(66) "ராஜபார்ட் ரங்கதுரை'யில் கற்றுக்கொண்ட பாடம்!
என் ஆரம்ப காலங்களில் பாட்டுக் கேட்கவேண்டுமானால் "மாஸ்டர் வாய்ஸ் ரெகார்டில்'தான் கேட்க முடியும். இப்போது மாதிரி பிற மொழிப் பாடல்களை சுலபமாக கேட்டுவிட முடியாது. அதிலும் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் வரு கைக்கு முன் இந்திப் பாடல்களைத்தான் நமது ரசிகர்கள் அதிகம் விரும்பிக் கேட்பார்கள். நான் நிறைய இந்திப் படங்களில் பணி யாற்றியிருக்கிறேன். அடிக்கடி பம்பாய் போய்வருவேன். இந்திப் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். "ஆரா தனா', "சங்கம்', "ஜிஸ் தேஷ்மே', "கங்கா பேத்திஹை' போன்ற பல படப் பாடல்கள் எனக்குப் பிடிக்கும். "ஷர்மினி' என்ற படத்தில் "கில்தஹி குலியஹா' என்ற பாடல் எஸ். டி.பர்மன் இசை யமைத்தது. அதைத் தழுவி போடப் பட்ட பாடல்தான் "ராதையின் நெஞ்சமே.'
அதேபோல் "அந்தாஸ்' என்ற படத்தில் வரும் பாடலே "காலங் களே... காலங்களே.... காதல் இசை பாடுங் களேன்' என்ற பாடல். "சித்தி சொல்லு... சொல்லு! மாமா சொல்லு... சொல்லு...' என்ற பாடலும் இந்திப் பாடலின் தழுவலே. இந்த மூன்று பாடல்களுமே "கனிமுத்து பாப்பா' படத்தில் இடம்பெற்றவை. படத்தின் வெற்றிக்கு இந்தப் பாடல்களும் காரணம்.
இந்தக் கதையை 1970-ல் புதுமையாக எழுதி, மிகப்பிரபலமாகக்கூடிய பாடல்களைத் தேடிச் சேர்த்து இப்படத்தி
(66) "ராஜபார்ட் ரங்கதுரை'யில் கற்றுக்கொண்ட பாடம்!
என் ஆரம்ப காலங்களில் பாட்டுக் கேட்கவேண்டுமானால் "மாஸ்டர் வாய்ஸ் ரெகார்டில்'தான் கேட்க முடியும். இப்போது மாதிரி பிற மொழிப் பாடல்களை சுலபமாக கேட்டுவிட முடியாது. அதிலும் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் வரு கைக்கு முன் இந்திப் பாடல்களைத்தான் நமது ரசிகர்கள் அதிகம் விரும்பிக் கேட்பார்கள். நான் நிறைய இந்திப் படங்களில் பணி யாற்றியிருக்கிறேன். அடிக்கடி பம்பாய் போய்வருவேன். இந்திப் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். "ஆரா தனா', "சங்கம்', "ஜிஸ் தேஷ்மே', "கங்கா பேத்திஹை' போன்ற பல படப் பாடல்கள் எனக்குப் பிடிக்கும். "ஷர்மினி' என்ற படத்தில் "கில்தஹி குலியஹா' என்ற பாடல் எஸ். டி.பர்மன் இசை யமைத்தது. அதைத் தழுவி போடப் பட்ட பாடல்தான் "ராதையின் நெஞ்சமே.'
அதேபோல் "அந்தாஸ்' என்ற படத்தில் வரும் பாடலே "காலங் களே... காலங்களே.... காதல் இசை பாடுங் களேன்' என்ற பாடல். "சித்தி சொல்லு... சொல்லு! மாமா சொல்லு... சொல்லு...' என்ற பாடலும் இந்திப் பாடலின் தழுவலே. இந்த மூன்று பாடல்களுமே "கனிமுத்து பாப்பா' படத்தில் இடம்பெற்றவை. படத்தின் வெற்றிக்கு இந்தப் பாடல்களும் காரணம்.
