ள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைக்குத் தேவையான பல்வேறு பாடப் பிரிவுகளுக்கான போட்டித் தேர்வுகளை நடத்தி ஆசிரியர்கள், பேராசிரியர்களை தேர்வு செய்து அனுப்பி வைக்கிறது ஆசிரியர் தேர்வு வாரியம். பொதுவாக, வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளும், ஊழல்களும் ஜீரணிக்க முடியாதவைகளாகவே இருந்துவருகின்றன.

IAS

இந்த சூழலில், கௌதமன், லட்சுமிகாந்தன், தாமோதரன், அசோக்குமார், சிமியோன் ஆகிய 5 பட்டதாரிகள், வாரியத்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகளுடன் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்கள். அதாவது, தாங்கள் எழுதிய சரியான விடைகளைத் தவறு எனச் சொல்லி, வாரியம் தங்களுக்கு அநீதி இழைத்திருப்பதாகவும், தாங்கள் கேட்ட தகவல்களுக்கு உரிய பதில்களை தர மறுத்ததாகவும் மாநில தகவல் ஆணையத்திடம் முறையீடு செய்தனர்.

முழுமையான விசாரணைக்குப் பிறகு. உத்தரவிட்டிருக்கும் தகவல் ஆணையர் முத்துராஜ், ‘’ஆசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் களுக்கான போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்ட மனுதாரர்கள் சரியாக விடையளித்தும், சில வினாக்களுக்கான விடைகளைத் தவறு எனச் சொல்லி குறைவான மதிப்பெண்களை வாரியம் வழங்கியுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பயிற்சி நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்களின் அடிப்படையில்தான் விடையளித்திருப்பதாகவும், ஆனால், அதற்குரிய மதிப்பெண்களை வாரியம் வழங்காததால் ஆசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு நாங்கள் தேர்வாக வில்லை என்றும், இதனால் தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி யிருப்பதாகவும், வாரியம் தவறு என சொல்லும் விடைகள் அங்கீகரிக்கப் பட்ட பாடப்புத்தகங்களில் சரி என்று இருப்பதையும் மனுதாரர்கள் விவரிக்கிறார்கள்.

Advertisment

ias

உதாரணமாக, குறுகிய மணி என்று குறிக்கப்படுவது :(A) M1+M2 , (B) M2, (C) M3, (D) M1 என்கிற கேள்விக்கு, M1-தான் சரியான விடை என தேர்வுவாரியத்தின் விடைக் குறிப்பு சொல்கிறது. ஆனால், தமிழக அரசின் மேல்நிலை படிப்பின் இரண்டாம் ஆண்டு பொருளாதாரப் புத்தகத்தில் M1 and M2 are known as narrow money என்று சொல்கிறது. இதைத்தான் நாங்கள் எழுதினோம். ஆனால், எங்களுக்கு மதிப்பெண் வழங்கப்படவில்லை என்று முறையிட்டுள்ளனர் மனு தாரர்கள் (இப்படி பல கேள்வி களுக்கான பதிலை உதாரணமாக ஆணையர் காட்டுகிறார்).

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் பணியாற்றுகிற ஊழியர்கள் முதல் தலைவர் வரை அனைவருமே யூ.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய வற்றால் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றுபவர்கள். ஆனால், அவர்கள் பொறுப்புத்தன்மை இல்லாமல் தொடர்ந்து தவறுகளை அனுமதிப்பதைச் சுட்டிக்காட்டும் முத்துராஜ், இறுதியாகத் தனது உத்தரவில், ’’பொது அதிகார அமைப்புகள் பொறுப்புடைமையுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் செயல்பட வேண்டும் என தகவல் பெறும் உரிமைச் சட்டம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. இதனை மீறும், பொது அதிகார அமைப்புகளின் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்கும் அதிகாரத்தை தகவல் பெறும் உரிமைச் சட்டம் இந்த ஆணையத்திற்கு வழங்கியுள்ளது. அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக பணியாற்றிய 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பணி பதிவேடுகளில், பொறுப்புடைமையுடன் செய்யவேண் டிய பணிகளைச் செய்யத் தவறியவர்கள் என பதிவு செய்வதுடன், அவர்கள்மீது எடுக்கவேண்டிய ஒழுங்கு நடவடிக்கையாக, அவர்களை கட்டாய ஓய்வில் அனுப்புவதற்குரிய நடவடிக்கையை எடுக்குமாறு தலைமைச் செயலாளருக்கு இந்தத் தகவல் ஆணையம் பரிந்துரை செய்கிறது''’என்று உத்தரவிட்டுள்ளார் முத்துராஜ்.

