"ஹலோ தலைவரே, வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தல், கூட்டணி விவகாரத்தில் அரசியல் கட்சிகளைப் படாத பாடுபடுத்தி வருகிறது.''”
"ஆமாம்பா, சேம்சைடு கோல் மாதிரி, எதிரும் புதிருமான கட்சிகளிடம் கூட சில கட்சிகள் ரகசிய டீலிங் பேசுகிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே, தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தை யில் இன்னும் இழுபறி நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் தரப்பில் இருந்து அ.தி.மு.க.வுட னும் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டிருக்கிறதாம். தி.மு.க.வைப் பொறுத்தவரை ஏற்கனவே காங் கிரஸ் வெற்றி பெற்ற 8 தொகுதி களுடன் புதுவைத் தொகுதியை யும் சேர்த்து 9 தொகுதிகளைத் தருவதற்கு தயாராக இருக்கிற தாம். அதேசமயம் காங்கிரஸ் சிட் டிங் எம்.பி.க்கள் மீது மக்களிடம் அதிருப்தி இருப்பதால், அவர் களை இந்தமுறை மாற்றும்படி யும் அறிவாலயத் தரப்பு அறி வுறுத்தியதாம். ஆனால் 10 தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டுவருகிறது. இந்த நிலையில், தி.மு.க.விடம் எதிர்பார்த்த சீட்டுகள் கிடைக்காது என்று சொல்லிக் கொண்டு காங்கிரஸ் எம்.பி.க் களான மாணிக்கம்தாக்கூரும், ஜெயக்குமாரும் அ.தி.மு.க. தரப் போடு ரகசியமாகப் பேச்சு வார்த்தை நடத்தினார்களாம். அப்போது காங்கிரஸுக்கு 15 தொகுதிகள்வரை தருவதாக அ.தி.மு.க. தரப்பில் சொல்லப் பட்டிருக்கிறது. இதை அந்த இருவரும் கட்சியின் டெல்லித் தலைமைக்குப் பாஸ் செய்திருக் கிறார்களாம். இதையறிந்து திகைத்துப்போன தி.மு.க. தரப்பு, அவர்கள் மீது கடும் எரிச்சலில் இருக்கிறதாம்.'' ”
"அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வும் தே.மு.தி.க.வும் இணை வது உறுதி என்கிறார்களே?''”
"ஆமாங்க தலைவரே, பா.ம.க.வும் தே.மு.தி.க.வும் அ.தி. மு.க. கூட்டணியில் இணையும் முடிவை எடுத்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. பா.ம. க.வுக்கு 7 தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக அ.தி.மு.க. தரப்பில் உறுதி தரப்பட்டிருக்கிறதாம். ஆனால் தைலாபுரத் தரப்பில், பா.ஜ.க. கூட்டணி வேண்டும் என்று அடம்பிடித்த அன்புமணி மட் டும் இன்னும் முழும
"ஹலோ தலைவரே, வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தல், கூட்டணி விவகாரத்தில் அரசியல் கட்சிகளைப் படாத பாடுபடுத்தி வருகிறது.''”
"ஆமாம்பா, சேம்சைடு கோல் மாதிரி, எதிரும் புதிருமான கட்சிகளிடம் கூட சில கட்சிகள் ரகசிய டீலிங் பேசுகிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே, தி.மு.க.வுடனான பேச்சுவார்த்தை யில் இன்னும் இழுபறி நீடித்து வரும் நிலையில், காங்கிரஸ் தரப்பில் இருந்து அ.தி.மு.க.வுட னும் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டிருக்கிறதாம். தி.மு.க.வைப் பொறுத்தவரை ஏற்கனவே காங் கிரஸ் வெற்றி பெற்ற 8 தொகுதி களுடன் புதுவைத் தொகுதியை யும் சேர்த்து 9 தொகுதிகளைத் தருவதற்கு தயாராக இருக்கிற தாம். அதேசமயம் காங்கிரஸ் சிட் டிங் எம்.பி.க்கள் மீது மக்களிடம் அதிருப்தி இருப்பதால், அவர் களை இந்தமுறை மாற்றும்படி யும் அறிவாலயத் தரப்பு அறி வுறுத்தியதாம். ஆனால் 10 தொகுதிகள் வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டுவருகிறது. இந்த நிலையில், தி.மு.க.விடம் எதிர்பார்த்த சீட்டுகள் கிடைக்காது என்று சொல்லிக் கொண்டு காங்கிரஸ் எம்.பி.க் களான மாணிக்கம்தாக்கூரும், ஜெயக்குமாரும் அ.தி.மு.க. தரப் போடு ரகசியமாகப் பேச்சு வார்த்தை நடத்தினார்களாம். அப்போது காங்கிரஸுக்கு 15 தொகுதிகள்வரை தருவதாக அ.தி.மு.க. தரப்பில் சொல்லப் பட்டிருக்கிறது. இதை அந்த இருவரும் கட்சியின் டெல்லித் தலைமைக்குப் பாஸ் செய்திருக் கிறார்களாம். இதையறிந்து திகைத்துப்போன தி.மு.க. தரப்பு, அவர்கள் மீது கடும் எரிச்சலில் இருக்கிறதாம்.'' ”
"அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வும் தே.மு.தி.க.வும் இணை வது உறுதி என்கிறார்களே?''”
