ராங்கால் முதல்வர் Vs ஆளுநர்! வேகமெடுக்கும் யுத்தம்! ஜெ சாவு! நீதி கிடைக்குமா?

dd

"ஹலோ தலைவரே, கவர்னரின் அதிகாரத்தைக் குறைக்க வழிவகை செய்யும் வகையில், தமிழக சட்டமன்றத்தில் ஒரு அதிரடி மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கு.''”

"ஆமாம்பா, பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை, மாநில அரசுக்கு மாற்றி அமைக்கும்படியா அந்த அதிரடி மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கு.''”

ff

"உண்மைதாங்க தலைவரே, கவர்னரிடம் இது போன்ற அதிகாரங்கள் சிக்கிக்கிட்டு இருப்பதால்தான், தமிழக அரசால் பல விசயங்களில் எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலை இருக்கிறது. அதனால்தான் இப்படியொரு மசோதாவை தி.மு.க. அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி யது. இதை ஒப்புதலுக்காக சட்ட முறைப்படி அந்த கவர்னருக்கே அனுப்பியிருக்கிறார் சபாநாயகர் அப்பாவு. இது ராஜ்பவன் தரப்பைக் கொஞ்சம் அதிர வைத் திருக்கிறது. இந்த சட்ட மசோதா நிறைவேற்றப் படும் நேரத்தில் கவர்னர் ரவி, ஊட்டியில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் இருந்தார். அப்போது அவரிடம், இது பற்றிய தகவலைக் கொஞ்சம் தயங்கியபடியே அதிகாரிகள் சொல்ல, அதைக்கேட்டதும் கவர்னரும் முதலில் முகம் இறுகிப் போய்விட்டாராம். பின்னர் சிரித்துக் கொண்டாராம்.''”

"அந்த சிரிப்புக்கு என்ன அர்த்தமாம்?''”

"தமிழ்நாடு அரசு இதுவரை அனுப்பி வைத்த நீட் விலக்கு உள்பட 12-க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஒப்புதல் கொடுக்காமல், கவர்னர் பிரேக் பிடிச்சி வச்சிருக்கார். அந்த வரிசையில் இந்த மசோதாவும் சேர்ந்துவிடும். அதற்குத்தான் அந்தச் சிரிப்பு. இதற்கிடையே, நீட் விலக்கு மசோதாவைக் குடியரசு தலை வருக்கு அனுப்பாமல் கிடப்பில் வைத்திருக்கும் ஆளுநரை, தபால்காரரோடு ஒப்பிட்டு, முதல்வர் ஸ்டாலின் பேசியதை அறிந்ததும், ஷாக் ஆனாராம் ஆளுநர். பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் காலந்தாழ்த்துவதை உச்சநீதிமன்றம் கண்டித்துள் ளது. அமைச்சரவை முடிவுக்கு எதிராக ஆளுநர் சொந்தக் கண்ணோட்டத்தில் செல்ல தனி அதிகாரமில்லைன்னு தெரிவிச்சிருக்கு. அதனால் ஆளுநரின் அதிகார வரம்பை சட்டரீதியாக எதிர்கொள்ளும் நம்பிக்கை அரசுக்கு வந்திருக்கு.''”

"பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவையும் கூட கவர்னர் இழுத்தடிக்கிறாரேப்பா?''”

ff

"உண்மைதாங்க தலைவரே, சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்

"ஹலோ தலைவரே, கவர்னரின் அதிகாரத்தைக் குறைக்க வழிவகை செய்யும் வகையில், தமிழக சட்டமன்றத்தில் ஒரு அதிரடி மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கு.''”

