ராங்கால் மோடியை எதிர்த்து நடக்கத் தொடங்கிய காங்கிரஸ்! ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களுக்கு அறிவாலயம் டோஸ்! குற்றவாளிகளுக்கு கூட்டாளியாகும் போலீஸ்!

ss

"ஹலோ தலைவரே, ராகுலின் ’இந்திய ஒற்றுமை’ பாதயாத்திரை நம்பிக்கையோடு தொடங்கியிருக்கு.''”

"ஆமாம்பா, முதல்வர் ஸ்டாலின், தேசியக்கொடியை ராகுல் கையில் கொடுத்து, அந்தப் பாத யாத்திரையைத் தொடங்கிவச்சாரே!''”

rr

"ஆமாங்க தலைவரே, மோடி அரசின் மக்கள்விரோதச் செயல்களுக்கு எதிரான பிரச்சாரக் கருவியாகத்தான் இந்தப் பாதயாத்திரையை ஆயுதமாக எடுத்திருக் கிறார் ராகுல். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஏறத்தாழ 3500 கி.மீ. தூரம் பயணமாகும் இந்த யாத்திரைக் காக 7-ந் தேதி காலையே சென்னை வந்த ராகுல், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜீவ்காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று முதலில் நெகிழ்ச்சியோடு மலர் அஞ்சலி செலுத்தினார். பிறகு சென்னையிலிருந்து விமானத்தில் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து அன்று மாலையே கன்னியாகுமரியில் இருந்து தன் பாதயாத்திரையைத் தொடங்கி னார். முன்னதாக, வள்ளுவர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதற்கான தொடக்கவிழாவில், காங்கிரஸின் வேண்டுகோளை ஏற்று முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.''”

"கூட்டம் அதிகமாக இருந்ததே?''”

"தமிழகம் முழுதும் இருந்து தொண்டர்கள் திரட்டப்பட்டிருக்காங்க. இதற்காக தமிழக அரசு 50 பேருந்துகளை இலவசமாகக் கொடுத்து உதவ வேண்டும்னு முதல்வரிடம் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி. வேண்டுகோள் வைக்க, அதற்கு வாய்ப்பில்லை என்று மறுத்துவிட்டார் ஸ்டாலின். இருந்தபோதும் தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, கன்னியா குமரி ஆகிய மாவட்டங்களுக்கு மட்டும் பேருந்துகளைக் கொடுத்து உதவ அவர் சம்மதிக்க, அதை தமிழக காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டது. இதற்கிடையே, பொதுக்கூட்டம் மற்றும் பாதயாத்திரையை பிரமாண்டப்படுத்தும் செலவினங்களுக்காக 5 கோடி ரூபாய் நிதியையும் ஆளும் தரப்பு நிதியாகக் கொடுத்திருப்பதாகவும் சத்யமூர்த்தி பவன் தரப்பிலேயே செய்திகள் உலவுது.''”

"காங்கிரஸ் பிரமுகர்கள் இந்த பாதயாத்திரைக்கு நிதி கொடுக்கலையா?''”

"அவங்களும் கொடுத்திருக்காங்க. குறிப்பாகச் சொல்லணும்னா, விழாவை பிரமாண்டப்படுத்த காங்கிரஸ்

"ஹலோ தலைவரே, ராகுலின் ’இந்திய ஒற்றுமை’ பாதயாத்திரை நம்பிக்கையோடு தொடங்கியிருக்கு.''”

"ஆமாம்பா, முதல்வர் ஸ்டாலின், தேசியக்கொடியை ராகுல் கையில் கொடுத்து, அந்தப் பாத யாத்திரையைத் தொடங்கிவச்சாரே!''”

rr

"ஆமாங்க தலைவரே, மோடி அரசின் மக்கள்விரோதச் செயல்களுக்கு எதிரான பிரச்சாரக் கருவியாகத்தான் இந்தப் பாதயாத்திரையை ஆயுதமாக எடுத்திருக் கிறார் ராகுல். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஏறத்தாழ 3500 கி.மீ. தூரம் பயணமாகும் இந்த யாத்திரைக் காக 7-ந் தேதி காலையே சென்னை வந்த ராகுல், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜீவ்காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று முதலில் நெகிழ்ச்சியோடு மலர் அஞ்சலி செலுத்தினார். பிறகு சென்னையிலிருந்து விமானத்தில் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து அன்று மாலையே கன்னியாகுமரியில் இருந்து தன் பாதயாத்திரையைத் தொடங்கி னார். முன்னதாக, வள்ளுவர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதற்கான தொடக்கவிழாவில், காங்கிரஸின் வேண்டுகோளை ஏற்று முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.''”

