cc

(42) கல்யாண பரிசு க்ளைமாக்ஸ்!

ன் தந்தை வழியில் புங்குடு தீவில் பிறந்த என் மாமா வித்வான் ஆறுமுகம் தமிழில் பெரும்புலமை பெற்றவர். புங்குடு தீவு, கண்ணகி அம்மன் கோவிலருகே 1960களிலேயே ஒரு பெரும் மாநாடு போல "சிலப்பதிகார விழா' நடத்தியவர். அந்த விழாவுக்கு சிறுவனான என்னையும் அழைத்துச் சென்றார் மாமா. அந்த விழாவில்தான் மூன்று பெரும் அறிஞர்களின் பேச்சைக் கேட்டேன். நான் சிறுவனாக இருந்தபோதும் அவர்கள் பேசியது என்னை வியப்பில் ஆழ்த்தியது.

அந்த மூன்று தமிழறிஞர்கள்...

Advertisment

"ம.பொ.சி.' என பெரும் புகழ்பெற்ற ம.பொ.சிவஞானம் அவர்கள், சென்ற இடமெல்லாம் சிலப்பதிகார பெருமை பேசி "சிலம்புச் செல்வர்' எனக் கொண்டாடப்பட்டவர். கி.வா.ஜகன்னாதன், தமிழுக்கு பல அற்புத படைப்புகளை ஆய்ந்து தந்தவர்.

பேராசிரியர் அ.ஞானசம்பந்தம், கம்பராமாயணத்தை ஆய்ந்துபல படைப்புகளைத் தந்தவர்.

ம.பொ.சி. அவர்களின் பேச்சைக் கேட்டு அதிசயித்துப்போன எனக்கு... அவர் யார்? கி.வா.ஜகன்னாதன் யார்?, பேராசிரியர் அ.ஞானசம்பந்தன் யார்? என்ற விவரங்கள் அப்போது தெரியாது. தாய்நாட்டுக்கு வந்த பின்னர்தான்... அவர்களின் சாதனைகள், தமிழ்மொழிக்கு அவர்கள் ஆற்றிய அரிய தொண்டு, அவர்களின் அரிய படைப்புகள் பற்றி தெரிந்துகொண்டேன். எவ்வளவு உயரத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தேன்.

Advertisment

அதேபோல் யாழ்ப்பாண பகுதிக்கு வந்த கிருபானந்த வாரியார் என் தாய்மாமா ராஜசுந்தரம் வீட்டுக்கு வருவார். எங்கள் குடும்பத்து இலுப்பைத்தாள் முருகன் கோவிலில் பிரசங்கம் செய்வார். அதைத் தவறாமல் கேட்பேன். வெவ்வேறு கோவில்களிலும் அவர் கதாகாலாட் சேபம் பண்ணுவார். அங்கெல்லாம் தவறாது போய் பிரசங்கம் கேட்பேன். அதேபோல் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் நாதஸ்வர கச்சேரி எங்கு நடந்தாலும் தவறாது ஆஜராகிவிடுவேன்.

தமிழ்நாட்டிலிருந்து என்.எஸ்.கே. நாடக மன்றம், டி.கே.எஸ். நாடக மன்றம் போன்ற பிரபல நாடக மன்றங்கள் வந்து நடத்தும் அனைத்து நாடகங்களையும் தவறாது பார்த்துவிடுவேன். இதையெல்லாம் கவனித்துவந்த என் தந்தையார், தன்னோடு ஆசிரியராக பணியாற்றிய இலக்கிய எழுத்தாளர் குரும்பசிட்டி கனக.செந்தில் நாதனிடம் என்னை ஒப்படைத்து, இலக்கியம் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார். அவரும் அருமையாக கற்றுக்கொடுத்தார்.

