ராங்கால் : செப்டம்பரில் மாநாடு! காலத்தில் ரெடியாகும் விஜய்! போதை கடத்தல்! தொடர்ந்து சிக்கும் தி.மு.க.!

ss

"ஹலோ தலைவரே, நாடாளு மன்றத்திலேயே சாதி ரீதியான தாக்குதலை ஆரம்பிச்சிட்டாங்க..''”

"ஆமாம்பா, தகுதியற்றவர்களை என்னதான் உயரத்தில் உட்கார வைத்தாலும், இயல்பான குணம் வெளிப்படத்தானே செய்யும்''”

"உண்மைதாங்க தலைவரே, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலை யில், பட்ஜெட் பற்றிப் பேசிய ராகுல்காந்தி, "உங்கள் பட்ஜெட் அல்வா தயாரிப்பில்கூட ஓ.பி.சி. பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கிறது. அதனால்தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கேட்கிறோம். ’இந்தியா கூட்டணி’ ஆட்சிக்கு வந்தால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காகவே சட்டம் கொண்டுவருவோம்' என்றார். அவருக்கு பதில் சொல்ல வந்த ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர், "சாதி பற்றி தெரியாதவர்கள் எல்லாம் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள்' என்று, ராகுலை சாதிரீதியாக அட்டாக் செய்தார். இது எதிர்க்கட்சிகள் தரப்பில் பெரும் அதிர்ச்சியலை களை ஏற்படுத்தியது.''”

ff

"வாய்த்துடுக்காகப் பேசிய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு நாடு முழுக்க கண்டனக் குரல் வலுத்து வருகிறதே?''”

"ஆமாங்க தலைவரே, ராகுலை அவமானப்படுத்திய அமைச்சர் அனுராக்தாக்கூர் உடனே மன்னிப்பு கேட்க ணும்னு இந்தியா கூட்டணி எம்.பி.க் கள் நாடாளு மன்றத்தி லேயே குரல் எழுப்பினார் கள். இதைத் தொடர்ந்து அமளிதுமளி ஏற்பட்டதால் சபையை சபாநாயகர் ஒத்திவைத்துவிட்டார். இதன்பிறகும், தங்கள் அமைச்சரின் பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காத பிரதமர் மோடி, அவர் பேச்சை வழிமொழிவது போலவே, ஷேர் செய்திருக்கிறார். இதைப் பார்த்த காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், "ஆர்.எஸ்.எஸ். -பா.ஜ.க. மற்றும் மோடியின் மனதில் ஊன்றிய ஆழமான சாதி வெறியையே அனுராக் தாக்கூரின் பேச்சு பிரதி பலிக்கிறது' என்று கண்டித்துள்ளார். ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தியோ, மோடியின் உத்தரவின் பேரில்தான் மக்களவையில் இப்படி ஒரு தாக்குதல் ராகுல் மீது நடந்ததா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிர்ப்புக்குரல் கொடுத்திருக்கிறார். ஒன்றிய அமைச்சரின் சாதிரீதியிலான தாக்குதல், தேசிய அளவில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திவருகிறது.”

"தி.மு.க.வுக்குள் ஒருவித பரபரப்பு இழையோடுகிறதே?''”

"வரும் 22ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்வது

"ஹலோ தலைவரே, நாடாளு மன்றத்திலேயே சாதி ரீதியான தாக்குதலை ஆரம்பிச்சிட்டாங்க..''”

"ஆமாம்பா, தகுதியற்றவர்களை என்னதான் உயரத்தில் உட்கார வைத்தாலும், இயல்பான குணம் வெளிப்படத்தானே செய்யும்''”

"உண்மைதாங்க தலைவரே, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலை யில், பட்ஜெட் பற்றிப் பேசிய ராகுல்காந்தி, "உங்கள் பட்ஜெட் அல்வா தயாரிப்பில்கூட ஓ.பி.சி. பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கிறது. அதனால்தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கேட்கிறோம். ’இந்தியா கூட்டணி’ ஆட்சிக்கு வந்தால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்காகவே சட்டம் கொண்டுவருவோம்' என்றார். அவருக்கு பதில் சொல்ல வந்த ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர், "சாதி பற்றி தெரியாதவர்கள் எல்லாம் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள்' என்று, ராகுலை சாதிரீதியாக அட்டாக் செய்தார். இது எதிர்க்கட்சிகள் தரப்பில் பெரும் அதிர்ச்சியலை களை ஏற்படுத்தியது.''”

ff

"வாய்த்துடுக்காகப் பேசிய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு நாடு முழுக்க கண்டனக் குரல் வலுத்து வருகிறதே?''”