"ஆமாம்பா, பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை, மாநில அரசுக்கு மாற்றி அமைக்கும்படியா அந்த அதிரடி மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கு.''”

ff

"உண்மைதாங்க தலைவரே, கவர்னரிடம் இது போன்ற அதிகாரங்கள் சிக்கிக்கிட்டு இருப்பதால்தான், தமிழக அரசால் பல விசயங்களில் எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலை இருக்கிறது. அதனால்தான் இப்படியொரு மசோதாவை தி.மு.க. அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி யது. இதை ஒப்புதலுக்காக சட்ட முறைப்படி அந்த கவர்னருக்கே அனுப்பியிருக்கிறார் சபாநாயகர் அப்பாவு. இது ராஜ்பவன் தரப்பைக் கொஞ்சம் அதிர வைத் திருக்கிறது. இந்த சட்ட மசோதா நிறைவேற்றப் படும் நேரத்தில் கவர்னர் ரவி, ஊட்டியில் நடந்த துணைவேந்தர்கள் மாநாட்டில் இருந்தார். அப்போது அவரிடம், இது பற்றிய தகவலைக் கொஞ்சம் தயங்கியபடியே அதிகாரிகள் சொல்ல, அதைக்கேட்டதும் கவர்னரும் முதலில் முகம் இறுகிப் போய்விட்டாராம். பின்னர் சிரித்துக் கொண்டாராம்.''”

"அந்த சிரிப்புக்கு என்ன அர்த்தமாம்?''”

"தமிழ்நாடு அரசு இதுவரை அனுப்பி வைத்த நீட் விலக்கு உள்பட 12-க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஒப்புதல் கொடுக்காமல், கவர்னர் பிரேக் பிடிச்சி வச்சிருக்கார். அந்த வரிசையில் இந்த மசோதாவும் சேர்ந்துவிடும். அதற்குத்தான் அந்தச் சிரிப்பு. இதற்கிடையே, நீட் விலக்கு மசோதாவைக் குடியரசு தலை வருக்கு அனுப்பாமல் கிடப்பில் வைத்திருக்கும் ஆளுநரை, தபால்காரரோடு ஒப்பிட்டு, முதல்வர் ஸ்டாலின் பேசியதை அறிந்ததும், ஷாக் ஆனாராம் ஆளுநர். பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் காலந்தாழ்த்துவதை உச்சநீதிமன்றம் கண்டித்துள் ளது. அமைச்சரவை முடிவுக்கு எதிராக ஆளுநர் சொந்தக் கண்ணோட்டத்தில் செல்ல தனி அதிகாரமில்லைன்னு தெரிவிச்சிருக்கு. அதனால் ஆளுநரின் அதிகார வரம்பை சட்டரீதியாக எதிர்கொள்ளும் நம்பிக்கை அரசுக்கு வந்திருக்கு.''”

"பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவையும் கூட கவர்னர் இழுத்தடிக்கிறாரேப்பா?''”

ff

"உண்மைதாங்க தலைவரே, சென்னை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை ஏப்ரலிலேயே நடத்துவது பற்றி கவர்னரின் கவனத்துக்கு உயர்கல்வித் துறையும், பல்கலைக்கழக நிர்வாகமும் கொண்டு சென்றிருக்கிறது. எந்தப் பதிலையும் சொல்லாமல் கவர்னர் இழுத்தடிக் கிறாராம். சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் இருப்பதால்தான், பட்டமளிப்பு விழாவுக்குத் தேதி தராமல் கவர்னர் இழுத்தடிக்கிறார் என்று பல்கலைக்கழக பேராசிரியர்கள் தரப்பிலேயே புகைச்சல் கிளம்பி இருக்கிறது.''”

"கோட்டையில் சலசலப்பு தெரியுதே?''”

