(40) தொப்புள்கொடி பந்தம்!
ஈழத் தமிழர்களுக்கும், இந்தியத் தமிழர்களுக்கும் இருக்கும் உறவை, இன்றைய தமிழ் உணர்வாளர்கள் சுருக்கமாக தொப்புள்கொடி உறவு என்று பறைசாற்றி வருவது பாராட்டுதற்குரியது. விபரம் புரியாத பல அரசியல் பிரமுகர்கள், பிழைக்கப் போன தேசத்தில் தனிநாடு கேட்டுப் போராடு வது என்ன நியாயம்? என்று என்னிடம் கேட்டிருக்கிறார்கள். தமிழனின் தனிநாடாக இருந்த ஈழமணித் திருநாடு சிங்களர் கைக்குப் போனது எப்படி என வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். அதை விளக்குவதல்ல என் நோக்கம்.
"முரசொலி' பத்திரிகையின் பவளவிழாவில் நடிகர் கமல் பேசும்போது ரத்தினச் சுருக்கமாக "சிந்து நதியின் இந்தப்பக்கம் முழுமையாகப் பரவியிருந்த திராவிடம் தெற்கே "டிகாக்ஷன்' போல் ஒதுங்கியிருப்பதை'ப் பற்றிச் சொன்னாரல்லவா? அதேபோல் ஈழத்தை முழுமையாக ஆண்ட தமிழர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்குள் கரை ஒதுக்கப்பட்டனர்.
அரசியல்ரீதியாக ஒடுக்கப்பட்ட தமிழர் களின் நியாயமான உரிமைக் குரல்தான் இங்கே திராவிட நாடு போராட்டம்; அங்கே தனிஈழம் கோரும் போராட்டம். இழந்ததை மீட்டெடுக் கப் போராடுவது பிரிவினைவாதம் ஆகாது.
என்னையும் என் குடும்பத்தையும், என் மூதாதையர்களையும் உதாரணம் காட்டி தொப்புள்கொடி உறவு என்பது மெய் என்பதை புரிய வைப்பதே என் இந்த எழுத்துக்கான முதல் நோக்கமாகும். இடையிலே நுழைக்கப்பட்ட ஈழத்து அகதிகள் என்ற வாசகம் அடியோடு அகற்றப்பட வேண்டும் என்பது என் வேண்டுகோளாகும். தாய்வீட்டுக்கு வந்தவனை நாய் போல் கூண்டுக்குள் அடைத்து வைப்பதும், பசிக்கு உணவளிக்கும்போது அகதி என்று அடையாளம் காட்டுவதும் பண்பாடற்ற செயலாகாதா? என் முன்னோர்களான சேரனும், சோழனும், பாண்டியனும் ஆண்டுகொண்டிருந் தால் எனக்கிந்த நிலை வருமா? என ஈழத் தமிழர்கள் எண்ண வாய்ப்பு ஏற்படுகிறதல்லவா?
ஐம்பது ஆண்டுகளாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள திராவிடக் கட்சியை கட்டி எழுப்பிய பேரறிஞர் அண்ணாவின் கல்லூரிப் படிப்புக்கு உதவிசெய்த பச்சையப்பன் கல்லூரி முதல்வர் சின்னத்தம்பிப் பிள்ளை ஈழத்தமிழர் என்பதை வரலாறு மறந்துவிடுமா? மறந்து விடாமலிருக்க அண்ணா அவர்களே, அதனை தன் நூலில் பதிவு செய்துள்ளாரே? மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஆட்சியிலிருந்தபோது நன்றிக்கடனாக சின்னத்தம்பிப் பிள்ளை வாரிசுக்கு அரசு தரப்பில் உதவி நல்கியிருக்காரே? தயாரிப்பாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர் அமிர்தம் அவர்கள் அண்ணா பற்றி தயாரித்த குறும்படத்தில் இதனை காட்சியாகவே பதிவு செய்துள்ளாரே? அந்த சின்னத்தம்பி பிள்ளை என் தாயின் மாமா என்பதும் எனக்குத் தாத்தா என்பதும் என் தொப்புள் கொடி உறவென்ற வாதத்தை உறுதி செய்யாதா?
நான் அறிந்தவரை 1852ஆம் ஆண்டில் தமிழ் ஈழத்தை சேர்ந்த கல்வியாளர்களான வேலுப்பிள்ளை, தாமோதரம் பிள்ளை ஆகிய ஈழத் தமிழர்கள் இருவரும் உயர்கல்வி கற்பதற் காக தமிழகம் வந்து சென்னை புரசைவாக்கம் வெள்ளாளத் தெருவில் பக்கத்து பக்கத்து வீட்டில் தங்கினர். தாமோதரம் பிள்ளை யும், அவரின் ஆசிரியர் சுதுமலை விஸ்வ நாதம் பிள்ளையும் சென்னை பல்கலைக் கழகத்தில் முதல் பட்டதாரிகளானார்கள்.