அதன்பின் நான் எழுதிய முதல் கட்டுரை "துஞ்சலும் இலர்'. இது பிரசுர மானது... நல்ல வரவேற்பும் பெற்றது. இந்த காலகட்டத்தில்தான் என் கவனம் முழுவதும் திரைப்படங் கள் பக்கம் திரும்பியது. நான் நேசித்த தமிழை மலைக் கள்ளன், "மதுரைவீரன்', "பராசக்தி', "நாடோடி மன்னன்', "மந்திரி குமாரி' போன்ற பல படங்களில் வசனங்களாகவும், பாடல் களாகவும் கேட்டு மகிழ்ந்தேன்.

ss

இதே காலகட்டத்தில் என் தந்தையார் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். நகரமன்றத் தலைவரானார். எனக்குள்ளும் சிவப்பு சிந்தனைகள் பிறக்க ஆரம்பித்த நேரம். "ரத்தக் கறை' என்ற நாடகத்தை எழுதி நடித்து, ஒரு கலைஞனாகவும் பிரபலமானேன். என்னோடு பழகியவர்கள் பசுபதி, இராசையா, பொன்னன், பூதன், அப்பாக்குட்டி... இப்படி இன, மத, ஜாதி துவேஷமில்லாமல் பலர் இருந்தனர். தொப்பி இராசையா, சங்கிலி ராசய்யா, சிவராசா ஆறுமுகம் பிள்ளை, பழனி... இப்படி பல நண்பர்கள் எனக்கு. என்னைத் தொடர்ந்து பல நண்பர்கள் எம்.ஜி.ஆர். ரசிகர்களானார்கள்.

என் உறவினர்களில் தேவா, ஞானேஸ்வரன் இருவரும் என் நெருங்கிய நண்பர்களானார் கள். தில்லைநாதன், சுத்தானந்தன், தியாகு, சாத்திரியார் மகன் சுந்தரலிங்கம், ஷண்முகராஜா, வெவ்வேறு ஊர்களிலிருந்து என் நாடகத்தில் நடிக்க வந்த நாடக நடிகர்கள் என பல நூறு நண்பர்கள் உருவானார்கள். இது இப்படியே தொடர்ந்தால் என் படிப்பு பாழாகி விடுமே என்பதற்காக என்னை படிக்க கொழும்புக்கு அனுப்பி வைத்தார்கள். என் அத்தை கற்பகம், மாமா செல்லத்துரை அவர் கள் வீடு கொளுப்பிட்டியில் காலியாக இருந்தது. அங்கு என் சித்தப்பா ஒருவர் தங்கியிருந்தார். அங்கு எனக்குத் தனியாக ஒரு அறை தரப்பட் டது. சகல வசதிகளும் செய்து தரப்பட்டன. அருகில் ஒரு சலூன் கடை. அதை நடத்திய மூவரும் தஞ்சாவூர்க்காரர்கள். அவர்களின் நண்பனானேன் நான். அவர்களிடம் பேசுவது, அவர்களுக்கு வரும் தமிழ்நாட்டு பத்திரிகை களை படிப்பது... இவைதான் எனக்குத் திரை யுலகம், தமிழ்நாட்டு அரசியல், தமிழக பூகோள அமைப்பு இவை பற்றியெல்லாம் புரியவைத்தது. இவர்களோடு பல படங்களைப் பார்த்திருக் கிறேன். அப்போதுதான் எஸ்.எஸ். சந்திரன், திரைநீதி ssசெல்வம், திரைக்கலை ஏ.எஸ்.மணவைத்தம்பி ஆகியோரின் பழக்கமும் ஏற்பட்டது. இந்த சலூன் கடைக்கு அருகே ஸ்ரீதர் என்ற ஒரு மலையாளி மெஸ் ஒன்றை நடத்தி வந்தார். இந்த சலூன்கடை நண்பர்கள் என்னை பலவந்தப்படுத்தி அங்கே சாப்பிட அழைத்துப்போனார்கள். அந்த சாப்பாடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாளடைவில் ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது அங்கு சாப்பிட ஆரம்பித்தேன். அவ்வளவு ருசி... அந்த சமையல். இந்த சலூனும், அந்த மெஸ் சாப்பாடும், பார்த்த படங்களும்தான் நான் இந்தியா செல்லவேண்டும் என்ற எண்ணத்தை அதிகமாகத் தூண்டிவிட்டன.

