டுமையாக உழைத்துச் சம்பாதித்து முன்னேறுவதெல்லாம் நடைமுறைக்குச் சரிவராது. கொஞ்சம் மாற்றி யோசித்தால், அதையும் கிரிமினல்தனமாகச் செயல்படுத்தினால், பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்’என்ற கெட்ட சிந்தனையுடன், தமிழ்நாட்டில் குறுக்கு வழியில் பணத்தைக் குவித்துவருகிறது, சட்டத்தின் நுட்பங்களை நன்கறிந்த ஒரு கும்பல். மிரட்டிப் பணம் பறிப்பதற்காக இவர்கள் கையில் எடுத்திருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டம். ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உள்ள சட்டபூர்வமான உரிமையை, இவர்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் யாரைக் குறிவைக்கிறார்கள் தெரியுமா? ஊழலும் லஞ்சமும் பெருக்கெடுத்து ஓடும் அரசுத்துறையில் பணியாற்றும் அலுவலர்களைத்தான். அப்படி ஒரு துறையாகத்தான் இருக்கிறது, நெடுஞ்சாலைத்துறை. அத்துறையில் முறைகேடாகப் பணம் குவித்துவரும் பொறியாளர்கள், இந்த கும்பலால் வேட்டை யாடப்படுகின்றனர்.

dd

சாம்பிளுக்கு... விவகாரம் லீக்கான விருதுநகர் கோட்டத்தின் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலுவலகம்.

நாம் களமிறங்கி அக் கோட்டத்தில் விசாரித் தறிந்த தகவல்கள் இதோ:

சுமார் 33 கி.மீ. தூரத்துக்கு சிவகாசி சுற்றுச் சாலை அமையவிருக்கிறது. நிலம் கையகப் படுத்துதல் உள்ளிட்ட சாலைப் பணிகளுக்கு சுமார் ரூ.200 கோடி வரை செலவிட நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதுபோன்ற நிதி ஒதுக்கீடு அதிகமுள்ள பகுதிக்கு இட மாறுதல் பெற நடத்தப்படும் மறைமுக ஏலத்தில் பல லட்சங்களை வாரியிறைத்துவிட்டே வருகிறார்கள் உதவி கோட்டப் பொறியாளர்கள். ஏனென்றால், மதிப்பீட்டில் 1 சதவீதம் வரை சம்பந்தப்பட்ட பொறியாளருக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.

ss

Advertisment

தற்போது சிவகாசியில் உதவி கோட்டப் பொறியாளராக இருக்கிறார் காளிதாஸ். பசையான ஏரியாவில் காளிதாஸ் பணியில் இருப்பதை ‘ஸ்மெல்’ செய்துவிட்ட ஜெகதீசன் என்பவர், கோயம்புத்தூரிலிருந்து அறப்போர் இயக்கம் லெட்டர் பேடில், தகவல் அறி யும் உரிமைச் சட் டத்தின் கீழ் சிவகாசி சுற்றுச்சாலைகள் குறித்த சில கேள்வி களைக் கேட்டுவிட்டு, சிவகாசி உதவி கோட்டப் பொறியாளர் காளிதாஸின் சொத்து விபரங்களையும் கேட்டுள்ளார். அந்தத் தகவல் கேட்கும் விண்ணப்ப மனுவை முறைப்படி விருது நகர் கோட்டப் பொறியாளர் அலுவல கத்துக்கு அனுப்பாமல், உள்நோக்கத்துடன் சிவகாசி உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளார்.

