1

(38) ஆரம்ப காலத்தில் என்னை நாடி வந்த பதவிகள்!

பல படங்களையும், சில நாடகங்களை யும் எழுதுவதோடு தயாரிப்பிலும் ஓய்வற்று உழைத்துக்கொண்டு, ஏவி.எம்.கதை இலாகா விலும் நான் பணியாற்றி வந்த காலத்திலே என் வண்டியை நானே ஓட்டிப்போவதே வழக்கம். கம்பெனி கார்களை என் டிரைவர்கள் ஓட்டு வார்கள். எனது கம்பெனியில் 60 திரைப்படப் பணியாளர்களுக்கு 69, 70, 71, 72-ஆம் ஆண்டுகளில் மாதச் சம்பளம் கொடுத்து அவர்களை வேலைக்கு அமர்த்தியிருந்தேன்.

வருடத்திற்கு 3 படங்கள் தவறாது எடுப்போம். அந்த சமயத்தில் ஒருநாள் வடபழனி கோயில் அருகே என் வண்டி வரும்போது எதிர் திசையிலிருந்து ஒரு வண்டி வந்து வழிமறித்தது. அதில் நாலைந்து பேர் அமர்ந்திருந்தனர். முன்சீட்டிலிருந்து இறங்கிய மோகன் காந்திராமன் அவர்கள் கையிலே ஒரு மாலை இருந்தது. அதை எடுத்துக்கொண்டு என் காரை நோக்கி வந்தார்.

Advertisment

"என்ன சார்'' என கேட்டபடி நான் காரிலிருந்து இறங்குகிறேன். அப்போது அவர் தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவராக இருந்தார். "போட்டியின்றி உங்களை இயக்குநர் சங்க துணைத் தலைவராக பொதுக்குழுவில் தேர்ந்தெடுத்துள்ளார்கள்'' என்று சொல்லி கடகடவென்று என் கழுத்திலே மாலையைப் போட்டார். உடன் வந்தவர்கள் கை தட்டி வாழ்த்து தெரிவித்தார்கள்.

மோகன் காந்திராமன் அவர்களை நான் நன்கு அறிவேன். அவர் இயக்குநர் ப.நீலகண்டன் அவர்களிடம் நெடுங்காலமாக இணை இயக்குநராக பணியாற்றியவர். கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா அவர்களின் உறவினர்... நாகர்கோயில்காரர். தொழிலாளர்கள் மீது அதிக அக்கறை கொண்டவர். அதனால் மறுக்க முடியாமல், மாலையை பெற்றுக்கொண்டு, அவர்கள் சொன்னபடி அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டேன், ஒப்புக்கொண்டேன்.

1970ல் நான் தயாரிப்பாளர் ஆனதும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் உறுப்பினரானேன். தயாரிப்பாளர்களுக்கென்று அன்று இருந்த ஒரே அமைப்பு அதுதான். தென்னிந்திய நான்கு மொழிப் படங்களும் சென்னையிலே தயாராகிவந்த காலகட்டம். அப்போதே செல்ப் ரெகுலேஷன் கமிட்டி என்று சேம்பரில் 10 பேர் கொண்ட மேற்பார் வைக் குழு ஒன்றை அமைத்தார்கள். அதில் என்னையும் தேர்வு செய்திருந்தனர். அந்தக் கமிட்டியினுடைய தலைவராக திரு.ஏவி.எம். செட்டியார் அவர்கள் நியமிக்கப்பட்டார். இந்த திரைப்பட வர்த்தக சபை அதன்பிறகு இரண் டாக உடைந்தது. தயாரிப் பாளர்கள் கில்டு என்ற தயா ரிப்பாளர்கள் அமைப்பு ஒன்று புதிதாக உருவானது. இது தெலுங்கு தயாரிப்பாளர்களின் முன்னெடுப்புகளினால்தான் உருவானது. அதற்கான கார ணம் என்னவென்று தெரி யுமா? தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தன்னிகரற்ற தலைவராக திரு.ஏ.எல்.சீனி வாசன் அவர்கள் தொடர்ந்து தேர்தலிலே வெற்றிபெற்று வந்தார். தெலுங்கு தயாரிப் பாளர்கள் டி.வி.எஸ். ராஜு... நடிகர் கிருஷ்ணாவுடைய அண்ணன் இவர்களெல்லாம் போட்டியிட்டு இவரிடம் தோற்றுப்போயிருக்கிறார்கள். இதனால் அவர்கள், தமிழில் ஏழு ஆண்டுகளாக இவர் தலைவராக இருக்கிறார்... இது இப்படி யோ போனால் தங்களுடைய வளர்ச்சி பாதிக்கப் படும் என்று நினைத்து போட்டியாக புது சங்கத்தை ஆரம்பித்தனர். பின்னர் கொஞ்ச காலத்திற்குப் பிறகு சமாதானமாகப் பேசி பெரிய தெலுங்கு தயாரிப்பாளர்கள் எல்லாம் அந்த சேம்பரில் இணைந்தார்கள்.