பல்கலைக்கழகத்தின் செனட் அறையில் தாமோதரம் பிள்ளையின் படம் வைக்கப்பட்டிருந்ததே இதற்கான சான்று. அதன்பின் அவர் சட்டம் பயின்று புதுக்கோட்டை சமஸ்தானத் தில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார். வேலுப் பிள்ளை அவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்து இந்தியக் கல்வித் துறையில் ஒய்ள்ல்ங்ஸ்ரீற்ர்ழ் ர்ச் நஸ்ரீட்ர்ர்ப்ள் ஆகப் பணியாற்றினார். பின்னர் சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரியின் முதல்வராகப் பொறுப் பேற்று, ஓய்வு பெறும்வரை அப்பொறுப்பில் இருந்தார். வேலுப்பிள்ளை அவர்களின் இளைய புதல்வி தங்கம்மாவை தாயகத்துக்கு படிக்க வந்த எங்கள் மூதாதையரில் ஒருவரான சபாபதிப் பிள்ளை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தினால் அவர்கள் தன் அண்ணன் மகனை மூன்று வயதிலேயே தத்தெடுத்து வளர்த்தனர். இந்தக் குழந்தைதான் பிற்காலத்தில் பெரும் புகழ்பெற்ற ஞழ்ஹற்ர்ழ் நன்க்ஷழ்ஹம்ஹய்ண்ஹம். இவர் எனக்கு உறவுமுறையில் ஒரு தாத்தா.
என் தாயாரின் அம்மா பெயரும் தங்கம்மா. அவர்களின் உடன்பிறந்த அண்ணன் வஜ்ரவேலு சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்து உயர் போலீஸ் அதிகாரி யானார். சிவகங்கை, ராமநாதபுரம், ஸ்ரீவில்லிப் புத்தூர் பகுதிகளில் பெரும் பேரோடும் புகழோடும் பணியாற்றியவர். இவரது படம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத் திலும், ராமநாதபுரம் ராஜாவின் அரண்மனை யிலும் இருப்பதை நானே பார்த்திருக்கிறேன். இவர் எனக்கு மிகவும் பிடித்த தாத்தா. இவரது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அனைவரும் சென்னையில் டாக்டர்களாக, உயர் கல்வி யாளர்களாக இருக்கிறார்கள். அவரது மகளான லீலாவதி சண்முகம் நல்ல கல்வியாளர். ங.ஈ.ப.ங பள்ளியின் முதல்வராக பணி யாற்றியவர். அவரது மகன் ரவி வெளிநாட்டில் பெரும் தொழிலதிபராக விளங்குகிறார். என் தாத்தாவின் இன்னொரு மகள் கோமுஅன்ரி அவர் கள், சின்னத்தம்பி பிள்ளையின் தம்பி கல்யாணசுந்தரம் பிள்ளையை மணந்து கொண்டார். இவர்களின் மூன்று புதல்விகளும் டாக்டர்களாகப் பணியாற்றுகிறார்கள்.
வேலுப்பிள்ளையின் மகன் -திவான் பகதூர் மாசிலாமணிப் பிள்ளை என் தாயாருக்கு தாத்தா முறை. சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றியவர். சென்னையிலும் சுற்றுப்புறங்களிலும் தர்மகாரியங்களுக்காக பெரிதும் அறியப்பட்டவர். பச்சையப்பன் அறக் கட்டளையின் செயலாளராகப் பல ஆண்டுகள் பதவிவகித்தவர். பாரிஸ் கார்னரில் இருந்த பச்சையப்பன் கல்லூரியின் பெருவளர்ச்சிக்கும், அது சேத்துப்பட்டுக்கு இடமாற்றம் ஆவதற்கும் காரணமாக இருந்தவர். இவரின் படம் பச்சையப்பன் கல்லூரியில் தற்போதும் இருக்கிறது. இவர் டாக்டர் லட்சுமண சுவாமி முதலியாரின் நெருங்கிய நண்பர். நீண்ட காலமாக சுகுண விலாஸ் சபாவுக்கு தலைவராக இருந்தவர். இவரை நாடி சட்டசபை சபாநாயகர் பதவி வந்தபோது ஜாதிய அரசியலை விரும்பாத காரணத்தால், அந்தப் பதவியை நிராகரித்தார். முத்தையா செட்டியார் அவர்கள் உயர்நிலைப் பள்ளியின் நிர்வாகியாகப் பணியாற்றினார். சூனாம்பேட்டை ஜமீன் மற்றும் பல ஜமீன் களின் அறங்காவலராக இருந்தார். புரசை கங்கா தீஸ்வரர் ஆலயத்தின் தலைமை அறக்கட்டளை நிர்வாகியாக இருந்தார். திருமுல்லைவாயிலில் மாசிலாமணி கோயிலைக் கட்டியவர் இவரே! அந்தப் பகுதியில் ஐநூறு ஏக்கர் நிலம் இவருக்குச் சொந்தமானதாக இருந்தது. கொடைக்கானலில் இரண்டு பங்களாக்கள் இருந்தன. புரசையில் மூன்று பங்களாக்கள் இருந்தன. உறவினர்கள் பலரின் உயர்வுக்கு இவர் காரணமாயிருந்தார். இவரைப் போலவே என் பெரியம்மா ராஜ ராஜேஸ்வரி அவர்களின் மகன் ராஜசிங்கமும் உறவினர்களுக்கு உதவுவதில் மிகுந்த அக்கறை காட்டியவர்.
