கர்ணனாக வாழ்ந்த கர்னல்! -கதறி அழுத கிராமம்!

karnelbalu

புனே பாலாஜி சொசைட்டி பல்கலைக் கழகத்தின் வேந்தரும் கொடைவள்ளலுமான கர்னல் பாலசுப்பிரமணியன் அங்குள்ள ரூபி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் 20-ந் தேதி அதிகாலை உடல்நலக் குறைவால் காலவெளியில் கரைந்துவிட்டார்.

மராட்டிய மாநில புனே நகரை மாணவ மாணவிகளின் கேவலும் கண்ணீரும் நனைக்க, மன்னார்குடிக்கு அருகே உள்ள, கர்னல் பாலாவின் சொந்த கிராமமான கண்டிதம்பேட்டையும் கனத்த துயரத்தில் மூழ்கியது. இந்தக் கிராமத்தில் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் பாலா. துடிப்புமிக்க சிறுவனாக சென்னைக்கு ரயிலேறிய பாலா, கோடம்பாக்கம் பகுதியில் வேலை தேடிச் சுற்றித் திரிய, சாலையோரத்தில் பசியோடு உறங்கிய பாலாவை ஒரு நல்ல இதயம், சினிமா மேக்கப் மேன் ஒருவரிடம் டச் அப் பாயாக சேர்த்துவிட்டது. அங்கு கொஞ்ச காலம் இருந்த பாலா, ராணுவத்துக்கு ஆள் எடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு ஓடினார்.

karnelbalu

இந்திய ராணுவத்தில் சாதாரண வீரராக சேர்ந்து, கடமை உணர்வாலும் பொறுப்புணர்வாலும் அவர் உயர்ந்து நின்றார். பணியில் இருந்தபடியே படித்து மூன்று முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். அவரது செயல்திறனால், இந்திய வரலாற்றிலே அதற்குமுன் நிகழாத அதிசயமாய், குடியரசுத் தலைவரால் நேரடியாக கர்னலாக பாலா நியமிக்கப்பட்டார்.

விருப்ப ஓய்வுபெற்று, ராணுவத்தினரின் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியளிக்கும் நோக்கத

புனே பாலாஜி சொசைட்டி பல்கலைக் கழகத்தின் வேந்தரும் கொடைவள்ளலுமான கர்னல் பாலசுப்பிரமணியன் அங்குள்ள ரூபி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் 20-ந் தேதி அதிகாலை உடல்நலக் குறைவால் காலவெளியில் கரைந்துவிட்டார்.

மராட்டிய மாநில புனே நகரை மாணவ மாணவிகளின் கேவலும் கண்ணீரும் நனைக்க, மன்னார்குடிக்கு அருகே உள்ள, கர்னல் பாலாவின் சொந்த கிராமமான கண்டிதம்பேட்டையும் கனத்த துயரத்தில் மூழ்கியது. இந்தக் கிராமத்தில் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் பாலா. துடிப்புமிக்க சிறுவனாக சென்னைக்கு ரயிலேறிய பாலா, கோடம்பாக்கம் பகுதியில் வேலை தேடிச் சுற்றித் திரிய, சாலையோரத்தில் பசியோடு உறங்கிய பாலாவை ஒரு நல்ல இதயம், சினிமா மேக்கப் மேன் ஒருவரிடம் டச் அப் பாயாக சேர்த்துவிட்டது. அங்கு கொஞ்ச காலம் இருந்த பாலா, ராணுவத்துக்கு ஆள் எடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு ஓடினார்.

karnelbalu

இந்திய ராணுவத்தில் சாதாரண வீரராக சேர்ந்து, கடமை உணர்வாலும் பொறுப்புணர்வாலும் அவர் உயர்ந்து நின்றார். பணியில் இருந்தபடியே படித்து மூன்று முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். அவரது செயல்திறனால், இந்திய வரலாற்றிலே அதற்குமுன் நிகழாத அதிசயமாய், குடியரசுத் தலைவரால் நேரடியாக கர்னலாக பாலா நியமிக்கப்பட்டார்.