"ஆமாங்க தலைவரே, ராகுலை அவமானப்படுத்திய அமைச்சர் அனுராக்தாக்கூர் உடனே மன்னிப்பு கேட்க ணும்னு இந்தியா கூட்டணி எம்.பி.க் கள் நாடாளு மன்றத்தி லேயே குரல் எழுப்பினார் கள். இதைத் தொடர்ந்து அமளிதுமளி ஏற்பட்டதால் சபையை சபாநாயகர் ஒத்திவைத்துவிட்டார். இதன்பிறகும், தங்கள் அமைச்சரின் பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காத பிரதமர் மோடி, அவர் பேச்சை வழிமொழிவது போலவே, ஷேர் செய்திருக்கிறார். இதைப் பார்த்த காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், "ஆர்.எஸ்.எஸ். -பா.ஜ.க. மற்றும் மோடியின் மனதில் ஊன்றிய ஆழமான சாதி வெறியையே அனுராக் தாக்கூரின் பேச்சு பிரதி பலிக்கிறது' என்று கண்டித்துள்ளார். ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தியோ, மோடியின் உத்தரவின் பேரில்தான் மக்களவையில் இப்படி ஒரு தாக்குதல் ராகுல் மீது நடந்ததா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிர்ப்புக்குரல் கொடுத்திருக்கிறார். ஒன்றிய அமைச்சரின் சாதிரீதியிலான தாக்குதல், தேசிய அளவில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திவருகிறது.”

"தி.மு.க.வுக்குள் ஒருவித பரபரப்பு இழையோடுகிறதே?''”

"வரும் 22ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்வது உறுதியாகி விட்டது. அதற்கு முன் உதயநிதியை துணைமுதல்வராக்குவதற்கான முயற்சிகள் நடக்கிறது. அதேபோல், அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சுக்களும் நடந்துவருகிறது. அமைச்சரவை மாற்றத்தின் போது நேருவின் துறைக்கு பதிலாக, அவருக்கு வேறு துறையை கொடுப்பதற்கான மூவ்களும் தெரிகிறது. அதேபோல் ஐ.பெரியசாமியிடம் இருக்கும் உள்ளாட்சித்துறையை, உதயநிதியிடம் ஒப்படைக்கும் திட்டமும் கட்சித் தலைமை யிடம் இருக்கிறதாம். இதேபோல் பொன்முடி, ரகுபதி ஆகியோரின் துறைகளும் மாற்றப்படலாம் என்கிறார்கள்.''”

"போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபரை அடுத்து, தி.மு.க. சிறுபான்மை அணியின் மற்றொரு பொறுப்பாளரும் கைதாகியிருக் கிறாரே?''”

"போதைப்பொருள் கடத்தலில் தி.மு.க.வைச் சேர்ந்த ஜாபர்சாதிக்கை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் கைது செய்தபோது பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் தி.மு.க. மீது குற்றம்சாட்டின. அதனால் ஜாபர்சாதிக்கை உடனடியாக கட்சியில் இருந்து தி.மு.க. தலைமை நீக்கியது. இந்த நிலையில், தி.மு.க. சிறுபான்மை அணியின் ராமநாதபுரம் மாவட்ட துணைத்தலைவர் இப்ராஹிமை அதே டீம் இப்போது கைது செய்திருக்கிறது. அதோடு. அவருக்குச் சொந்தமான குடோன்களிலும் அதிரடி ரெய்டை நடத்தி, அங்கிருந்த போதைப் பொருள்களை பறிமுதல் செய்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து இப்ராஹிமையும் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறது அறிவாலயம். தற்போது, கட்சியின் சிறுபான்மை அணி குறித்த சில விரும்பத்தகாத செய்திகள் தி.மு.க. தலைமைக்குச் சென்றிருக்கிறதாம்.''”

"நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் விரைவில் மாநாடு ஒன்றை நடத்தப் போகிறார்களாமே?''”'

vijay

"நடிகர் விஜய் நடித்து வரும் "கோட்' திரைப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்துவருகிறது. அவரது பிறந்த நாளான ஜூன் 24-ல் "கோட்' படத்தை ரிலீஸ் செய்யலாம் என ஆரம்பத்தில் முடிவு செய் திருந்தார்கள். ஆனால், படப்பிடிப்பு இன்னும் மிச்சம் இருந்ததால் அந்த முயற்சி கைவிடப் பட்டது. இந்த நிலையில், செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால், அன்று "கோட்'படத்தை ரிலீஸ் செய்வதென முடிவு செய்திருக்கிறார்கள். அதேபோல், பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ல் கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தி, தி.மு.க. உள்ளிட்ட திராவிட கட்சிகளைத் திகைக்க வைக்கலாமா? என்று விஜய் ஆலோசித்து வருகிறாராம். மாநாட்டை எங்கு நடத்துவது என்கிற ஆலோ சனையும் நடக்கிறதாம். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.''”

