ஜெயலலிதா மரணம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணை ஆணையங்களின் பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்க உறுதியாக இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதற்கான முதல் கட்டமாக துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேசமயம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமாக அருணா ஜெகதீசன் சுட்டிக்காட்டியுள்ள 17 பேர்களில் 3 தாசில்தார், 1 டி.எஸ்.பி. என 4 பேரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து அதிரடி காட்டியிருக்கிறது தி.மு.க. அரசு. ஆனால், இத்தகைய நடவடிக்கை ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது சாத்தியமா? என்கிற கேள்வி எதிரொலிக்கத் துவங்கியுள்ளது.

IAS Officers

Advertisment

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமான முதல் 4 குற்றவாளிகளில் ஒருவராக முன்னாள் சுகாதாரத்துறை செயலாளரான டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.ஸை ஆறுமுகசாமி ஆணையமும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான 17 நபர்களில் ஒருவராக தூத்துக்குடி யின் முன்னாள் கலெக்டர் என்.வெங்கடேஷ் ஐ.ஏ.எஸ்.ஸை அருணாஜெகதீசன் ஆணையமும் குற்றவாளிகளாக அடையாளம் காட்டியிருக்கிறது. இதைத்தவிர, ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரையும் பட்டியலிட்டிருக்கிறார் அருணா ஜெகதீசன்.

இதில் டாக்டர் ராதாகிருஷ்ணன் தற்போது தமிழக அரசின் கூட்டுறவுத் துறையின் முதன்மைச் செயலாளராகவும், மத்திய அரசின் தேசிய மீன் வளர்ச்சி வாரியத்தின் எக்ஸிகியூட்டிவ் டைரக்டராக வெங்கடேஷும் இருக்கிறார்கள்.

இந்தநிலையில் குற்றவாளிகளாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள உயரதிகாரிகள் மீது நடவடிக்கை சாத்தியமா? என்ற கேள்வியுடன் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளைக் கையாளும் தமிழக அரசின் பொதுத்துறை மற்றும் உள்துறை வட்டாரங்களில் விசாரித்தோம்.

Advertisment

நம்மிடம் பேசிய அதிகாரிகள், "விசாரணை ஆணையங்களின் பரிந்துரைகளை நீதிமன்றங்களின் தீர்ப்பைப் போலவோ, உத்தரவு போலவோ கருதமுடியாது. இரண்டு சம்பவங்களிலிலும் நடந்துள்ள உண்மைகள் என்ன என்பதை தமிழக அரசு தெரிந்துகொள்ள விரும்பியதால், அதன் பொருட்டு விசாரணை நடத்தி உண்மைகளைச் சொல்லியிருக்கிறது ஆணையம். இது அரசின் கவனத்துக்காக மட்டும் தான். இதில் நடவடிக்கை எடுப்பதும் தவிர்ப்பதும் அரசின் முடிவைப் பொறுத்தது.

ஜெயலலிதா மரணத்தில் பலரையும் குற்றவாளிகள் என ஆறுமுகசாமி ஆணையம் சுட்டிக்காட்டியபோதும் தண்டிக்கப்பட வேண்டும் என சொல்லவில்லை. அவர்கள் மீது அரசு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதாகப் பரிந்துரைத்திருக்கிறது. அதேசமயம், அருணா ஜெகதீசன் ஆணை யமோ, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண் டும் என அழுத்தமாகப் பரிந்துரைத்துள்ளது.

s

அந்த அடிப்படை யில் முதல்கட்டமாக ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையின் பரிந்துரைகள் மீது சுகாதாரத் துறையின் விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், தம்மிடம் ஒப்படைக் கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையை ஆராய்ந்து வருகிறார் துறையின் செயலாளர் செந்தில்குமார் ஐ.ஏ.எஸ்.!

அறிக்கையின் முழு வடிவம் அவரிடம் தரப்படவில்லை. சுருக்க வடிவம் தான் தரப்பட்டுள்ளது. இந்த சுருக்க வடிவம் போதாது என செந்தில்குமார் கருதினால், அறிக்கையின் முழு வடிவத்தையும் கேட்டுப் பெறலாம். துறை ரீதியான விசாரணையின் முடிவு, ஆணையத்தின் பரிந்துரை யை ஒட்டி இருக்குமா என்பது சந்தேகம்தான்.