"ஆமாங்க தலைவரே, பா.ம.க.வும் தே.மு.தி.க.வும் அ.தி. மு.க. கூட்டணியில் இணையும் முடிவை எடுத்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. பா.ம. க.வுக்கு 7 தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக அ.தி.மு.க. தரப்பில் உறுதி தரப்பட்டிருக்கிறதாம். ஆனால் தைலாபுரத் தரப்பில், பா.ஜ.க. கூட்டணி வேண்டும் என்று அடம்பிடித்த அன்புமணி மட் டும் இன்னும் முழுமையாக கன் வின்ஸ் ஆகவில்லை என்கிறார் கள். அதேபோல், தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள் தர ஒத்துக்கொண் டிருக்கிறாராம் எடப்பாடி. தே.மு. தி.க. சார்பில் விருதுநகர் தொகுதி யில், விஜயகாந்த்தின் மகனான விஜயபிரபாகரன் போட்டியிட விரும்புகிறாராம். கூட்டணி பற்றி முடிவானபோதும் ஸ்வீட் பாக்ஸ் குறித்த டீலிங்குகள் நடந்துவரு கிறதாம். அது முடிந்ததும், கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.''”
"தி.மு.க. கூட்டணியில் சிறுத்தைகளும், ம.தி. மு.க.வும் இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சி களுக்கும் இன்னும் தொகுதிகள் முடிவாகவில்லை. அதனால், இழுபறி நிலை நீடிக்கிறது. எல்லாமே இன்னும் இரண்டொரு நாளில் நல்லபடியாக முடிவுக்கு வந்துவிடும் என்கிறது அறிவாலயத் தரப்பு. கடலூர், மயிலாடுதுறை மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்பியதும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் சொல்லப்படுகிறது. ம.தி.மு.க.வை பொறுத்தவரை, அது 2 லோக்சபா, 1 ராஜ்யசபாவைக் கேட்பதோடு, பம்பரம் சின்னத் தில் நாங்கள் போட்டியிட ஒத்துழைப்பு தரவேண் டும் என்றும் கேட்கிறது. ஆனால், தி.மு.க. தரப்போ, 1 லோக்சபா சீட் தரப்படும், அதில் நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும். நீங்கள்தான் பம்பரம் சின்னத்தை இழந்துவிட் டீர்களே என்று சொல்லிக்கொண்டு இருக்கிறது.''”
"ஓஹோ...''”
