கோவை! இன்னொரு 1998, பிப்ரவரி 14? உறக்கம் கலைக்குமா உளவுத்துறை?

ff

கோவை கார் குண்டு வெடிப்பில் உளவுத்துறையின் தோல்வி பற்றி தி.மு.க. அரசை தமிழக பா.ஜ.க. கடுமையாக விமர்சித்து வருகின்றது. உண்மையில் மாநில உளவுத் துறையின் தோல்வி என்பதைவிட, மத்திய உளவுத்துறையின் தோல்வி என்பதுதான் உண்மை என்கிறார்கள் காவல்துறை யைச் சேர்ந்தவர்கள்.

ff

இலங்கையில் சர்ச்சுகளில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 277-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், கரித்தூள் மற்றும் சல்பர் போன்ற வெடி பொருட்களுடன் கோலிக் குண்டுகள், ஆணிகள், இரும்புக் குண்டுகள் ஆகியவை கலந்து இலங்கையில் வெடித்த குண்டுகள் தயாரிக்கப்பட்டு இருந்தன.

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் நாங்கள்தான் இந்த குண்டுகளை வைத்தோம் என பொறுப்பேற்றுக் கொண்டது. அதை விசாரித்த இலங்கை போலீசார், அந்த இயக்கத்தின் முக்கியமான ஆட்கள் கேரளாவில் இருந்து இயங்கினார்கள் என இந்தியாவின் தீவிரவாத தடுப்புப் பிரிவான தேசிய புலனாய்வு முகமையில் தகவல் தெரிவித்தனர். கேரளாவுக்கும் தமிழகத்துக்கு மான எல்லைப் பகுதியான கோவையில் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இயங்குகிறது என இலங்கை குண்டுவெடிப்பின் கேரள தொடர்பை ஆராய்ந்த தேசிய புலனாய்வு முகமை கேரளாவை சலித்தெடுத்து சோதனை செய்தது. அதற்கு கேரள மாநில ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு ம

கோவை கார் குண்டு வெடிப்பில் உளவுத்துறையின் தோல்வி பற்றி தி.மு.க. அரசை தமிழக பா.ஜ.க. கடுமையாக விமர்சித்து வருகின்றது. உண்மையில் மாநில உளவுத் துறையின் தோல்வி என்பதைவிட, மத்திய உளவுத்துறையின் தோல்வி என்பதுதான் உண்மை என்கிறார்கள் காவல்துறை யைச் சேர்ந்தவர்கள்.

ff

இலங்கையில் சர்ச்சுகளில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 277-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், கரித்தூள் மற்றும் சல்பர் போன்ற வெடி பொருட்களுடன் கோலிக் குண்டுகள், ஆணிகள், இரும்புக் குண்டுகள் ஆகியவை கலந்து இலங்கையில் வெடித்த குண்டுகள் தயாரிக்கப்பட்டு இருந்தன.

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் நாங்கள்தான் இந்த குண்டுகளை வைத்தோம் என பொறுப்பேற்றுக் கொண்டது. அதை விசாரித்த இலங்கை போலீசார், அந்த இயக்கத்தின் முக்கியமான ஆட்கள் கேரளாவில் இருந்து இயங்கினார்கள் என இந்தியாவின் தீவிரவாத தடுப்புப் பிரிவான தேசிய புலனாய்வு முகமையில் தகவல் தெரிவித்தனர். கேரளாவுக்கும் தமிழகத்துக்கு மான எல்லைப் பகுதியான கோவையில் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இயங்குகிறது என இலங்கை குண்டுவெடிப்பின் கேரள தொடர்பை ஆராய்ந்த தேசிய புலனாய்வு முகமை கேரளாவை சலித்தெடுத்து சோதனை செய்தது. அதற்கு கேரள மாநில ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்தது.

கேரளாவில் கிடைத்த தகவலின்படி கோவைக்கு வந்த தேசிய புலனாய்வு முகமை கோவையை சலித்தெடுத்தது. மொத்தம் 25 நபர்கள் கைது செய்து விசாரிக்கப் பட்டார்கள்.

எடப்பாடி ஆட்சிக்காலத்தில் 2018ல் நடந்த இந்த சோதனையின் போது 1998ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு நிகழ்ந்தபோது அங்கு டி.சி.யாக இருந்தவரும், தற்பொழுது உளவுத்துறை தலைவராக இருப்பவரும், அப்பொழுது கோவை மாநகர கமிஷனராக இருந்தவருமான டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் புலன் விசாரணை நடந்தது.

ss

இப்போது கார் குண்டு வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் கேரளாவில் என்ஜினியரிங் படிக்கும்போதே ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். தன்னை ஒரு தற்கொலைப்படை தீவிரவாதியாகவே வடிவமைத்துக்கொண்ட முபின் கேரள தீவிரவாதிகளுடன் இணைய தளங்கள் மூலமாக பேசி வந்தார். அவர் மட்டுமல்ல, அவரது நண்பர்கள் முகம்மது தல்கா, முகம்மது அசாருதீன், முகம்மது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகம்மது நவாஸ், இஸ்மாயில் உறவினர் அப்சல்கான் என ஆறு பேர் அடங்கிய ஒரு குழுவை உருவாக்கி, இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளைப் போல இங்கு நடத்த வேண்டும் என ஆரம்ப கட்ட வேலைகளை செய்து வந்தார். அதற்காக வெடி பொருட்களை வாங்கி அவரது வீட்டில் சேகரித்துவைத்து வெடிகுண்டு தயாரிப்புக்கான வேலைகளில் தொடர்ந்து நான்கு வருடங்களாக ஈடுபட்டு வந்தார். அந்த வெடிகுண்டு சேகரிப்பு வேலையின் ஒரு பகுதியை தனது காரி லேயே வைத் திருந்தார். அந்தக் காரிலிருந்த சிலிண்டர் வெடித்து முபின் பலியானார்.

