மிழக காங்கிரசும் சர்ச்சைகளும் பிரிக்க முடியாதவை. அந்த வகையில் காங்கிரசில் வெடித்துக்கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சனைகள் கட்சியின் மேலிட கதவுகளைத் தட்டிக்கொண்டி ருக்கின்றன.

இது குறித்து நாம் விசாரித்தபோது,”"தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டதிலிருந்தே கம்பப்ளைண்டுகளுக்கும் காண்ட்ராவெர்சிகளுக்கும் பஞ்சமில்லை. ராகுல்காந்திக்கு எதிராக வெறுப்பு அரசியலை உமிழும் பா.ஜ.க.வை கண்டித்து காந்தி பிறந்த நாளில் (அக்.2) தமிழகம் முழுவதும் நடைபயணம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார் செல்வப்பெருந்தகை.

c

இதற்கான அனுமதியை முன்கூட்டியே மாவட்ட தலைவர்கள் காவல் துறையினரை அணுகி முறைப்படி பெற வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார் செல்வப் பெருந்தகை. இதனை கவனிக்கும் பொறுப்பை, கட்சியின் அமைப்புச் செயலாளர் ராம்மோகனிடம் ஒப்படைத்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில், அக்டோபர் 2-ந்தேதி சென்னை அண்ணாசாலை ஜிம்கானா கிளப்பிலிருந்து நடைபயணத்தை துவக்க செல்வப்பெருந்தகை, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ., விஷ்ணுபிரசாத் எம்.பி. உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் ஸ்பாட்டில் திரள, "உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. கலைந்து செல்லுங்கள்; இல்லையேல் எல்லோரையும் கைது செய்ய வேண்டியதிருக்கும்' என போலீசார் எச்சரிக்கை செய்ய, அதைக் கேட்டு தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, தி.மு.க. மேலிட தொடர்பாளர்களிடம் காங்கிரசார் பேச, கடைசியில் மூன்று மூன்று பேராக மாற்றுப்பாதையில் செல்லுங்கள் என அனுமதிக்கப்பட்டது. இதனால் ஏகத்துக்கும் கோபப்பட்டார் செல்வப்பெருந்தகை. எங்கே குளறுபடி நடந்தது என செல்வப்பெருந்தகை விசாரித்திருக்கிறார். அப்போது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதாவது, போலீசாரிடம் அனுமதி வாங்கும் பொறுப்பு ராம்மோகனிடம் இருந்தது. ராம்மோகனோ, 2-ந்தேதி நடைபயணத்துக்கு 1-ந் தேதி அனுமதி கேட்டு கடிதம் தந்திருக்கிறார். உடனே அனுமதி எப்படி கிடைக்கும்? அதனால், அந்த கடிதத்தை போலீசார் நிராகரித்ததுடன், 24 மணி நேரத்தில் அனுமதியெல்லாம் கொடுக்க முடியாது என தெரிவித்துவிட்டது போலீஸ். இதையெல்லாம், மறைத்துவிட்டார் ராம்மோகன். இதனை யறியாமல் ஸ்பாட்டுக்கு வந்த தலைவர்கள், அனுமதி இல்லை என தெரிந்ததும், தி.மு.க. அரசு மீது டென்சனாகிவிட்டனர். உண்மை தெரிந்ததும் அமைதியானார்கள்.

Advertisment

ccசெல்வப்பெருந்தகைக்கு எதிரான பல விசயங்கள் ராம்மோகனால் தான் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, கட்சிக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்படவிருக் கிறார்கள். அந்த நியமனம் குறித்த விண்ணப்பங்களை பெறும் பொறுப்பை ராம்மோகனிடம்தான் கொடுத்திருக்கிறார் செல்வப்பெருந்தகை. அவரோ, இந்த பொறுப்பை வைத்துக்கொண்டு, தலைவர் பதவி வாங்கித்தருவதாக பல பேரிடம் லம்ப்பாக வசூல் வேட்டை நடத்தி முடித்திருக்கிறார்.

இதே லாவகத்தை சென்னையிலும் அவர் கையாள, அவருக்கும் மாவட்டத் தலைவர் களுக்குமிடையே மோதல் வெடித்தபடி இருக்கிறது. இந்த வசூல் வேட்டையை ஜீரணிக்கமுடியாத சீனியர்கள், செல்வப் பெருந்தகையிடம் இது குறித்து முறையிட்ட போதும் அவர் கண்டுகொள்ளாததால், தற்போது இந்த விவகாரம், ராகுல்காந்திக்கு புகாராக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் செல்வப்பெருந்தகைக்கு எதிராகவும் சொல்லப்பட்டுள்ளது.

சென்னையிலேயே நடைபயணத்தை விமர்சையாக நடத்த முடியாமல் பிசுபிசுத்துப் போன விவகாரத்தையும் கடந்த வாரம் ராகுலுக்கு அனுப்பிவைத்துள்ளனர். தமிழக காங்கிரசில் என்ன நடக்கிறது? என்று விசாரித்து ரிப்போர்ட் கொடுங்கள் என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களுக்கு உத்தரவு போட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, செல்வப் பெருந்தகை - ராம்மோகனுக்குமிடையே உள்ள தொடர்புகள், புகாரில் சொல்லப்பட்ட விவகாரங்கள் ஆகிய வற்றை சீக்ரெட்டாக விசாரிக்கத் தொடங்கி யுள்ளனர் மேலிட பொறுப்பாளர்கள். விரைவில் இந்த பஞ்சாயத்து பெரிய அளவில் வெடிக்கும்'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள் காங்கிரஸ் மாவட்ட தலைவர்களும் மாநில நிர்வாகிகளும்.

இந்த நிலையில், சென்னையில் நடந்த ஏர்ஷோ நிகழ்ச்சியை காணவந்த பொது மக்களில் 5 பேர் மரணமடைந்த துயர சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மரணமடைந்த 5 பேரின் குடும்பத்துக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் தலா 1 லட்சம் ரூபாய் நிதிஉதவி வழங்கப்படும் என செல்வப் பெருந்தகை அறிவித்திருக்கிறார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் 10,000 ரூபாய் கூட கிடையாது. உண்மை நிலவரம் இப்படி இருக்க, கட்சி சார்பில் எப்படி செல்வப்பெருந்தகை நிதி உதவி வழங்குவார்?

ஏற்கனவே, சத்தியமூர்த்திபவனில் பணிபுரியும் காங்கிரஸ் பணியாளர்களுக்கு காமராஜர் அறக்கட்டளையிலிருந்துதான் கடந்த 3 மாதங்களாக சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. அறக்கட்டளை பணத்தை கட்சி செலவுகளுக்கு பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால் அது அறக்கட்டளை சட்டவிதிகளுக்கு புறம்பானது. இது தெரிந்திருந்தும், அறக்கட்டளை நிர்வாகத்தை மிரட்டி சம்பளம் கொடுக்க வைத்துள்ளார் செல்வப்பெருந்தகை.

சம்பளம் கொடுக்கவே கட்சியில் பணம் இல்லாதபோது நிதி உதவி எப்படி வழங்க முடியும்? ஆக, விளம்பரத்துக்காக அறிவித்து விட்டார் செல்வப்பெருந்தகை. அதை செயல்படுத்த அறக்கட்டளை பணத்தில் கை வைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். பணம் செக்காக கை மாறும்போது ஏகப்பட்ட வில்லங்கங்கள் கிளம்பும் ‘’ என்கிற சர்ச்சை களும் கதர்ச்சட்டையினரிடம் எதிரொலிக் கிறது.

-இளையர்