cc

(52) கலைஞரின் பாராட்டு மழையில் நனைந்த நான்!

தைச் செய்தாலும் பெரிதாகச் செய்து நல்ல பெயர் வாங்கவேண்டும் என்பது என் பிறவிக்குணம். வெற்றி, தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் களத்தில் இறங்கிவிடுவேன். கடுமையாகவும், உண்மையாகவும் உழைப்பேன். நாலு மாநில திரைப்பட தொழிலாளர்களின் தலைவராக, போட்டியில் வெற்றி பெற்று பதவியேற்றதும் பட்டியல் போட்டு பல காரியங்களைச் செய்ய ஆரம்பித்தேன். அதில் ஒன்று அகில இந்திய திரைப்பட தொழிலாளர் களின் ஒன்பதாவது மாநாட்டை சென்னையில் சிறப்பாக நடத்துவது, அதில் முதல்வர் கலைஞரை அழைத்து பாராட்டு விழா நடத்தி பட்டமளிப்பது. இந்த விழா மூலம் பெப்சிக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும்விதமாக நல்ல காரியம் ஒன்றை செய்யத் திட்டமிட்டேன்.

தொழிலாளர்கள் மாநாட்டில், அது சம்பந்தமான விஷயங்கள் மட்டுமே நடக்க வேண்டும். ஏனெனில் ஒற் ண்ள் ஹ பழ்ஹக்ங் இர்க்ஹ். ஆகவே நந்தனம் பழ்ஹக்ங் ஈங்ய்ற்ழ்ங்இல் மூன்று நாட்கள் தொழிலாளர்கள் மாநாடு காலை ஒன்பதிலிருந்து மாலை ஐந்து மணிவரை நடத்துவது என திட்டமிட்டோம். இந்திய திரைப்பட தொழி லாளர்கள் பெருமளவில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்தனர். பல்லாயிரக்கணக்கில் கலந்துகொள்ளவிருந்தவர்களுக்கு காலை டிபன், மதிய உணவு, மாலை சிற்றுண்டி அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டன.

Advertisment

மாலையில் நேரு உள் விளையாட் டரங்கில் மூன்று நாட்களும் அகில இந்திய கலைஞர் களும் பங்கேற்கும் இயல், இசை, நடனம், நாடகங்கள் நடத்தத் திட்ட மிட்டோம். இரு இடங்கள், அதிலும் இடைவெளி தூரமோ அதிகம். போக்குவரத்து ஏற்பாடுகள், அரசின் போக்குவரத்து துறையினர் உதவியோடு செய்யத் திட்டமிட்டோம். அனைத்து மாநிலங்களிலிருந்தும் வரும் புகழ்பெற்ற கலைஞர்கள் தங்குவதற்கு பெரிய, பெரிய ஓட்டல்களில் அறைகள் புக் பண்ணினோம். பல மொழிகளில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களும் அழைக்கப் பட்டதால் அவர்களுக்கும் வசதிகள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்தந்த மாநிலங்களுக்கு நானும் எங்கள் நிர்வாகிகளும் நேரில் போய் அழைத்தோம். நான் பல மொழிகளிலும் படம் பண்ணியவன். அதனால் பிரபல நடிகர், நடிகையர் மறுப்பு சொல்லாமல் கலந்துகொள்ள சம்மதித்தனர்.

cc

முதல்நாள் கலை நிகழ்ச்சியில் மாண்புமிகு கலைஞருக்கு பாராட்டும், பட்டமளிப்பும் என ஏற்பாடு செய்தோம். இது அனைத்துக்கும் செலவு என்னாகும் என கணக்குப் போட்டுப் பார்த்த தில், குறைந்தபட்சம் மூன்று கோடி அன்றைய தேதியில் தேவைப்பட்டது. நிதிக்குழுவோடு நானும் போவதென முடிவு செய்து கள மிறங்கினேன். முதல்நாள் நிகழ்வை கலைஞர் டி.வி.க்கும், மீதி இரண்டு நாள் நிகழ்வு களையும் சன் தொலைக்காட்சிக்கும் தருவதென முடிவெடுத்து... முதலில் சன் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநரை சந்தித்துப் பேசினேன். பின்னர் கலைஞர் டி.வி.யில் அமிர்தம் ஸார். அவர் என் நீண்ட கால நண்பர். தொடர்ந்து ஆனந்த் சினி சர்வீஸ், பிலிம் சேம்பர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என பலரையும் சந்தித்து நிதி உதவி கேட்டோம். அனைவரையும் காசோலையாக மட்டுமே தரும்படி வற்புறுத்தி பெற்றுக்கொண்டோம். அதுவும் "பெப்சி' பொதுக்குழுவை கூட்டி, அவர்கள் முன்னிலையில் நிதியளிப்பவர்கள் நேரில் வந்து காசோலையை வழங்கச் செய்தோம். பின்னாளில் ஊழல் குற்றச்சாட்டுகள் வராமல் பாதுகாக்க இந்த ஏற்பாடுகள்.

