"ஹலோ தலைவரே… கலைஞரோட 6-ஆம் ஆண்டு நினைவு தின அமைதிப் பேரணியில சீனியர்கள் எல்லாரும் போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டாங்களாமே...?''
"ஆமாம்பா... அமைதிப் பேரணிங்கிறதுனால பேரணியில கலந்துக்கிட்ட சீனியர்களெல்லாமே ஃபோனை ஆஃப் பண்ணிட்டாங்க.'' ‘’
"உண்மைதான் தலைவரே...… அண்ணாசாலை யில் இருக்கும் கலைஞர் சிலைக்கு அருகே அவரது படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலையில இருந்தே கலைஞர் சிலையை நோக்கி கருப்பு சட்டை அணிந்தபடி உடன்பிறப்புகள் குவிய ஆரம்பிச்சிட்டாங்க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மேயர்கள், துணை மேயர்கள், மா.செ.க்கள் என எல் லோரும் திரண்டு வர, துரைமுருகன், கே.என்.நேரு, கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பொன்முடி, உதயநிதி என பலரும் வந்தாங்க. 8 மணிக்கு முதல் வர் ஸ்டாலின் வந்தார். கலைஞரின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு அங்கிருந்து அவர் தலைமையில் கலைஞர் நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி தொடங்கிச்சு...''
"அமைதிப் பேரணின்னா இதுதான் எனச் சொல்ற மாதிரி பின்-ட்ராப் சைலண்ட்ல பேரணி நடந்துச்சு. கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின், துரைமுருகன், நேரு, கனிமொழி உள்ளிட்டவங்க அஞ்சலி செலுத்திய பிறகு தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினாங்க. தொண்டர்களின் அஞ்சலியே 3 மணி நேரம் வரை நீடிச்சிச்சி தலைவரே.''”
"கலைஞர், அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு கோபாலபுரத்துக்கு வந்தார் ஸ்டாலின். அவரை பின்தொடர்ந்து சீனியர்களும் வந்தாங்க. கோபாலபுரத்துல எல்லா ருக்கும் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. வீட்டுக்கு பின்புறத்தில் உடன்பிறப்பு களுக்கும் டிஃபன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டிஃபன் பண்ணிட்டு ஸ்டாலின் கோபாலபுரத்துல இருந்து கிளம்பியபோது உணர்ச்சிவயப்பட்டு தொண்டர்கள் முழக்கமிட்டனர். அவர்களை அமைதியாக இருக்கணும்னு கைகாட்டிச் சொன்ன ஸ்டாலின், "எல்லோரும் சாப்பிட் டீங்களா? சாப்பிடலைன்னா போய் சாப்பிடுங்க'ன்னு சொல்லிட்டு கிளம்பினாருப்பா... தொண்டர்கள் நெகிழ்ந்து போயிட்டாங்க.''”
"உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி பத்தி ஸ்டாலின் சொன்னதக் கேட்டு தி.மு.க. இளைஞரணி ரொம்ப அப்-செட்டாகிட்டாங் களாம்பா...''”
"அப்செட்டானாலும் இளைஞரணியினர் நம்பிக்கை இழக்கலை தலைவரே.. அவங்ககிட்ட விசாரிச்சேன். பழுக்கலைன்னுதான் தலைவர் சொல்லியிருக்காரே தவிர, முடியாதுன்னோ... தேவையில்லைன்னோ சொல்லலை யே. அதனால், பழ
"ஹலோ தலைவரே… கலைஞரோட 6-ஆம் ஆண்டு நினைவு தின அமைதிப் பேரணியில சீனியர்கள் எல்லாரும் போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டாங்களாமே...?''
"ஆமாம்பா... அமைதிப் பேரணிங்கிறதுனால பேரணியில கலந்துக்கிட்ட சீனியர்களெல்லாமே ஃபோனை ஆஃப் பண்ணிட்டாங்க.'' ‘’
"உண்மைதான் தலைவரே...… அண்ணாசாலை யில் இருக்கும் கலைஞர் சிலைக்கு அருகே அவரது படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலையில இருந்தே கலைஞர் சிலையை நோக்கி கருப்பு சட்டை அணிந்தபடி உடன்பிறப்புகள் குவிய ஆரம்பிச்சிட்டாங்க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மேயர்கள், துணை மேயர்கள், மா.செ.க்கள் என எல் லோரும் திரண்டு வர, துரைமுருகன், கே.என்.நேரு, கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பொன்முடி, உதயநிதி என பலரும் வந்தாங்க. 8 மணிக்கு முதல் வர் ஸ்டாலின் வந்தார். கலைஞரின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு அங்கிருந்து அவர் தலைமையில் கலைஞர் நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி தொடங்கிச்சு...''
