சரிந்து சரிந்து விழும் வெலிங்டன் ஏரி! - அரசின் பார்வை திரும்புமா?

ss

ங்கள் நீராதாரத்தைக் காப்பாற்றுங் கள்’என்று கோரிக்கைக் குரல் எழுப்புகிறார்கள் கடலூர் மாவட்ட விவசாயிகள்.

கடலூர் திட்டக்குடி அருகே இருக்கும் எமனேரி எனப்படும் வெலிங்டன் ஏரி, அடுத்த ஆண்டு, நூறாண்டைக் காண இருக்கும் பழம்பெருமை வாய்ந்த ஏரியாகும்

இந்த ஏரிக்கான கரைகள், கீழ்ச்சிறுவாய் -ஐவனூர், கிராமங்களுக்கு இடையே கட்டப்பட்டிருக்கிறது. இதற்கான பணிகள் 1923ஆம் ஆண்டு நிறைவு பெற்று, 1924ஆம் ஆண்டு முதல் ஏரியில் தண்ணீர் நிரப்பப்பட்டு விவசாயப் பாசனத்திற்கு திறந்து விடப்பட்டு வருகிறது. இதன்மூலம் இப்பகுதியில் உள்ள 63 கிராமங்களில் வாழும் விவசாயக் குடும்பங்கள் தழைத்து வருகின்றன. அதேபோல் 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ww

இந்த ஏரிக் கரையின் நீளம் சுமார் நான்கு கிலோ மீட்டர் ஆகும். மண்ணால் கட்டப்பட்ட இந்தக் கரையில் மரங்களை வளர்த்து கரையின் மண்ணரிப்பை பொதுப் பணித் துறையினர் தடுத்தனர். இதன்பின் கரைகள் சரிவதும், அதை அரைகுறையாகச் சரி செய்வதுமாகவே இருந்து வருகிறார்கள் அதிகாரிகள்.

கடந்த 1980ஆம் ஆண்டில் ஏரியைப் பார்வையிட வந்த உயர் அதிகாரிகளின் தவறான ஆலோசனையால்,

ங்கள் நீராதாரத்தைக் காப்பாற்றுங் கள்’என்று கோரிக்கைக் குரல் எழுப்புகிறார்கள் கடலூர் மாவட்ட விவசாயிகள்.

கடலூர் திட்டக்குடி அருகே இருக்கும் எமனேரி எனப்படும் வெலிங்டன் ஏரி, அடுத்த ஆண்டு, நூறாண்டைக் காண இருக்கும் பழம்பெருமை வாய்ந்த ஏரியாகும்

இந்த ஏரிக்கான கரைகள், கீழ்ச்சிறுவாய் -ஐவனூர், கிராமங்களுக்கு இடையே கட்டப்பட்டிருக்கிறது. இதற்கான பணிகள் 1923ஆம் ஆண்டு நிறைவு பெற்று, 1924ஆம் ஆண்டு முதல் ஏரியில் தண்ணீர் நிரப்பப்பட்டு விவசாயப் பாசனத்திற்கு திறந்து விடப்பட்டு வருகிறது. இதன்மூலம் இப்பகுதியில் உள்ள 63 கிராமங்களில் வாழும் விவசாயக் குடும்பங்கள் தழைத்து வருகின்றன. அதேபோல் 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ww

இந்த ஏரிக் கரையின் நீளம் சுமார் நான்கு கிலோ மீட்டர் ஆகும். மண்ணால் கட்டப்பட்ட இந்தக் கரையில் மரங்களை வளர்த்து கரையின் மண்ணரிப்பை பொதுப் பணித் துறையினர் தடுத்தனர். இதன்பின் கரைகள் சரிவதும், அதை அரைகுறையாகச் சரி செய்வதுமாகவே இருந்து வருகிறார்கள் அதிகாரிகள்.

கடந்த 1980ஆம் ஆண்டில் ஏரியைப் பார்வையிட வந்த உயர் அதிகாரிகளின் தவறான ஆலோசனையால், கரைகளில் நீண்டு வளர்ந்திருந்த மரங்கள் அனைத்தும் வேரோடு வெட்டி எறியப்பட்டன. அதனால் கரைகள் பலமிழந்து 1998ஆம் ஆண்டு சரியத் தொடங்கியது. அப்போதைய ஜெ.’ஆட்சி யில் கரையைச் செப்பனிட எட்டு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. அப்படியும் மீண்டும் கரை சரிந்தது. இதனால் மீண்டும் ரெண்டு கோடியே 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கரையை சீர் செய்யும் பணி நடந்தது.