சொத்து விபரங்களைக் கேட்டு, தனது அலுவலகத்துக்கு வந்த மனுவைப் படித்ததும் அதிர்ந்துபோனார் காளிதாஸ். சென்னையில் இயங்கும் அறப்போர் இயக்கத்தைத் தொடர்புகொண்டு கேட்ட போது, ஜெகதீசனுக்கும் அறப்போர் இயக்கத்துக்கும் சம்பந்தம் இல்லை ssஎன்று கூறியதோடு, காவல்நிலை யத்தில் ஜெகதீசன் மீது புகார் அளிக்கும்படி அறிவுறுத்தியுள்ள னர். தான் முறைகேடாகப் பணம் சேர்த்து சொத்துகள் வாங்கி விட்டதைத் தெரிந்துகொள்ளத்தானே ஜெகதீசன் தகவல் கேட்கிறார். காளிதாஸால் எப்படி காவல்நிலையத்தில் ஜெகதீசன் மீது புகார் அளிக்கமுடியும்? இதெல்லாம் தெரியாமலா ஜெகதீசன் காளிதாஸைக் குறிவைத்திருப்பார்? அதனால், ஜெக தீசனின் டெக்னிகலான மிரட்டலை, விருதுநகர் கோட்டப் பொறியாளர் பாக்கியலட்சுமியின் கவனத்துக்குக் கொண்டுசென்றார் காளிதாஸ். இந்த ஜெகதீசன் இதேரீதியில் தகவல் கேட்டு, பாக்கியலட்சுமியிடமிருந்து ரூ.3 லட் சத்தைக் கறந்தது, அப்போது தெரிய வந்திருக்கிறது. அந்தப் பழக்கத் தில், ‘ஜெகதீசனை நான் பார்த்துக்கொள்கிறேன்..’ என்று காளிதாஸுக்கு தைரி யம் கூறியிருக்கிறார்.

விருதுநகர் கோட்டப் பொறியாளர் பாக்கியலட்சுமி அந்தப் பணத்தை ஏன் கொடுத் தார்? எப்படி கொடுத்தார்? எனக் கேள்வி எழுப்பியபோது, ""அத்துறையில் சத்தமில்லாமல் கடைபிடிக்கப்படும் மாமூலான சில நடவடிக்கைகளை அறிந்துகொள்ள முடிந்தது.

விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய எட்டு உட்கோட்ட அலுவலகங்களில் உள்ள பொறியாளர்கள், பணிகளில் முறைகேடு செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் பெரும் பகுதியை, மாதம்தோறும் விருதுநகர் கோட்டப் பொறியாளரிடம் ‘பொது நிதி’ என்ற பெயரில் சேர்த்துவிடுகிறார்கள். உதாரணத்துக்கு சில முறைகேடுகளைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியும்.

ஒவ்வொரு உட்கோட்ட அலுவலகத்திலும், ஒப்பந்தக் காரர் மூலம் அலுவலகப் பணிக்கு, ஒருவரை மட்டுமே அமர்த்திவிட்டு, தட்டச்சர், காவலர், தொழில்நுட்ப உதவியாளர் என நாலைந்துபேர் வேலை பார்த்ததாக ரெக்கார்டு உருவாக்குவார்கள். எப்படியென்றால், ஒருவருக்கு ரூ.15,000 சம்பளம் என்ற கணக்கில், ஆறு பேருக்கு ரூ.90,000 கொடுத்ததாக கணக்கு எழுதுவார்கள். இதன்மூலம் ஒவ்வொரு உட்கோட்ட அலுவலகமும், அந்த ஒருவருக்குரிய சம்பளம் போக மீதி ரூ.75,000ஐ சுருட்டி விடுகிறது. இதெல்லாம் ஒப்பந்தக்காரர் பெயரிலேயே நடத்தப்படும்.

ஜே.சி.பி. இயந்திரங்களைச் சாலைப் பணிக்குப் பயன்படுத்துவதிலும் மோசடி நடக்கிறது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு ஜே.சி.பி.-க்கு ரூ.1000 தந்துவிட்டு, அந்த ஜே.சி.பி. 10 மணி நேரம் ஓடியதாகக் கணக்கு காட்டி விடுகிறார்கள். இதன்மூலம் ஒவ்வொரு உட்கோட்டத்திலும் லட்சக்கணக்கில் சுருட்டப்படுகிறது.