இதேபோல் ஈழத்தில் என் அம்மாவின் தம்பி ஏ.கே.நேசரட்னம்... இலங்கை அரசின் உயர் பதவியில் ஒன்றான நன்ல்ங்ழ் ஆன்க்ண்ற்ர்ழ் ஏங்ய்ங்ழ்ஹப் பதவியை வகித்தவர். சிங்களம் படிக்க மறுத்து வேலையை ராஜினாமா செய்தவர். இவரும் தம் உறவினர்களை உயர்த்திவிடும் ஏணியாக வாழ்ந்தவர். பல பெரிய பதவிகளை வகித்தவர். இவரது மகள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்து அமெரிக்காவிலேயே வாழ்ந்து வருகிறார்.
அடுத்து என் தந்தை வழியில் புங்குடு தீவில் பிறந்த எனது மாமா வித்துவான் ஆறுமுகம். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து வித்துவான் பட்டம் பெற்றவர். தமிழில் பெரும்புலமை பெற்ற கல்லூரிப் பேராசிரியர். புங்குடு தீவு கண்ணகியம்மன் கோயிலருகே 1960 களிலேயே பெரும் மகாநாடு போல் சிலப்பதிகார விழா நடத்தியவர். திருவாளர்கள் ம.பொ.சி., அ.ஞானசம்பந்தன், கி.வா.ஜகந்நாதன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். இலங்கையில் இவர்தான் கம்பன் கழகத்தை முதன்முதலில் நிறுவி விழாக்களை தொடர்ந்து நடத்தியவர். இவரது மாணவர்தான் இன்று இந்தியாவிலும் கம்பன் கழகங்களில் புகழோடு விளங்கும் இலங்கை ஜெயராஜ்.
இன்னிசை வேந்தர் எனப் புகழப்படும் கனடாவாழ் கர்நாடக சங்கீத வித்துவான் சுந்தரலிங்கம் உலகத் தமிழரிடையே பெரும் புகழ்பெற்றவர். இவர் புங்குடு தீவிலுள்ள என் பெரியப்பாவின் மகன். நான் பச்சையப்பன் கல்லூரியில் படித்த காலத்தில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்தவர். சமகாலத்தில் இவரோடு படித்தவர் சீர்காழி கோவிந்தராஜன். சுந்தரலிங்கம் பல சென்னை சபாக்களில் கச்சேரி பண்ணியுள்ளார். என் ஈழத்து உறவுகள் பலர் உலகளாவிய பெரும் புகழோடு வாழ்கிறார்கள். இங்கும் சரி, அங்கும் சரி என் தொப்புள் கொடி உறவுகள் தமிழோடும், கலையோடும், தர்ம சிந்தனையோடும் வாழ்ந்தார்கள்... வாழ்கிறார்கள்.
இந்த தொப்புள் கொடி உறவு, உப்புக் கடல்நீரால் பிரிக்கப்பட்டாலும், இன்பத் தமிழால் இணைக்கப்பட்டவர்கள் நாங்கள். அரசுகளும், சட்டங்களும், எல்லைகளும் என்றும் எம்மைப் பிரிக்காது. ஆன்மாவும் உடலும் போல் ஈழமும் தமிழகமும் இணைந்தே இருப்பவை.
ஒரு விஷயத்தை எண்ணி, இரவில் அண்ணன் எம்.ஜி.ஆர் சமாதி முன்பு அழுதுகொண்டிருந்தேன். உடனடியாக கைமேல் பலன் கிடைத்தது.
என்னை சிலிர்க்க வைத்த அனுபவம்...
(திரை விரியும்)