அதற்கு முன்பே உலக வங்கியின் நீர்த்தேக்க அணைகளின் பாதுகாப்புக் குழுத் தலைவர் டாண்டன் தலைமையிலான குழு வினர், இரண்டு முறை வந்து ஆய்வு செய்து, ஏரியின் கரையை எப்படிச் சீரமைப்பது என்று விரிவான ஆலோசனைகளை வழங்கினர். எனினும் அதை இங்குள்ள அதிகாரிகள் பொருட்படுத்தாமல், களிமண் கலந்த சரளை மண்ணைப் போட்டு டேமேஜான கரையை சீரமைத்தார்கள். அதன் பிறகும் கரையில் சரிவு ஏற்பட்டது. கரையைத் தரமான முறையில் சீர் செய்யக் கோரி, விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினரும் பொதுநல அமைப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதனால், 2007-ல் அப்போதைய முதல்வரான கலைஞர், அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகனை அனுப்பி, வெலிங்டன் ஏரிக் கரையை செப்பனிடுவது குறித்து ஆய்வு செய்யச் சொன்னார். இதைத் தொடர்ந்து ஆய்வு செய்த துரைமுருகன் தலைமையிலான குழு, ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது.

wwஅதன் அடிப்படையில், வெலிங்டன் ஏரிக் கரையை செப்பனிடுவதற் காக 20 கோடிரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் தொகையும் விரயமாகச் செலவாகிவிடுமோ என்ற அச்சம் விவசாயிகளிடம் ஏற்பட்டது. அதைப்போக்கும் வகையில் அப்போதைய கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரரத்னு, திட்டக்குடியில் விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு, அதன்படி, சுமார் 300 மீட்டர் அளவுக்கு கரையை, மிகத் தரமாகச் செப்பனிடச் செய்தார். இருப்பினும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்த நிலையில், 2011-ல் இந்த அணையில் பிளவும் சரிவும் ஏற்பட்டது. இது விவசாயிகளை பெரிதும் அதிரவைத்தது. தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சினர். இந்த நிலையில் அ.தி.மு.க. அரசு, தொழுதூர் அணைக்கட்டை மறு சீரமைப்பு செய்ய சுமார் 4 கோடி ரூபாய் வரை செலவு செய்ததே தவிர, வெலிங்கடன் கரையை சீர் செய்ய முயற்சி எடுக்கவில்லை. மாறாக, சரிவு ஏற்படும் போதெல் லாம் டிப்பர் லாரிகள் மூலம் மண்ணைக் கொண்டு வந்து கொட்டினர். அந்த மண் மீண்டும் மழையில் நனைந்து ஊறி சரிந்துகொண்டே இருந்தது.

இந்தச்சூழலில், 2021ஆம், ஆண்டு தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நிலையில், தொகுதியின் எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான சி.வி.கணேசன், ஏரியை சரி செய்வது குறித்து முதல் வரிடம் தெரிவிப்பதாக விவசாயிகளைத் தேற்றி னார். எனினும் இன்னும் வெலிங்டன் ஏரிப்பக்கம் அரசின் பார்வை திரும்பவில்லை. இதுதான் விவசாயிகளை பதட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய, வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவரான கொத்தட்டை ஆறுமுகம், "வெலிங்டன் ஏரி நூற்றாண்டுவிழா காணுகிற நேரம் இது. எனினும் இதன் கரைகளின் சரிவை இன்னும் சீரமைக்க வில்லை. நெய்வேலி நிலக்கரி நிறுவனம், இப்போது நவீன எந்திரங்களை வைத்திருக்கிறது. அதன்மூலம் கரையை மிகவும் வலுவுள்ளதாக ஆக்க முடியும்''’என்கிற ஆலோசனையைத் தெரிவித்தார்.

wwகம்யூனிஸ்ட் தோழரும் விவசாயியுமான தொளார் ஜீவானந்தமோ, "இதற்குமுன் இந்த ஏரிக்கரையை சரி செய்வதாகக் கூறி, கோடிக் கணக்கில் ஒதுக் கப்பட்ட நிதியில், அதிகாரிகளும் அரசியல்வாதி களும் கமிஷன் பார்த்ததுதான் மிச் சம். சரிவை சரி செய்யவில்லை. எனவே வரும் கோடை காலத் தைப் பயன்படுத் திக் கொண்டு, பழுதடைந்துள்ள கரை பகுதிகளை திறமையான வல்லுநர்களைக் கொண்டு, விரைந்து சீரமைக்க வேண்டும்''’என்ற கோரிக்கையை வைத்ததோடு...

"அதேபோல் வெலிங்டன் ஏரியிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் வெளியேறும், வடிகால் ஓடையின் குறுக்கே புலிவலம் கிராமத்தின் அருகில், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் உயர்மட்ட பாலம் கட்டப் பட்டுள்ளது. இதேபோல் பெண்ணா டம் அருகே வெள்ளாற்றின் குறுக்கே யும் சுமார் பத்துகோடி செலவில் ஒரு பாலம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பாலங்களும் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் காட்சிப் பொருளாகவே நிற்கின்றன. அதற்குக் காரணம், பாலத்தின் இருபுறமும் இணைப்புச் சாலை போடப்படாமல் உள்ளது. அதையும் அரசின் கவனத் திற்குக் கொண்டு சென்று, அமைச்சர் கணேசன், இந்தத் தொகுதியின் தலை யெழுத்தை மாற்றவேண்டும்''’என்றார் அழுத்தமாக.

"இதையெல்லாம் எங்கள் தொகுதி அமைச்சரான கணேசன், நிச்சயம் நிறைவேற்றுவார்'” என்கிறார்கள் தொகுதியில் இருக்கும் தி.மு.க. உடன்பிறப்புக்கள் நம்பிக்கையோடு.

அவர்களின் நம்பிக்கை, நிறை வேறுமா? விவசாயிகளின் கவலை தீருமா?

nkn110223
இதையும் படியுங்கள்
Subscribe