ss

இதுபோன்ற பணிகளோடு, வேறு சில சாலை சம்பந்தமான பணிகளுக்கும் நடக்காமலேயே நடந்ததாகக் கணக்கு காட்டிவிடுவார்கள். அந்தப் பணிகளுக்கும் டம்மி ஒப்பந்தக்காரர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அந்த டம்மி ஒப்பந்தக்காரர் வேலை நடந்ததாக ஒரு லட்சத்துக்கு கணக்கு எழுதிவிட்டு, ரூ.10000லிருந்து ரூ.15000 வரை தனக்கென்று எடுத்துக்கொள்வார். மீதி தொகையை அப்படியே உட்கோட்ட பொறியாளரிடம் கொடுத்துவிடுவார். இதுபோன்ற பணிகளுக்கு, உட்கோட்ட அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும் விரிவான மதிப்பீடு பட்டியலை உதவி கோட்டப் பொறியாளரும், உதவிப் பொறியாளரும் தயாரிப்பார்கள். அதற்கு கோட்டப் பொறியாளர் ஒப்புதல் அளிப்பார். அதன்பிறகே, வேலை நடந்ததுபோல் ஒப்பந்தக்காரர் கணக்கில் பணம் ஏறிவிடும். விருதுநகர் கோட்டத்தி லுள்ள ஒவ்வொரு உட்கோட்டத்திலும் சாலைப் பணிகளுக்கு ஜே.சி.பி. பயன் படுத்தியதாக, ஒரு உட்கோட்டத்திற்கு சுமார் ரூ.20 லட்சம் வரை சுருட்டி விடுகின்றனர். ஆக, இந்த மோசடிப் பணத்தில் பெரும் தொகை, கோட்டப் பொறியாளர் வசம் ஒப்படைக்கப்பட்டு, பொது நிதியில் சேர்ந்துவிடும்.

Advertisment

ss

அந்தப் பொதுநிதியில் இருந்துதான், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கேட்ட ஜெகதீசனைச் சரிக்கட்டுவதற்காக ரூ.3 லட்சத்தைக் கொடுத்திருக்கிறார் விருதுநகர் கோட்டப் பொறியாளர் பாக்கியலட்சுமி. இதைச் செலவுக் கணக்கிலும் எழுதியிருக்கிறார். சமீபத்தில் நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் சத்யபிரகாஷ் விருதுநகர் கோட்டத்துக்கு வந்தார். ஒவ்வொரு உட்கோட்டத்திலும் வசூலித்து கோல்ட் காயின் கொடுத்ததெல்லாம் கோட்டப் பொறியாளர் பாக்கிய லட்சுமிதான்.

உட்கோட்ட பொறியாளர்கள், மோசடிப் பணத்தை அப்படியே பொது நிதியில் சேர்த்துவிடும் அளவுக்கு நேர்மையானவர்களாக இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. ஒரு ஒப்பந்தக்காரர் ரூ.1 கோடிக்கு ஒப்பந்தப்பணியை மேற்கொண்டால், அதில் தலைமைப் பொறியாளருக்கு மாநில அளவில் 0.5 சதவீதம், வட்ட அளவில் கண்காணிப்பு பொறியாளருக்கு 1 சதவீதம், மாவட்ட அளவில் கோட்டப் பொறியாளருக்கு 1 சதவீதம், உட்கோட்ட அளவில் உதவி கோட்டப் பொறியாளர், உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் ஆகியோருக்கு தலா 2 சதவீதமும் கிடைக்கிறது. இது லஞ்சக் கணக்கில் வராது. முழுக்க முழுக்க உரிமைத் தொகையாகவே கருதப்படுகிறது. அதனால், இந்தப் பணத்திலிருந்து ஒரு ரூபாய்கூட பொது நிதிக்குப் போகாது.

ஒரு தரமான ஜே.சி.பி. இயந்திரத்தின் விலை ரூ.40 லட்சம்வரை ஆகிறது. விருதுநகர் கோட்டத்தில், ஒவ்வொரு உட்கோட்டத்திலும் ஜே.சி.பி. பணிகளுக்காக ரூ.20 லட்சம் வரை ஒதுக்கீடு ஆகியிருக்கிறது. அந்த வகையில் 7 உட் கோட்டங்கள், மாதம் ஒன்றுக்கு ரூ.1 கோடியே 40 லட்சம் வரை ஜே.சி.பி. வேலைகளுக்காகச் செலவழித்திருக்கிறது. இதுபோல், அனைத்திலும் அரசுப் பணம் இத்துறையால் கடுமையாக வீணடிக்கப்படுகிறது.

