காங்கிரஸ் ஜூம் மீட்டிங்! அழகிரி-ஜோதிமணி பெர்சனல் அட்டாக்! அதிர்ச்சியில் ராகுல்காந்தி!

aa

மிழக காங் கிரஸ் எம்.பி.க்களிடம் நடந்த ஜூம் மீட்டிங்கில் அவமானப் படுத்தப்பட்டிருக்கிறார் கரூர் எம்.பி. ஜோதிமணி. இந்த விவகாரம் காங்கிரஸ் மேலிடம் வரை சென்று ஏகத்துக்கும் கொந்தளிப்பை உருவாக்கி வருகிறது.

இந்த மாதம் 13-ந் தேதி தமிழகத்திற்கு வருகிறார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுனகார்கே. தலைவர் ஆனதற்குப் பிறகு முதன்முறையாக தமிழகத்திற்கு வரும் அவருக்கு, சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட வேண்டும் என கட்சி மேலிடம் அறிவுறுத்தியிருந்தது.

aa

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியிருக்கும் சூழலில் அவர் வருவ தால், அந்த வருகையை பேரணி, பொதுக் கூட்டம் என்கிற அளவில் பிரமாண்டப் படுத்தவும் திட்டமிடப் பட்டது. அதன்படி, பொதுக்கூட்டத்தை எங்கு நடத்து வது? எப்படி நடத்துவது? என்பதை தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் எம்.பி.க்களிடம் ஆலோசிக்க, தமிழக காங்கிரசின் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமாரிடம் வலியுறுத்தியிருந்தார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால்.

இதனையடுத்து, ஜூம் மீட்டிங்கில் இந்த ஆலோசனையை கடந்த 1-ந்தேதி நடத்தினார் அஜோய்குமார். அவரது தலைமையில் நடந்த அந்த ஜூம் மீட்டிங்கில், மேலிட பிரதிநிதி ஸ்ரீவல்லபிரசாத், கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழகத்திலுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் 8 பேர் என மொத்தம் 11 பேர் இணைந்திருந்தனர். இவர்களைத் தவிர வேறு யாரும் இணைப்பில் இல்லை.

மீட்டிங்கை தொடங்கிய அஜோய்குமார், "தமிழகத்திற்கு வரும் கார்கேவுக்கு சிறப்பான வரவேற்பும், அவரை வைத்து பொதுக்கூட்டம் ஒன்றையும் நடத்த வேண்டும். அது, மக்களை ஈர்க்கும் விதமாக இருக்கவேண்டும். ஏன்னா, இது தேர்தல் நேரம். அதனால

மிழக காங் கிரஸ் எம்.பி.க்களிடம் நடந்த ஜூம் மீட்டிங்கில் அவமானப் படுத்தப்பட்டிருக்கிறார் கரூர் எம்.பி. ஜோதிமணி. இந்த விவகாரம் காங்கிரஸ் மேலிடம் வரை சென்று ஏகத்துக்கும் கொந்தளிப்பை உருவாக்கி வருகிறது.

இந்த மாதம் 13-ந் தேதி தமிழகத்திற்கு வருகிறார் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுனகார்கே. தலைவர் ஆனதற்குப் பிறகு முதன்முறையாக தமிழகத்திற்கு வரும் அவருக்கு, சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட வேண்டும் என கட்சி மேலிடம் அறிவுறுத்தியிருந்தது.

aa

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியிருக்கும் சூழலில் அவர் வருவ தால், அந்த வருகையை பேரணி, பொதுக் கூட்டம் என்கிற அளவில் பிரமாண்டப் படுத்தவும் திட்டமிடப் பட்டது. அதன்படி, பொதுக்கூட்டத்தை எங்கு நடத்து வது? எப்படி நடத்துவது? என்பதை தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் எம்.பி.க்களிடம் ஆலோசிக்க, தமிழக காங்கிரசின் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமாரிடம் வலியுறுத்தியிருந்தார் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால்.

