சினிமா கொட்டகை! டைரக்டர் -ரைட்டர் வி.சி.குகநாதன் (46)

ss

ck

டந்த அத்தியாயத்தில் பெண்கள் சம்பந்தமாக எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்லியிருந்தேன். அதன்பின் ஒரு இளம் மின்னலால் தாக்கப்பட்டேன் என குறிப்பிட்டு, அதுபற்றிச் சொல்வதாகச் சொல்லியிருந்தேன். இளம் மின்னல் என்னைத் தாக்கிய அனுபவத் தைச் சொல்வதற்கு முன்... உருட்டுக்கட்டையால் நான் தாக்கப்பட்ட கதையைச் சொல்கிறேன்...

காஞ்சி பச்சையப்பன் கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவனாகவும், கால்பந்து அணியின் துணை கேப்டனாகவும், ஸ்போர்ட்ஸில் ஐந்து விளையாட்டுகளில் முதலாவதாக வந்து, கல்லூரியின் அத்லெடிக் சாம்பியனாகவும் இருந்தவன் நான். பல கல்லூரிகளுக்குப் போய் கால்பந்து போட்டிகளில் விளையாடியிருக் கிறோம். சேலம் கல்லூரியில் போய் விளை யாடும்போது, எதிர் கல்லூரி வீரர் எங்கள் சென்டர் பார்வேர்டு வீரரை பூட்ஸ் காலால் முழங்காலில் ஏறி மிதித்து காயப்படுத்தினார். வலியால் கதறவைத்தார். இது எங்கள் வீரர்களுக்கு சற்று அச்சத்தை உண்டாக்கியது. நமக்கு காயம் பட்டுவிடக்கூடாது என்ற உணர்வோடு... சற்று அமைதியாக, பாதுகாப்பாக விளையாட ஆரம்பித்தனர். இந்தப் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த மாணவர்களும், பொதுமக்களும் வெறிபிடித்தவர்கள்போல் அந்தக் கல்லூரி டீமை ஆதரிக்கும்விதமாக பாட்டு, நடனம், மேள தாளம் என பட்டை யைக் கிளப்பினர். எனக்கோ எல்லாமே தப்பாட்டமாகப் பட்டது. எங்கள் கேப்ட னிடமும் கோச்சிடமும் அனுமதி பெற்று ஃபுல் பேக் இடத்திலிருந்து ரைட் விங் ஃபார்வேர்டு இடத்துக்கு மாறி மேலே ஏறி விளையாடினேன். நானும் பூட்ஸ் அணிந்து ஆடுபவன்... சரியான தருணம் பார்த்

ck

டந்த அத்தியாயத்தில் பெண்கள் சம்பந்தமாக எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்லியிருந்தேன். அதன்பின் ஒரு இளம் மின்னலால் தாக்கப்பட்டேன் என குறிப்பிட்டு, அதுபற்றிச் சொல்வதாகச் சொல்லியிருந்தேன். இளம் மின்னல் என்னைத் தாக்கிய அனுபவத் தைச் சொல்வதற்கு முன்... உருட்டுக்கட்டையால் நான் தாக்கப்பட்ட கதையைச் சொல்கிறேன்...

