திருச்சியில் இருந்து அந்தக் கடிதம் நக்கீரன் அலுவலகத்திற்கு வந்திருந்தது. அதில் ஒரு இளம்பெண் பதட்டத்தோடு எழுதி இருந் தார். அந்தக் கடிதத்தில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அணிவகுத்தது. அதில் இருந்தது இதுதான்....

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தின் எதிரில் அன்பு பார்க் என்ற ஓட்டல் உள் ளது. அங்கு கிங் பிஷர் மசாஜ் செண்டர் மற்றும் டியூக்ஸ் பார், பப் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. நான் மேற்படி மசாஜ் சென்டரில் 3 மாத காலமாக பணிபுரிந்து வந்தேன். அந்த மசாஜ் சென்டர் மற்றும் பப்புக்கு ஸ்ரீதர் என்பவர் தான் ஓனர், மேனேஜர் ஜெனி. இவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு அவர் களது பார் மற்றும் மசாஜ் சென்டரை மேம் படுத்துவதாகச் சொல்லிக்கொண்டு, மசாஜ் சென் டரில் பணிபுரியும் பெண்களை அவர்களுக்கு தெரி யாமலேயே குளிர்பானத்தில் போதை பொருட் களை கலந்து கொடுத்து, பப்பில் அரை நிர்வாணமாக நடனம் ஆட வைக்கிறார்கள்.

spa

Advertisment

அங்கு இருக்கும் ஓட்டல் ரூம்களில், அரசியல்வாதிகள் மற்றும் வி.ஐ.பி. கஸ்டமர் களுக்கு பிரைவேட் டான்ஸ் என்ற பெயரில், பெண்களை ஆபாசமாக ஆடச்சொல்லி வற்புறுத்தியும், கட்டாயப் படுத்தியும் அடித்துத் துன்புறுத்தியும் வருகிறார்கள்.

கொடுமை தாளாமல், இதுகுறித்து காவல்துறையில் புகார் கொடுத்துவிடுவேன் என்று சொன்ன போது, ஸ்ரீதர் என்பவர், நான் காவல்துறை விபச்சாரத் தடுப்புப் பிரி வில் பணியாற்றும் பால சரஸ்வதி என்ற பெண் காவ லர் மூலம் ஆய்வாளர் கருணாகரனுக்கு மாதம் தவ றாமல் மாமூல் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன்.

அதனால் நீங்கள் யாராவது புகார் கொடுத்தால், யார் புகார் கொடுக்கிறீர்கள் என்ற தகவலை என் னிடம் சொல்லிவிடுவார்கள். அதையும் மீறி யாரா வது புகார் கொடுத்தாலும், நான் இதில் சிக்க மாட் டேன். ஏனென்றால் மேற்படி நிறுவனத்தின் அனைத்து ஆதாரங் களும் என் பெயரில் இல்லை. எல்லாம் என் பினாமி பெயரில் தான் உள்ளது. அதனால் எனக்கு எவ்வித பயமும் கிடையாது என மிரட்டுகிறார்... -என்று, அந்தக் கடிதம் தேம்ப ஆரம்பித்தது.

Advertisment

spa

பதறிப்போன நாம், உடனடியாக திருச்சி போலீஸ் கமிஷனர் சத்தியபிரியாவைத் தொடர்புகொண்டோம். அவர் நம்மிடம் “எங்களுக்கும் புகார் வந்தது.இதைத் தொடர்ந்து, ஆணையர் செல்வகுமார் தலைமையில் அந்த ஸ்பாவில் ஜூன் 29 ஆம் தேதி அதிரடியாக சோதனை நடத்தினோம். அந்த ஸ்பாவில் மேலாளராக உள்ள விவேக் என்பவரைக் கைது செய்ததோடு, அந்த ஸ்பாவில் இருந்த 3 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் புகாரில் குறிப்பிட்டுள்ள ஜெனி என்ற பெண் தற்போது அங்கு பணியில் இல்லை. இருப்பினும் சோதனையின்போது அங்கிருந்த பெண்களை மீட்டதோடு, ஓரிரு நாட்களில் இந்த ஸ்பாவை நிரந்தரமாக மூடவேண்டும் என்று அறிவுறுடத்தியுள்ளேன்.

தற்போது விபச்சாரத் தடுப்பு பிரிவில் ஆள் பற்றாக்குறையாக உள்ளதால், அந்தந்த காவல்நிலையங்களுக்கு உட்பட்ட ஸ்பாக்களில் சோதனை நடத்திட நான் அறிவுறுத்தியுள்ளேன். அதோடு பெண்களுக்கு கூல் டிரிங்சில் போதை மாத்திரைகள் கலந்து கொடுத்த விவகாரம் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஸ்பாக்களுக்கு சில முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அதிகம் வருவதும், உறுதி செய்யப்பட்டுள்ளது'' என்றார் அழுத்தமான குரலில். கடந்த 2019-லேயே இந்த ஸ்பாவின் உரிமையாளர் ஸ்ரீதர் மீது விபச்சார வழக்கு பதிவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

spa

திருச்சி மாநகரில் மொத்தம் 60 ஸ்பாக்கள் செயல்பட்டு வருகின்றன. ஒருசில காவல் ஆய்வாளர்கள் அத்துமீறும் ஸ்பாக்களுக்கு உடந்தையாக இருந்து லாபம் பார்ப்பதையும் நம்மால் அறிய முடிந்தது. சிறுமிகளைக் கூட இவர்கள் விட்டுவைப்பதில்லையாம்.

மாநகர காவல் துறை ஆணையர் சத்தியபிரியா விடம் நாம் பேசிய பிறகு, விபச்சார தடுப்புப் பிரிவில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பால சரஸ்வதி, ராஜ்மோகன் மற் றும் ஓட்டுநர் அசாலி ஆகிய மூன்று பேரையும் அவர் உடனடியாக ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். இதேபோல், இப்பிரச்சனை யில் இத்தனை நாள் நடவடிக்கை எடுக்காமல் அனுசரணை காட்டி வந்த காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை பாயவேண்டும் என்பதே பலரின் விருப்பமாக இருக்கிறது.

இன்னும் முற்றிலு மாகக் கண்காணித்து, அங் கங்கே தென்படும் இந்த மன்மத ஸ்பாக்களின் அத்து மீறலை உடனடியாக காவல்துறை தடுக்கவேண் டும்.இது அவசர அவசியம்.