(88) சினிமாவை சிதைக்காதீர்...!
நிஜம்போல் காட்சிதரும் இந்த நிழல் திரைக்கூத்து, சர்வ வல்லமை படைத்தது. இந்த சினிமா என்ற சாதனம் மக்களை மகிழ்விக்க, கற்றுத்தர, தூக்கிவிட, சுலபமாக புரியவைக்க, உணர்வூட்ட, நடந்து முடிந்துவிட்ட வரலாறுகளை மீண்டும் நம் கண்முன் நடத்திக்காட்ட... இப்படி பல வித்தைகளை உள்ளடக்கிய நல்ல விஞ்ஞான வளர்ச்சி.
தேசப்பிதாவின் வாழ்க்கையை முழுமையாக அறிந்தவர்களல்ல நாம். ஆனால் ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கத்தில், பென் கிங்ஸ்- நடித்த "காந்தி' படம், சுமார் மூன்று மணி நேரத்தில், தேசப்பிதாவின் வாழ்க்கையை, தியாகங்களை, போராட்டங்களை, அவரின் தனிவழியான அகிம்சையை தண்டி யாத்திரையை, அரை நிர்வாண பக்கிரியாக மாறிய நிகழ்வினை, இறுதியில் தியாகசீலரை மதமாச்சர்யங்களுக்காக சுட்டுக்கொல்றதை... அனைத் தையும் கண்ணால் பார்த்தோம். காதால் கேட்டோம். பலர் படம் முடிந்தும் கண் கலங்கிய நிலையில் திரை யை வெறித்துப் பார்த்த படி நின்றோம். திருப்பூர் குமரனை, பகத்சிங்கை, நந்தனை, என் "ராஜபார்ட் ரங்க துரை'யில் கண்டு களித்தீர்கள். கர்ண னை, கட்டபொம்ம னை, கப்பலோட்டிய தமிழரை... படங்க ளாக பார்த்து மகிழ்ந்தீர்கள்.
சமத் துவத்தை, சமநீதியை, பகுத்தறிவை, மொழி உணர் வை, இனமானத் தை... பல படங் களில் கற்றோம். "அச்சம் என்பது மடமையடா, அஞ் சாமை திராவிடர் உடமையடா' போன்ற பல பாடல்கள் நம் நாடி, நரம்புகளை முறுக்கேற்றியதை மறுக்க முடியுமா? இதெல்லாம் நேற்றைய சினிமா தந்தது. இன்றைய சினிமா என்ன செய்கிறது? இப்படியே போனால் நாளைய சினிமா என்ன ஆகும்? அரசியலை வணிகம் ஆக்கிர மித்து வருகிறது. சினிமாவை சீர்கேடு முழுங்கி வருவதை ஓ.டி.டி. தளங்களில் பார்க்க முடிகிறது.
அப்படியானால்... இனி சினிமா அவ்வளவுதானா?
இல்லை...
"எ
(88) சினிமாவை சிதைக்காதீர்...!
நிஜம்போல் காட்சிதரும் இந்த நிழல் திரைக்கூத்து, சர்வ வல்லமை படைத்தது. இந்த சினிமா என்ற சாதனம் மக்களை மகிழ்விக்க, கற்றுத்தர, தூக்கிவிட, சுலபமாக புரியவைக்க, உணர்வூட்ட, நடந்து முடிந்துவிட்ட வரலாறுகளை மீண்டும் நம் கண்முன் நடத்திக்காட்ட... இப்படி பல வித்தைகளை உள்ளடக்கிய நல்ல விஞ்ஞான வளர்ச்சி.
தேசப்பிதாவின் வாழ்க்கையை முழுமையாக அறிந்தவர்களல்ல நாம். ஆனால் ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கத்தில், பென் கிங்ஸ்- நடித்த "காந்தி' படம், சுமார் மூன்று மணி நேரத்தில், தேசப்பிதாவின் வாழ்க்கையை, தியாகங்களை, போராட்டங்களை, அவரின் தனிவழியான அகிம்சையை தண்டி யாத்திரையை, அரை நிர்வாண பக்கிரியாக மாறிய நிகழ்வினை, இறுதியில் தியாகசீலரை மதமாச்சர்யங்களுக்காக சுட்டுக்கொல்றதை... அனைத் தையும் கண்ணால் பார்த்தோம். காதால் கேட்டோம். பலர் படம் முடிந்தும் கண் கலங்கிய நிலையில் திரை யை வெறித்துப் பார்த்த படி நின்றோம். திருப்பூர் குமரனை, பகத்சிங்கை, நந்தனை, என் "ராஜபார்ட் ரங்க துரை'யில் கண்டு களித்தீர்கள். கர்ண னை, கட்டபொம்ம னை, கப்பலோட்டிய தமிழரை... படங்க ளாக பார்த்து மகிழ்ந்தீர்கள்.
