கும்பகோணம் மாநகராட்சியின் காங்கிரஸ் மேயருக்கு எதிராக, தி.மு.க.வும், காங்கிரசும், மேயரின் சமுதாயத்தினரும் போர்க்கொடி தூக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
"மாமன்றக் கூட்டத்தை மேயர் முறையாக நடத்துவதில்லை. மக்கள்சார்ந்த முக்கிய திட்டங்களுக்குக்கூட தீர்மானம் நிறைவேற்றிவிட்டு கையெழுத்து போடாமல் இழுத்தடிக்கிறார், கமிஷன் கேட்பதிலேயே குறியாக இருக்கிறார்' என்கிறது தி.மு.க. தரப்பு. "மேயரை மதிப்பதில்லை, பொம்மையாக வைத்துக்கொண்டு தி.மு.க.வினரே எல்லா காரியங்களையும் சாதித்துக்கொள்கின்றனர். அவருக்கு கிடைக்கவேண்டிய மரியாதையைக்கூட கொடுப்பதில்லை' என்கிறது மேயர் தரப்பு.
இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி மாமன்றக் கூட்டம் கூடியது. அங்கு நாற்பது தீர்மானங்கள் கொண்டுவந்தனர். அதில் 29 தீர்மானங்களில் கையெழுத்துப் போட்டுவிட்டு, முக்கியத்துவம் கொண்ட 11 தீர்மானங்களில் கையெழுத்துப் போடாமல் வெளி நடப்பு செய்ததால் தி.மு.க. உள்ளிட்ட உறுப்பினர்கள் ஆத்திர மடைந்தனர். பிறகு ஏழாம் தேதி அனைத்து உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பி ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்புக்கொடுத்தார் மேயர் சரவணன். அந்த கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் 3, மார்க்சிய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஒருவர் என 4 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். வராதவர்களுக்கு, "நான் கூட்டிய கூட்டத்திற்கு ஏன் வரவில்லை?' என கடிதம் அனுப்பி எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்டிருக்கிறார்.
இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். "மேயர் சரவணன் சாதாரண குடும்பத் தில் பிறந்த
கும்பகோணம் மாநகராட்சியின் காங்கிரஸ் மேயருக்கு எதிராக, தி.மு.க.வும், காங்கிரசும், மேயரின் சமுதாயத்தினரும் போர்க்கொடி தூக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
"மாமன்றக் கூட்டத்தை மேயர் முறையாக நடத்துவதில்லை. மக்கள்சார்ந்த முக்கிய திட்டங்களுக்குக்கூட தீர்மானம் நிறைவேற்றிவிட்டு கையெழுத்து போடாமல் இழுத்தடிக்கிறார், கமிஷன் கேட்பதிலேயே குறியாக இருக்கிறார்' என்கிறது தி.மு.க. தரப்பு. "மேயரை மதிப்பதில்லை, பொம்மையாக வைத்துக்கொண்டு தி.மு.க.வினரே எல்லா காரியங்களையும் சாதித்துக்கொள்கின்றனர். அவருக்கு கிடைக்கவேண்டிய மரியாதையைக்கூட கொடுப்பதில்லை' என்கிறது மேயர் தரப்பு.
இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி மாமன்றக் கூட்டம் கூடியது. அங்கு நாற்பது தீர்மானங்கள் கொண்டுவந்தனர். அதில் 29 தீர்மானங்களில் கையெழுத்துப் போட்டுவிட்டு, முக்கியத்துவம் கொண்ட 11 தீர்மானங்களில் கையெழுத்துப் போடாமல் வெளி நடப்பு செய்ததால் தி.மு.க. உள்ளிட்ட உறுப்பினர்கள் ஆத்திர மடைந்தனர். பிறகு ஏழாம் தேதி அனைத்து உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பி ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்புக்கொடுத்தார் மேயர் சரவணன். அந்த கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் 3, மார்க்சிய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஒருவர் என 4 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். வராதவர்களுக்கு, "நான் கூட்டிய கூட்டத்திற்கு ஏன் வரவில்லை?' என கடிதம் அனுப்பி எழுத்துப்பூர்வமாக விளக்கம் கேட்டிருக்கிறார்.
இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். "மேயர் சரவணன் சாதாரண குடும்பத் தில் பிறந்தவர், ஆட்டோ ஓட்டுநர். காங்கிரஸ் மாவட்ட தலைவரான லோகநாதனின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். குடந்தை மாநகராட்சி யை காங்கிரசுக்கு ஒதுக்கியதும், இரண்டு காங்கிரஸ் உறுப்பினர்களில் ஐயப்பன் விவரமானவர், அவரை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளமுடியாது. வெளி உலக, அரசியல் அனுபவமில்லாத சரவணனை மேயராக் கினால், தன் கட்டுப்பாட்டிலேயே இருப்பார் என காங்கிரஸ் மாவட்ட தலைவர் லோகநாதனும், தி.மு.க.வினரும் நினைத்து மேயராக்கினர். விவரமறியாதவர் என எண்ணிய சரவணன், தி.மு.க.வினரை மட்டுமல்ல, காங்கிரஸ் மாவட்ட தலைவரையும் எதிர்க்கத் துவங்கினார். சரவணனோ, தி.மு.க.வினரின் முதுகில் சவாரி செய்கிறோம் என்பதைக்கூட உணராமல் கமிசன் கேட்பதிலும், முரண்டுபிடிப்பதிலுமே கறாராக இருந்து சொந்த மக்கள் மத்தியிலும்கூட அவப்பெயரை சந்திக்கிறார்'' என்கிறார்கள்.
மாமன்ற தி.மு.க. கவுன்சிலர்கள் சிலரிடம் கேட்டோம், "கும்பகோணம் மாநகர மக்கள் தி.மு.க.வை நம்பித்தான் வாக்களித்தனர். அவர்கள் எங்கள்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு வேட்டுவைக்கும்விதமாக இருக்கிறது மேயரின் செயல்பாடுகள். மக்கள் நலன்சார்ந்த திட்டங் களுக்கு முட்டுக்கட்டையாகவே இருக்கிறார். எந்த திட்டம் கொண்டுவந்தாலும் எதிர்த்து சர்ச்சையாக்குகிறார். அதற்கு பின்னால் கமிசன் விவகாரம் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. 48 வார்டுகளில் 39 வார்டுகளை தி.மு.க. மட்டுமே கைப்பற்றியது. இவ்வளவு பெரிய வெற்றிக்கு பின்னால் எவ்வளவு பெரிய உழைப்பு இருக்கும். மேயராகும்போதே காங்கிரஸ் மாவட்ட தலைவர் லோகநாதன், தி.மு.க. துணைமேயரோடும், எங்களோடும் ஒத்துப் போவார் என 25 லட்சம் பணம் வாங்கினார். இந்த பணவிவகாரம் சில நாள் கழித்து சரவணனுக்குத் தெரிந்து லோகநாதனோடு முரண்பட்டு நிற்கிறார். அது அவங்க கட்சியில் பேசிக்கவேண்டியது. நெல்லை, கோவை, காஞ்சிபுரம்போல நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எவ்வளவு நேரமாகும்?
சமீபத்தில் மாநகராட்சி விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக தாராசுரம் பகுதியில் 10 கோடிக்கு சாலை, குடிநீர் பணிகள் குறித்தான 11 தீர்மானங்கள் வைத் தோம். அதற்கு சரவணன் கையெழுத்து போடாமல் போய்விட்டார். கமிஷனரோ "சென்னைக்கு அனுப்பி நாங்க ஓ.கே. வாங்கிக்கிறோம்' என்று சொல்லிட்டார். ஏற்கனவே இதுமாதிரி கையெ ழுத்து போடாமல் வெளியேறப் போனவருக்கு எதிராக முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். பிறகு கமிஷனர் மேலிடத்தில் பேசி ஓப்பீனியன் வாங்கினார். அப்பவே மேயருக்கு தலைமையிலிருந்து கடிதம் அனுப்பி ஒத்துப்போக சொல்லியிருக்காங்க. ஆனாலும். 24-ஆம் தேதி நடந்த மன்றக் கூட்டத்திலிருந்து வெளியேபோனவர், கடந்த எட்டாம் தேதி கலந்தாய்வுக் கூட்டம்னு கடிதம் அனுப்பினார் நாங்க யாரும் போகல. மூன்று அ.தி.மு.க. உறுப்பினர்கள், ஒரு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரோடு கூட்டம் நடத்தினார். கூட்டம் முடிந்த கையோடு எங்க மாவட்டச் செயலாளரை போய் பார்க்க,“"மக்கள் எங்களை நம்பி ஓட்டு போட்டிருக்காங்க, அவங்க கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் அது எங்க ஆட்சிக்குதான் அவப்பெயர். அதை தெரிஞ்சி நடந்துக்கோங்க'’ என ஒரு பிடி பிடித்து அனுப்பி விட்டார். வந்தவர் சும்மா இருக்காம, ஒன்பதாம் தேதி ஒரு லெட்டரை எங்க எல்லோருக்கும் அனுப்பி, அதில் ஏன் வரல என எழுத்துப்பூர்வமாக எனக்கு தெரிவிக்கவேண்டும் என அனுப்பியிருக் கிறார்'' என்கிறார்கள் ஆத்திரம் பொங்க.