"கூட்டம் அதிகமாக இருந்ததே?''”

"தமிழகம் முழுதும் இருந்து தொண்டர்கள் திரட்டப்பட்டிருக்காங்க. இதற்காக தமிழக அரசு 50 பேருந்துகளை இலவசமாகக் கொடுத்து உதவ வேண்டும்னு முதல்வரிடம் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி. வேண்டுகோள் வைக்க, அதற்கு வாய்ப்பில்லை என்று மறுத்துவிட்டார் ஸ்டாலின். இருந்தபோதும் தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, கன்னியா குமரி ஆகிய மாவட்டங்களுக்கு மட்டும் பேருந்துகளைக் கொடுத்து உதவ அவர் சம்மதிக்க, அதை தமிழக காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டது. இதற்கிடையே, பொதுக்கூட்டம் மற்றும் பாதயாத்திரையை பிரமாண்டப்படுத்தும் செலவினங்களுக்காக 5 கோடி ரூபாய் நிதியையும் ஆளும் தரப்பு நிதியாகக் கொடுத்திருப்பதாகவும் சத்யமூர்த்தி பவன் தரப்பிலேயே செய்திகள் உலவுது.''”

"காங்கிரஸ் பிரமுகர்கள் இந்த பாதயாத்திரைக்கு நிதி கொடுக்கலையா?''”

"அவங்களும் கொடுத்திருக்காங்க. குறிப்பாகச் சொல்லணும்னா, விழாவை பிரமாண்டப்படுத்த காங்கிரஸ் எம்.பி.க்கள் தலா 15 லட்சமும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தலா 5 லட்சமும் தரணும்னு காங்கிரசில் இருக்கும் பெருந்தலைகள் 2 பேர் வசூல்வேட்டை நடத்தி இருக்கிறார்கள். இதில் பலர் கொடுக்க, சிலர் கொடுக்க முடியாமல் தவித்தார்களாம். மேலும், யாத்திரையை வைத்து தொழிலதிபர்கள் சிலரிடமும் கணிசமாக வசூல் வேட்டை நடந்திருக்கு. இப்படி எல்லாத் தரப்பிலும் மெஹா வசூல் நடந்திருக்கு. இதனையெல்லாம், கோஷ்டி தலைவர்களின் ஆதரவாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். யாத்திரையின் தொடக்க விழா முடிந்ததும், காங்கிரஸில் கணக்கு வழக்கு சர்ச் சைகள் பெரிய அளவில் வெடிக்கும்னு தெரியுது.''”

"ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை அறிவாலயம் கடிந்துகொண்டதே?''”

"ஆமாங்க தலைவரே, தங்கள் தொகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாகத் தீர்க்க முடியாத பிரச் சினைகள் என்னென்ன இருக்குன்னு எம்.எல்.ஏ.க் கள் அரசின் கவனத்துக்கு கொண்டு வரணும்னு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் ஒவ்வொரு தெரு வாகச் சென்று முக்கிய பிரச்சினைகளை மக்க ளிடம் கேட்டறிந்தார். இதுபோல இன்னும் சிலரும் செய்தாலும் பெரும்பாலான தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இதைக் கண்டுக்கலை. பா.ஜ.க. எம்.எல். ஏ.வான வானதி சீனி வாசன், தனது தொகுதிப் பிரச்சினைகளைப் பட்டியல் எடுத்து, அதை கோவை கலெக்டரிடம் முதலாவது நபராகப் போய்க் கொடுத்தார். இதையறிந்த அறிவாலயம், இதில் அக்கறை காட்டாத தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் கோபம் காட்டிக் கடிந்திருக் கிறது. இதனால் இப்ப எல்லா எம்.எல்.ஏ.க்களும் தொகுதிப் பிரச்சினைகளைப் பட்டியல் எடுக்கும் பணியில் இறங்கிட்டாங்க.''”

"எதிர்க்கட்சியான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் என்ன செய்தாங்க?''”