சமத் துவத்தை, சமநீதியை, பகுத்தறிவை, மொழி உணர் வை, இனமானத் தை... பல படங் களில் கற்றோம். "அச்சம் என்பது மடமையடா, அஞ் சாமை திராவிடர் உடமையடா' போன்ற பல பாடல்கள் நம் நாடி, நரம்புகளை முறுக்கேற்றியதை மறுக்க முடியுமா? இதெல்லாம் நேற்றைய சினிமா தந்தது. இன்றைய சினிமா என்ன செய்கிறது? இப்படியே போனால் நாளைய சினிமா என்ன ஆகும்? அரசியலை வணிகம் ஆக்கிர மித்து வருகிறது. சினிமாவை சீர்கேடு முழுங்கி வருவதை ஓ.டி.டி. தளங்களில் பார்க்க முடிகிறது.
அப்படியானால்... இனி சினிமா அவ்வளவுதானா?
இல்லை...
"எம்புரான்' என்றொரு மோகன்லால் நடித்த படம். பிரித்விராஜ் சுகுமார் இயக்கிய படம். இது லூசிபர் இரண்டாம் பாகம். முதல் பாகம் ஒரு sensational hit. இந்தப் படம் "எம்புரான்' making extraordinary. Nuances, magnanimity, style well balanced screenplay... எல்லா நடிகர்களும் தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள் மஞ்சுவாரியர், தன் கதாபாத்திரத்தை மிக அழகாக செதுக்கியுள்ளார். மொத்தத்தில் இப்படம் இண்டர்நேஷனல் ஸ்டேண்டர்டுக்கு பண்ணப்பட்டிருப்பதைப் பாராட்டியே ஆகவேண்டும். Lot of efforts from Director's side. Mohanlal is always a dedicated artist. Here he excels. The authenticity with which Director has handled the mega phone has to be appreciated.உலகத்தரத்துக்கு சென்ஸிபிள் சினிமா பண்றது மிக மிகக் கடினமான ஒன்று.
மலையாளம், மராத்தி, வங்காளி மொழிகளில் பல நல்ல, புதுமையான படங்கள் வர ஆரம்பித் திருக்கின்றன.
மலையாளத்தில் சமீபத்தில் சின்ன பட்ஜெட் டில் வெளியாகி பெரும் லாபத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிற படம் "பொன்மேன்'. ஜோதிஷ் ஷங்கர் இயக்கத்தில், பேசில் ஜோசப்-லிஜாமோல் ஜோஸ் நடித்திருக்கிறார்கள். "ஒரு புதுவிதமான பிஸினஸ் பண்ற சாதாரண ஹீரோ. கல்யாணத் துக்கு நகை வாங்க முடியாத குடும்பங்களிலே இருக்கிற பெண்களுக்கு நகையை கொண்டு வந்து குடுத்துட்டு... அங்கேயே காத்திருப்பான். கல்யா ணம் தடபுடலா நடக்கும். வர்றவங்க மொய் எழுது வாங்க, பரிசுகள் வழங்குவாங்க. அதிலேயிருந்து தன் நகைக்கான பணத்தை வாங்கிக்கிட்டு, நகையை ஒப்படைச்சுட்டுப் போயிடுவான் ஹீரோ. அப்படி அவன் ஒரு கல்யாண வீட்டுக்கு நகையோடு வந்து காத்திருப்பான். அந்த மாப்பிள்ளை மீன்பிடி வேலை செய்பவன். மகா முரடன். அவன் இந்த பொண்ணு வீட்டில் போடப்போற நகைக்கும்... மொய் பணத்துக்கும் ஆசைப்பட்டே கல்யாணம் பண்ண வருகிறான். கல்யாணம் முடிந்ததும் யாருக்கும் தெரியாம இரவோட இரவா நகை நட்டோட பெண்ணையும், மொய்ப்பணத்தை யும் எடுத்துக்கிட்டு, தன் ஊருக்கு கிளம்பி விடுகிறான்.