"தமிழக அரசின் நகரமைப்புத் திட்டத் துறையின் இயக்குநரான சரவண வேல்ராஜ் ஐ.ஏ.எஸ், துறையில் மியூச்சுவலாக இடமாறுதல் கேட்கும் பணியாளர்களுக்கு உடனடியாக ஆர்டர் போடும்படி, தனக்குக் கீழ் உள்ள நிர்வாக அலுவலர் சக்திவேலுக்கு உத்தரவிட்டார். சக்திவேலோ, சம்பந்தப்பட்டவர்களிடம் நிறைய எதிர்பார்ப்புடன் இருக்கிறாராம். அதுபற்றி கறாராகப் பேசுகிறாராம். தகவலறிந்த சரவண வேல்ராஜ், சக்திவேலை அழைத்து, இப்படித்தான் 3 கோடி ரூபாயில் வீடு கட்டியிருக்கிறீர்களா? என்று கேள்வி கேட்க, உயரதிகாரியிடமும் தனது பாணியிலேயே பேசியிருக்கிறாராம் சக்திவேல். எல்லாம் மேலிடத்து செல்வாக்காம்.''”

"முதல்வரின் மனைவி துர்காவை, வைகோ வின் மகன் துரை வைகோ சந்தித்திருக்கிறாரே?''”

ff

"ஆமாங்க தலைவரே, திருவெண்காடு கிராமத்தில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு கடந்த வாரம் சென்றிருந்தார் துர்கா ஸ்டாலின். தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றாங்க. அந்த சமயத்தில், ம.தி.மு.க.வின் தேர்தல் பணிச் செயலாளர் செந்தில் செல்வனின் தாயார் படத்திறப்பு விழாவுக்காக மயிலாடுதுறை சென்றிருந்த துரை வைகோ, திருவெண்காட்டுக்கு துர்கா ஸ்டாலின் வந்திருப் பதை அறிந்து அங்கு சென்றிருக்கிறார். அவரை முகமலர்ச்சியுடன் வரவேற்ற துர்கா, வைகோவின் உடல்நலம் குறித்து கனிவாக விசாரித்திருக்கிறார். அப்போது துரை வைகோ, எங்கள் கலிங்கப்பட்டி வீட்டுக்கு நீங்கள் வரவேண்டும்னு கூப்பிட, நான் ஒருமுறை உங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறேன். உங்கள் பாட்டிம்மா செய்யும் அசைவ உணவுகள் அவ்வளவு ருசியாக இருக்கும். சனிக்கிழமைகளில் அசைவ உணவுகளைச் சாப்பிடாத நானே, அன்று பாட்டிம்மாவுக்காக சாப்பிட்டேன் என்று பழைய நினைவைப் பகிர்ந்திருக்கிறார். துரை வைகோ ஹேப்பியாம்.''”

"ஜெ.வின் மர்ம மரணத்தை விசாரித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை எப்ப வரும்?''”

jaya

"ஆறுமுகசாமி கமிஷனின் ஆயுள் ஜூன் 24-ல் முடிவடை வதால், அதன் விசாரணை அவசர கதியில் முடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரத்தில் எடப்பாடி யிடம் மீண்டும் தீவிரமாக விசா ரிக்கவேண்டும்னு கடைசி நேரத் தில் பெங்களூர் புகழேந்தி கொடுத்த மனுவையும் ஆணையம் ஏற்கவில்லை. வெளியில் பேசிய தற்கு மாறாக, ஓ.பி.எஸ். கொடுத்த வாக்குமூலம் பற்றி, ஒரு சிறிய கேள்வியைக் கூட ஆணையம் எழுப்பவில்லை. ஜெ.வின் மரணத் துக்கு யார் காரணம் என்கிற கோணத்துக்குப் போகாமல், அப்பல்லோவில் கொடுக்கப்பட்ட சிகிச்சை முறைகள் சரியாக இருந்ததா? என்ற அளவிலேயே விசாரணை நடந்தது. அ.தி.மு.க.வினர் தங்கள் தலைவியின் மரணத்தில் உள்ள மர்மத்திற்கு தி.மு.க. ஆட்சியி லாவது விடை கிடைக்கும்னு எதிர்பார்ப்போடு இருக்காங்க. விசாரணை கமிஷனின் அறிக்கை அவங்க எதிர்பார்ப்புக்கேற்றபடி இருக்குமான்னு வக்கீல்கள் தரப்பி லேயே விவாதம் நடக்குது.''”