"அமைதிப் பேரணின்னா இதுதான் எனச் சொல்ற மாதிரி பின்-ட்ராப் சைலண்ட்ல பேரணி நடந்துச்சு. கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின், துரைமுருகன், நேரு, கனிமொழி உள்ளிட்டவங்க அஞ்சலி செலுத்திய பிறகு தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினாங்க. தொண்டர்களின் அஞ்சலியே 3 மணி நேரம் வரை நீடிச்சிச்சி தலைவரே.''”
"கலைஞர், அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு கோபாலபுரத்துக்கு வந்தார் ஸ்டாலின். அவரை பின்தொடர்ந்து சீனியர்களும் வந்தாங்க. கோபாலபுரத்துல எல்லா ருக்கும் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. வீட்டுக்கு பின்புறத்தில் உடன்பிறப்பு களுக்கும் டிஃபன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டிஃபன் பண்ணிட்டு ஸ்டாலின் கோபாலபுரத்துல இருந்து கிளம்பியபோது உணர்ச்சிவயப்பட்டு தொண்டர்கள் முழக்கமிட்டனர். அவர்களை அமைதியாக இருக்கணும்னு கைகாட்டிச் சொன்ன ஸ்டாலின், "எல்லோரும் சாப்பிட் டீங்களா? சாப்பிடலைன்னா போய் சாப்பிடுங்க'ன்னு சொல்லிட்டு கிளம்பினாருப்பா... தொண்டர்கள் நெகிழ்ந்து போயிட்டாங்க.''”
"உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி பத்தி ஸ்டாலின் சொன்னதக் கேட்டு தி.மு.க. இளைஞரணி ரொம்ப அப்-செட்டாகிட்டாங் களாம்பா...''”
"அப்செட்டானாலும் இளைஞரணியினர் நம்பிக்கை இழக்கலை தலைவரே.. அவங்ககிட்ட விசாரிச்சேன். பழுக்கலைன்னுதான் தலைவர் சொல்லியிருக்காரே தவிர, முடியாதுன்னோ... தேவையில்லைன்னோ சொல்லலை யே. அதனால், பழம் பழுக்க அதிக நாள் தேவையில்லை. எப்ப வேணாலும் பழுத்துவிடும்ங்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்குன்னு சொல்றாங்க.''”
"ஆம்ஸ்ட்ராங் படுகொலையில கட்சி வேறுபாடு இல்லாம பலரும் சம்பந்தப்பட்டி ருப்பாங்க போல..''
"இந்த கொலை வழக்குல ஏற்கனவே 21 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்காங்க. இப்போ, படுகொலைக்கு மூல காரணமாக இருக்கும் ரவுடி நாகேந்திரனின் மகனும், இளைஞர் காங்கிரஸின் முதன்மை பொதுச்செயலாளருமான அட்வகேட் அஸ்வத்தாமனை அதிரடியா கைது செய் திருக்கிறது தனிப்படை போலீஸ். அஸ்வத்தாம னுக்கும் ஆம்ஸ்ட்ராங்குக்கும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. (ஜூலை 20-23 தேதியிட்ட நக்கீரன் இதழில் நாகேந்திரன் புகைப்படத்தை வெளியிட்டு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர் பெயர் அடிபடுகிறது என செய்தி வெளியிட்டிருந்தோம்.) ரெண்டு நாளைக்கு முன்னமே அஸ்வத்தாமனை தனிப்படையினர் தூக்கிட்டாங்க. ரகசிய இடத்துல வெச்சு அவரை தங்கள் பாணியில் போலீசார் விசாரிக்க, பல விசயங்களை கக்கியிருக்கிறார். கொலையில் சம்பந்தம் இருக்குன்னு தெரிஞ்சதும் அவரை கைது செய்திருக்கிறார்கள். இந்த சம்பவம் காங்கிரசில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார் செல்வப்பெருந்தகை. இளைஞர் காங்கிரசில் உயர்ந்த பதவிக்கு அஸ்வத் தாமனை கொண்டு வந்ததே செல்வப்பெருந்தகை தானாம். அஸ்வதாமனைப் போல கிரிமினல் ரெக்கார்டுகள் உள்ள பல பேர் காங்கிரசில் இருக்காங்க. அவங்களெல்லாம் செல்வப் பெருந்தகையின் ஆதரவாளர்களாம். அவங்களை யெல்லாம் களை எடுக்கணும்னு எதிர்கோஷ்டித் தலைவர்களின் ஆதரவாளர்கள் டெல்லிக்கு புகார் அனுப்பிக்கிட்டிருக்காங்களாம்.''”
