"என் மரணச் செய்தி உங்களை அடைந்தால்,

என் தவறுகளை மன்னியுங்கள்!

என் குறைகளை மறைத்து விடுங்கள்!

என் ஜனாஸாவில் கலந்து கொள்ளுங்கள்!

Advertisment

எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்!''

-இப்படி தன்னுடைய மொபைலில் செய்தியைப் பகிர்ந்துவிட்டு, ஆள் அரவமற்ற அதிகாலை நேரத்தில் கார் வெடிகுண்டை வெடிக்கச் செய்து, கொடூரமாக இறந்திருக் கிறான் அந்த டேஞ்சரஸ் இளைஞன்.

Advertisment

ff

எல்லோரும் தீபாவளி கொண்டாட்டத்திற்குத் தயாரான நேரத்தில், ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 4.10-க்கு, கோவை உக்கடத்தில் இருக்கும் கோட்டை சங்கமேஸ் வரர் கோவில் முன்பு, தனது காரை வெடிக்க வைத்து, தற்கொலை செய்து கொண்டான் 25 வயதான அந்த இளைஞன். இது தமிழகத்தையே அதிரவைக்க, அவசர அவசரமாக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணனும் சென்னை யில் இருந்து பறந்துவந்து, சம்பவ இடத்தில் ஆஜரானார்கள்.

வந்த வேகத்திலேயே, "இறந்தவரின் அடையாளங்களை சேகரித்து, அவர் யார் என புலன் விசாரணை செய்துவருகிறோம். இதுகுறித்து விசாரணை செய்ய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சென்னையிலிருந்து தடய அறிவியல் குழுவினர் கோவைக்கு வந்து ஆய்வுசெய்து வருகின்றனர். இதுதவிர, கோவை மற்றும் மாநில கமாண்டோ குழுவைச் சேர்ந்த பாம்ப் ஸ்குவார்ட் குழுக்களும் ஆய்வு செய்து வருகின்றன. மோப்ப நாய் மூலமும் துப்பு துலக்கப்பட்டு வருகிறது.

வெடிக்க வைக்கப்பட்ட காரில் 2 கேஸ் சிலிண் டர்கள் இருந்துள்ளன. அதில் ஒன்று வெடித்துள் ளது. எங்கிருந்து இவை வாங்கப்பட்டன? என்ற கேள்விக்கும் விடை தேடிவருகிறோம். விபத்துக் குள்ளான வாகனம் மாருதி கார் என தெரிய வந்துள் ளது. அதன் பழைய உரிமையாளர்கள் மற்றும் புதிய உரிமையாளர் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது''’என்றார் டி.ஜி.பி. சைலேந்திரபாபு.

சிதைந்த அந்த பச 01 எ6163 எண் கொண்ட மாருதி 800 காரும், இரண்டு சிலிண்டர்களும் அரு கிலேயே கிடக்க, வெடிகுண்டிலிருந்து பறந்துவந்த ஆணிகள் மற்றும் கோலிக்குண்டுகளும் இறைந்து கிடந்து நிலைமையின் விபரீதத்தை உணர்த்தின.

இந்த நிலையில், இறந்தவன் தன் அடையா ளத்தை மறைக்கவே வெடிகுண்டு வாகனத்துக்குத் தீ வைத்திருக்கிறான் என்ற யூகத்திற்கு விசாரணை டீம்கள் வந்தன. பல்வேறு விசாரணைகளுக்குப் பின், இறந்தவனின் பெயர் ஜமேசா முபின் என அடையாளம் தெரியவந்தது. இதே வேளையில், அவன் தற்கொலை செய்து கொண்ட இடத்தின் அருகே இருந்த சி.சி.டி.வி.க்கள் ஆராயப்பட, அன் றைய முன்னிரவில் ஐந்து நபர்கள், அந்த முபின் வீட்டிலிருந்து ஒரு மூட்டையைத் தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளைக் கைப்பற்றிய காவல்துறையினர், அந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.

இறந்த ஜமேசா முபின் பற்றிய பல்வேறு தக வல்கள் தெரியவந்துள்ளன. முபின் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவன். கோவை கோனியம்மன் கோவில் முன்பு, வெடிகுண்டு சம்பவ முயற்சி வழக்கில் கைதான நபர்களின் நண்பனாம் இவன். 2019ஆம் ஆண்டு வாக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப் பில் தொடர்பில் இருந்திருக்கின்றான் என்பதும், இவனை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. விசாரித்துச் சென்றதும் தெரியவந்திருக்கிறது.

இருதய நோய் உள்ள இவனுக்கு வலது கண் சரியாகத் தெரியாதாம். அதனால் இவனை அப்பாவி லிஸ்டில் வைத்த உளவுத்துறை, இவனைக் கண் காணிக்காமலேயே இருந்திருக்கிறது. இப்பொழுது வெடிக்க வைக்கப்பட்ட காரை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, முபின் 15 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியிருக்கின்றான். அதைக்கூடக் கண்காணிக்க வில்லை உளவுத்துறை.

காருக்குச் சொந்தக்காரரான பொள்ளாச்சி கஞ்சம்பட்டியைச் சேர்ந்த பிரபாகரனை விசாரித்த போது, அவரிடமிருந்த அந்த கார் 9 நபர்களுக்கு கைமாறியது தெரியவந்திருக்கிறது. இறுதியாக இந்தக் கார் அல்உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷாவின் தம்பியும், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள்தண்டனைக் கைதியாக சிறையில் இருக்கும் நவாப் கானின் மகனுமான முகமது தல்கா மூலமாக, இவனுக்குக் கிடைத்திருக்கிறது என்பதையும் காவல்துறை ஸ்மெல் செய்திருக்கிறது.

சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளின் அடிப் படையில் முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில் மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகியோரை கைது செய்து விசாரித்தோம். அவர்களுக்கு இவன் நண்பன் அவ்வளவே என்கிறார்கள். எனினும் தொடர் விசாரணை அனைத்து கோணங்களிலும் நடைபெற்று வருகிறது'' என்றார் தனிப்படை டீமிலுள்ள அதிகாரி ஒருவர்.

அதேநேரம், கோவையின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் இரண்டு டி.ஐ.ஜி. மற்றும் எட்டு மாவட்ட காவல் கண் காணிப்பாளர்கள், 10 மாவட்ட காவலர்களுடன் இணைந்து 240 மத்திய அதிவிரைவுப் படையினர் என சுமார் 3000 பேர் கொண்ட டீம் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. இது ஒருபுற மிறக்க, கோட்டை மேட்டிலுள்ள ஹாஜி மகமது பிள்ளை ராவுத்தர் வீதியிலிருந்த, இறந்த முபின் வீடு சல்லடையாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. ஆய்வில், சந்தையில் எளிதாகக் கிடைக்கும் அமோனியம் நைட்ரேட். சிகப்பு பாஸ்பரஸ், பிளாக் பவுடர், என்.பி.ஆர். உரம், ராஜம், கோபுரம் தீப்பெட்டி பண்டல்கள் மற்றும் பட்டாசுகளின் திரி மூட்டைகள் ஆகியவையும் சிக்கியுள்ளன.

dd

"முபின் வீட்டைச் சோதனையிட்டதில் பொட்டா சியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்கத் தேவையான பொருட்கள் கைப் பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகளைப் பார்க்கும்போது எதிர்காலத்திற்கான சதித் திட்டங்களில் அவன் ஈடுபட்டிருக்கலாம்'' என டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட முபின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டபோதும், அதை அடக்கம் செய்ய பல இடங்களில் ஜமாத்துகள் அனுமதி தரவில்லை. இருப்பினும் மனிதாபிமான அடிப் படையில் பூ மார்க்கெட்டில் உள்ள ஹைதர் அலி திப்பு சுல்தான் பள்ளிவாசலில் முபினின் உடலை அடக்கம் செய்தனர்.

dd

"பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவைத் தடை செய்ததற்கும், என்.ஐ.ஏ.வின் தொடர் சோதனைக்கும் எதிராக, தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்ய முபின் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். அப்பாவியாக அவனை உளவுத்துறை கருதியதால், அதனையே அடை யாளமாக்கி அவனுடைய நண்பர்களின் மூலமாக மூளைச் சலவை செய்யப்பட்டு, முபின் இந்த முடிவை எடுத்திருக்க லாம். கடந்த அக்டோபர் 5, 2020 அன்று, 2019ஆம் ஆண்டு இலங்கை தேவாலய குண்டு வெடிப்பு சம்பவத் தின் அடிப்படையில் கைதாகி கேரள வியூர் சிறையிலிருக் கும் முகமது அசாருதீனை இந்த முபின் சந்தித்திருக் கிறான். முகமது அசாருதீன்தான் இந்தச் சம்பவத்தில் கோ-ஆர்டினேட்டராக செயல் பட்டுள்ளான். அப்பொழுது அவனுடைய முகவரியாக மலப்புரம் முகவரியை தந்துள் ளது விசாரணையில் புலனாகியுள்ளது. வெடி பொருட்களில் சிலவற்றை அமேசானில் ஆர்டர் போட்டும், மிச்ச பொருட்களை உள்ளூர் மார்க்கெட்டிலும் வாங்கியிருக் கிறான். முதலில் யூ-ட்யூப் பார்த்து வெடி பொருளைச் செய்ய முயன்றிருக்கிறான். அது முடியாமல் கைவிட்டுவிட்டான்.

இதில் ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவன் தற்கொலைப் படையாக மாறி ஏனைய உயிர்களைப் பறிக்க வில்லை. அப்படி நினைத்திருந்தால் அந்தக் காரிலுள்ள ஆணி, கோலிக் குண்டுகள் உள்ளிட்டவற்றை இயக்கினால் குறைந்தது ஐந்து அல்லது ஆறு பேராவது கொல்லப் பட்டு இருப்பார்கள். ஆனால் அவனுக்கு இந்த நோக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. அவனுடைய நோக்கம் அரசை பயமுறுத்து வதுதான். அதனால்தான் ஆள் அரவமற்ற வேளையில் தான் காரை வெடிக்க வைத் திருக்கின்றான். அதுபோக, தன்னுடைய அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக உடலெங்கும் மண்ணெண்ணெய் ஊற்றி எரிந்துள்ளான். உளவுத்துறையின் அஜாக்கிரதை யால்தான் அவன் இப்படி எல்லாம் இத்தனை நாள் சுதந்திரமாக நடமாடியிருக் கிறான்'' என்கிறார் உள்ளூர் போலீஸ் ஒருவர்.

நிலைமை பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. எஸ்.பி. ஸ்ரீஜித் தலைமையில் முகாமிட்டு, காவல் துறை அதிகாரிகளிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. கைதான ஐந்து பேர் மீதும் ஊபா சட்டம் (சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம்) பாய்ந்துள்ளது. மேலும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத் தப்பட்டு, கொலை வழக்கை என்.ஐ.ஏ.க்கு மாற்ற ஸ்டாலின் பரிந்துரை செய்தார்.

தீவிரவாதப் போக்கு எவ்வளவு மோச மானது என்பதற்கு முபினின் கொடூரத் தற்கொலையே உதாரணம்.

படங்கள்: விவேக்