அவரது வீட்டிற்கு அருகே இருந்த சி சி.டி.வி. பதிவுகள் மற்றும் அவரது போன் தொடர்புகள் மூலமாக காவல்துறையினர் ஆறு பேரைக் கைது செய்தனர். மேலும் எட்டு பேரை விசாரணைக்கு உள்ளாக்கி உள்ளார்கள்.

2018ஆம் ஆண்டு ஜமேசா முபின் மற்றும் அவரது நண்பர்கள் பதினைந்து பேர் தவிர ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என 25 பேரை கேரள மாநிலம் கொச்சினில் இருந்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து விசாரித்தார்கள். தன்மீதான குற்றச்சாட்டுகளை ஜமேசா முபின் மறுத்தார். அவருக்கு எதிராக வேறு ஆதாரங்கள் எதையும் அப்பொழுது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பொழுது உளவுத்துறை தலைவராக இருந்த சத்தியமூர்த்தியிடம் விவரங்களைக் கொடுத்து விட்டுச் சென்றுவிட்டார்கள்.

முபின் மீது மத்திய அரசின் ஏஜென்சியான இண்டெலிஜென்ஸ் பீரோ மூலம் கண்காணிப்பு வேலைகளை செய்யுமாறு தேசிய புலனாய்வு முகமை உத்தரவிட்டது.

முபினை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய வேலைகளை தேசிய புலனாய்வு முகமையும் இண்டெலிஜென்ஸ் பீரோவும் செய்யவில்லை. மாநில உளவுத்துறை தலைவராக இருந்த சத்தியமூர்த்தியும் உள்நாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பில் இருந்த ஈஸ்வர மூர்த்தியும் சரியானபடி கண்காணிக்க வில்லை.

சத்தியமூர்த்தியைத் தொடர்ந்து உளவுத்துறை தலைவர் பொறுப்புக்கு வந்த கோவையைப் பற்றி நன்கு அறிந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் சரியான வகையில் கண்காணிப்பை ஃபாலோ செய்யவில்லை. மாநில உளவுத்துறை அதிகாரிகள் எப் பொழுதும் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்குள் தலையிடுவதில்லை. மாநில போலீசை மீறி இந்தியாவில் எங்கும் யாரையும் விசாரணை செய்யவும், கைது செய்யவும், கண்காணிக்கவும் அதிகாரம் பெற்றது தேசிய புலனாய்வு முகமை. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என மாநில போலீஸ் அதிகாரிகள் திட்டமிட்டார்கள். தமிழகத்தில் நடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான தேசிய புலனாய்வு முகமையின் வேலைகளில், உருப்படியாகக் கண்டுபிடிக்கப்பட்ட கோவை நெட்வொர்க்கைப் பற்றி சரியாகப் புலனாய்வு செய்யாமலும், சந்தேகப் பட்டவர்களைத் தொடர்ந்து கண்காணிக் காமலும் விட்டதன் விளைவே கோவையில் நடந்த சிலிண்டர் குண்டு வெடிப்புக்கான காரணம் என காவல்துறை வட் டாரங்கள் தெரிவிக்கின் றன.

இனியாவது உறக் கம் கலைத்து கண் காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

"உண்மையான அ.தி.மு.க. நாங்களே...'

மருதுபாண்டியர் குருபூஜையில் கெத்து காட்டிய ஓ.பி.எஸ்.!

ஜெ. உயிருடன் இருக்கும்பொழுது எங்கள் மக்கள் மீது விசுவாசம் காட்டினார். ஆனால், இ.பி.எஸ்.ஸோ, குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் பக்கமே இருக்கிறார், என்கின்ற பொதுவான குற்றச்சாட்டு எடப்பாடி பழனிச்சாமி மீது இருக்க, உண்மையான அ.தி.மு.க. நாங்களே என மருது பாண்டியர்களின் 221-வது குரு பூஜையில் 27-10-22 அன்று கலந்துகொண்டு, ஜெயலலிதா வழி என் வழி என கெத்து காட்டியுள்ளார் ஓ.பி.எஸ்.

மா.செ. அசோகன், மருது அழகுராஜ் ஆகியோரின் தலைமையில் சிவகங்கை மாவட்ட எல்லை பூவந்தியில் ஏறக்குறைய 80 கார்களுடன் கட்சிக்காரர்கள் காத்திருக்க 11:30 மணியளவில் அங்கு வந்த ஓ பன்னீர்செல்வம் மாலை மரியாதை வாங்கிக் கொண்டு காளையார்கோவிலுக்கு புறப்பட்டு சென்று, மருதிருவர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார்.

"அரசு விழாவாக 24ம் தேதி திருப்பத்தூரில் நடந்த மருதுபாண்டியர்கள் குருபூஜையின் போதே ஓ.பி.எஸ். கலந்து கொண்டிருக்க வேண்டும். அன்று தீபாவளி என்பதால் அவர் தொண்டர்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை. எனவே, இன்று இங்கு வந்திருக்கின்றார். ஜெ. உயிருடன் இருக்கும் பொழுது ஒரு முறை இங்கு கலந்து கொண்டது நினைவுகூரத்தக்கது. என்றுமே ஜெ. வழியில் தான் ஓ. பன்னீர்செல்வம் இருப்பார். உண்மையான அ.தி.மு.க.வும் இதுவே'' என்றார், இது குறித்துப் பேசிய மருது அழகுராஜ்.

-நாகேந்திரன்

படம்: விவேக்

nkn291022
இதையும் படியுங்கள்
Subscribe