"சென்னையில் ரூல்ஸை மீறி பார்கள் நடத்தியதா நக்கீரனில் வெளியான 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்கள் நியூஸால கோட்டை பரபரப்பா ஆகிருச்சாமே?
"ஆமா தலைவரே.. ஸ்டார் ஹோட்டல்கள்ல உள்ள பார்களில் வெளி நபர்கள் மது அருந்த தடை விதிக்கமுடியாது. தடை விதிக்க எந்த விதியும் கிடையாது. ஹோட்டல் தரப்புல இருந்து கோர்ட்டுக்கு போக ஆலோசிக்கிறாங்கன்னு நிறைய விசயங்களை ஆழமா எழுதியிருந்தாங்க. அந்த செய்தி கோட்டையில பெரும் பரபரப்பை ஏற்படுத்திச்சி. அதேசமயம், கோர்ட்டுக்கு போகிற தகவல் மேலிடத்துக்கு தெரிஞ்சிருக்கு. பார்களை மூட முகாந்திரம் இருக்கான்னு மேலிடம் விசாரிச்சிருக்கு. மது விலக்கு ஆயத் தீர்வை விதிகளில் பார்களை மூடலாம்னு எங்குமே இல்லை. வெளியாட்கள் பார்களில் குடிக்க லாம்னுதான் இருக்கு. ரூல்ஸ் தெரியாம அதிகாரிங்க அவசரப்பட்டுட்டாங்கன்னு மேலிடத்துக்கு விபரம் சொல்லியிருக்காங்க தலைவரே. அதுக்குப்பிறகு என்னென்னமோ நடந்துச்சு. உடனே, சம்மந்தப்பட்ட ஸ்டார் ஹோட்டல் பார்களை ரத்து செய்த உத்தரவை திரும்பப் பெற்றுக்கிட்டாங்க கார்த்திகா ஐ.ஏ.எஸ்.''
"மாஜி அமைச்சர் கே.பி.முனுசாமி, அ.தி.மு.க. நிர்வாகிகள்ட்ட ரொம்பவே அப்செட்டா பேசினாராமே?"
"ஆமாங்க தலைவரே, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் தந்தை காலமானதற்கு இரங்கல் தெரிவிக்கிறதற்காக தூத்துக்குடி வந்த மாஜி கே.பி.முனுசாமி, தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து மா.செ. தச்சை கணேசராஜா, சண்முகநாதன் போன்ற நிர்வாகிகளோட சேர்ந்து கார்ல கடம்பூர் ராஜூவோட வீட்டுக்கு போய்ட்டிருக்கப்பதான் அவங்கட்ட இப்படி வருத்தப்பட்டாராம். தேர்தல் ஆய்வுக் கூட்டத்துல பொதுச்செயலாளர் மேல பயமே இல்லாம கட்சிக்காரங்க சிலபேரு பேசறப்ப, அவங்கள கண்டிக்கிறதுக்கு என்னைய விட்டு பேசச் சொல்றாரு எடப்பாடி. "என்னய்யா நீ, நம்ம பொதுச்செயலாளர்கிட்ட இப்டி பேசிட்டு இருக்க? அம்மாயிருந்தா நீ இப்படி பேச முடியுமா?'ன்னு எடப்பாடிக்காக நான் அவங்கள கண்டிச்சதுக்கு, "இவரு யாரு நம்மள அடக்குறதுக்கு?'ன்னு தமிழ்நாடு முழுக்க கட்சிக்காரங்க எம்மேல கோவப்படுறாங்க. பொதுச்செயலாளரப் பார்த்து கட்சிக்காரங்க மிரளணும்... ஆனால் அந்தளவு கெப்பாசிட்டி அவர்ட்ட இல்லை. செங் கோட்டையன், சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன்னு ஒரு குரூப்பே அவர்கிட்டப் போயி "முக்குலத்தோர் ஓட்டெல் லாம் விழணும்னா ஓ.பி.எஸ்.ஸ சேர்த்துக்கணும்'னு சொன்னத இப்பவரைக்கும் எடப்பாடி கேக்கல. இதேபோக்கு நீடிச்சா, வரப்போற உள்ளாட்சித் தேர்தல்ல தூத்துக்குடி மாவட்டத்துல ஒண்ணக் கூட கைப்பத்த முடியாதுன்னு வருத்தப்பட்டாராம் முனுசாமி!''