"கட்சி சீனியர்கள் மீது எடப்பாடி கடுப்பில் இருக்கிறார்னு சொல்றாங்களே?''”

"சசிகலா, ஓ.பி.எஸ். உள்ளிட்டவர்களை அ.தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என்று, அ.தி.மு.க. சீனியர்கள் டீம் எடப்பாடியுடன் தொடர்ந்து பேசியது. இதை மறுத்துவந்த எடப்பாடியிடம் ஒரு கட்டத்தில் அவர்கள் ஒருமையில் பேச... அப்செட் ஆகிவிட்டாராம். இந்த நிலையில், தேர்தல் தோல்வி பற்றி ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவரும் அவர், தன்னை ஒருமையில் பேசி சிறுமைப்படுத்திய அந்த சீனியர்களை, அவர்களின் எதிரிகளை விட்டே வசைபாட வைத்து, மனஆறுதல் பெறுகிறாராம். அந்த வகையில் கோபி நாடாளுமன்றத் தொகுதி பற்றிய ஆலோசனைக் கூட்டத்தின்போது, செங்கோட்டையனின் எதிர்க்கோஷ்டியைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரை அவருக்கு எதிராகப் பேச வைத்து ரசித்தாராம் எடப்பாடி. இதற்கிடையே மாஜி மந்திரி வேலுமணி, அ.தி.மு.க.வில் இருக்கும் தனது ஆதரவு மா.செ.க்களான 21 பேரை வைத்து தனி அணியை பலப்படுத்துவதில் தீவிரம்காட்டி வருகிறாராம். இவர் தன்னை அ.தி.மு.க.வில் சேர்க்க உதவுவார் என்று சசிகலா இன்னமும் காத்திருக்கிறார் என்கிறார்கள்.''”

"அ.தி.மு.க. குறித்து பா.ஜ.க. என்ன மனநிலையில் இருக் கிறதாம்?''”

"வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் டெல்லியின் திட்டம். இதை மனதில் வைத்துதான், ஒன்றிய உள்துறை அமைச்சரான அமித்ஷா, அடிக்கடி எடப்பாடியுடன் பேசிவருகிறாராம். அ.தி.மு.க.வில் நடக்கும் குழப்பங்களை அறிந்தபோதும், அவர்களின் உள்கட்சி விவகாரங்களில் மூக்கை நுழைக்க விரும்பவில்லை என்பதுதான் பா.ஜ.க.வின் நிலைப்பாடாக இருக்கிறதாம். அதேபோல் சசிகலாவுக்கு ஆதரவான நிலையையும் பா.ஜ.க. எடுக்கவில்லையாம். எனினும், டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க.வை தங்கள் கூட்டணிக்குள் ஒரு கட்சியாக வைத்துக்கொள்ள விரும்புகிறார்களாம்.''”

"மாநில பா.ஜ.க. நிர்வாகி, ஒன்றிய அமைச்சர் பதவிக்கு ரூட்விடுகிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் ஒருவரை நியமிப்பது உறுதியாகிவிட்டது. இது, சம்பந்தப்பட்ட நிர்வாகியை அதிரவைத்துவிட்டதாம். அதனால் அவர் பி.எல்.சந்தோஷிடம் ஓடிப்போய், அவர் கால்களைத் தொட்டு கும்பிட்டுவிட்டு, "என்னை இந்த அளவுக்கு உயர்த்தியவர் நீங்கள், அதே அன்போடு என்னை எப்படியாவது மத்திய அமைச்சராக ஆக்கிவிடுங்கள். காரணம், என்னைத் தமிழக பா.ஜ.க.வினர் மதிப்பதே இல்லை. எனவே, இதன்மூலம் எனக்கு ஒரு நல்ல மரியாதையை ஏற்படுத்திக்கொடுங்கள்' என்று கேட்டுக்கொண் டாராம். ஆனால் பா.ஜ.க.வின் தேசியத் தலைமையோ, சந்தோஷின் பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டதாம். இந்த நிலையில், அமர்பிரசாத் ரெட்டி ஒரு புத்தக வெளியீட்டு விழாவை கமலாலயத்தில் நடத்தினார். அதில் அந்த மாநில பா.ஜ.க. நிர்வாகியும் புதுச்சேரி -தெலுங்கானா முன்னாள் கவர்னருமான தமிழிசையும் கலந்துகொண்டனர். அப்போது அமர்பிரசாத்தை, தமிழிசை ஏகத்துக்கும் பாராட்ட... அந்த மாநில நிர்வாகி நெளியாய் நெளிந்தாராம். அதேபோல் அமர்பிரசாத்தும், எனக்கு கட்சியில் தமிழிசையின் ஆதரவே போதும் என்பதுபோல் நடந்துகொண்டாராம். ஆக, அந்த மாநில நிர்வாகியின் செல்வாக்கு எல்லாப்பக்கமும் வெகுவாக சுருங்கிவருகிறது.''”