பருவதராஜகுலத்தின் தலைவர்களோ, "சரவணன் மேய ரானது எங்க குலத் திற்கு கிடைத்த பெருமை என நினைத்தோம். ஆனால் கிடைத்த அற்புதமான பதவியை ஏளனப் படுத்துகிறார். அவரை வெற்றி பெறச்செய்த எங்க ளையே காவல்நிலையம்வரை கொண்டு நிறுத்தி விட்டார். பருவதராஜகுலத்திற்கான பொறுப்பாளர் களை தேர்தல் முறையில்தான் தேர்வுசெய்வது வழக்கம். ஆனால் இவர் மேயர் பதவியின் அதிகாரத்தை வைத்துக்கொண்டு, தேர்தல் இல்லாமலேயே தன்னை தலைவராக்கணும்னு சொந்த சமூகத்தில் பிரிவினை உண்டாக்கிவருகிறார். அவரை கண்டித்து சாலை மறியல், காவல்துறை அடிதடி எனப் பல பிரச்சனைகளை சந்தித்து விட்டோம். அவரது பதவியை நீக்கவேண்டும் என தற்போது முதல்வருக்கும், காங்கிரஸ் தலைவருக்கும் புகார் மனு அனுப்பியுள்ளோம். சில மாதங்களுக்கு முன்பு அயோத்தியில் ராமர் கோயிலுக்கு கங்கா தீர்த்தத்தை குடந்தை பா.ஜ.க.வினரோடு சேர்ந்துகொண்டு அனுப்பிவைத்து காங்கிரஸ் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணிக் கட்சிக்காரர்களின் அதிருப்திக்கு ஆளானார். ஐந்து வருடத்திற்கு தன்னை ஒன்றும் செய்யமுடியாது என்கிற மனநிலையில் இருக்கிறார். காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழகம் முழுவதிலும் ஆதரவாளர்களை தேடுகிறார். அதை சரவணன் பயன்படுத்தி மாவட்ட தலைவராக நினைக்கிறார்'' என்கிறார்கள்.
காங்கிரஸ் மாவட்ட தலைவர் லோகநாதனிடம் கேட் டோம், "இதுல சொல்லுறதுக்கு ஒண்ணுமில்ல. அவர் மேயர் வேலையை செய்கிறார். நாங்கள் கட்சிப் பணியை செய்துவரு கிறோம். மாமன்றத்தில் நடக்கும் விவகாரங்கள், தி.மு.க.வுக்கும் மாமன்ற தலைவருக்குமானது'' எனத் துண்டித்துக்கொண்டார்
துணைமேயர் தமிழழகனிடம் பேசியபோது, "இவர் செய்யும் ஒவ்வொரு செயலும் எங்களுக்கும், கட்சிக்கும், முதல்வருக்கும், மக்கள் மத்தியில் அவப்பெயர் உண்டாக்குகிறது. அவர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எங்களுக்கு ஒரு நொடி போதாது'' என்கிறார் ஆத்திரத்துடன்.
மேயர் சரவணனோ, "மன்றத்தில் எந்த பிரச்சனையும் இல்ல. வரும் மழைக் காலத்திற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறோம்'' என்றார். வெளிநடப்பு, ஆலோசனைக் கூட்டம் குறித்து கேட்டதும், "என்னை ஒரு மேயராகக்கூட அவர்கள் பார்ப்பதில்லை. ஏற்கனவே நான் கையெழுத்து போட்ட கோப்புகள் தொடர்பான பணிகளின் செலவு, திட்ட நிலைமை குறித்து எனக்கு எதுவுமே தெளிவுபடுத்துவதில்லை. நிறைவுற்ற திட்டப் பணிகளை ஆய்வுசெய்வதற்கும் அதிகாரிகளிடம் பேசுவதற்கும்கூட அனுமதிப்பதில்லை. அதேநேரம் நான் கமிஷன் கேட்டு பிரச்சினை செய்வதாக தி.மு.க.வினர் குற்றச்சாட்டுகளைப் பரப்புகின்றனர். எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'' என்கிறார்.
மேயர் சரவணனுக்கும், துணைமேயர் தமிழழகனுக்கும் இடையே இருக்கும் பனிப்போரை தி.மு.க.விலுள்ள முக்கிய தலைகள் பெரிதுபடுத்தியே வருகின்றனர். “மேயர் விவகாரத்தில் தமிழழகனை பலிகடாவாக்கினால், தமிழழகனுக்கு முதல்வரிடம் இருக்கும் நற்பெயர் குறைந்துவிடும். அடுத்தகட்ட பதவிகளுக்கான இடையூறு இருக்காது” என்று பெரிதாக்கி வருகின்றனர் என்கிறார்கள் சமுக ஆர்வலர்கள்.