"சர்ச்சைக்குரிய ஐ.ஜி. பிரமோத்குமாருக்கு பதவி உயர்வுகள் ஒரே நாளில் வழங்கப்பட்டது சர்ச்சையாகியிருக்குதே..?''”
"ஆமாம்பா, பாஸி என்கிற நிதி நிறுவனம் மூலம் நில மோசடி செய்தார் என ஐ.ஜி. பிரமோத்குமார் மீது குற்றம்சாட்டப்பட்டது. அவர் மீது அப்போது எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்தது, தற்போது சென்னை நகர கமிஷனராகவும், அப்போது எஸ்.பி.யாகவும் இருந்த அருண். அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டதால் அவரது பதவி பறிக்கப்பட்டது. 1989-ஆம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த பிரமோத்குமார், கடைசியில் நீதிமன் றத்தால் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து. டி.ஜி.பி. சங்கர் ஜிவாலும் உள்துறைச் செயலாளரும் சேர்ந்து அவரை இன்று திடீரென ஏ.டி.ஜி.பி.யாக்கி, டி.ஜி.பி.யாகவும் ஆக்கியிருக்கிறார்கள். அவருக்கு சீனியாரிட்டிப்படி டி.ஜி.பி. பதவி கிடைக்க வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி தங்களது செயலை நியாயப்படுத்தியிருக்கிறார்கள். நீதிமன்றமே கூறினாலும், மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை ஐ.ஜி. பதவியிலேயே நீடிக்க வைத்து ஓய்வளித்திருக்கலாமே, அவருக்கு இவ்வளவு பதவி உயர்வுகளை ஒரே நாளில் கொடுப்பதற்கு காரணமென்ன என்ற கேள்வி யெழுந்துள்ளது.''
"ஓ... அதேபோல தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில், துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட சைலேஷ்குமார் யாதவ் என்கிற போலீஸ் உயரதிகாரிக்கு இப்போது காவலர் வீட்டு வசதி வாரிய பதவியைக் கொடுத்திருக்கிறார்கள். சி.பி.சி.ஐ.டி. விசாரணை பென்டிங்கிலிருந்த முருகன் என்பவர் ஓய்வுபெற அனுமதிக்கப்பட்டார். மனித உரிமை வழக்குகள் பென்டிங்கில் இருந்த வெள்ளத்துரை ஓய்வுபெற அனுமதிக்கப்பட்டார். அதற்கு உத்தரவிட்ட உள்துறை செயலாளர் அமுதா மாற்றப்பட்டார். இவையெல்லாம் காவல் துறைக்காக செய்யப்படும் வேலைகள். இதெல்லாம் காவல்துறையினர் தவறு செய்தால் அதைக் கண்டுகொள்ளக்கூடாது என்கிற போக்கு காவல்துறையிலே நிலவுகிறது என்பதைக் காட்டுவதாகச் சொல்லி ஆதங்கப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.''
"பா.ஜ.க. தலைவர் ரேஸில் சீனியர் லீடர் பெயர் அடிபடுதே?''