காஞ்சி பச்சையப்பன் கல்லூரி கிரிக்கெட் அணித் தலைவனாகவும், கால்பந்து அணியின் துணை கேப்டனாகவும், ஸ்போர்ட்ஸில் ஐந்து விளையாட்டுகளில் முதலாவதாக வந்து, கல்லூரியின் அத்லெடிக் சாம்பியனாகவும் இருந்தவன் நான். பல கல்லூரிகளுக்குப் போய் கால்பந்து போட்டிகளில் விளையாடியிருக் கிறோம். சேலம் கல்லூரியில் போய் விளை யாடும்போது, எதிர் கல்லூரி வீரர் எங்கள் சென்டர் பார்வேர்டு வீரரை பூட்ஸ் காலால் முழங்காலில் ஏறி மிதித்து காயப்படுத்தினார். வலியால் கதறவைத்தார். இது எங்கள் வீரர்களுக்கு சற்று அச்சத்தை உண்டாக்கியது. நமக்கு காயம் பட்டுவிடக்கூடாது என்ற உணர்வோடு... சற்று அமைதியாக, பாதுகாப்பாக விளையாட ஆரம்பித்தனர். இந்தப் போட்டியை பார்த்துக்கொண்டிருந்த மாணவர்களும், பொதுமக்களும் வெறிபிடித்தவர்கள்போல் அந்தக் கல்லூரி டீமை ஆதரிக்கும்விதமாக பாட்டு, நடனம், மேள தாளம் என பட்டை யைக் கிளப்பினர். எனக்கோ எல்லாமே தப்பாட்டமாகப் பட்டது. எங்கள் கேப்ட னிடமும் கோச்சிடமும் அனுமதி பெற்று ஃபுல் பேக் இடத்திலிருந்து ரைட் விங் ஃபார்வேர்டு இடத்துக்கு மாறி மேலே ஏறி விளையாடினேன். நானும் பூட்ஸ் அணிந்து ஆடுபவன்... சரியான தருணம் பார்த்து எங்கள் வீரரைத் தாக்கிய மாணவரை பூட்ஸ் காலால் முழங்காலில் எட்டி உதைத்தேன். அவ்வளவு வெறி. அவர் சுருண்டு விழுந்தார். அந்தக் கல்லூரி மாணவர்கள் கொதித்தெழுந்து கத்த ஆரம்பித்தனர். அத்தோடு நிறுத்தாமல் ஆட்டம் முடிந்ததும் என்னைத் தாக்கத் திட்டமிட்டனர். இது அந்தக் கல்லூரி கோச் மூலம் எங்கள் கோச்சுக்கு தெரியவந்ததும், ஆட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே இருவரும் என்னை தந்திரமாக மைதானத்தை விட்டு வெளியே வரவழைத்து... ஸ்போர்ட்ஸ் சாமான்கள் வைக்கும் அறைக்குள் தள்ளி வெளியே பூட்டிவிட்டார்கள். நான் தப்பி ஓடிவிட்டதாக சொல்லிவிட்டனர். மாணவர்கள் விடுவதாக இல்லை. திரும்பிப் போக ரயில்வே ஸ்டேஷன் வந்துதானே ஆகவேண்டும் என அங்கே போய்விட்டனர். கோச், என்னிடம் வந்து "நாம சேலம் ஜங்ஷன்ல போய் ரயில் ஏறவேண்டாம், அடுத்த ஸ்டேஷனில் ஏறலாம்'' எனச் சொல்லி என்னை ஒரு குதிரைவண்டியில் ஏற்றி அடுத்த ஸ்டேஷன் அழைத்துப்போனார். எப்படியோ தப்பித்தோம், பிழைத்தோம் என ரயிலில் ஏறி புறப்பட்டோம்.

