பாலியல் விவகாரங்கள், நாளொரு பயமும் பொழுதொரு நடுக்கமுமாக மாணவிகளை அச்சுறுத்திவருகின்றன. சிவகாசியிலும் அப்படியொரு அவஸ்தையை கல்லூரி மாணவி ஒருவர் அனுபவித்து வந்திருக்கிறாள். மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது, கல்லூரிப் பேராசிரியர் டென்சிங் பாலையா.

டென்சிங் பாலையா கைதான பின்னணி இது...

a

சிவகாசியில் உயரிய நோக்கத்தோடு 1963-ல் தொடங்கப் பட்டது அய்ய நாடார் -ஜானகியம்மாள் கல்லூரி. நல்லொழுக்கம் பேணுவதில் மிகவும் கறாரான கல்லூரி என்பதால், மாணவர்கள் தரப்பில் "பால்வாடி'’என கேலி செய்வதுண்டு. 34 வருடங்களுக்குப் பிறகு, 1997-ல் மாணவிகளும் படிக்கக்கூடிய இருபாலர் கல்லூரி ஆனது.

Advertisment

கல்லூரி நிர்வாகம் என்னதான் ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் தந்தாலும், ‘கள்ளன்தான் பெரிசு’ என்பதை, அந்தக் கல்லூரியின் தாவரவியல் பேராசிரியர் டென்சிங் பாலையா நிரூபித்துள்ளார். பேராசிரியர் பணியோடு, தேசிய மாணவர் படையையும் கவனித்து வந்திருக்கிறார், டென்சிங் பாலையா. கடந்த சில வருடங்களாக, அரசல் புரசலாக அவருடைய பாலியல் சேட்டைகள் குறித்து மாணவிகள் முணுமுணுத்து வந்தது, அக்கல்லூரி நிர்வாகத்தின் காதுகளுக்கு எட்டவே இல்லை.

என்.சி.சி. சீருடையில் கூலிங் கிளாஸ் அணிந்துகொண்டு, "நான் வேட்டை யாடு விளையாடு கமல்ஹாசன் மாதிரி இருக்கேன்ல''’என்று தன்னைத்தானே, மாணவிகளிடம் வர்ணித்துக்கொள்வாராம் டென்சிங் பாலையா. தேசிய மாணவர் படையில் சேர்ந்து பயிற்சி பெற்றுவந்த அந்த மாணவியிடம், மூன்று மாதங்களுக்கு முன் பிருந்தே பாலியல் துன்புறுத்தலை ஆரம்பித் திருக்கிறார். அந்தக் கல்லூரியில் எங்கு பார்த்தாலும் சி.சி.டி.வி. பொருத்தியிருக்கின்ற னர். என்.சி.சி. மாணவிகள் உடைமாற்றும் அறையில் சி.சி.டி.வி. இல்லாததால், டென்சிங் பாலையா அந்த அறைக்குள் நுழைந்து, மாணவியிடம் அத்துமீறியிருக்கிறார். தேசிய மாணவர் படை தொடர்பான பயிற்சிக்குச் சென்ற பல்வேறு இடங்களிலும், பாலியல் துன்புறுத்தலை தொடர்ந்திருக்கிறார்.

aa

Advertisment

பேராசிரியரின் தகாத நடவடிக்கைகளால், பாதிக்கப்பட்ட மாணவி நிம்மதி இழந்து தவித் திருக்கிறாள். ஒருகட்டத்தில் அந்தக் கொடு மையை பெற்றோரிடம் கூறி அழுதிருக்கிறாள். அதன்பிறகே, அக்கல்லூரி முதல்வர் அசோக்கை சந்தித்து முறையிட்டுள்ளனர். ஆனாலும், கிணற் றில் போட்ட கல்லாக விவகாரம் அமுக்கப்பட் டுள்ளது. டென்சிங் பாலையா மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதனால் வெறுத்துப் போன மாணவி, ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைதாகி, டென்சிங் பாலையா அருப்புக் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியர் டென்சிங் பாலையாவுக்கு ஆதரவாக கல்லூரி முதல்வர் அசோக் செயல்பட்டுள்ளதாகவும், மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், இந்திய மாணவர் சங்கத்தின் விருதுநகர் மாவட்டக் குழு கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில், கல்லூரி முதல்வர் அசோக்கை தொடர்பு கொண்டோம்.

"கடந்த நவம்பர் 11-ஆம் தேதி மாணவி தரப்பில் வாய்மொழியாக முறையிட்டாங்க. எங்கள் கல்லூரியில் விசாகா கமிட்டியெல்லாம் கிடையாது. விமன் செல்லிடம் விசாரிக்கச் சொன்னேன். அந்த மாணவி படிக்கின்ற டிபார்ட்மெண்டிலும் விசாரிக்க உத்தர விட்டேன். அடுத்து, விமன் ஆன்ட்டி ஹரஸ்மெண்ட் செல்லும் விசாரித்தது.

dd

டென்சிங் பாலையா, அரசாங்க சம்பளம் பெறும் அரசு ஊழியர். அதனால ரெண்டு, மூணு நாள்ல எல்லாம் நடவடிக்கை எடுத்துவிட முடியாது. டென்சிங் பாலையாவைக் கூப்பிட்டு எச்சரித்தோம். கல்லூரியில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே, அந்த மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டார்''’என்று கூறியவரை, இடைமறித்து "12 வருடங்களாக இந்தக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் டென்சிங் பாலையா. பல மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சிலர், டென்சிங் பாலையாவுக்கு உடந்தையாக இருந்த தாகவும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துவருவதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பியிருக்கின்றனவே? விசாரணை என்ற பெயரில் நாட்கள் கடத்தப்பட்டனவா?'’ என்று கேட்க, "என்னிடம் விசாரணை அறிக்கையை குழு வினர் தந்துவிட்டார் கள். "பாதிக்கப்பட்ட மாணவி சொன்ன தையே, மற்ற மாணவிகளும் கூறு கிறார்கள்' என்று அறிக்கையில் குறிப் பிட்டிருந்தார்கள். ஒவ்வொரு நாளும் விசாரணை நடைமுறை சரியான திசையில் சென்றதற்கு என்னிடம் போட்டோ ஆதாரங்கள் இருக்கிறது. நாட்களை யாரும் கடத்தவில்லை''’என்று குற்றச்சாட்டை மறுத்தார்.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாலியல் குற்றச் செயல்கள் தொடர்ந்தபடியே உள்ளதால், இதற்கென தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்களைப் பணிநீக்கம் செய்வதோடு, கல்விச் சான்றிதழ்களையும் ரத்து செய்யவேண்டும் எனவும், நாளுக்குநாள் கோரிக்கை வலுத்து வருகிறது.