விருப்ப ஓய்வுபெற்று, ராணுவத்தினரின் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியளிக்கும் நோக்கத்தோடு ஸ்ரீபாலாஜி சொசைட்டி என்னும் கல்வி நிறுவனத்தைப் புனேயில் தொடங்கிய அவர், தனது கடுமையான உழைப்பால் அதைப் பெரும் கல்விக் குழுமமாக வளர்த்தெடுத்தார். விடுமுறையே இல்லாத அவரது கல்விக்குழுமம் அண்மையில் பல்கலைக் கழகமாக மாறியது. சொந்த ஊரையும் மறக்காமல் அங்கு ஏராளமான நலத்திட்டங்களை செய்துகொண்டே இருந்தார் பாலா. அதனால்தான் அவர் மறைவுச்செய்தி கேட்டு அவரது கிராமமான கண்டிதம்பேட்டையே துடித்துப்போனது.

அங்கே அவர் பிறந்த மேலத்தெரு வீட்டில், அவர் படத்தை வைத்து, ஏரியாவாசிகள் மலர் தூவி அஞ்சலி செய்தவண்ணம் இருக்கிறார்கள். அவரது அத்தை வீட்டிலும் கண்ணீர் அஞ்சலி நடந்துகொண்டே இருக்கிறது. மறுநாள் புனேவில் நடந்த பாலாவின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க அந்த கிராமத்தில் இருந்த பலரும் கிளம்பிக் கொண்டிருந்தனர். அவர்களில் பாலாவுக்கு நெருக்கமானவரான எல்.ஐ.சி. முகவர் மனோகரனிடம், அவரது மறைவு குறித்துக் கேட்டபோது... கண்ணீருடன் பேசியவர்...

""அவரைப் போன்ற ஒரு மாமனிதரை பார்க்க முடியாது. தன்னை வறுமையோடு வெளியே அனுப்பிய எங்கள் கிராமத்தை, அவர் சகல வசதியும் கொண்ட கிராமமாக மாற்றி விட்டார். தான் படித்த எங்கவூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கு கட்டிடங்கள் கட்டிக்கொடுத்ததோடு, அந்தப் பள்ளிக்கு நூலகம் ஒன்றையும் கட்டி, அதைப் புத்தகங்களால் நிறைத்தார். எங்கள் ஊரில் பிறந்த அத்தனை குடும்பத்துப் பிள்ளைகளின் கல்விக்கும் அவர் உதவினார். தான் படித்த உயர்நிலைப் பள்ளிக்கும் கலையரங்கம் உள்ளிட்டவைகளை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அவரால்தான் எங்கள் ஊருக்கு சாலைகள் வந்தது. நகரங்களுக்கே டிரெய்னேஜ் வசதி இல்லாத நிலையில், எங்கள் கிராமத்துக்கு அதையும் அமைத்துக் கொடுத்தார்.

karnelbalu

ஊரில் நடக்கும் அத்தனை நல்லது கெட்டதிலும் அவரது உதவிக்கரம் நீண்டு கொண்டே இருந்தது. அவரால் பயன்பெறாத குடும்பம் என்று இந்தக் கிராமத்தில் பார்ப்பது அரிது. அண்மையில்கூட ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கவேண்டும் என்று முதற்கட்டமான சில லட்ச ரூபாயைக் கொடுத்தார். அந்தத் திட்டம் நிறைவேறுவதற்குள் அவரைக் காலம் அழைத்துச் சென்று விட்டது’’ என கனத்த மவுனத்தில் உறைந்தார்.

கர்னல் பாலா, நம் நக்கீரன் ஆசிரியர் மீது பேரன்புகொண்டவர். நக்கீரன் குடும்பத்தில் ஒருவராகவே நக்கீரனின் நலனில் அக்கறையும் ஆர்வம் காட்டிவந்தார். சிறந்த கவிஞர்கள் வளரவேண்டும் என்ற எண்ணத்தில், நக்கீரன் குழும இலக்கிய இதழான ‘இனிய உதயத்தில், கல்லூரி மாணவர்களுக்காக கவிதைப் போட்டிகளை ஓராண்டு நடத்தி, முதல் பரிசாக ஒரு லட்ச ரூபாயையும், ஏனைய பரிசாக பல ஆயிரக்கணக்கான ரூபாய்களையும் வழங்கி, இளம் கவிஞர்களுக்கு உற்சாகம் கொடுத்து, இலக்கிய உலகின் பெருங்கவனத்தைப் பெற்றவர் பாலசுப்பிரமணியன்.