cc

இதற்குள் நான் உட்பட சிலபேர் போற வழியிலே திருத்தணி போய்விட்டுப் போகலாம் என முடிவுபண்ணி அதற்கான பயணத் தை ஜோலார்பேட்டையிலிருந்து பஸ்ஸில் தொடர்ந்தோம். வழியில் நம்ம பசங்க பஸ் கண்டக்டருடன் மோதி அவரை தாக்கிவிட... அவர் வேறு பஸ் கண்டக்டர் மூலம் ரகசியமாக சேதியை நமக் குத் தெரியாமல் சொல்லி அனுப்பி விட்டார். திருத்தணியில் பஸ் வந்ததும் நாலைந்து பேர் கோப மாக உள்ளே ஏறி... எங்களைத் தவிர மற்ற பயணிகளை இறக்கி விட்டு சற்று நேரம் கழித்து எங்க ளை ஒவ்வொருவராக இறங்கச் சொல்லி... இறங்க இறங்க உருட் டுக் கட்டையால் பல கண்டக்டர் கள் சேர்ந்து அடிக்க ஆரம்பித் தனர். என் டர்ன் வந்ததும் இறங்கி சட்டென முகத்தை கைகளால் மூடி அடிப்பவர் முன் குனிந்து அமைதியாக நின்றேன் அவர்கள், வடிவேலு காமெடி போல இவன் நல்லவனாக இருக்கான்னு சொல்லி, நாலு அடியோட விட்டு விட்டார்கள். வலி குணமாக ஒரு வாரத்துக்கு மேலானது. நான் ஏன் எதிர்க்காது அடி வாங்கினேன் என்றால், சேலத் திலே சிக்கியிருந்தால் என்ன நடந்திருக்குமோ...? இது பரவா யில்லை என எண்ணினேன். ஆனால் பல சண்டைகளில் நான் ஈடுபட்டிருக்கிறேன். ஆனால் அடி வாங்கியது திருத்தணி பஸ் ஸ்டாண்டில்தான். அந்த கால்பந்து அணியில் விளையாடிய ரங்கனா தன் என்ற மாணவர் பின்னாளில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பதவியேற்று சென்னையில் பணி யாற்றினார். நான் சந்தித்துப் பேசியதுண்டு. அதேபோல் காஞ்சி காமாட்சி கோயிலுக்குப் போயிருந்தபோது ஒரு குரல் "குகநாதா... எப்படியிருக்கே?' எனக் கேட்க, அம்மனுக்கு அர்ச்சனை செய்யும் அய்யர், "என்ன, என்னைத் தெரியலையா? உங்ககூட கல்லூரியிலே கிரிக்கெட் விளையாடினவனப்பா'' என்றார். எனக்கு அடையாளம் தெரியவில்லை. ஆனால் அவர் காமாட்சி அம்மன் கோயில் தலைமைப் பூசாரியாக இருந்தார்.

காஞ்சி எனக்கு பல விஷயங்களை கற்றுத் தந்ததை மறக்க முடியாது. அதனால்தானோ என்னவோ "காஞ்சியிலே நான் படித்தேன் நேற்று' என்ற எம்.ஜி.ஆர். பாடலை நான் அடிக்கடி முணுமுணுப்பது உண்டு.

என்னை இளம் மின்னல் தாக்கிய விஷயத்துக்கு வருகிறேன்...

(திரை விரியும்...)

படம் உதவி: ஞானம்

______________________

இப்படிச் சொன்னால் தப்பாயிடுமோ?

cc

நான் அறிமுகப்படுத்தப் பட்ட முதல் படம் "புதிய பூமி.' அதன் நாயகன் முதல்வரானார். நாயகியும் முதல்வர். அதில் நடித்த திருச்சி சவுந்தரராஜன் அமைச்சரானார். திரைக்கதை எழுதிய நான் அகில இந்திய திரைப்பட தொழிலாளர் மாமன்ற செயலாளர் ஆனேன். வசனம் எழுதிய எஸ்.எஸ்.தென்னரசு, கழகத்தின் மாவட்டச் செயலாளர் ஆனார். பாடல்கள் எழுதிய கண்ண தாசன் அரச சபை கவிஞரானார். அந்தப் படத்தை இரவுக் காட்சி பார்க்க சைக்கிளில் போய் போலீ சில் மாட்டிக்கொண்ட எம்.ஜி. ஆர். ரசிகர் ஸ்டாலின் இன்று முதல்வராகியிருக்கிறார்.

