கமாக மிரட்டினார்.

கோவை, கரூர் மாவட்டங்கள் அ.தி.மு.க. கோட்டை என்பதை உடைத்து செந்தில்பாலாஜி உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் அங்கு தி.மு.க.வை 100க்கு 100 வெற்றிபெறச் செய்தார். அதனால்தான் வரும் பாராளுமன்றத் தேர்த லில் அவரை முடக்க குறிவைக்கப்படுகிறார்.

வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கினார்கள் என்று இந்த அரசின்மீது களங்கம் கற்பிக்க, போலீசாரை அழைக்காமல் சோதனைக்கு வந்திருக்கிறார்கள். எனக்குத் தகவல் கிடைத்ததும் செந்தில்பாலாஜியைத் தொடர்புகொண்டு தி.மு.க.வினர் அங்கு இருக்கக்கூடாது என்றேன். அவரும், அனை வரும் அங்கிருந்து கலைந்துபோய்விட்டனர் என்றார். கர்நாடகத் தேர்தலுக்குப்பின் எதிர்க் கட்சிகள் ஒருங்கிணைந்து வருகின்றன. இதைச் சிதைக்கவேண்டும் என்ற எண்ணத்தோடுதான் இந்தச் சோதனையை நடத்தியிருக்கிறார்கள். அமலாக்கத்துறை சோதனை வழக்குகளில் அரை சதவிகித வழக்குகள்தான் நிரூபிக்கப்பட் டுள்ளன''’என்றார்.

அண்ணாமலையின் திருவிளையாடல் பலிக் குமா?