Advertisment

IAS

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர்களாகக் கடந்த 10 ஆண்டுகளில் பணிபுரிந்துள்ள சுர்ஜித் கே சௌத்ரி, விபுநாயர், காக்கர்லா உஷா, டாக்டர் டி.ஜெகன்னாதன், கே.சீனிவாசன், கே.நந்தகுமார், எஸ்.ஜெயந்தி, என்.வெங்கடேஷ், ஜி.லதா ஆகிய 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத்தான் கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்ப பரிந்துரைத்துள்ளார் ஆணையர்.

அந்த 9 அதிகாரிகளில் சுர்ஜித் கே சௌத்ரி மட்டும் ஏற் கனவே ஓய்வு பெற்றுவிட்டார். மற்ற 8 அதிகாரிகளில் பஞ்சாப்பைச் சேர்ந்த விபு நாயர் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் டான்சி நிறுவனத்தின் சேர்மனாகவும், ஆந்திரா வைச் சேர்ந்த காக்கர்லா உஷா, முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் டிட்கோ சேர்மனாகவும், தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஜெகன்னாதன் பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் கமிஷனராகவும், நந்தகுமார் நிதித்துறையின் கூடுதல் செயலாளராகவும், ஜெயந்தி தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் நிர்வாக இயக்குநராகவும், லதா சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் மாநில திட்ட இயக்குநராகவும் தற்போது பணிபுரிந்து வருகின்றனர். மேலும், சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கூடுதல் திட்ட இயக்குநராகத் தெலுங்கானாவைச் சேர்ந்த என். வெங்கடேஷும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் வாரியத்தின் கூடுதல் செயலாளராக ஜார்கண்ட் மாநில கேடர் ஐ.ஏ.எஸ்.ஸான தமிழகத்தைச் சேர்ந்த கே.சீனிவாசனும் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களில் விபுநாயர், காக்கர்லாஉஷா, கே.சீனிவாசன், கே.நந்தகுமார், வெங்கடேஷ் ஆகிய 5 பேரும் நேரடி ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள். மற்ற மூவரும் மாநில சிவில் சர்வீசில் கன்ஃபர்ட் ஐ.ஏ.எஸ்.சாக பதவி உயர்வு பெற்றவர்கள். தேர்வு வாரியத்தின் தலைவராக சுர்ஜித் சௌத்ரி 2 வருடங்கள் 2 மாதங்களும், விபுநாயர் 3 வருடங்கள் 6 மாதங்களும், லதா 1 வருடம் 3 மாதங்களும் இருந்துள்ளனர். மற்றவர்கள் அதிகபட்சம் 6 மாதங்கள் வரை இருந்திருக்கிறார்கள்.

இவர்களைக் கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்ப தகவல் ஆணையம் பரிந்துரைத்திருப்பது குறித்து காக்கர்லா உஷாவிடம் நாம் பேசியபோது, ""கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்பதோடு முடித்துக்கொண்டார். என்.வெங்கடேசிடம் நாம் பேசியபோது, ""வெளியூரில் இருக்கிறேன். பரிந்துரையில் என்ன சொல்லப்பட்டிருக் கிறதுங்கிறது எனக்குத் தெரியாது... தெரிந்ததும் சொல்கிறேன்''‘ என்றார்.

IAS

டாக்டர் ஜெகன்னாதனை தொடர்பு கொண்டு பேசியபோது,’வாரியத்தின் தலைவராக கூடுதல் பொறுப்பில் குறைந்த மாதங்கள்தான் இருந்திருக்கிறேன். நான் பொறுப்பிலிருந்த காலத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளிவந்ததாக எனக்கு நினைவில்லை. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி தகவலை அளிக்க மற்ற துறைகளில் இருப்பது போல ஆசிரியர் தேர்வு வாரியத்திலும் பொது தகவல் அதிகாரி இருக்கிறார். அவர் சரியான, முழுமையான தகவல்களைத் தர மறுத் தால் அப்பீலேட்டேட் அத்தாரிட்டியிடம் மேல் முறையீடு செய்யலாம். அவரும் தகவல் தர மறுக்கும்பட்சத்தில் ஆணை யத்திடம் மனுதாரர் முறையிட முடியும். ஆக, பொது தகவல் அதிகாரி தவறு செய்கிறபட்சத்தில் அவர் களைத் தண்டிக்கலாம். அவர்கள் செய்கிற தவறு களுக்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்? எங்களின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு நாங்கள் நடவடிக்கை எடுக்க மறுத் திருந்தால் அதுகுறித்து கேள்விகள் கேட்க உரிமை உண்டு. அந்த வகையில் நான் தலைவராக இருந்த காலத்தில் (ஜூன் 2017-டிசம்பர் 2017) எந்தத் தவறும் நடக்க வில்லை''‘என்றார் நம்மிடம் விரிவாக.

பரிந்துரையில் சம்பந்தப் பட்ட மற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் நாம் தொடர்புகொண்டபோது, சிலரின் கைபேசிகள் தொடர்பு எல்லைக்கு வெளி யில் இருந்தன. சிலர், நமது அழைப்பை ஏற்கவில்லை.