குறிப்பாக, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீதுள்ள குற்றச்சாட்டுகள் துறைரீதியான விசாரணையில் நீக்கப்படுவதற்கே சாத்தியம் அதிகம். அதனால் அவர்களைத் தண்டிப்பது சாத்தியமில்லை. தண்டிப்பது சாத்தியமில்லை என்பதைவிட தண்டிக்க தமிழக அரசுக்கு விருப்பம் இருக்காது என்பதே நிஜம்.

அதாவது, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தமிழக அரசின் பொதுத்துறையின் கீழ் இயங்குகிறார்கள். இந்தத் துறை முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பொதுத்துறையின் அமைச்சர் ஸ்டாலின்தான். ஐ.ஏ.எஸ். அதிகாரி கள்தான் அரசு நிர்வாகத்தின் அச்சாணிகள். அப்படிப்பட்டவர்களை கொலைக் குற்றத்தில் தண்டிக்க எந்த ஒரு அரசும் முன்வராது.

ஆனால், தண்டிக்க வேண்டும் என்கிற கடினமான ஒரு முடிவை அரசு எடுக்க வேண்டும் என்கிற கருத்து பரவலாக இருக்கிறது. இதனை தற்போதைய அரசு உணர்ந்திருந்தாலும் அந்த கடினமான முடிவை எடுக்க தயக்கம் இருக்கிறது. காரணம், அப்படி ஒரு முடிவை எடுத்தால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் அதிருப்திகளை தி.மு.க. அரசு எதிர்கொள்ள வேண்டிய திருக்கும். அதனை தி.மு.க. அரசு விரும்பவில்லை.

பொதுவாக விசாரணை ஆணையங்களின் அறிக்கை என்பது, ஆளும் அரசின் எண் ணங்களைப் பிரதிபலிப்ப தாகத்தான் இருக்கும். அந்த வகையில், எடப்பாடி பழனிச்சாமி அரசால் அமைக் கப்பட்ட இந்த ஆணையங்களின் அறிக்கைகள், எடப்பாடி பழனிசாமி அரசு இருக்கும் போதே அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் ஐ.ஏ.எஸ்., ஐ.பிஎஸ். அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப் பட்டிருக்குமா? என்பது கேள்விக்குறிதான்.

தி.மு.க. அரசில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டதால் உயரதிகாரிகளைப் பற்றிக் கவலைப்படாமல், அவர்கள் குற்றவாளிகள்தான் என தெரிந்த நிலையில், அவர்களது பெயர்களை அறிக்கையில் இணைத்துள்ளது ஆணையம். அந்த அறிக்கையில், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குற்றவாளிகளாக சுட்டிக்காட்டப் பட்டிருப்பதை அறிந்த தி.மு.க. அரசு, விசாரணை ஆணையங்களின் அறிக்கைகள் பெரும்பாலும் கிடப்பில் போடப்படுவதைப் போல, இந்த அறிக்கைகளையும் கிடப்பில் போட்டிருக்க முடியும்.

ஆனால், இந்த 2 அறிக்கைகள் மீது மக்களின் கவனமும் பத்திரிகைகளின் கவனமும் இருப்பதால் அது குறித்த கேள்விகள் தனது அரசுக்கு எதிரான எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கக்கூடும் என்பதால்தான் சட்டப் பேரவையில் தாக்கல் செய்ய முதல்வர் ஸ்டாலின் முன்வந்தார்.

அதேசமயம், சமூகத்திலும் அரசு நிர்வாகத்திலும் ராதாகிருஷ்ணன் நேர்மையானவர் என்கிற முத்திரையிருப்பதால் அவரைப் பாதுகாக்க வேண்டியதும் அரசுக்கு அவசியமாகப்படுகிறது. அதனால்தான் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

IAS Officers

ஐ.ஏ.எஸ். அதிகாரி செந்தில்குமாரின் விசா ரணையில் ராதாகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டு களையப்பட்டுவிடும். மேலும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடலாம் என்று செந்தில்குமார் தனது ஒப்பீனியனை வழங்குவார் என தெரிகிறது.