நக்கீரன் ஆசிரியரின் அன்பான அழைப்பை ஏற்று, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சின்னக்குத்தூசி நினைவு அறக் கட்டளை விழாவில் கலந்துகொண்டு சிறப் பித்த அவர், சக்கர நாற்காலியில் அமர்ந்த படியே கம்பீரமான உரையை நிகழ்த்தி, விழாவில் கலந்துகொண்ட கவிப்பேரரசு வைரமுத்து உள்ளிட்ட அனைவரின் உள்ளங்களையும் கொள்ளைகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பாலசுப்பிரமணியன், ஓய்விலேயே இருந்தார். இந்த நிலையில் உடல்நலக்குறைவால் திடீரென இயற்கை எய்தினார். அவரது மறைவு, பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நம் நக்கீரன் ஆசிரியர், புனே சென்று கர்னல் பாலாவுக்கு அஞ்சலி செய்தார்.

மறைந்த கர்னல் பாலசுப்பிரமணிய னுக்கு திலகவதி என்ற மனைவியும், பரந்தாமன், பரமானந்தம் ஆகிய இரு மகன்களும் உள்ளனர். கர்னல் பாலா என்ற மாமனிதர் மறைந்துவிட்டார். மராட்டிய மாநிலம் ஒரு தலைநிமிர் தமிழரை இழந்துவிட்டது.

இறந்தாலும் இதயங்களில் நிறைந்திருக்கிறார் கர்னல் பாலா.

-தமிழ்நாடன்

__________________

மாள முடியாத சோகத்தில் நான்!

karnelbalu

நக்கீரன் இதழில் நான் எழுதிவந்த "சினிமா சீக்ரெட்' தொடரின் நான்கு அத்தியாங்களைப் படித்துவிட்டு என்மீது பாசமும் நேசமும் கொண்டவர் கர்னல் டாக்டர் பாலசுப்பிரமணியம் அவர்கள். அதற்கு முன் அவரை நான் பார்த்தது மில்லை -பழகியதுமில்லை. என் கலையுலக அனுபவத்தைப் பாராட்டி பாராதிராஜா விழா எடுத்தபோது… அவ்விழாவில் பங்களிப்புச் செய்தார். அந்த விழா முடிந்த மறுவாரமே புனே நகரில் எனக்கு பெரும் விழா எடுத்தார் கர்னல் பாலசுப்பிரமணியம்.

கர்னல் அவர்கள் ஏழைகளுக்கு இரங்கும் இளகிய மனம் கொண்டவர். வஞ்சகமில்லா வள்ளல் தன்மை நிறைந்தவர். ஏழ்மையில் பிறந்து, ராணுவத்தில் இணைந்து, மஹாஉழைப்பால் உயர்ந்து கல்விச் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பிரமாண்டமாக நிற்கும் ஸ்ரீபாலாஜி யுனிவர்ஸிட்டியை உருவாக்கி வளர்த்தெடுத்தார், பல்கலைக்கழக வேந்தர் ஆனார். சுமார் 4000 மாணவ-மாணவிகள் ஜாதி -மத -இன -மாநில -தேச பேதமின்றி இந்தப் பல்கலையில் பயின்று வருகிறார்கள்.

இந்தச் சிறப்புமிக்க பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு மத்தியில் என்னைக் கௌரவித்தார் கர்னல். ரஜினிகாந்த் அவர்கள் எனக்கு வீடு வாங்கித் தந்தபோது… கர்னலும் உடனிருந்து வெற்றிகரமாக முடித்துக்கொடுத்தார். இப்படிப்பட்ட மாபெரும் வள்ளல் குணமுடைய பாலசுப்பிரமணியம் அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு வாழ்க்கையில் என்றுமே மாளமுடியாத சோகத்தில் மூழ்கிவிட்டேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். பேரிழப்புப் பெற்ற அவர்தம் குடும்பத்திற்கு என்னால் ஆறுதல் சொல்ல முடியுமா? இறைவன் ஒருவனால் மட்டுமே முடியும். நிச்சயம் இறைவன் துணையிருப்பான்.

-கலைஞானம்

nkn240221
இதையும் படியுங்கள்
Subscribe