இதனையடுத்து, ஜூம் மீட்டிங்கில் இந்த ஆலோசனையை கடந்த 1-ந்தேதி நடத்தினார் அஜோய்குமார். அவரது தலைமையில் நடந்த அந்த ஜூம் மீட்டிங்கில், மேலிட பிரதிநிதி ஸ்ரீவல்லபிரசாத், கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழகத்திலுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் 8 பேர் என மொத்தம் 11 பேர் இணைந்திருந்தனர். இவர்களைத் தவிர வேறு யாரும் இணைப்பில் இல்லை.

மீட்டிங்கை தொடங்கிய அஜோய்குமார், "தமிழகத்திற்கு வரும் கார்கேவுக்கு சிறப்பான வரவேற்பும், அவரை வைத்து பொதுக்கூட்டம் ஒன்றையும் நடத்த வேண்டும். அது, மக்களை ஈர்க்கும் விதமாக இருக்கவேண்டும். ஏன்னா, இது தேர்தல் நேரம். அதனால், எங்கு நடத்தலாம்? எப்படி நடத்த லாம்? யார் பொறுப் பேற்றுக் கொள்கிறீர் கள்? உங்கள் யோசனை களைச் சொல்லுங்கள்'' என்று கேட்டுக்கொண்டார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் வருவதால் அவருக்கான புரோக்கிராமை தமிழக காங்கிரஸ் கமிட்டிதான் பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்பது பொதுவான சிந்தனை. அந்த வகையில், மாநில தலைவர் அழகிரி தான் பொறுப்பேற்பதாக சொல்லியிருக்க வேண்டும். ஆனால், அவர் வாய் திறக்கவில்லை. சில நொடிகள் மௌனமாகக் கடந்தது ஜூம் மீட்டிங்.

யாருமே பொறுப்பேற்க முன்வராத சூழலை உணர்ந்த ஆரணி எம்.பி. டாக்டர் விஷ்ணு பிரசாத்,‘"நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். என் தொகுதியில் கார்கேவுக்கு வரவேற்பும், பேரணியும், பொதுக்கூட்டமும் நடத்தலாம். பொதுவாகவே, கட்சியின் வட இந்தியத் தலைவர்கள் கலந்துகொள்ளும் காங்கிரஸ் பொதுக்கூட்டம்னாலே தென்மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும்தான் நடத்தப்படுகிறது. அதனால் வடதமிழகத்தில் இந்த முறை நடத்தலாம்.

aa

தற்போதைய சூழலில் அ.தி.மு.க. கட்சி உடைந் திருப்பதால் அக்கட்சிக்குரிய முக்குலத்தோர் வாக்குகள் தென் மாவட்டங்களில் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கப்போவதில்லை. அங்கு அ.தி.மு.க. பலவீனமாக இருக்கிறது. தென் மாவட்டத்தைப் போல வட தமிழகத்தில் அ.தி.மு.க.வை பலகீனப்படுத்தவும், வட தமிழகத்தை பா.ஜ.க.வும் குறிவைக்கத் தொடங்கியிருப்பதால் அதற்கு பதிலடி கொடுப்பது போலவும் வட தமிழகத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது சரியாக இருக்கும். எனது ஆரணி தொகுதியில் பொதுக்கூட்டத்தை மாநாடு மாதிரி நடத்த நான் தயார்''’என்று சொல்லியிருக்கிறார் டாக்டர் விஷ்ணுபிரசாத்.

இதனை ஆமோதித்த கே.எஸ்.அழகிரி, "விஷ்ணு சொல்வது கரெக்ட். வட தமிழகத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது சரியான சாய்ஸ்'' எனச் சொல்ல, அப்போதுதான் மற்ற எம்.பி.க்கள் உஷாராகியிருக்கின்றனர்.