நகை எடுத்து வந்து கொடுத்த ஹீரோவுக்கு மரண அடி. பொண்ணு வீட்டுக்காரங்க, நகைக்கடன் தந்த ஹீரோவால் மாப்பிள்ளைக்கு விஷயம் தெரிஞ்சு பொண்ணு வாழ்க்கை சிதைஞ்சிடுமே என நினைச்சு மாப்பிள்ளை ஊர், பேர் விபரத்தை மறைத்தல். நாயகன் அலைஞ்சு திரிஞ்சு மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து சேருகிறான். அங்கே அந்த மீன்பிடிக்கிற மாப்பிள்ளை, பொண்டாட்டியை கொடுமைப் படுத்துகிறான். ஹீரோவைப் பார்த்த மாப்பிள்ளை, நகைகளும் கடன் என்பது தெரிந்து புது மணப் பெண்ணை சித்ரவதை செய்கிறான். ஹீரோவும் துன்புறுத்தப்படுகிறான். தனக்கு நகைக்கடன் தரவந்த நாயகன் இன்னல்படுவதைப் பார்த்து இரக்கப்படுகிறாள் மணப்பெண். அந்தப் பெண்மீது நாயகனுக்கு ஏற்பட்ட இரக்கம் காதலாகிறது. நகைகளை எப்படியோ மீட்டு, அந்தப் பெண்ணையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிப் போய்விடுகிறான்....' சிறிய பட்ஜெட் படம்தான்... ஆனால் மனதை வருடுகிறது.
முன்பெல்லாம் திரைக்கதைக்கு சில இலக்க ணங்கள் சொல்வார்கள். முதல் இரண்டு, மூன்று காட்சிகளுக்குள்ளேயே கதையில் வரும் கதா பாத்திரங்களை திரையில் அறிமுகப்படுத்திவிட வேண்டும். இது எந்த ரகத்தைச் சார்ந்த கதை என்பதையும் குழப்பாமல் சொல்லிவிட வேண்டும் என்பார்கள். இப்ப ஓ.டி.டி. தளத்தை திறந்தால்... அமேசான், நெட்ப்ளிக்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார், சோனி... இப்படி நூற்றுக்கணக்கான சேனல்கள், ஆயிரக்கணக்கான படங்கள், பல நூறு வெப் சீரிஸ். உலகிலுள்ள அத்தனை மொழிகளிலும் படம் பார்க்க முடிகிறது. தெலுங்குப் படமான ஆர்.ஆர்.ஆர்லில் இரு நாயகர்கள் ஆடும் நடனம், நமக்குத் தெரியாத ஏதேதோ மொழிகளிலே யார், யாரோ நடிகர்கள் ஆடி யு-டியூப்பில் பார்க்க முடிகிறது.
"நாடோடி மன்னன்' படத்தை குறைந்தது இருபது தடவையாவது பார்த்திருப்பேன். சென்னைக்கு நான் வந்த காலத்தில் "ஓடியன்' தியேட்டரில் ஆங்கிலப் படங்கள் மட்டுமே திரையிடுவார்கள். Prisoner of Zenda என்ற ஆங்கிலப் படம். Repeat run போட்டிருந்தார்கள். நானும் படம் பார்த்துக்கொண்டிருந்தேன். திரைக்கு முன் பெஞ்ச் கிளாசில் படம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு இளைஞன் எழுந்து, பின்னால் மக்களைப் பார்த்து "டேய்... எவனோ ஒரு வெள்ளைக்காரப்பயல் நம்ம வாத்தியாரோட "நாடோடி மன்னன்' படக்கதையை இங்கிலீஷ்ல காப்பியடிச்சு எடுத்துட்டான்டா'' என உரக்க கத்தினான். இரண்டு படத்தையும் பார்த்தவங்களுக்கு உண்மை புரியும்.
