பீகார் தேர்தலில் பத்து தொகுதிகள்வரை வெற்றியை மாற்றி அறிவித்துவிட்டதாக எதிர்க்கட்சிகளிடம் முணுமுணுப்புகள் எழும்நிலையில், (இதை நாங்க உள்ளாட்சித் தேர்தலிலே பண்ணிட்டோமே) என அசால்ட் காட்டுவதுடன், வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே அரசிதழில் வெளியிட்டும் சாதித்துக் காட்டியுள்ளது தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம்.

சில மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, ""அது எப்படிங்க..? முதல் நாள் இரவில் ccதோற்றவர், அடுத்த நாள் அதிகாலையில் வெற்றிபெறுகிறார்..? முதல் நாள் இவரு வெற்றிபெற்றுவிட்டாரென சான்றிதழ் கொடுக்கிறாங்க.. அடுத்த நாள் அவரு வெற்றி பெற்றுவிட்டதா சான்றிதழ் கொடுக்குறாங்க. இது எந்தவகையில் நியாயம்...?'' என்ற ccகேள்வியை எழுப்பினார். அப்போதுதான் சாக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சிமன்றத் தலைவருக்கான தேர்தல் சலசலப்பு தமிழ்நாட்டிற்கே தெரிய ஆரம்பித்தது. சங்காரபுரம் ஊராட்சிமன்றத் தலைவருக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் 11,934. மதியம் 12 மணிக்குமேல் வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில், இரவு எட்டு மணியளவில் "ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட தேவி மாங்குடி 310 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுவிட்டதாக' ஒலிபெருக்கியில் அறிவித்தார்கள்.

"முழுமையாக எண்ணாமல் எப்படி தேவி மாங்குடி வெற்றிபெற்றாரென அறிவிப்பீங்க..? நான்தான் ஜெயித்தேன்' என போட்டி வேட்பாளர் பிரியதர்சினி வாக்குவாதம் செய்த நிலையில்... தேவிமாங்குடிக்கு வெற்றிச் சான்றிதழை வழங்கினார் தேர்தல் நடத்தும் அலுவலர் மாலதி. எனினும், பிரச்சினையை அவர் கள் கைவிடாததால் அதிகாரிகள் வேண்டு கோளின்படி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு மீண்டும் சென்றோம். ஒவ்வொரு ரவுண்ட் வாரியாக கணக்கிட்டு அவர்களுடைய சந்தே கத்தை அங்கிருந்த அதி காரிகள் தெளிவுபடுத்தி னர். அதற்கும் அவர்கள் உடன்படவில்லை. இந் நிலையில், வாக்கு எண் ணிக்கை மையத்திற்கு சம்பந்தமேயில்லாத முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சோழன் பழனிச் சாமி அங்கு வந்து, "யாரைக் கேட்டு அறிவிக்கிறீர் கள்..?' என சவுண்ட் விட்டதும் நிலைமை அவர்களுக்குச் சாதகமானது.

அதன்பின் தேர்தல் பார்வையாளர் கருணா கரன், அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜெய காந்தன் உள்ளிட்டோர் அங்குவந்து மறுபடியும் எண்ணிக்கையை சோதிக்க, தேவிமாங்குடிதான் வெற்றிபெற்றார் என்பது தெளிவாக, அங்கிருந்து புறப்பட்டுவிட்டோம். பின் அதிகாலையில் போட்டி வேட்பாளர் பிரியதர்சினி 63 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவித்தார்கள்'' என அன்று நடந்த சூழலை விவரித்தார் வாக்கு எண்ணிக்கை முகவராகப் பணியாற்றிய ஜெய பிரகாஷ் என்பவர். இது இப்படியிருக்க... அதிகாரி களின் அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்தும், இரண்டாவதாக வெற்றிபெற்ற பிரியதர்சினியின் வெற்றி செல்லாது எனவும் அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையை நாடியது தேவிமாங்குடி தரப்பு.

Advertisment

""தேர்தல் வரலாற்றைப் பொறுத்தவரை வெற்றிபெற்றதாக முதலில் சான்றிதழ் பெற்றவரே வெற்றியாளர். அதுபோக முதல் வெற்றிச் ccசான்றிதழ் கொடுக்கப்பட்ட நிலையில் மற்றொரு தரப்பு வெற்றி பெற்றதாக சான்றிதழ் கொடுக்கப் பட்டது ஏற்புடையது அல்ல என்றும் முதலில் சான்றிதழ் பெற்ற தேவி மாங்குடியின் வெற்றியே செல்லுபடியானது'' என கடந்த 08-02-2020 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பினை வழங்கியது.

தீர்ப்பு வந்த அதேவேளையில் மாவட்ட ஆட்சியரான ஜெயகாந்தன் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை தீர்ப்பினை எதிர்த்து தேவி மாங்குடி பதவியேற்க தடைவிதித்து எதிர்தரப்பு வாதியான பிரியதர்சினியுடன் இணைந்து, தன்னையும் ஒரு வாதியாக சேர்த் துக் கொண்டு 14-02-2020 அன்று உச்சநீதிமன்றத்தினை அணுகினர்.

இந்நிலையில், நீதிமன்றத்திற்கு எதிராக, இந்திய இறையாண்மைக்கு எதிராக, தேர்தல் நேரத்தில் சாக்கோட்டை ஒன்றிய ஊராட்சி தேர்தல் அலுவலராக இருந்த மாலதி, துணை தேர்தல் அலுவல ராக பணியாற்றிய பர்வதவர்த்தினி இருவரையும் பதவியிறக்கம் செய்து உத்தரவிட்ட கையோடு சிவகங்கை மாவட்ட அரசிதழில் சங்கராபுரம் ஊராட்சி தலைவராக பிரியதர்சினி வெற்றிபெற்றதாக மாவட்ட ஆட்சியர் அறிவித் திருப்பது மீண்டும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மீன்வளத்துறைக்கு அவர் மாற்றம் பெற்ற நேரத்தில் அவசர அவசரமாக இந்த வேலையை முடித்துள்ளார். அரசு ஊழியர்கள் தரப்போ, "இதனை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளோம்' என்கின்றனர்.

Advertisment

c

மூத்த வழக்கறிஞரான பாலசுப்பிரமணியனோ, ""மாவட்ட ஆட்சியர் தன்னுடைய அதிகார துஷ்பிரயோகத்தை நடத்திக்காட்டியுள்ளார். இதில் மதுரை நீதிமன்றம் முதலில் சான்றிதழ் கொடுத்தவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நிலையில், மீண்டும் நீதிமன்ற உத்தரவினை மீறி பதவியேற்க தடைவிதித்து உச்சநீதிமன்றத்திற்கு செல்கின்றார். இது முற்றிலும் தவறுதலான முன்மாதிரி. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது தன்னுடைய அதிகாரத்தினைப் பயன்படுத்தி அரசிதழில் அவர் சார்பான நபர் வெற்றி பெற்றார் என வெளியிடுவது எவ்வகையில் நியாயம்.? நீதிமன்றத்தினரைவிட அதிகாரம் படைத்தவரா ஆட்சியர்?'' என்கிறார்.

-நாகேந்திரன்

படங்கள்: விவேக்