அதேபோல் என் முதல் தெலுங்குப் படம் ஏவி.எம்.மின் "சிட்டி செல்லலு.' அதன் நாயகன் என்.டி.ராமாராவ் ஆந்திர முதல்வ ரானார். என் "சங்கர்ஷா' நாய கன் சிரஞ்சீவி மத்திய அரசின் அமைச்சர். என் "கொண்டப்பள்ளி ரத்தய்யா' தாசரி நாராயணராவ் மத்திய அமைச்சர் ஆனார். கிருஷ்ணம்ராஜு மத்திய அமைச் சர். என் "காவல் நிலையம்' நாயகன் சுரேஷ்கோபி மத்திய அமைச்சர். என்னோடு கல்லூரி யில் படித்த சாத்தையா (தமிழ் குடிமகன்) சபாநாயகர் -அமைச் சர், துரைமுருகன் அமைச்சர். எனக்கு பாட்டெழுதிய காளி முத்து அமைச்சர். ஈழப் போராட்டத்தில் என் அமைப்பில் பங்கேற்ற தொல். திருமா, சுப.வீர பாண்டியன், வேல் முருகன் போன்றோர் தனிக் கட்சித் தலைவர்கள். பட்டியல் வெகுநீளம்.

ஒரு நிகழ்ச்சியை நான் கோடிட்டு குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறேன். ஜெயலலிதா எதிர்க் கட்சித் தலைவியாக இருந்த காலத்தில்... நான், தமிழர் பாது காப்பு இயக்கத்தின் பொருளா ளராக செயல்பட்டுவந்தேன். இந்த இயக்கம் குறுகிய காலத்தில் பெருவளர்ச்சி கண்டது. தமிழர் நலன் காப்பதில் களப்பணி ஆற்றி யது. அந்த சமயத்தில் நான் எழுதிய பல கட்டுரைகளைத் தொகுப்பாக்கி, "பேனா என் ஆயு தம்' என்ற நூலாக பிரசுரித்தேன். பல தமிழ் ஆர்வலர்களை, அரசியல் தலைவர்களை அழைத்து விழா எடுத்து வெளியிட்டேன். மறுநாள் காலை பத்திரிகையில் முதல் பக்கத்தில், எட்டுகாலம் செய்தி யாக "பேனா என் ஆயுதம்' என்னும் நூல் வெளியீடு பற்றிய செய்தி வந்திருந்தது. இதை மிகக் கடுமையாக விமர்சித்து ஜெயலலிதா அறிக்கை கொடுத்திருந்தார்.

"பேனா என்பது ஆங்கில வார்த்தை. ஆயு தம் என்பதும் அசல் தமிழ் வார்த்தை அல்ல. ஒரு தமிழ்ப் போராளி "பேனா என் ஆயுதம்' என்ற நூலை எழுதியுள் ளார். அதை பல தமிழ் அறிஞர்கள் வெளியிடுகிறார்கள்'' என மிகக் கடுமையாக சாடியிருந்தார்.

அந்தப் பேட்டி முதலில் எனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தினாலும், சிந்தித்துப் பார்த்தபோது. அவர் தனக் கிருந்த பல அரசியல் பணிகளுக் கிடையில் என் நூலைப் பற்றி கவனித்திருக்கிறார். ஏதோ ஒருவிதத்தில் அதில் பங்கேற்க அவர் மனம் விரும்பியிருக்கிறது. ஆகவே, தவறை சுட்டிக்காட்டி தன் பங்களிப்பை செய்திருக் கிறார். முன்புபோல் தொலை பேசியில் பேசக்கூடிய தூரத்தில் நான் இருந்திருந்தால் அவர் நிச்சயம் போனில் கேட்டிருப்பார். நான் ஈழப்போராளிகளுக்கு ஆதரவாகக் களம் இறங்கி, வேறு பாதையில் வெகுதூரம் பயணித்துவிட்டேன். அவரும் நட்பு, வளர்ப்பு மகன் என்று பல பந்தங்களுக்குள் சிக்கி... வேறு பாதையில் பயணமாகிக் கொண்டிருந்தார்.

-வி.சி.குகநாதன்

nkn181224
இதையும் படியுங்கள்
Subscribe