1960களில் தமிழ் திரையுலகமும், இந்திய சினிமாவும் அப்படித்தான் இருந்துச்சு. இன்னிக்கு வளர்ச்சி... தியேட்டரில் படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. சீரியல்கள், சீரிஸ், வெப்-சீரிஸ், ஷார்ட் பிலிம்ஸ் என பல நூறு பட வகைகள், எண்டர்டெயின்மெண்ட் சேனல்கள், ஸ்போர்ட்ஸ் சேனல்கள் என ஏராளம்.
இன்று கனவில் கூட நினைக்க முடியாத காட்சி களை "கிராபிக்ஸ்' மூலம் உருவாக்க முடியும். ஏழ்ங்ங்ய்ம்ஹற் பயன்படுத்தி நடிக, நடிகையரை வைத்து காட்சியை படமாக்கிவிட்டு, அது நயாகரா நீர்வீழ்ச்சி முன் நடப்பது போல் காட்ட முடியும். இப்படி ஏகப்பட்ட விஞ்ஞான வளர்ச்சிகளைக் கண்டிருக்கிறது சினிமா உலகம்.
என் புதிய படமான "காவி, ஆவி, நடுவுல தேவி' படத்தில் யோகிபாபு சூப்பர்மேன் டிரஸ்ஸில் பறந்துவந்து எதிரிகளைப் பந்தாடுவார். அதேபோல் தன் மகனை ஆண்மையில்லாதவனாக ஆபரேஷன் மூலம் மாற்ற வந்த துபாய் டாக்டர் துர்கா சல்மானுக்கு... டோனி அடித்த "ஹெலிகாப்டர் ஷாட்'-ஐ திசை திருப்பி... டாக்டரை ஆண்மையற்றவர் ஆக்குவது சூப்பரா கிராஃபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. ஆஞ்சநேய பக்தரான தன் தம்பி ராமய்யாவை குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வைக்க ஒரு பெண்ணை வைத்து செய்யும் சேட்டைகள் சொல்லிமாளாது. சிரிப்புக்கு முக்கியத்துவம் தந்து தம்பி ராமய்யாவும், யோகிபாபுவும் செய்யும் சேட்டைகள் தனி ரகம். இத்தகைய முழுநீள சிரிப்புப் படங்கள் தோற்பதேயில்லை. அந்த நம்பிக்கையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நாலு மொழிகளிலும் தயாரித்துள் ளேன்.
என் அடுத்த படமான "தேனிலவில் மனைவி எங்கே?' ஏழு இந்திய மொழிகளில் தயாராகப் போகிறது. இது சஸ்பென்ஸ் நிறைந்த காதல் காமெடி. விஷுவல் கம்யூனி கேஷன்ஸ் படித்த மாணவர்களைத் தேடிப் பிடித்து ஒரு புதிய யூனிட்டை உருவாக்கி யிருக்கிறேன். இவர்கள்தான் "தேனிலவில் மனைவி எங்கே?' படத்தினை உருவாக்கப் போகிறார்கள். நல்ல கதை, விறுவிறுப்பான திரைக்கதை, கதாபாத்திரங்களுக்கேற்ற நடிக -நடிகையர், புதுமையான பாடல் காட்சிகள்... அனைத்துக்கும் இன்றைய இளைஞர்கள்...!
என் சேனலில் இதுவரை முன்னூற்று ஐம்பது வீடியோவுக்கு மேல் போட்டிருக் கிறேன். இனிமேல் புதுப்புது வீடியோக்கள், புதிதாக படப்பிடிப்பு நடத்தி வெளியிடப் படும். இந்த முயற்சிகளெல்லாம் என்னை வாழவைத்த திரையுலகுக்கும், ரசிகர்களுக் கும் நான் கைமாறாகச் செய்யும் செயலாகும். உலகம்முழுக்க பரவிக்கிடக்கும் என் ரத்த உறவுகளில் பலர் எனக்கு துணைவரப் போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே இன்றைய திறமைசாலிகளான படித்த இளைஞர்கள் துணையோடு என் அனுபவத்தையும் கலந்து நாளைய சினிமா சீர்கெட்டுப் போகாது காப்பதற்கு என்னால் முடிந்ததைச் செய்வேன்.
(திரை விரியும்...)