Advertisment

நிதிக்கும் தலைவருக்கும் சம்பந்தமில்லை என்றாலும், பாதுகாப்பு தேவை எனக்கருதி இதனைச் செய்தேன். இது ஒருசில பொறுப்பில் உள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை. சில இடையூறுகளை உருவாக்கி, அதில் குளிர்காயத் திட்டமிட்டனர். நான் உடனே இயக்குநர்கள் சங்க உதவியை நாடி செல்வமணி தலைமையில் ஐம்பது பேர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி... கலை நிகழ்ச்சிகள் பொறுப்பை அவர்களிடம் கொடுத்தேன். பழ்ஹக்ங் ஈங்ய்ற்ழ்ங் தொழிலாளர் மாநாட்டு பொறுப்பை நானும் என் செயற்குழு வும் எடுத்துக்கொண்டோம். இந்த விழாவுக்காக நாலரை கோடிக்கு மேல் வசூலானது. பெப்சி ஒரு பழ்ஹக்ங் இர்க்ஹ்... பணம் சம்பாதிக்க, வரு மானம் ஈட்டும் வியாபாரங்கள் செய்ய அனுமதி கிடையாது. அதனால் சட்ட நுணுக்கங்கள் தெரிந்த ஆடிட்டர், வக்கீல் உதவியுடன் ஒரு பெப்சி அறக்கட்டளை நிறுவினோம். பெப்சி தலைவரான நான் தலைவராகவும், திரு.இராம. நாராயணன், திரு.கே.பாலச்சந்தர் மற்றும் இருபத்து மூன்று சங்க பிரதிநிதிகளும் அறக்கட்டளையில் இடம்பெற்றனர்.

மாநாடு மாபெரும் வெற்றிகண்டது. கலை விழா நடந்த அரங்கத்துக்கு வெளியே, உள்ளே வர முடியாமல் நெருக்கி முண்டியடித்தவர்கள் பல ஆயிரத்தைத் தாண்டி வரலாறு படைத்தது. உள்ளே மேடையில் தலைவர் கலைஞருக்கு ஒவ்வொரு மாநிலத்தவரும் தனித்தனியாகப் பாராட்டி பரிசளித்தனர். இறுதியில் பாராட்டு விழா, பட்டமளிப்பு, தங்கப்பேனா பரிசளிப்பு.

அது முடிந்ததும் கலையுலகப் பிதாமகன் கலைஞர் பேசும்போது... "நான் திருச்சியில், தஞ்சையில், மதுரையில், அண்மைக் கூட்டங் களில் பிற மாநிலங்களில் நமது அரசியல் இயக்கக் கூட்டணிகளை இணைத்து நாம் தேசிய இயக்கமாக மாறவேண்டும் என பேசிவந்தேன். இங்கே தம்பி குகநாதன் கலையுலகத்தினரை ஒன்றுதிரட்டி, தேசிய விழாவாக, வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறார். இந்த தொழிலாளர் களுக்கு வசிக்க இடம், வாழ குடில் கேட்டார் கள். அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டுத் தான் வந்திருக்கிறேன்'' என பாராட்டிப் பேசிய துடன், காப்புரிமைத் திட்டத்தை உதாரணம் காட்டி அதைப்போலவே திரைப்பட தொழி லாளர்களும் வீடு கட்டவும் நிதி உதவிகள் செய்ய ஆவன செய்துள்ளேன்'' என பலத்த கரகோஷத் துக்கிடையே அறிவிப்புகளை வெளியிட்டார்.