உடனே கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், "எனது தொகுதியில் நடத்தலாம். டெல்லியிலிருந்து விமானத்தில் திருவனந்தபுரத்திற்கு கார்கே வருவது எளிதாக இருக்கும். அங்கிருந்து சாலை மார்க்கமாக 2 மணி நேரத்தில் குமரி வந்திடமுடியும். சாலை மார்க்கமாக வரும்போது ஆங்காங்கே பொதுமக்களை பார்த்து கை அசைப்பதும், முக்கிய மார்க்கங்களில் காங்கிரஸ் தொண்டர் கள் வரவேற்பு தருவதும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் குமரியில் வைத்துக்கொள்ளலாம்''’என்று சொல்லியிருக்கிறார் விஜய் வசந்த்.

அப்போது, குறுக்கிட்ட திருச்சி எம்.பி. திருநாவுக்கரசு, "திருச்சியில் நடத்துவது காங்கிரசுக்கு எழுச்சியாக இருக்கும். தமிழகத்தின் மத்திய மாவட்டம் என்பதால் கட்சி யினர் திரண்டு வருவதும் எளிதாக இருக்கும்'' என்றார்.

ஆனால், "திருச்சியில் இப்போது தான் திருமாவளவன் மாநாடு நடத்தியிருக்கிறார். அங்கு நடத்தினால் அதைவிட பிரமாண்டமாக காட்டவேண்டும். நம்மால் முடியுமா?'' என்று அழகிரியும் மற்ற எம்.பி.க்களும் கேள்வி எழுப்ப, திருச்சி சாய்ஸ் கட் பண்ணப்பட்டது.

திருவள்ளூர் எம்.பி. டாக்டர் ஜெயக்குமார், "சென்னையில் நடத்தலாம். டெல்லியிலிருந்து கார்கே சென்னைக்கு வருவதும் ஈசி. அவருக்கு வரவேற்பு தருவதையும் பெரிசாக நடத்தமுடியும். சென்னைக்கு வந்தால் கூட்டணிக் கட்சி தலைவர்களை அவர் சந்திக்க வைக்கலாம். அரசியல்ரீதியாக காங்கிரசுக்கு அது பலம்''’என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.

இந்த நிலையில், விருதுநகர் எம்.பி. மானிக்தாக்கூரிடம், "நீங்கள் சொல்லுங்கள்'' என அஜோய்குமார் சொல்ல, ”"விருதுநகரில் அல்லது மதுரையில் நடத்துவோம். ஆனால், கார்கேவுக்கு வரவேற்பது கொடுப்பது, பொதுக் கூட்டம் நடத்துவது என பெரிய செலவு இருக்கு. பொதுக்கூட்டத்தை எங்கு நடத்தினாலும் அதற்கான செலவு களை யார் ஏற்பது?” என்றெல்லாம் செலவு பிரச்சனைகளை கோடிட்டுக் காட்டினார்.

இதனையடுத்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் தலா 15 லட்சம், எம்.எல்.ஏ.க் கள் தலா 5 லட்சம் கொடுக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. பிரபல தொழில் நிறுவனங்களிடமிருந்து சிலபல லட்சங்கள் வசூலிப்பது எனவும் மொத்தம் இரண்டரை கோடி ரூபாய் கலெக்ட் பண்ண முடிவு செய்யப்பட்டது.

aa

அப்போது, யார் பொறுப்பில் இந்த தொகையை கொடுத்து பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கவனிக்கச் சொல்வது என்கிற பேச்சு எழுந்த நிலையில், "தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில்தானே நடத்து கிறோம்; அதனால் கட்சித் தலைவ ரிடம் (அழகிரி) ஒப்படைக்கலாம்' என சிலர் சொல்லியிருக்கிறார் கள். ஆனால், இதனை ஏற்க மறுத்த கரூர் எம்.பி. ஜோதிமணி, "பண விவகாரத்தில் ஏற்கனவே சில காண்ட்ராவெர்சி இருக்கு. கட்சி தலைமையிடம் ட்ரான்ஸ்ஃபரன்சி (வெளிப்படைத்தன்மை) கிடையாது. முறையான கணக்கு வழக்குகள் இருக்காது'' என்று சொல்ல, கே.எஸ்.அழகிரிக்கு வந்ததே கோபம். செம காட்டமாகிவிட்டார் அழகிரி.