"கடந்த 10 ஆண்டு காலத்தில் தீர்க்க முடியாத பிரச்சனைகள்னு ஸ்டாலின் அறிவித்ததால், அந்த 10 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்தது அ.தி.மு.க. அரசுதான். அதனால் அதைப் பட்டியல் இட்டால் நம் ஆட்சிக் காலத்தை நாமே குற்றம் சொல்வது போலாகுமே என்று எடப்பாடி ஆரம்பத்தில் இதில் அக்கறை காட்டாமல் இருந்திருக்கிறார். பிறகு கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்திய திட்டங்களில், இப்போது முடங்கி இருப்பதை பட்டியல் எடுத்து அரசுக்கு நாம் கொடுப்போம்னு, தங்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவிட்டிருக்கார்.'' ”

"ம்...''”

rrr

"கோவையில் உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள் 9 பேரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் மாவட்ட கலெக்டரை சந்தித்து பட்டியலைக் கொடுத்திருக்கிறார்கள். கோவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் தி.மு.க.வுக்கு தாவ இருக்கிறார்கள் என பரவிய செய்தி யைப் பொய்யாக்கும் வகையில், அவர்களை வேலுமணி ஒருங்கிணைத்து கலெக்டரிடம் அழைத்துச்சென் றார் என்கிறார்கள்.''”

"கடந்த ஆட்சியில் ஊழல் சர்ச்சையில் சிக்கிய அதி காரிகள் பலரும், இப்பவும் பவர்ஃபுல் பதவிகளில் அமர்ந்துகொண்டு தர்பார் பண்றாங்களேப்பா?''”

"அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், குட்கா ஊழல் உட்பட பல்வேறு ஊழல் விவகாரத்திலும் கொடிகட்டிப் பறந்தவரான விஜயபாஸ்கரிடம், ஸ்பெஷல் பி.ஏ.வாக இருந்தவர் மணிக்கண்ணன். காத்திருப்புப் பட்டியலுக்குப் போகவேண்டிய இவரை தி.மு.க. அரசு, மின்சார வாரியத்தின் செயலாளராக பவர்ஃபுல் பதவியில் அமரவைத்திருக் கிறது. அண்மையில் சென்னையில், மின்வாரியம் தொடர்பான நிகழ்வுக்கு வந்திருந்த முதல்வர் ஸ்டாலினை வாசலில் நின்று அவர் வரவேற்றார்.''”

rrr

"தமிழ்நாடு டான்சி நிறுவனத்தில் ஆகஸ்ட் 15-ஐ மையப்படுத்தி அடாவடிகள் அரங்கேறி இருக்குதே?''”

"டான்சியின் தலைமையகம் சென்னையில் இருக்கிறது. இந்த நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநராக விஜயகுமார் ஐ.ஏ.எஸ். இருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள டான்சி நிறுவனத்தின் யூனிட் மேனேஜராக இருந்தவர் சுரேஷ். சேர்மனின் விருப்பப்படி பதவி உயர்வோடு சென்னை அலுவலகத்தில் மேனேஜ ராக அண்மையில் உட்கார வைக்கப்பட்டார். இதனால் புதுக்கோட்டை டான்சி நிறுவன யூனிட் மேனேஜராக கலாவதி என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த ஆகஸ்ட் 15-ன் போது, தேசியக் கொடியைத் தன் கையால் ஏற்றி கெத்து காட்ட விரும்பிய சுரேஷ், இதற்காகவே கலாவதியை வலுக்கட்டாயமாக மிரட்டி விடுப்பு போட வைத்துவிட்டுக் கொடி ஏற்றியிருக்கிறார்.''”

"சென்னைக்கு மாற்றலானவர் புதுக்கோட் டையில் எப்படி கொடி ஏற்றினார்?''”

"இதைத்தான் எல்லோரும் கேட்கறாங்க. இந்தத் தகவலை அதிகாரிகள் சிலர் சேர்மன் விஜயகுமாரின் கவனத்துக்குக் கொண்டுபோக, சுரேஷைக் கண்டிக்கவேண்டிய அவர், கலாவதியைத் தொடர்புகொண்டு கடுமை யாகக் கண்டித்து, மெமோவும் இஷ்யூ பண்ணியிருக்கிறார் விஜயகுமார். புதுக் கோட்டையின் நிழல் யூனிட் மேலாளராக சுரேஷ் தொடர்கிறாராம். அதேபோல் தான் சொல்கிற காண்ட்ராக்டர்களுக்கே வேலைகளைக் கொடுக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு உடனடியாக பணத்தை செட்டில் செய்ய வேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கிறாராம். மேலும் தனது நட்பில் இருக்கும் காண்ட்ராக்டர்களை சென்னைக்கு வரவழைத்து, தலைமையகத்தின் டெண்டர் களையும் அவர் கொடுக்கத் துடிக்கிறாராம்.''”

’"தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரிப்பதற்கு காவல்துறையினர்தான் காரணம்னு குற்றம்சாட்டப்படுதே?''”