"டெல்லியின் உத்தரவுப் படிதான் எடப்பாடிக்கு எதிராக சசிகலா, கொடநாடு வழக்கில் வாக்குமூலம் கொடுத்தாருன்னு செய்தி வருதே?''”

"சசிகலாவை டெல்லியோடு நெருக்கமாக்கியது ஆடிட்டர் குருமூர்த்திதானாம். அவர் சொன்னதால்தான் டெல்லியின் அரவணைப்பு சசிகலாவுக்குக் கிடைக்கிறதாம். கொடநாடு வழக்கில் எடப்பாடிக்கு எதிராக நான் வாக்குமூலம் கொடுக்க லாமா? என்று சசிகலா தயங்கித் தயங்கிக் கேட்டபோது, உங்கள் விருப்பப்படி சுதந்திரமாக வாக்குமூலம் தரலாம். இதில் எடப்பாடிக்காக வக்காலத்து வாங்கமாட்டோம் என்று டெல்லி சொன்னதாம். அந்த தைரியத்தில்தான், எடப்பாடிக்கு எதிராக பல விசயங்களையும் சசிகலா, விசாரணை டீமிடம் சொன்னா ராம். இது எடப்பாடியின் காதுக்குப் போக, நாம் தொடர்பு கொண்டாலும், நமக்கு சாதகமாக டெல்லி பேசுது. இன்னொரு பக்கம் சசிகலாவுக்கும் அது சாதகமாப் பேசுது. டெல்லியின் உண்மை முகம் தெரியலையே என்று புலம்புகிறாராம்.''”

"கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரித்துவந்த நீதிபதி மாற்றப்பட்டிருக்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, கொடநாடு வழக்கை விசாரித்துவந்த நீதிபதி சஞ்சய் பாபா, நேர்மையானவர் என்று பெயரெடுத்தவர். பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வழக்கின் உயிரைத் தக்கவைத்தவர். அவர் மாற்றப்பட்டு தற்போது முருகன் என்கிற நீதிபதி, அங்கே நியமிக்கப்பட்டிஇருக்கிறார். சஞ்சய் பாபாவுக்கு நீலகிரி கிளைமேட் ஒத்துக்காததால்தான் அவரது விருப்பப்படி, மாற்றல் செய்யப்பட்டாராம். முருகனும் நேர்மையானவர் என்று பெயரெடுத்தவர். இதே பெயரில் ஒரு நீதிபதி, ஜெயேந்திரர் மீதான சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்தார். அந்த வழக்கில் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் தப்பித்தார். அவரா இவர் என முதலில் குழம்பி, பின்னர் சந்தேகம் தெளிந்து நிம்மதியாகியிருக்கிறார்கள்.''”

"அ.தி.மு.க.வில் உட்கட்சித் தேர்தல்கள் முடிஞ்சிருக்கே?''”

’"ஆமாங்க தலைவரே, நிர்வாகிகளுக்கான தேர்தல் முடிந்த வேகத்தில் தன் ஆதரவாளர்களை எல்லாம் மா.செ.க்களாக ஆக்கி, அவர்கள் மூலம் ஓ.பி.எஸ்.ஸை ஓரம்கட்டலாம்னு திட்டமிட்டிருந்த எடப்பாடி, தன் தலைக்கு மேல் கொடநாடு விவகாரம் கத்திபோல் தொங்குவதால், வேறு கோணத்தில் சிந்திக்கத் தொடங்கிவிட்டாராம். இப்போதுள்ள நிலையில் ஓ.பி.எஸ்.ஸை இறுகப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்த அவர், மா.செ.க்களையும் மாற்றாமல் பழைய மா.செ.க்களையே மீண்டும் தேர்ந்தெடுக்கச் செய்திருக்கிறார். அந்த வகையில் அவரும் சேலம் புறநகர் மா.செ.வாக ஆகி இருக்கிறார். மே மாதம் கூடவிருக்கும் பொதுக்குழுவிலும், பெரிய மாற்றங்களைச் செய்யாமல் இப்போது இருப்பது போலவே கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் பொருளாளராகவும் ஓ.பி.எஸ்.ஸையே தொடரச் செய்து, இணை ஒருங்கிணைப்பாளராக, தான் தொடர்வது என்றும் முடிவு செய்துவிட்டாராம்.''”