Advertisment

ss

ஆனால் வாக்களிக்கும் முறையிலே ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தார்கள். தேர் தலிலே வாக்களிக்க உறுப்பினர்கள் நேரடியாக வரவேண்டிய அவசியம் இல்லை, ப்ராக்ஸி... அதாவது ப்ராக்ஸி முறையென்றால், கையெழுத் துப் போட்டு தயாரிப்பாளர் கொடுத்துவிட்டால் போதும், அந்தக் கடிதத்தை வைத்துக்கொண்டு வேறொருவர் அந்த ஓட்டைப் போடலாம். இன் னொரு தயாரிப்பாளர் அந்த ஓட்டையும் சேர்த் துப் போடலாம். இது வந்த பின்னால் என்ன நடந்திருக்கும், என்ன நடக்கும் என்பதை நான் உங்களுக்குச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. தற்போது யோசனைபண்ணிப் பாருங் கள். ஆந்திராவில் தனி சேம்பர் இருக்கிறது, கேரளாவில் தனி சேம்பர் இருக்கிறது, கர்நாட காவில் தனி சேம்பர் இருக்கிறது. அவையெல் லாம் உருவாகி மிகச்சிறப்பாக நிறைந்த பண வசதியோடு நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் இன்னமும் தென்னிந் திய திரைப்பட வர்த்தக சபை பல கோடி சொத்துக்களுடன் செயல்பட்டு வருகிறது.

தமிழ் சேம்பர் என்று ஒன்று கிடையாது. அதனால் அந்த நாட்களில் கேரள தயாரிப்பாள ரான கே.ஆர்.ஜி. அவர்கள், "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்' ஒன்றினை இன்னும் நாலுபேரோடு சேர்ந்து ஆரம்பித்து அது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் தற்போதும் நன்றாக நடந்துகொண்டி ருக்கிறது. திரு. ராம.நாராயணன் அவர்களுடைய மகன், என்னுடைய இளையவர் முரளி ராமசாமி அவர்கள் அதன் தலைவராக இருக்கிறார். அது தற்போதும் நன்றாக நடக்கிறது. இதுவும் தற்போது இரண்டாக உடைந்து "நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்' என்று இன்னொரு சங்கம் உருவாகி, அதுவும் போட்டியில் நடந்துகொண்டிருக் கிறது. அது இப்போது நடந்துகொண்டிருக் கின்ற கதை.

இது அவசியம் தமிழ்ச் சமுதாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம். அரசியல் இதற்குள் புதைத்து கிடக்கிறது. பல உண்மைகள் இதற்குள் மறைக்கப்பட்டிருக்கின்றன. இந்த சேம்பருக்கு அந்த இடத்தை வாங்குவதற்கு முதலிலே சேலம் டி.ஆர்.சுந்தரம் சார்தான் 5000 ரூபாய் கொடுத்திருந்தார். அதன்பிறகு தமிழ் தயாரிப்பாளர்கள் ஜெமினி வாசன், ஏவி.எம். இவர்களெல்லாம் பணம் கொடுத்தார்கள். மவுண்ட் ரோட்டில் அந்த இடத்தை வாங்குவதற்கு கேரள தயாரிப்பாளர்கள் கொடுத்த மொத்த பணம் எவ்வளவு தெரியுமா? ஆயிரத்து நூத்துச் சொச்ச ரூபாய். அதே மாதிரி கன்னட தயாரிப் பாளர்கள் கொடுத்தது எழுநூற்றுச் சொச்ச ரூபாய். தமிழ் தயாரிப்பாளர் கள் அந்த இடத்தை வாங்கி, நான்கு மொழிகளிலும் படங்கள் சென்னை யில்தான் தயாராகிக்கொண்டிருந்தன. அதனால் எல்லோரும் சேர்ந்து சேம்பரை உருவாக்கினார்கள். அந்த சேம்பர் நன்றாக நடந்துகொண்டி ருந்தது. தற்போது எல்லாமே குளறுபடியாகி, பிரிவினைகள் அதிகமாகி கில்டு 1, நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்று ஒன்று, நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் என்று ஒன்று, பழைய விநியோகஸ் தர்கள் சங்கம் என்று ஒன்று, பழைய சேம்பர் என்று ஒன்று... அவங்க தெலுங்கு புரொடியூசர்ஸ அதிகமா சேர்த்துட் டாங்க. அதனால அங்க எப்பவுமே அவங்க விரும்புறவங்க மட்டுமே தலைவரா வர முடியும், செயலாளரா வரமுடியும். இப்போ கட்டிடங்கள் எல்லாம் கட்டியிருக்கிறார் கள். பல வருடங்களாகத் தொடர்ந்து கல் யாணம் என்பவர் தலைவராக இருக்கிறார்.