இந்தக் கதையை 1970-ல் புதுமையாக எழுதி, மிகப்பிரபலமாகக்கூடிய பாடல்களைத் தேடிச் சேர்த்து இப்படத்தின் மூலம் எஸ்.பி. முத்துராமன் என்ற என் நண்பரை இயக்குந ராக்கி மகிழ்ந்தேன். ராஜலட்சுமி என்ற நடிகை யையும், டி.வி.எஸ்.ராஜு என்ற இசையமைப் பாளரையும் அறிமுகம் செய்தேன். பிற்காலத் தில் அகில இந்திய நடிகையாக வலம்வந்த ஸ்ரீதேவி இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திர மாக சக்கைபோடு போட்டார். "கனிமுத்து பாப்பா' படத்தின் வெற்றி, தமிழ்த் திரையுலகில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
அடுத்து "ராஜபார்ட் ரங்கதுரை.' இதில் வந்த பாடல்களைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. சிவாஜி சார், பி.மாதவன், பாலமுருகன், எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ண தாசன்... இந்தக் கூட்டணியின் கடும் உழைப்பி னால் இன்றுவரை பாராட்டப்படும் படம்.
பல வருடங்கள் கழித்து சிவாஜி சாரோடு நான் தனியாக பேசிக்கொண்டிருந்தபோது... "குகா... உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். உனக்கு வாழ்நாள் முழுவதும் பயன்தரக்கூடிய படத்தை பண்ணித்தரவேண்டும் என்றுதான், பாலமுருகனிடம் இந்தக் கதையை உனக்குத் தரச்சொன்னேன். ஆனால் அதைப் புரிஞ்சுக் காம படத்தை யாருக்கோ தாரை வார்த் திட்டியே!' என உருக்கமாகச் சொன்ன போதுதான், நான் அதை சாதாரணமாக விட்டுக்கொடுத்துவிட்டேன் என்பதை உணர்ந்துகொண்டேன். என் முதல் தயாரிப்பு "சுடரும் சூறாவளியும்' படத்தில் ஆறுலட்சம் நஷ்டம். அதில் மூன்று லட்சம் உங்கள் பங்கு, மீதி மூன்று லட்சம் எங்கள் பங்கு' என ஏவி. எம்.மில் கணக்கு காட்டினார்கள். தலையாட்டி விட்டு வந்துவிட்டேன். பின்னர் அடுத்த படம் செய்வதைப் பற்றி அவர்கள் பேசவே இல்லை. கடனையும் கேட்கவில்லை. அந்த நேரத்தில் அண்ணன் சிவாஜி, தானாகக் கூப்பிட்டு கால்ஷீட் தந்து, என்னை தயாரிக்க வைத்த படமே "ராஜபார்ட் ரங்கதுரை.'
அதன் பூஜைக்கு ஏவி.எம். அவர்களை அழைக்கப் போனேன். ஏவி.எம். அவர்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தார். அத்தோடு நின்று விடாமல் என்.எஸ்.சி. ஏரியா நாலேகால் லட்சம், திருச்சி -தஞ்சாவூர் இரண்டேகால் லட்சம், ஓவர்சீஸ் ஒன்றேகால் லட்சம் என விலைபோட்டு வாங்கிக்கொண்டு... "ஸ்டுடி யோ வாடகை, ரெக்கார்டிங், ரீ-ரெக்கார்டிங் தியேட்டர்கள் வாடகை, எடிட்டிங் ரூம் வாடகை எல்லாம் பட ரிலீஸின்போது செலுத்துங்க' என்றார். நானும் மகிழ்ச்சி யோடு ஒப்புக்கொண்டேன். படம் இடையில் தாமதமானது. அதற்கான காரணத்தைச் சொல்லி, யார் மனதையும் காயப்படுத்த நான் விரும்பவில்லை. ஆனால் "ராஜபார்ட் ரங்கதுரை' ரிலீஸ் சமயத்தில் நடந்ததை நான் சொல்லியே ஆகவேண்டும்.
கணக்கெல்லாம் எழுதிய பின் நான் ஏழு லட்சம் கடனாளி என சொல்லப்பட் டது. துடித்துப்போனேன். "சுடரும் சூறா வளியும்' படத்தின் மூன்று லட்சம் கடனும் இதில் சேர்க்கப்பட்டது. முடிவு என்ன? என்று கேட்டேன்.