"நீங்க கேள்விப் பட்டது சரிதான் தலைவரே, இந்த ரேஸில் பொன்னாருக்கு ஜாக்பாட் அடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்கிறார்கள். இருந்தாலும் புதிய தலைகளும் உக்கிரமாக போட்டியிடுவதால், புதிய தலைவரா...… பொன்னாரா? என்பதில் கேள்வியெழுந்துள்ளது. ஆனா யாரைத் தலைவராக நியமித்தாலும், அவரைப் பற்றிய ஒரு ஆபாச வீடியோ வருமென தற்போதைய தலைவரின் ஆதர வாளர்கள் நமட்டுச் சிரிப்புடன் பேசுகிறார்கள். பா.ஜ.க.வின் பொறுப்பிலிருக்கக்கூடிய அனை வரையும், திட்டமிட்டு ஒரு ஹனிட்ராப் வீடியோ எடுத்து வைத்திருக்கிறார் என தலைவரின் ஆதரவாளர்கள் வெளிப் படையாகவே பேசிக்கொள்கிறார்கள். இதனால் பா.ஜ. தலைவர் பொறுப்பில் யாரை நியமித்தாலும், அதைத் தொடர்ந்து ஹனிட்ராப் விவகாரப் பிரச்சனை வரும் என்ற அச்சம் நிலவுகிறது.''”
"சரி, நான் ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுக்க. அ.தி.மு.க.வில் எடப்பாடிக்கு, சேலஞ்ச் செய்யக்கூடிய தலைவராக உருவெடுத்துவருகிறார் வேலுமணி. அவரைச் சுற்றி 26 மாவட்டச் செயலாளர்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் என பெரிதாக ஒரு வட்டம் உருவாகியுள்ளது. இதை வைத்து எடப்பாடியை அவர் கிட்டத்தட்ட மிரட்டிக் கொண்டிருக்கிறார். இதற்கு அசந்துபோகாமல், எடப்பாடியும் பல சந்தர்ப்பங்களில் அவருடன் மோதல் போக்கைத்தான் கடைப்பிடிக்கிறார். எடப்பாடிக்கும்- வேலுமணிக்குமான இந்த மோதல் எங்கே போய் முடியுமோ என அ.தி.மு.க.வினர் மிகவும் கவலையாக இருக்கின்றனர்.''”
"அப்ப நான் தி.மு.க. விஷயம் சொல்றேன். தமிழகம் முழுவதும் சரளை மண், ஆற்று மண், ஜல்லிகள் உடைக்கும் குவாரிகள் அனைத்தும் ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் வசம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் அமலாக்கத்துறை வழக்குகள் இருக் கும் குவாரிகள் தவிர மற்றவற்றில் ஆற்று மணல் அள்ளுவதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறதாம். ஆட்சியைத் தீர்மானிப்பது நாங்கள்தான். எங்களை யாரும் எதிர்க்கமுடியாது என தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மணல் சப்ளையர்கள், கரிகாலன் டீமை எதிர்ப்பவர்களை போனில் மிரட்டு கிறார்கள் கரிகாலன் குழுவைச் சேர்ந்தவர்கள். அதுமட்டுமில்லாம அமைச்சர் ரகுபதியிடம் பேசி, தமிழகம் முழுவதுமுள்ள சிறைகளில் இருக்கும் கைதிகளுக்கான சாப்பாடு காண்ட்ராக் டையும் கரிகாலன் வசம் ஒப்படைத் திருக்கிறார் அமைச்சர் துரைமுருகன். அமலாக்கத்துறை வழக்குகள் உள்ளிட்ட ஆயிரத்தெட்டு விமர்சனங்கள் எழுந்தபோதும், சிறைக்கு உணவு சப்ளை செய்யும் காண்ட்ராக்டையும் கரிகாலனுக்கு கொடுத்திருப்பதைப் பார்த்து தங்களுக்குள் அதிர்ச்சியும் திகைப்புமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள் தி.மு.க.வினர்.''”
"எனக்குக் கிடைச்ச ஒரு தகவலைச் சொல்றேன்... சென்னை விமானநிலைய உள்நாட்டு முனையத்தில் மதுபானக் கடைகள் இருக்கு. பீர், பிராந்தின்னு எல்லா வெளிநாட்டு, உள்நாட்டு சரக்கும் கிடைக்கும். 24 மணிநேரமும் இங்கு பார்கள் இயங்கும். இந்த கடைகளில் கலால் துறையினர் ரெண்டு நாள் ரெய்டு நடத்தி விற்பனை உள்பட பல விசயங்களை விசாரிச்சிருக்காங்க. அப்போது, பல இல்லீகல் விசயங்களை கண்டுபிடிச்சிருக்காங்க. ஆனா, வழக்கத்தை விட கவனிப்பு அதிகமாக கொடுக்கப்பட்டதால அமைதியாகி விட்டார்களாம் கலால் துறையினர்.''