"இதேபோல், கடந்த முறை தங்களுக்கு ஒதுக்கிய 2 தனித் தொகுதிகளுடன் கூடுதலாக ஒரு பொதுத் தொகுதியையும் ஒதுக்க வேண்டும் என்பது சிறுத்தைகள் கட்சி திருமாவளவனின் கோரிக்கை. தி.மு.க.வோ, கடந்த முறை ஒதுக் கிய 2 தனித் தொகுதியை மட்டும் பெற்றுக்கொள்ளுங்கள்.பொதுத் தொகுதி குறித்து பின்னர் பார்த் துக்கொள்ளலாம். அதனால் 2 தனித்தொகுதியைத் தவிர மேற்கொண்டு தொகுதி யைக் கேட்டு சங்கடப் படுத்தாதீர்கள் என்கிறதாம். இந்த நிலையில், சிறுத்தைகளின் உயர்மட்ட குழு வைக் கூட்டி விவாதித்தார் திருமாவளவன். அப்போது பேசிய பலரும் 3 தொகுதிகள் ஒதுக்கினால் ஒரு பொதுத் தொகுதியை வாங்கலாம். 2 தொகுதிகள்தான் எனில் அந்த இரண்டும் தனித்தொகுதியாகவே இருக்கட்டும். அதேசமயம், அந்த 2 தொகுதியிலும் நம் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். கடந்த முறை ஒரு தொகுதியில் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்ட மாதிரி இப்போது நடந்துவிடக் கூடாது என்று பலரும் வலியுறுத்தினார்களாம். இதன் அடிப்படையிலேயே திருவாவளவன், தி.மு.க. தரப்பிடம் பேச இருக்கிறார் என்கிறார்கள்.''”
"நாம் தமிழர் கட்சி அறிவித்திருக்கும் வேட் பாளர் பட்டியல் குறித்து சர்ச்சைகள் எழுந்திருக்கிறதே?''’
"ஆமாங்க தலைவரே. நாடாளுமன்றத் தேர் தல் தொடர்பாக நாம் தமிழர் கட்சி வெளியிட்டி ருக்கும் முதல் பட்டியலில் 20 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. அதன்படி ராமநாதபுரம் தொகுதிக்கு சிவகங்கையைச் சேர்ந்த டாக்டர் சந்திரபிரபா அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ’நீயா நானா?’ நிகழ்ச்சிகளில் பங்கேற்று பலரின் கவனத் தையும் ஈர்த்தவராம். மலேசியாவில் தற்போது இருக் கும் இவருக்கு தமி ழக வாக்காளர் பட் டியலில் பெயரே இல்லை என்கிறார் கள். அப்படிப் பட்டவருக்கு சீட்டா என்கிற சர்ச்சை அந்தக் கட்சியில் எழுந் திருக்கிறது.''
"பா.ஜ.க.வும் தனது முதல் வேட்பாளர் பட்டி யலை அறிவித்திருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, 18 மாநிலங்களில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் 195 வேட் பாளர்களின் பெயர்கள் இடம்பெற் றிருக்கின்றன. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உட் பட 33 ஒன்றிய அமைச்சர்களும் தேர்தல் களத்தில் வரிந்துகட்டுகிறார்கள். அதே சமயம் தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு தொகுதிக்குக் கூட தன் வேட்பாளரை பா.ஜ.க. அறிவிக்கவில்லை. காரணம், அ.தி.மு.க. இல்லாமல் களமிறங்கத் தயங்கும் அக்கட்சியின் தேசியத் தலைமை, எடப்பாடியை கூட் டணிக்கு சம்மதிக்க வைத்தபிறகு தமிழகப் பட்டியலை வெளியிட லாம் என்று ஒருவித நம்பிக் கையோடு காத்திருக்கிறதாம்.''”
"தங்கள் கூட்டணியில் சேர்வ தற்கு பல்வேறு வகையிலும் அ.தி. மு.க.வுக்கு நிர்பந்தம் கொடுத்து வருகிறதே பா.ஜ.க.?''
"எங்களுடன் கூட்டணி வைத்துக்கொண் டால் அதைத் தருகிறோம், இதைத் தருகிறோம் என்று சிலர் மூலம் அ.தி.மு.க.வுக்கு ஆசை காட்டிக் கொண்டிருக்கும் பா.ஜ.க., இன்னொரு புறம், எங்களைப் புறக்கணித்துவிட்டுச் சென்றால், அதன் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரும் என்று இன்னும் சிலர் மூலம் மிரட்டிவருகிறதாம். தேர்தல் தேதியை அறிவிப்பதற்கான நேரம் நெருங்கிவிட்ட தால், 6ஆம் தேதிக்குள் உங்களிடமிருந்து பாஸிட்டிவான பதிலை எதிர்பார்க்கிறேன் என்று அமித்ஷாவே, எடப்பாடிக்குக் கெடு விதித்திருக்கிறா ராம். அதற்குக் காரணம், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால்தான் 5 தொகுதியையாவது கைப்பற்றலாம் என்று, உளவுத்துறை அவருக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறதாம். தற்போது, இரு கட்சிகளுக்கும் பாலமாக இயங்கிவந்த அரசியல் சாரா வி.வி.ஐ.பி.க்கள் மூலமாகவும் டெல்லி, எடப்பாடியின் மனதைக் கரைக்க முயல்கிறதாம். இதற்கு இசைவாக மாஜி மந்திரிகளான வேலுமணியும், தங்கமணியும், பா.ஜ.க.வின் கோபம் நமக்கு தேவையா? என்று எடப்பாடியை இளகவைக்கப் பார்க்கிறார்களாம்.''”