"மாவட்டம்தோறும் இருக்கும் காவல்துறை எஸ்.பி.க்கள், 40 லட்ச ரூபாய்க்கும் கீழான பொருளாதாரக் குற்றம் மற்றும் மோசடி உள்ளிட்ட வழக்குகளை விசாரிக்கலாம் என்றும், அதற்கு மேலுள்ள பெரும் மதிப்பிலான மோசடி விவகா ரங்களை மாநில அளவில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள்தான் விசாரிக்கவேண்டும் என்றும் வரையறை செய்திருக்கிறார்கள். அதேபோல் சென்னை சிட்டியிலும் இதுபோன்ற வரையறையை வைத்து மேலதிகாரிகள் மட்டுமே அவற்றை டீல் செய்கிறார்கள். இதனால் மேலதிகாரிகளை எளிதில் அணுகமுடியாத நிலை உள்ளதால், கீழே பிரச்சினைக்கு ஆளாகிறவர்கள்தான், ஆள் கடத்தல்-கொலைகள் வரை போகி றார்களாம்.''”

"சரிப்பா, இதற்கும் க்ரைம்கள் அதிகரிப்பதற்கும் என்ன சம்பந்தம்?''”

"40 லட்சத்திற்கும் அதிக மதிப்பிலான பொருளாதாரக் குற்றங்களை டீல் செய்யும்போது அதிக அளவில் கட்டிங் பெறலாம் என்றுதான் மேலதிகாரிகள் இப்படி வரையறை வகுத்திருக்கிறார்களாம். இப்படி கட்டிங் வாங்கியே குபேர லெவலுக்குப் போயிருக்கும் சென்னை காவல்துறை உயரதிகாரிகளில் ஒருவர், ஈ.சி.ஆர். சாலையில் வீடுகட்ட இடம் மட்டும் 9 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறாராம். இவர் குறித்து விசாரிக்கும் படி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சமூகநல ஆர்வலர் ரமேஷ் rrஎன்பவர் புகார் கொடுத்திருக் கிறார். இப்படி பெரிய பொருளா தாரக் குற்றங் களை மாநில அளவிலான அதிகாரிகள்தான் விசாரிக்கவேண் டும் என்பதால், அவர்களை எளிதில் அணுகமுடியாத அல்லது அணுகத் தயங்குகிறவர்கள்தான், எதிரிகளைப் பழிவாங்கத் தாங்களே ஆள் கடத்தல், கொலை என்று இறங்கிவிடுகிறார்களாம். இதை ஆட்சி மேலிடம் கவனிக்கவேண்டும் என்கிறார்கள் பலரும்.''”

"போயஸ் தோட்ட இல்லம் குறித்து எழுந்த செய்திகளை ஜெ.வின் அண்ணன் மகள் தீபா மறுத்திருக்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, ஜெ.வின் வாரிசுகளாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருக்கும் அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகிய இருவரும் போயஸ் கார்டன் இல்லத்தைப் பராமரித்து வந்தாலும், அவர்களில் யாரும் அங்கே குடியேறவில்லை. இந்த நிலையில், இந்த இல்லத்தை சசிகலா வாங்க இருப்பதாக செய்தி கிளம்பியது. இதைத் தொடர்ந்து ஆடியோ வெளியிட்டிருக்கும் தீபா, அதில் என் அத்தை ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வீடு விற்பனைக்கு கிடையாது. இந்த வீடு எனது பாட்டியால் கட்டப்பட்டது. அதன் பிறகு எனது அத்தைக்கு அவர் இந்த வீட்டைக் கொடுத்தார். இது எங்களது பூர்வீகச் சொத்து. இதை நாங்களே பராமரித்துக்கொள்வோம். சசிகலா உள்ளிட்ட யாரும் போயஸ் இல்லத்துக்கு உரிமை கோர முடியாதுன்னு தெரிவிச்சிருக்கார்.''”

rr

"நானும் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். நடிகர் ரஜினிகாந்த் தனது இரண்டாவது மகள் சௌந்தர்யாவை, பிரபல மருந்து நிறுவன உரிமையாளரான வணங்காமுடியின் மகன் விசாகனுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தாரே, அந்த மகளின் மகிழ்வான வாழ்க்கையில் தானும் மகிழ்ந்துபோயிருந்தார் ரஜினி. இந்த நிலையில், போனஸ் மகிழ்வாக சௌந்தர்யா தன் வயிற்றில் குழந்தையைச் சுமந்துகொண்டு இருக்கிறாராம். வருகிற 12 ஆம் தேதி வாக்கில், ரஜினி குடும்பத்தில் அந்த புதிய சிட்டிசன் நுழைய இருக்கிறாராம். பேரக் குழந்தை வரப்போகும் சந்தோசத்தில் திளைக்கிறாராம் ரஜினி.''”

nkn100922
இதையும் படியுங்கள்
Subscribe