ஒருநாள் வெள்ளவத்தை "நாவல ஹால்'-இல் நான் படித் துக்கொண்டிருந்தபோது... மாலைநேர வகுப்பு ரத்து செய்யப்பட்டது. சற்றுத் தொலைவில் பிளாசா தியேட்டர். அங்கே "கல்யாணப் பரிசு' படம் ஓடிக்கொண்டிருந்தது. ஏற்கனவே இரண்டு தடவைகள் பார்த்துவிட் டேன். அந்தப் படம் என்னைக் கவர்ந்த படம். இயக்குநர் ஸ்ரீதரின் "தேன் நிலவு' நான் பார்த்திருக் கிறேன். ஆனால் "கல்யா ணப் பரிசு' வேற லெவல். அந்த கடைசிக் காட்சி... காதலின் உச்சம். மூன்றா வது தடவை பார்க்கப் போயிருந்தேன். 'To learn cinema in those days... is to see more number of cinemas...' இதுவே எனக்குத் தெரிந்த ஒரே தாரக மந்திரம். ஆகவே அன்று மாலைக் காட்சிக்கு பிளாசாவில் நான் ஆஜர். படத்தை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென படம் நிறுத்தப்பட்டது. விளக்குகள் போடப்பட்டன.

மேடையில் மூவர் தோன்றினார்கள். ஜெமினிகணேசன், இயக்குநர் ஸ்ரீதர், சரோஜா தேவி. இது நான் சிறிதும் எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி. ஆனால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. "ஒரு தொழில் ரகசியத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். "கல்யாணப் பரிசு' கதையில் அக்கா விஜயகுமாரி, தையல் வேலை செய்து தங்கை சரோஜாதேவி யை கல்லூரியில் படிக்க வைக்கிறார். அதனால் தாய், தந்தையற்ற சரோஜாதேவிக்கு அக்கா மேல் அளவற்ற மரியாதையும் பாசமும். அவர் கல்லூரியில் ஜெமினிகணேசனை காதலிக்கிறார். இந்த பெண்களின் வீட்டு மாடி காலியாகவே... ஜெமினிகணேசன் அங்கே வாடகைக்கு வரு கிறார். இது சரோஜாதேவி காதலை வளர்க்க மிகவும் உதவுகிறது. ஆனால் இவர்களுக்குத் தெரியாமலே அக்கா விஜயகுமாரி, ஜெமினி கணேசன் மேல் ஒருதலைக் காதலை வளர்த்து வருகிறாள். இதைத் தெரிந்துகொள்ளும்போது சரோஜாதேவி இடிந்துபோகிறார். பலத்த சிந்தனைக்குப் பின்... தன் அக்காளுக்காக தன் காதலை தியாகம் செய்ய முடிவெடுக்கிறாள். அந்த முடிவோடு ஜெமினிகணேசனிடம் பேச வருகிறார். எப்படிப் பேசினாள்...

"பாஸ்கர், நான் தங்களை திருமணம் செய்வது முடியாத காரியம் ஆகிவிட்டது. ஆனால் அதற்காக நீங்கள் திருமணம் செய்யாமல் இருந்துவிட முடியாது. யாரோ ஒருத்தியை திருமணம் செய்துதானே ஆகணும். அந்த யாரோ ஒருத்தியாக ஏன் என் அக்கா இருக்கக்கூடாது?'' என யாசிக்கிறாள்... அவன் சம்மதிக்கிறான்.

"அப்படி என்றால் அவன் காதல் உண்மையில்லையா?'

அவன் என்ன சொல்லியிருக்க வேண்டும்? "நீ உன் அக்காளுக்காக உன் காதலை தியாகம் பண்ண நினைக்கிறாய். நான் யாருக்காக என் காதலை தியாகம்பண்ண வேண்டும்... முடியாது' என்றுதானே சொல்லவேண்டும்... ஏன் சொல்லவில்லை?

''Without coincidences no story can be weaven.''

(திரை விரியும்...)

படம் உதவி: ஞானம்