""உங்கள் இரு வீடு களையும், மற்ற எல்லா உரிமைகளையும் எழுதித் தந்து விட்டு படத்தை வெளியிடுங்கள்'' என்ற னர். ஒப்புக் கொண்டு எல்லாவற்றை யும் எழுதிக் கொடுத்து விட்டு இரவு 12 மணிக்கு படப் பெட்டிகளை அனுப்பி வைத் தேன். பின்னர் பல தெலுங்குப் படங்கள், இந்திப் படங்கள் வேலை செய்து கடன் அடைத்து என் பத்திரங்களை மீட்டேன்.
அப்போதுதான் ஒரு உண் மையைப் படித்தேன். "சுடரும் சூறாவளியும் பட உரிமை 25 வருடங்களுக்குப் பின் என் கைக்கு வரும்' என எழுதியவர் கள்.... "ராஜபார்ட் ரங்கதுரை' படத்திற்கு வெறும் ஐம்பதாயிரம் ரூபாய் மட்டும் விலை என போட்டு, உரிமைகளை எடுத் திருப்பது தெரிந்தது.
அதைத் தெரிந்துகொண்ட சிவாஜி சார் வருத்தப்பட்டது உண்மையே! இதுவரை "ராஜ பார்ட் ரங்கதுரை' படத்திலிருந்து எனக்கு ஒரு பைசாகூட வந்ததில்லை. அந்த வேதனை யில்தான் "வசந்த மாளிகை' படத்தை நான் வாங்கி ரிலீஸ் செய்தேன். ஓரளவு பணமும் லாபமும் அடைந்தேன். கற்றுக் கொண்ட பாடம்... பாசத்தோடு பழகுபவர்களிடம் வியாபாரத் தொடர்பு வைக்காதே! இந்த ஐம்பது வருடங்களில்... வெறும் ஐம்பதாயிரத்துக்கு வாங்கிய படம் எத்தனை லட்சங்களை ஈட்டியிருக்கும்? சிவாஜி சார் சொன்ன வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை எண்ணி தற்போது வருந்துகிறேன். என் படப் பாடலே என் காதுகளில் ஒலிக்கிறது. "அம்மம்மா... தம்பியென்று நம்பி உன்னை வளர்த்தேன்...'
இந்தப் படத்தில் இன் னொரு பாடல் "மதன மாளிகை யில்... மந்திர மாலைகளாம்'. அதன் ரகசியத்தை அடுத்த இதழில் சொல்கிறேன்.
(திரை விரியும்...)
_______________________
மிகப் பிரபலமாக பவனிவந்த என் நாடகத்தின் அந்தக் கால பாடல்....
இன்னும் தமிழன் உறங்குகிறான் -அவன்
எதை எதை எண்ணி மயங்குகிறான்
நிற்பதற்கோ ஒரு நிழல் இல்லை -இவன்
நினைவுகள் துடித்து எழவில்லை
இமயமலையில் கல்லெடுத்தான்
இன்று இவனே சிலைபோல் மாறிவிட்டான்
சமயம் கிடைத்தால் ஒருவரை
ஒருவர் சாப்பிடும் கலையில் தேறிவிட்டான்
சூரியன் வந்தது... சந்திரன் வந்தது
சுடரொளி மட்டும் வரவில்லையே
மேடையில் வீரவசனங்கள் பேசி
விடியலைத் தமிழுக்கு தரவில்லையே!
கதை வசனத்தை நான் எழுத, "வீரபாண்டிய கட்டபொம்மன்', "தங்கப்பதக்கம்' ஆகிய சிவாஜி நாடகங்களை இயக்கிய எஸ்.ஏ.கண்ணன், "எங்கள் தமிழினம் தூங்குவதோ' என்ற என் நாடகத்தை இயக்கினார். பாடல்களை மு.மேத்தா எழுத, சந்திரபோஸ் இசையமைத்தார். ஜெய்கணேஷ், வாசுவிக்ரம், சார்லி, பிரமிளா, "படாபட்' ஜெயலட்சுமி, சக்கரவர்த்தி ஆகியோர் நடித்தனர்.
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட இந்த நாடகத்தை அனைத்துக் கட்சித் தலைவர்களும் பாராட்டினார்கள். இந்த நாடகம் மூலம் வசூலான பணம் மொத்தமும் ஈழப் போராளிகளுக்கு நிதியாக வழங்கப்பட்டது.
-வி.செ.குகநாதன்