சிவகாசி போன்ற உட்கோட்டங்களில், வருடம் ஒன்றுக்கு உதவிப் பொறியாளர் குவிக்கும் தொகை கோடியைத் தாண்டிவிடும். அதனால்தான், ஜெகதீசன் போன்றோர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கேட்டு மூக்கை நுழைக்கிறார்கள்.

ஊழல் எதிர்ப்பு இயக்கம் எனச் சொல்லப்படும் அறப்போர் இயக்கம், அதன் செயல்பாடுகளை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தி வருகிறது. எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தைப் பார்த்துக் கேட்க மறந்த, கேட்கத் தயங்கும் கேள்விகளை முறையாக ஆய்வு செய்து, தகுந்த ஆதாரங் களுடன் தொடர்ந்து புகாராக அனுப்பி, சமூக வலைத்தளங்கள் வாயிலாக மக்களுக்குத் தெரி வித்து, அரசாங்கத்துக்கு ஒரு அழுத்தம் தந்து, நடவடிக்கை எடுக்கவைப்பதாகத் தன்னைப் பிரகடனப்படுத்தி வருகிறது. இந்நிலையில், அறப்போர் இயக்கத்தின் பெயரில் அரசுத்துறை அதி காரிகளை பிளாக்-மெயில் செய்வது, பணம் பறிப்பது போன்ற மோசடிகளை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக ஜெகதீசன் போன்றோர் அரங்கேற்றி வருவது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளர் ஜெயராமிடம் பேசினோம்.

""விருதுநகர் நெடுஞ்சாலைத்துறையினர் கோயம்புத்தூர் ஜெகதீசன் குறித்து என்னிடம் கேட்டார்கள். இது தன்னார்வலர்களால் இயங்கிவரும் இயக்கம். ஜெகதீசன் அறப்போர் இயக்கத்தில் இல்லை. சம்பந்தப்பட்ட நீங்கள்தான் காவல்நிலையத்தில் புகார் அளிக்கவேண்டும் என்று கூறினேன். மற்றபடி, இந்த இயக்கத்தில் உள்ள தன் னார்வலர்கள் யாரும் தன்னிச்சையாகச் செயல் படுவதற்கோ, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேள்வி கேட்பதற்கோ அனுமதி இல்லை. ஜெகதீசனைத் தொடர்புகொண்டு பேசினேன். வருத்தம் தெரிவித்த அவர், இனிமேல் அறப்போர் இயக்கத்தின் பெயரை லெட்டர் பேடிலும், எந்தவொரு இடத்திலும் பயன்படுத்தமாட்டேன் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்''’என்றார்.

கோயம்புத்தூர் ஜெகதீசனைத் தொடர்பு கொண்டு ""என்ன நோக்கத்தில் அறப்போர் இயக்கத்தின் லெட்டர்பேடை தவறாகப் பயன்படுத்தினீர்கள்?''’என கேட்டோம்.

""நெடுஞ்சாலைத்துறையிடம் நான் தகவல் கேட்டது நக்கீரனுக்கு எப்படி தெரிந்தது?''’’ என்று திரும்பத் திரும்பக் கேட்டவர் ""நெடுஞ்சாலைத் துறையினர் எனக்கு தகவல் அளிக்க இயலாது என்று பதில் அனுப்பிவிட்டார்கள். நான் அறப்போர் இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தி யது தவறுதான்''’என்று கூலாக ஒத்துக்கொண்டார்.

நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, விருதுநகர் கோட்டப் பொறியாளர் பாக்கியலட்சுமியைத் தொடர்புகொண்டோம். ""நான் மீட்டிங்ல இருக்கேன். அந்த மாதிரி எதுவும் நடக்கல... நீங்க நேர்ல வாங்க''’எனச் சொல்லிவிட்டு, விருதுநகர் மாவட்ட உட்கோட்ட உதவிப் பொறியாளர்களிடம், "காமன் ஃபண்ட்ல இருந்து ஜெகதீசனுக்கு ரூ.3 லட்சம் கொடுத்ததை நக்கீரனிடம் யார் சொன்னது?'’என்று விசாரித்தபடியே இருந்திருக்கிறார். இரண்டு நாட்கள் நமது லைனுக்கு வராத நிலையில் மீண்டும் அவரைத் தொடர்புகொண்டபோது, ""ஆமா.. காலைல எல்லா ஆஉஊகிட்டயும் பேசினேன். இன்னைக்கு மீட்டிங் வச்சிருந்தேன். எல்லாரையும் விசாரிக்கிறது எல்லாம் இல்ல. எங்க டிவிசன்ல மொத்தம் எத்தனை கேங்ஸ் இருக்கு, எத்தனை கிலோமீட்டர் மெயின்ட்டெயின் பண்ணுறோம், எங்களுக்கு எவ்வளவு ஃபண்ட் ஒதுக்கீடாயிருக்கு, இதுல எங்ககிட்ட எந்த ஒளிவுமறைவும் இல்ல. அரசாங்கத்துக்கு 100 பெர்சன்ட் உண்மையா வேலை பார்க்கணும்னு நினைக்கிற ஆளு நான். அதனால, யாரையும் ஏமாத்தணும், யாரோட பணத்தையும் எடுக்கணும், அந்தமாதிரி எண்ணம் துளிகூட இல்ல. எதுன்னாலும் விசாரிச்சிக்கங்க. ஏன்னா.. தேவையில்லாத விஷயத்த நாங்க இந்த டிவிஷன்ல பண்ணுறதே இல்ல. யாரோ தவறான தகவல் தந்திருக்காங்க. கண்டிப்பா தவறு நடக்க விடமாட்டோம், நடக்கவும் இல்ல''’என்று ஒரே போடாகப் போட்டவர், ""காளிதாஸ் ஆஉஊ பக்கத்துலதான் இருக்கார். அவர்கிட்ட பேசுங்க''’என்றார்.

சிவகாசி உதவி கோட்டப் பொறியாளர் காளிதாஸ் நம்மிடம், ""அப்படி இங்க யாரும் எதுவும் பண்ணுன மாதிரி இல்ல. தபஒல கேட்டிருந்தாங்க. பதில் கொடுத்துட்டாங்க. வேற ஒண்ணும் இங்க நடக்கல... அந்தமாதிரி எதுவும் இல்ல''’என்று மழுப்பினார்.

அத்துறையினரை மீண்டும் சந்தித்து, ""கோட்டப் பொறியாளர் பாக்கியலட்சுமியும், உதவி கோட்டப் பொறியாளர் காளிதாஸும் மிரட்டல் எதுவும் நடக்காதது மாதிரி பேசுகிறார்களே?''’ எனக் கேட்டோம்.

""நடந்தத எப்படி சார் ஒத்துக்குவாங்க? மிரட்டலுக்குப் பயந்து பணம் கொடுத்தத ஒத்துக்கிட்டா மாட்டிக்குவோம்னு தெரியாதா? இந்த விவகாரம் டிபார்ட்மெண்ட்ல இருக்கிற எல்லாருக்கும் தெரியும். மனசாட்சி இல்லாதவங்க எப்படியும் பேசுவாங்க, எந்தமாதிரியும் நடத்துக்குவாங்க''’’என்றனர் வேதனையுடன்.

ஊழலைத் தட்டிக் கேட்கும் அறப்போர் இயக்கம், தங்களது இயக்கத்தின் பெயரால் சிலர் அரசுத் துறையினரை மிரட்டிவருவதை ஏன் சட்டபூர்வமாகத் தட்டிக் கேட்கவில்லை? நெடுஞ்சாலைத் துறையினரால் மக்கள் பணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்படுகிறது. பொய்யான ஆவணங்களைத் தயாரித்து அரசு அதிகாரிகள் சுரண்டுகின்றனர். முடிந்தமட்டிலும் அவர்களை மிரட்டி யார், யாரோ பணம் பறிக்கின்றனர். நெடுஞ்சாலைத்துறையில் நடக்கக்கூடாத அத்தனையும் நடக்கிறது.

-ராம்கி