ஜோதிமணியின் குற்றச்சாட்டை ஜீரணிக்க முடியாத அழகிரி, "ஹேய் கேர்ள்… யாரைப் பார்த்து ட்ரான்ஸ்பரன்சி இல்லேன்னு சொல்றே. உன் கிட்டே ட்ரான்ஸ்ஃபரன்சி இருக்கா? இந்த கட்சிக்கு ரெண்டு சேலை, ரெண்டு ஜாக்கெட்டோடு வந்தே. இப்போ உன் வருமானம் எவ்வளவுன்னு சொல்லட்டா? செந்தில்பாலாஜி, நீ ஜெயிப்பதற்கு 10 கோடி கொடுத்தாரு. அந்த பணத்தை கட்சிக்கு காட்டினீயா? ஜெயிச்சப் பிறகும் பணம், பணம்னு கேட்டு நச்சரித்ததினாலதானே உன்னை விட்டு அவர் (செந்தில்பாலாஜி) விலகிப்போனாரு. இப்படி நிறைய விசயம் இருக்கு கேர்ள். நீ, ட்ரான்ஸ்ஃபரன்சியை பத்தி கொஸ்டீன் பண்றீயா?'' என்றெல்லாம் அழகிரி பெர்சனலாக அட்டாக் பண்ணியிருக்கிறார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜோதிமணியும் எதிர்த் தாக்குதலை நடத்த, ஜூம் மீட்டிங்கின் நோக்கம் வேறு மாதிரியாகப் போனது. அஜோய் குமாரும் எம்.பி.க்களும், அமைதியாக இருங்கன்னு இருவரையும் தடுத்தும், முடியவில்லை. இருவரும் ஒருமையில் தாக்கிக்கொண்டனர். அச்சில் ஏற்றமுடியாத அளவுக்கு அநாகரிகமாக வார்த்தைகள் தடித்தன. சில எம்.பி.க்கள், ஆடியோவை மியூட் பண்ணுங்க என பரபரத்த நிலையில், ஒரு கட்டத்தில் இருவரும் அமைதியானார்கள்.

இதனால், கார்கேவை வரவேற்க பொதுக்கூட்டம் மூலம் பிரமாண்டப்படுத்தும் திட்டமிடலுக்காக நடத்தப்பட்ட ஜூம் மீட்டிங் ஆலோசனை, எந்த முடிவும் எடுக்கப்படாமலே முடிந்தது. இந்த நிலையில், அழகிரியின் பெர்சனல் அட்டாக் கையும், அவர் பயன்படுத்திய வார்த்தைகளையும் விரிவாக விவரித்து ராகுல், கார்கே இருவருக்கும் தெரியப்படுத்தி யிருக்கிறார் ஜோதிமணி.

இதுகுறித்து அஜோய்குமாரிடமும் எம்.பி.க்களிடமும் ராகுல்காந்தி விசாரிக்க, ஜூம் மீட்டிங்கில் நடந்ததை நடந்தபடியே விவரித்ததுடன், தமிழக காங்கிரஸ் கமிட்டியிடம் ட்ரான்ஸ்ஃபரன்சி இல்லைன்னு ஜோதிமணி குற்றம்சாட்டிய போது அதற்கு அழகிரி விளக்கம் கேட்டிருக்கலாம். அதற்கு பதிலாக அவர் பயன்படுத்திய வார்த்தைகள் மோசமானவை என்று வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

தமிழகம் வருகிற ஒரு தலைவரை வரவேற்கவும், ஒரு பொதுக்கூட்டம் நடத்தவுமான சின்ன பிரச்சனையிலேயே இவ்வளவு கூத்துக்களை அரங்கேற்றுகிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்னென்ன கூத்துக்களோ? என்று ஆதங்கப்படுகிறது சத்திய மூர்த்திபவன்.

nkn070224
இதையும் படியுங்கள்
Subscribe