"சென்னை தி.மு.க. பிரமுகர் கொலை விவகாரத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் மீது சந்தேகப் பார்வை திரும்பி இருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, சென்னை மடிப்பாக்கம் தி.மு.க. பிரமுகர் செல்வம் என்பவர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நிற்கத் தயாரான நிலையில், படுகொலை செய்யப்பட்டார். இதன்பின் அவரது மனைவி ஷமீனா தேர்தலில் நின்று, கவுன்சிலர் ஆகியிருக்கிறார். செல்வம் கொலை வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர் ராதாகிருஷ்ணன் என்பவர் மீது சந்தேகம் எழுந்த நிலையில் அவர், தி.மு.க. அல்லது பா.ஜ.க.வுக்குத் தாவும் முயற்சியில் இருக்கிறார். இந்த நிலையில் ஒரு குற்ற வழக்கில் கைதான நபர் ஒருவர், மடிப்பாக்கம் செல்வம் கொலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்குத் தொடர்பு உண்டு என்று ஒருவரின் பெயரைச் சொல்ல விசாரணை டீமே ஷாக்காகி இருக்கிறதாம். இப்போது விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட இருக்கிறார் அந்த கதர்சட்டை எம்.எல்.ஏ.''”

rr

"ரொம்பநாளா சைலண்டா இருந்த காங் கிரஸ் பிரமுகர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மறுபடி யும் பரபரப்பு அரசியலுக்கு வந்திருக்காரே?''”

"ஆமாங்க தலைவரே, சர்ச்சை நாயகர்னு ஒரு காலத்தில் பெயரெடுத்தவரான காங்கிரசின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சில வருட அமைதித் திரையைக் கிழிச்சிக் கிட்டு வெளியே வந்திருக்கார். அம்பேத்கரையும் மோடியையும் ஒப்பிட்டு இளையராஜாவை விமர்சித்தவர்களின் பட்டியலுக்கு வந்த அவர், ராஜாவைக் கடுமையாக விமர்சித்தார். இது தேசிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு நிறுத்தாத இளங்கோவன், இளைய ராஜாவுக்கு சங்கராச்சாரியார்னு நினைப்பு. அந்த சங்கராச்சாரியாரையே ஜெயிலுக்குள் தள்ளிய காலம் இதுன்னு இப்ப மறுபடியும் அதிரடி காட்ட, அவரை கைது செய்யணும்னு போலீசில் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இருந் தும் இளங்கோவன், அசந்த மாதிரி தெரியலை.''”

"நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். சென்னை வந்த அமித்ஷாவிடம், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பற்றி பா.ஜ.க. பிரமுகர்கள் பலரும் புகார் மனுக்களைக் கொடுத்து திகைக்க வைத்துவிட்டார்களாம். குறிப்பாக, அவர் கட்சி அலுவலகத்தையே போலீஸ் ஸ்டேஷனைப் போல் நடத்துகிறார். எதிர்வரும் 20 வருடங்களுக்கு, தானே தலைவர் பதவியில் நீடிக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டு, ஒரேயடியாக அதிகாரம் செய்கிறார். தமிழகத்தில் இருந்துகொண்டே கர்நாடத்தைக் சேர்ந்தவர்களிடம் மட்டுமே அக்கறை காட்டுகிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக் கிறதாம். தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளர்கிறதோ இல்லையோ அண்ணாமலை கோஷ்டி, அண்ணாமலைக்கு எதிர் கோஷ்டின்னு இரு தரப்பும் வளர்கிறதாம்.''”

nkn300422
இதையும் படியுங்கள்
Subscribe