இன்று பெப்சியின் ஸ்டுடியோ பையனூரில் படப்பிடிப்புத் தளங்களுடன் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

ரஜினி, விஜய், தாணு, லாரன்ஸ் ஆகியோர் படங்கள் அங்கே படமாகின்றன. விரைவில் நமது இன்றைய முதல்வரும், துணைமுதல்வரும் நிச்சயமாக தொழிலாளர்களுக்கான இல்லங் களையும் கட்டித்தர ஏற்பாடுகள் செய்வார்கள் என நிச்சயமாக நான் நம்புகிறேன்.

(திரை விரியும்)

படம் உதவி: ஞானம்

__________________

அடையாளம் கண்டது நான்... அறிமுகம் செய்தது பாலச்சந்தர்!

ந்தக் காலத்தில் திரைப் படங்கள் பார்க்கவேண்டுமென்றால் தியேட்டருக்குத்தான் போகவேண் டும். நானும், என் உதவியாளர்கள், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் சேர்ந்தே படம் பார்க்கச் செல்வோம். எந்த மொழிப் படமாக இருந்தாலும் புதிய படங்களை உடனே பார்த்துவிடுவது எங்கள் வழக்கம்.

csc

சென்னை அண்ணாசாலை யில் இருந்த சஃபையர் தியேட்டரில் படம் முடிந்து, மேலேயிருந்து ரசிகர்கள் கூட்டம் இறங்கிக் கொண்டிருந்தது. நெரிசலுக்குள் சிக்கவேண்டாமென்று மாடியில் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றோம். நான் கீழே இருந்து கீழ்நோக்கி இறங்கும் ரசிகர்களை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தபோது நல்ல நிறமான, களையான முகத்துடன், அழகான ஒரு வாலிபர் இறங்கிக் கொண்டிருந்தார். அவரை உற்றுப் பார்த்தேன். இவர் நடிகராக வரலாமே என எனக்குள் தோன்றியது.

அதற்குள் அந்த இளைஞர் எங்களைக் கடந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தார். உடனே நான் எஸ்.பி.முத்துராமனிடம் அந்த இளைஞர் பற்றிய அடையாளங் களைக் குறிப்பிட்டு, "அவர்கிட்ட சினிமாவில் நடிக்க விருப்பம் இருக் கான்னு கேட்டுட்டு வாங்க' என்றேன்.

முத்துராமனும் அந்த இளைஞ ரிடம் போய்... "உங்களுக்கு சினிமா வில் நடிக்க விருப்பம் இருக்கா?'' எனக் கேட்க, அதற்கு அவர், "தான் தெலுங்குக்காரர் என்றும், கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பதாகவும், நடிப்பதில் விருப்பம் கிடையாது' என்று சொல்லியிருக்கிறார். உடனே முத்துராமன் நாங்கள் யார்? செய்த படங்கள் என்ன? ஏவி.எம். நிறுவனத் துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் என்பதையெல்லாம் சொல்ல, அந்த இளைஞரோ பதில் சொல்லாமல் கிளம்பி ஆந்திரா போய்விட்டார். தன் நண்பர்களிடம் நடந்தவற்றை அவர் சொல்ல...

"தேடி வந்த நல்ல வாய்ப்பை விட்டுட்டாயே, உன்னை நடிக்கக் கேட்டவங்க, சினிமாவுல பிரபலமான பெரிய ஆட்கள்...' எனச் சொல்ல, அதன்பிறகே அந்த இளைஞர் சினிமா பற்றி சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார். கல்லூரிப் படிப்பை முடித்ததும் சென்னை வந்து எங்களைச் சந்திக்க முயற்சித்திருக்கிறார். சூழ்நிலைகளால் சந்திக்க முடியாமல் போனது. அதன்பின் கே.பாலசந்த ரைச் சந்தித்து, "நூல்வேலி' என்ற படத்தில் நடித்தார்.

பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் என்னைச் சந்தித்தபோது.... இந்த சம்பவங்களையெல்லாம் அந்த இளைஞரே என்னிடம் சொன்னார். பல்வேறு தமிழ்லி தெலுங்கு திரைப்படங்களில் நாங்கள் இணைந்து பணியாற்றினோம். சில கதாபாத்திரங்களுக்கு அவர் சிறப்பாகப் பொருந்துவார். நான் இயக்கிய "மைக்கேல்ராஜ்' படத்திலும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அவர்... பிரபல நடிகர் சரத்பாபு.

-வி.செ.குகநாதன்