பிறந்த நாளுக்கு கோயிலில் வைத்து பத்து நபர்களுக்கு பொங்கல் சாதம் கொடுத்தாலே அதை விளம்பரப்படுத்தி, தன்னிகரற்ற தலைவர் என சுயம்தம்பட்டப் அடித்துக் கொள்ளும் இந்த மண்ணில், தன் வீட்டைக் கட்சிக்காக உயில் எழுதி வைத்த மாமனிதர் ஒருவர் வாழ்ந்திருக்கிறார்.
மனித குல விடுதலை, சமநீதி, சமத்துவ சமுதாயம் என உலகில் என்றும் வாழும் தத்துவமான கம்யூனிச கொள்கைகளை விதைத்து அதை இயக்கமாக உருவாக்கிய அதிலும் நமது தமிழ் மண்ணில் முதல் கம்யூனிஸ்ட் கட்சி கிளையை ஏற்படுத்தி அதன் நிர்வாகியாக செயல்பட்டவர் சி.எஸ்.சுப்பிரமணியம்.
இவர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் கட்சிக்கு தானமாக வழங்கிய 31 சென்ட் நிலத்தில், செப்டம்பர் 18 அன்று கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தத்துவார்த்த பயிற்சிப் பள்ளி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கோமல் என்
பிறந்த நாளுக்கு கோயிலில் வைத்து பத்து நபர்களுக்கு பொங்கல் சாதம் கொடுத்தாலே அதை விளம்பரப்படுத்தி, தன்னிகரற்ற தலைவர் என சுயம்தம்பட்டப் அடித்துக் கொள்ளும் இந்த மண்ணில், தன் வீட்டைக் கட்சிக்காக உயில் எழுதி வைத்த மாமனிதர் ஒருவர் வாழ்ந்திருக்கிறார்.
மனித குல விடுதலை, சமநீதி, சமத்துவ சமுதாயம் என உலகில் என்றும் வாழும் தத்துவமான கம்யூனிச கொள்கைகளை விதைத்து அதை இயக்கமாக உருவாக்கிய அதிலும் நமது தமிழ் மண்ணில் முதல் கம்யூனிஸ்ட் கட்சி கிளையை ஏற்படுத்தி அதன் நிர்வாகியாக செயல்பட்டவர் சி.எஸ்.சுப்பிரமணியம்.
இவர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் கட்சிக்கு தானமாக வழங்கிய 31 சென்ட் நிலத்தில், செப்டம்பர் 18 அன்று கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தத்துவார்த்த பயிற்சிப் பள்ளி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கோமல் என்ற கிராமம்தான் சி.எஸ் சின் பூர்வீகம். இவர்களின் குடும்பம் செல்வச் செழிப்பானது. இவரது அப்பா அப்போதே மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்த சுந்தரம் அய்யர். கல்வியியல் கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1910 ஜூன் 16ல் சுந்தரம் அய்யருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர்தான் சி.எஸ். சென்னை மாநில கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். ஐ.சி.எஸ். படிக்க லண்டனுக்கு தனது மகன் சி.எஸ்.ஐ அனுப்பி வைத்தார் அவரது அப்பா. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை கலை பட்டமும் பெற்ற சி.எஸ்., மார்க்சிய நூல்களை அதிகம் படித்தார். பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் அமைப்பு களோடு தொடர்பு ஏற்பட்டது. பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான டெய்லி வொர்க்கர் என்ற பத்திரிகையில் பணியாற்றியதோடு ஆசிரியர் குழுவிலும் இடம் பெற்றார். லண்டனில் இந்திய மாணவர்களை ஒருங்கிணைத்து இந்திய மாணவர் அமைப்பை ஏற்படுத்தினார்.
லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து வந்த மகாத்மா காந்தியை சி.எஸ் சந்தித்துப் பேசினார். அவர் ஒருங்கிணைத்த இந்திய மாணவர் கள் கூட்டத்தில் காந்தியடிகள் பேசியதும் குறிப்பிடத்தக்கது.
ஐ.சி.எஸ் படிக்க போன மகன் பட்டத்துடன் திரும்புவான் என அவரது பெற்றோர் எதிர்பார்க்க சென்னை திரும்பிய சி.எஸ். ""நான் மிகப் பெரிய பட்டம் பெற்றுள்ளேன் ஆம் நான் ஒரு கம்யூனிஸ்ட்'' என அவர்கள் குடும்பத்தை வியக்க வைத்துள்ளார்.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் அமைப்புகளின் மூலவர்களான பாஷ்யம், அமீர்ஹைதர்கான், சிங்காரவேலர் என பல தலைவர் களுடன் தொடர்பு ஏற்பட்டு முதல் முதலாக கம்யூனிஸ்ட் கட்சி கிளை சென்னையில் தொடங்கப் பட்டு அந்த குழுவுக்கு நிர்வாகி யாகவும் பணியாற்றியுள்ளார்.
ஆங்கிலேய ஆட்சியாளர்களால் போடப்பட்ட சதி வழக்குகளில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். தோழர் சி.எஸ்.சும் இரு வருடம் சிறையில் இருந்தார். சுதந்திர போராட்டம், கம்யூனிஸ்ட் கட்சி கிளைகள் அமைப்பு, கட்சி பத்திரிகையில் பணி புரிந்தது என முழுமையான செயற்பாட்டாளராக இருந்துள்ளார். இந்திய அளவில் ஏராளமான தலைவர்களோடு தொடர்பில் இருந்தும் அவர் எந்த பதிவையும் வெளியிட்டதில்லை. அவருடைய குடும்ப வாழ்வை பற்றியும் முழுமையான தகவல் இல்லை. தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவும் இல்லை.
2001 ஆண்டுக்கு பிறகு அவர் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் வசிப்பதாக தகவல் தெரிந்து மூத்த தோழர் ஆர்.நல்லக்கண்ணு, டி.ராஜா, தா.பாண்டியன், சி.மகேந்திரன் போன்றோர் நேரில் வந்து சந்தித்தனர். சில முயற்சிக்கு பிறகு மூத்த தோழர் ஆர்.என்.கே ஏற்பாட்டில் தோழர் சி.எஸ். சென்னை அழைத்துச் செல்லப்பட்டு, அம்பத்தூர் என்.சி.பி.ஹெச் காலனியில் தோழர்கள் பாதுகாப்பில் வாழ்ந்தார். 102 வயது வரை வாழ்ந்து, சென்ற 2011ல் மறைந்தார்.
கோபிசெட்டிபாளையம் வீட்டில் 2001ல் சி.எஸ்.ஸை கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தித்த போது, ""நான் உயிருள்ளவரை கம்யூனிஸ்ட்தான். எனக்கு பிறகு நான் இருக்கும் இந்த இடம் கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான். இதை முன்பே உயில் எழுதி வைத்துவிட்டேன். இந்த இடத்தில் கட்சியின் தத்துவார்த்த கல்வி படிப்பகம் நடத்துங்கள்'' என கூறியிருக்கிறார். அவரின் பெருமைமிகு தியாகத் தை கேட்டு உணர்ச்சிகரமாக கண்ணீர் விட்டுள்ளனர் தோழர்கள்.
சி.எஸ். வழங்கிய 31 சென்ட் நிலத்தில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் கிளையின் தத்துவார்த்த கல்வி கட்டிடமான சி.எஸ். நினைவரங்கத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மூத்த தோழர்.தா.பாண்டியன் தலைமையில் முத்தரசன், சுப்பராயன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட நெகிழ்வான நிகழ்வு நடந்தது.
- ஜீவாதங்கவேல்