"சம்பவ செந்தில் பற்றி பலவிதமான தகவல்கள் வந்துக்கிட்டே இருக்குதே?''”

rang

"ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் தேடப்பட்டு வரும் சம்பவ செந்தில், நடிகர் சரத்குமாரின் அண்ணனும் காங்கிரஸ் பிரமுகரு மான சுதர்சனனிடம் முன்பு அடியாளாக வேலை பார்த்தவராம். அந்த சமயத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில், இப்போதைய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். அப்போது அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் அவர் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளியான பண்ணையார் கோஷ்டிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அந்த சமயத்தில், அனிதாவின் சொந்த ஊரான தண்டுப்பத்துக்கே சென்று, பண்ணையார் கோஷ்டியினர் அவரைத் தாக்க முயன்றனர். அப்போது சம்பவ செந்தில் அங்கேயே சென்று, இருதரப்பையும் சமாதானப்படுத்தி பிரச்சினையை முடித்துவைத்தாராம். அந்த அளவுக்கு சம்பவ செந்தில் அமைச்சர் அனிதாவிடமும் செல்வாக்காக இருந்தார் என்று, அவர் சமூகத்து ஆட்கள் சொல்கிறார்கள்.''”

"நானும் என் கவனத்துக்கு வந்த ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ஒருங்கிணைப் புக் குழுவை, இப்போதே முதல்வர் ஸ்டா லின் அமைத்திருப்பதையும், அந்தக் குழு அடிக்கடி கூடி விவாதிப்பதையும் அறிந்த எடப்பாடி, தங்கள் கட்சி சீனியர்களுடன், நாமும் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்கலாமா?’ என விவாதித் திருக்கிறார். இதற்கிடையே தேர்தல் தோல்வி குறித்து, இரண்டாம்கட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து வருவதால், அது முடிந்ததும், தேர்தல் வேலைகளைத் துவக்கலாம் என்பது தான் எடப்பாடியின் எண்ணமாம்.''’

___________

ஈரோடு கலெக்டர் தரப்பு விளக்கம்!

நக்கீரன், ஜூலை 31-ஆகஸ்ட் 02 இதழில், "அதிகார மமதையில் ஈரோடு கலெக்டர்' என்ற தலைப்பில் நாம் வெளியிட்டிருந்த கட்டுரைக்கு ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுங்கரா தரப்பில் கொடுத்துள்ள விளக்கம்.

"விவசாயிகள் பிரச்சனைக் காக மனு அளிக்க வந்த விவசாய சங்க நிர்வாகிகளில் ஒருவரின் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டதாக தெரிவித்திருக் கிறீர்கள். ஆனால் அந்த நபர், கலெக்டர் அனுமதியில்லாமல் அனைத்தையும் வீடியோ எடுத்ததால்தான் கண்டித்து செல்போனைப் பிடுங்கிவைத்து பின்னர் கொடுத்தார்.

அதேபோல், அரசு ஊழியர்கள் விடுப்பெடுக்க விண்ணப்பிக்கும் போது மனிதாபிமானமில்லாமல் நடப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், தேவையற்ற விடுப்புகளைத் தவிர்ப்பதற்காக, சரியான கார ணத்துக்காக விடுப்பு எடுக்கிறார்களா என்பதில் அவர் கண்டிப்புடன் இருப்பதைத்தான் தவறாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதே போல் பெண் ஊழியர்களை ஒருபோதும் அவர்களின் உடைகளின் நிறத்தைக் குறிப்பிட்டு கலெக்டர் அழைத்ததில்லை. அனைவரையும் மேடம் என்று மதிப்பாக அழைப்பது தான் அவரது வழக்கம். அவர் மனைவி நீலகிரி மாவட்ட கலெக்டர் பொறுப்புக்கு வந்தே சில நாட்கள்தான் ஆகிறது. அதனை கொடுமை என்று குறிப்பிட்டிருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. விவசாயிகள் கலெக்டர் மீது குற்றம் சுமத்தியது போன்றே குறிப்பிட்டி ருக்கிறீர்கள். ஆனால், ஒரு விவ சாயியின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது குறித்த புகாரில், ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டதால் நிம்மதி யடைந்த விவசாயி முனுசாமி, அவரை நேரில் சந்தித்து பாராட்டி விட்டுச் சென்றார். இதுபோல் விவசாயிகளின் நலனைக் கருத் தில்கொண்டுதான் செயல்பட்டு வருகிறார்' என்று அவர் தரப்பில் விளக்கமளித்துள்ளனர்.

(ஆர்.)

nkn030824
இதையும் படியுங்கள்
Subscribe