"அதேநேரம் தமிழக பா.ஜ.க.வில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நபர், எங்கள் அணியில் நிற்கும் கட்சிகளின் வேட்பாளர்கள் தாமரைச் சின்னத்தில்தான் நிற்கவேண்டும் என்கிறாராமே?''”
’"இவர் இப்படிச் சொல்வதே, தப்பித்தவறி கூட அ.தி.மு.க. தங்கள் பக்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தானாம். தங்கள் டெல்லித் தலைமை, அ.தி.மு.க.விடம், கூட்டணிக்காக இறங்கிச் செல் வதை அவர் விரும்பவில்லையாம். அதனால்தான், அவர் 40 தொகுதிகளிலும் தாமரை போட்டியிட வேண்டும் என்பதே என் விருப்பம் என்று, பா.ஜ.க.வின் தோழமைக்கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறார். இதுகுறித்து மாநில நிர்வாகி கள் சிலர் கண்டித்த போது, 40 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தைக் கொண்டு சேர்க்கத்தான் இப்படிச் சொல் கிறேன் என்கிறா ராம். களமிறங்க ஆசைப்படும் இவர், கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, கரூர் ஆகிய நான்கு தொகுதிகளில் ஒன் றில் நிற்க ஆசைப் படுகிறாராம். அதனால் இந்தத் தொகுதிகளில் பல்ஸ்ரேட்டைத் தெரிந்துகொள்ளும் விதமாக ஒரு சர்வே ஒன்றையும் எடுத்துவருகிறாராம்.''”
’"புதுவை தொகுதியில் பா.ஜ.க. நிற்கப் போகிறது என்று அம்மாநில முதல்வர் ரெங்கசாமி அறிவித்திருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, அவரும் அவரது என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் தங்கள் கட்சி வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். இந்த ஆசையை டெல்லிக்கும் தெரிவித்தார்கள். முதலில் சரி என்று டெல்லி தலையாட்ட, இதில் மகிழ்ச்சியடைந்த ரெங்கசாமி, கடந்த ஒரு மாதமாக யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று உற்சாகமாக ஆலோசனைகளை நடத்திவந்தார். இந்த நிலையில் திடீரென்று, புதுவையிலும் நாங்கள்தான் களமிறங்கப்போகி றோம், எங்கள் தாமரை வேட்பாளரை வெற்றி பெறவைக்க வேண்டிய கடமை உங்களுக்குதான் இருக்கிறது என்று சொல்லிவிட்டது. இதனால், டெல்லியை எதிர்த்துப் பேசமுடியாத ரெங்கசாமி, வேறுவழியின்றி, புதுவையில் பா.ஜ.க. களமிறங்கு கிறது என்று வருத்தத்தை மறைத்துக்கொண்டு அறிவித்துவிட்டார். இந்த முறை அங்கே முன்னாள் ஐ.எஃப்.எஸ். அதிகாரியான சத்யமூர்த்தியை தங்கள் வேட்பாளராகக் களமிறக்கலாமா? என்று ஆலோசித்து வருகிறதாம் டெல்லி.''”
"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். பா.ஜ.க.வில் ஹனி டிராப் கலாச்சாரத்தைத் தொடங்கிவைத்த அந்த முக்கிய நபருடன், அண்மைக்காலமாக ’வாழும் கலை’ ஆசிரம ரவிசங்கர் நெருக்கமாகி பல இடங் களுக்கும் சென்று வருகிறாராம். அதனால், ரவிசங்கர் குறித்த ஏடாகூட வில்லங்க வீடியோக்கள் வெளியாகிவிடுமோ என்று அவரது அபிமானிகள் ஏகத்துக்கும் அஞ்சு கிறார்களாம்.''”