""தகவல் ஆணையம் பரிந்துரைத்திருப்பதுபோல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கட்டாய ஓய்வில் அனுப்பி விட முடியுமா?'' என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சௌண்டையாவிடம் நாம் கேட்டபோது, ’’""தவறு செய்கிற அதிகாரி களுக்கு அதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க மட்டுமே ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு. நீதிமன்றங்கள்போல தண்டிக்கும் அதிகாரமெல்லாம் கிடையாது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி அரசுக்குப் பரிந்துரைக்கும் அதிகாரம் ஆணையத்துக்கு இருந்தாலும், அந்த பரிந்துரையை அரசாங்கங்கள் ஏற்கவேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. அதுவும் ஐ.ஏ.எஸ். என்பது இந்திய ஆட்சிப் பணிகளில் ஒன்று. மத்திய அரசுதான் இதில் முடிவெடுக்க முடியும். அதேசமயம், வாரியத்தின் சேர்மனாக இருப்பவர், தனக்குக் கீழுள்ள அதிகாரிகள் தவறு செய்தால், எனக்குத் தெரியாது என அதனைத் தட்டிக் கழித்துவிட முடியாது. பொறுப்பிலுள்ளவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்'' என்று சுட்டிக்காட்டுகிறார் அழுத்தமாக.

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நாம் விசாரித்தபோது, ’’வினாக் களும், விடைகளும் தவறாக கேட்கப்படுவது வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் அதிகம் நடக்கிறது. இதுகுறித்து பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டும் வாரியம் தன்னை திருத்திக்கொள்ளவில்லை. இப்போது கூட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கத்தான் செய்கின்றன. இது தவிர, ஆட்சியாளர்களின் சிபாரிசுகளை வாரிய அதிகாரிகள் ஏற்பதால் ஊழல்களும் முறை கேடுகளும் பெருத்துவிட்டன. ஆட்சியாளர் களுக்காக சில தவறுகளைச் செய்கிற அதிகாரிகள், தங்களுக்காக பல தவறுகளைச் செய்யும் துணிச்சலைப் பெற்றுவிடுகின்றனர். இதனாலேயே ஊழலும் லஞ்சமும் வாரியத்தில் தலைவிரித்தாடுகிறது.

சம்பந்தப்பட்ட மனுதாரர்களின் பிரச்சனைகளைக் கூட வாரியம் ஆலோசித்தது. நீதி மறுக்கப்பட்ட மனுதாரர்களுக்கு நிவாரணம் வழங்கினால், சம்பந்தப்பட்ட போட்டித் தேர்வில் தேர்வுசெய்யப்பட்டு பணியில் இருக்கும் ஆசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் பலரையும் வெளியேற்ற வேண்டியதிருக்கும். அது பல்வேறு சிக்கல்களை உருவாக்கும் என்பதால்தான், இந்த பிரச்சினைகளில் நியாயமான கவனத்தை வாரிய அதிகாரிகள் செலுத்தவில்லை. ஊழல் செய்யும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உடனடியாகத் தண்டிக்கப் பட்டால்தான் நேர்மையான அதிகாரிகளுக்கு மதிப்பு இருக்கும். அவர்களை அடையாளமும் காணமுடியும். அதற்கான பிள்ளையார் சுழியைப் போட்டுள்ளது தகவல் ஆணை யம்''‘என்கிறார்கள் வாரியத்திலிருக்கும் நேர்மையான பணியாளர்கள்.

ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளர்களிடம் விசாரித்தபோது, ‘’தகவல் ஆணையத்திடமே நிறைய தவறுகள் இருக்கின்றன. அவற்றை ஆணையம் உணர வில்லை. ""விருப்பு வெறுப்பு களுடன்தான் தம்மிடம் வரும் பிரச்சனைகளை அணுகு கிறார்கள் ஆணையர்கள். ஆசிரியர் தேர்வு வாரியம் தொடர்பான பிரச்சனைகளில் ஆணையம் கொடுத்துள்ள பரிந்துரை சரியானதுதான். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சரியாக இருந்தால்தான் நிர்வாகம் நேர்மையாக இருக்கும். தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ராஜகோபால் ஐ.ஏ.எஸ்.(ஓய்வு)சின் யோச னையின் பேரில்தான் இப்படிப்பட்ட பரிந்துரையை ஆணையர் முத்துராஜ் வழங்கியிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது''‘என்கின்றனர்.

"ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கட்டாய ஓய்வில் அனுப்புங்கள்' என்கிற தகவல் ஆணையத்தின் பரிந்துரை, தலைமைச் செயலகத்திலுள்ள அதிகாரவர்க்கத்திடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. "அந்தப் பரிந்துரைகள் தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சனுக்கு கிடைத்தும் அது குறித்து அவர் அலட்டிக்கொள்ளவில்லை' என்கிறது கோட்டை வட்டாரம்.