இதே அளவுகோல்தான், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டி ருக்கும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீதான நடவடிக்கையிலும் கையாளப்படும் என தெரிகிறது. அந்த வகையில் உயரதிகாரிகள் பாதுகாக்கப் படுவார்கள். மற்றவர்கள் மீது, சி.பி.சி.ஐ.டி. என்கொயரிக்கு செந்தில்குமாரின் விசாரணை வழிவகுக்கும். அந்த வகையில், சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிடும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்கப்பட தி.மு.க. அரசு முயற்சிக்கும்’என்று விரிவாகச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதற்கிடையே, ராதாகிருஷ்ணன் போன்ற உயரதிகாரிகள் மிகவும் அப்-செட்டாகி யிருக்கிறார்கள். தம்மிடம் பேசுபவர்களிடம், "அப்போதைய அரசாங்கத்தில் மற்றவர்களைப் போல நானும் ஒரு பார்வையாளனாகத்தான் இருந்தேனேயொழிய எந்த ஒரு முடிவை எடுப்பதிலும் நான் சம்மந்தப்படவே இல்லை” என்று சொல்லி வருகிறார் ராதாகிருஷ்ணன். அவரிடம், ”கவலைப் படாதீர்கள்; எதுவும் ஆகாது” என்று மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் நம்பிக்கை கொடுத்து வருகின்றனர்.

இந்தச் சூழலில், சசிகலா தரப்பும் அவரது குடும்பத்தினரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களின் ஆலோ சனையைப் பெற்றிருக் கிறார்கள்.

அந்த ஆலோசனையில், "ஆணையம் சொல்லியிருப்பது வெறும் பரிந்துரைதான். பரிந்துரையாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டை வைத்து நீதிமன்றத்தை நாம் அணுகத் தேவையில்லை. அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்பதைப் பொறுத்தே நீதிமன்றத்தை அணுகலாமா என முடிவு செய்யலாம்.

வெறும் சாட்சியங்களின் அடிப்படையில் தான் ஆறுமுகசாமியின் அறிக்கை இருக்கிறது. ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆதாரங்கள் இல்லாத போது வெறும் அறிக்கையை வைத்துக்கொண்டு மட்டுமே உங்களைத் தண்டிக்க தமிழக அரசு முயற்சிக்காது. தண்டித்துவிடவும் முடியாது. அதனால், ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக போலீஸ் என்கொயரிக்கு உத்தரவிட அரசு முடிவு செய்யும்.

அப்படி ஒரு விசாரணைக்கு உத்தர விடப்பட்டு அதனடிப்படையில் உங்களிடம் விசாரித்து அதன் பிறகு நீதிமன்றத்தில் தி.மு.க. அரசு வழக்கு போடும்பட்சத்தில், உங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை கோர்ட்டில் எளிதாக உடைத்துவிடலாம். தேவைப்பட்டால் ஆறுமுகசாமியை கோர்ட்டுக்குகூட நாம் இழுக்க முடியும்.

மேலும், போலீஸ் விசாரணையின் மூலம் ஆதாரங்களைச் சேகரித்து அதன்பிறகு வழக்கை நீதிமன்றத்துக்கு தி.மு.க. அரசு கொண்டு செல்ல எவ்வளவோ காலம் இருக்கிறது. இதைத்தாண்டி, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிராக தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காது. அப்படி நடவடிக்கை எடுக்காமல், உங்களுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் அது குறித்து தி.மு.க. அரசை நீங்கள் கேள்வி கேட்க முடியும். அதனால் எந்த கோணத்திலும் கவலைப்பட வேண்டாம்” என்றெல்லாம் சசிகலா வுக்கு நம்பிக்கை கொடுத் திருக்கிறார்கள் டெல்லி வழக்கறி ஞர்கள்.

தி.மு.க. அரசின் கடினமான நடவடிக்கையில்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா? தப் பிப்பார்களா? என்பது உறுதியாகும்!