மிழறிஞர் பரிதிமாற் கலைஞர் காலத்திலிருந்து செம்மொழித் தமிழுக்கான குரல் ஒலித்தது. தமிழ்நாட்டின் முதல்வராக கலைஞர் இருந்தபோது மத்தியில் மன்மோகன்சிங் தலைமை யிலான அரசில் இருந்த செல்வாக்கினால் 2007ல் தமிழுக்கு செம்மொழித் தகுதியை அதிகாரப்பூர்வமாக வழங்கியது இந்திய ஒன்றிய அரசு.

Advertisment

இதனையடுத்து, மைசூரில் இயங்கி வந்த இந்திய மொழிகள் மய்ய (Central Institute of Indian Languages) நிறுவனத்தின் அலுவலகம் சென்னைக்கு மாறுதலாகும் படி செய்து, செம்மொழித் தமிழ் உயராய்வு மையமாக கடற்கரை காமராசர் சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில் இயங்கிடச் செய்தார் கலைஞர். தனது சொந்தப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை சிறந்த தமிழ் ஆய்வாளருக்கு ஆண்டுதோறும் விருது வழங்க அறக்கட்டளை அமைக்கவும் உதவினார்.

Advertisment

se

ஆட்சி மாற்றத்தால் செம்மொழி கவனிப் பாரற்றுப் போனது. தரமணிக்கு மாற்றப்பட்ட அலுவலகத்தில் இயக்குநர், துணைத் தலைவர், பதிவாளர், நிதி அதிகாரி உள்ளிட்ட பொறுப்புகள் பலவும் காலியாகவே கிடந்தன. மொழி சார்ந்த அமைப்புக்கு தொழில்நுட்பத் துறை சார்ந்தவர் களை தற்காலிகப் பொறுப்பாளர்களாக கடந்த 13 ஆண்டுகளாக நியமித்து வந்தது மத்திய அரசு. இதனை எதிர்த்து தி.க, தி.மு.க. போன்ற இயக்கங்கள் குரல் கொடுத்தும் போராடியும் வந்தன. தமிழார்வலர்கள் பலரும் குரல் எழுப்பி வந்தனர்.

2014 இல் இயக்குநர் பதவிக்காக செம்மொழி நிறுவனத்தின் மூலம் விளம்பரம் செய்யப்பட்டது. முனைவர் மு.பாலசுப்பிரமணியன் தேர்வுக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஆனால், அவர் இயக்குநராக நியமனம் செய்யப் படவில்லை. பாலசுப்ரமணியன் இப்போது தஞ்சை பல்கலைக்கழகத் துணைவேந்தராக உள்ளார். தேசிய தொழில்நுட்பக் கல்லூரியான என்.ஐ.டியின் பேராசிரியர் பழனிவேல்தான் செம்மொழி மத்திய நிறுவனத்தின் தற்காலிகப் பொறுப்பில் இருந்து வந்தார்.

Advertisment

இந்நிலையில், செம்மொழி மய்யத்தின் இயக்குநர் பதவிக்கு மீண்டும் விளம்பரம் செய்யப் பட்டது. முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும், பேராசிரியர் என்ற நிலையை அடைந்திருக்க வேண்டும், துறைத்தலைவைராக அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும், 5 ஆண்டுகால நிர்வாக அனுபவமும் வேண்டும் எனப் பல விதிமுறைகள் குறிப்பிட்டப்பட்டிருந்தன.

தகுதியுள்ளோர் விண்ணப்பித்திருந்த நிலையில்தான் செம்மொழி மத்திய நிறுவனத்தின் இயக்குநராக முனைவர் சந்திரசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்பு வெளியானது. இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்ட மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், அதில் நடிகர் ரஜினியையும் இணைத்து ட்வீட் செய்திருந்தார். இதையடுத்து, செம்மொழி நிறுவனத்துக்கு முதல் இயக்குநரை நியமித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து ரஜினி கடிதம் எழுத, அதுவும் ஊடகங்களில் வெளியானது. இந்தியாவின் அனைத்து மொழிகள் மீதும் பா.ஜ.க. அரசுக்கு உள்ள அக்கறை காரணமாகத்தான் செம்மொழித் தமிழை வளர்ப்பதற்காக இயக்குநர் நியமிக்கப்பட்டிருப்பதாக பேசப்பட்டது.

இயக்குநர் சந்திரசேகரகன் காங்கேயம் அரசு கல்லூரியில் துணைப் பேராசிரியர் நிலையில் உள்ளவர். அவரைவிட பணி அனுபவமும் தகுதியும் பெற்றவர்களான பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் இப்பதவிக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், இயக்குநர் பதவியின் நேர்காணலுக்குச் சென்றவர்கள் பற்றிய விவரங்களை வெளியிடாமல் சந்திர சேகரனை நியமித்திருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.

see

இந்த நியமனத்தில் காட்டப்பட்டுள்ள அவசரம் மற்றும் விதிமீறல்கள் குறித்து மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் அ.சீனுவாசன், பேராசிரியர் இரா.முரளி மற்றும் பல கல்வியாளர்கள் வெளிப்படையாகவே குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். தி.க. தலைவர் கி.வீரமணி கண்டன அறிக்கை வெளியிட்டார்.

நேர்காணலுக்குச் சென்றவர்களில் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜே.என்.யூ) இந்திய மொழிகள் மையம்-தமிழ்ப் பேராசிரியர் தாமோதரன், சென்னை உலகத் தமிழாராய்ச்சி மையத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் செல்வகுமார் ஆகியோர் உதவிப் பேராசிரியர் சந்திரசேகரனைவிட தகுதிப்பாடுகளில் மூத்தவர்கள் என்பதே கல்வியாளர்களின் வாதம். பேராசிரியர் தாமோதரன் இடதுசாரி சிந்தனை கொண்டவர். தமிழ் மொழி குறித்தும் திராவிடப் பண்பாடு குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டு, பெரியார் பற்றிய நூல்களை எழுதியுள்ளவர்.

பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் பயின்றவரான தாமோதரன், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக் கழகம் போன்றவற்றில் பணி அனுபவம் பெற்றபின், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்ட தகுதிக்குரியவர். தனது ஆய்வுகளுக்காக கலைஞர், ஜெ போன்ற முதல்வர்களின் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றவர். ஜே.என்.யூ. என்றால் மத்திய பா.ஜ.க. அரசுக்குள்ள ஒவ்வாமையும், தாமோதரனின் இடதுசாரி- பெரியாரியப் பார்வையும் அவருக்குத் தகுதியிருந்தும் பதவி கிடைக்காமல் செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.

சந்திரசேகரனுக்கு முதல்வர் எடப்பாடியின் சிபாரிசும், ஜே.என்.யூ.வை ஒதுக்கும் பா.ஜ.க அரசின் கரிசனமும் கிடைத்ததால்தான் வெறும் உதவிப் பேராசிரியரான அவருக்கு இந்தப் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுப்பப்படு கிறது.

திருவள்ளுவருக்கு காவிப் பெயிண்ட் அடிப்பதுபோல, செம்மொழித் தமிழுக்கும் காவி வண்ணம் பூசும் வேலையைக் கச்சிதமாகத் தொடங்கி யுள்ளது பா.ஜ.க அரசு. தி.மு.க. எதிர்ப்புணர்வு என்ற பெயரில் தமிழுக்குத் துரோகம் செய்கிறது அ.தி.மு.க. என்கிறார்கள் கல்வியாளர்கள்.

- கீரன்