இதிலெல்லாம் கேள்வி கேட்க வேண்டும் என்கிற அவசியம் எனக் கில்லை. ஆனால் நான் சொல்ல விரும்புவ தெல்லாம்... அந்த சங்கங்களெல்லாம் அப் போது அரசியலில் ஈடுபடாமல் தனியாக தயாரிப்பாளர்கள் சங்கங்களாகத்தான் இருந்தன. அவையெல்லாம் இப்போது பிரிந்து ஒரு அரசியல் கட்சிகள் மாதிரியே அங்கேயும் சில விஷயங்கள் நடக்கின்றன. அது மாற்றப்பட வேண்டிய ஒரு விஷயம். இதைப்பற்றியெல்லாம் பின்னால் எழுதுகிறேன்.

(திரை விரியும்...)

______________

சிவாஜி சார் அட்வைஸ்!

"எங்கம்மா மகராசி' என்ற பெயரில் ஜெய்சங்கர், ஸ்ரீப்ரியா, எம்.எம். ராஜம் என பலரை வைத்து பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு படம்... ஆரம்ப பூஜை, ஷூட்டிங். புதிதாக ஒரு ஒளிப்பதி வாளரை அறிமுகம் செய்ய நினைத்து அவரோடு ஆரம்பித்தேன். முதல் ஷாட்டே டிராலி ஸ்டாண்டில் ஏரிபிளிக்ஸ் கேமரா வைத்து சற்று வித்தியாசமாகத் திட்டமிட்டேன். புதிய ஒளிப்பதி வாளரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு செயலில் இறங்கி னார். பத்திரிகையாளர்கள், நண்பர்கள் என பெருங்கூட் டம். பக்கத்து செட்டில் படப்பிடிப்பிலிருந்த சிவாஜி சாரும் என் புதுப்படம் என்பதால் பூஜைக்கு வந்தார். முதல் ஷாட்... டிராலியில் ஸ்டாண்டில் இருந்த ஏரிபிளிக்ஸ் கேமரா தள்ளிக்கொண்டு போகும்போது ஒளிப்பதிவாளர் தடுமாறி கேமராவை விட்டுவிட... அதன் ஸ்டேண்ட் ஓடி கீழே விழ... நெகட்டிவ் 400 அடிகள் மேகஸின் உடன் விழுந்து திறந்து கொண்டது. நான் திகைத்து நின்றவர்களை சமாதானப் படுத்தி... புது மேகஸின் (கருப்பு பெட்டி) வரவழைத்து ஷூட்டிங்கை தொடர்ந்தேன்.

மதியம் சாப்பாட்டு நேரம். சிவாஜி சார் என்னை மேக்கப் அறைக்கு அழைப்பதாக வந்து சென்னார்கள். உடனே நான் ஓடிப்போனேன். "குகா... கேமரா விழுந்த தோ, 400 அடி ஃபிலிம் வீணானதோ பிரச்சினை இல்லை. ஆனால் கேமராவை விழாமல் பிடித்துக்கொள்ளத் தெரி யாத ஒருவரை வச்சு படத்தை முடிக்கிறது நடக்கிற காரி யமா? கொஞ்சநாளைக்கு இதை நிறுத்தி வச்சுட்டு, அப்புறமா வேற ஒளிப்பதிவாளரை வச்சு செய்யிறது நல்லதுன்னு எனக்குப் படுது''ன்னு சொன்னாரு. நானும் இரண்டு நாள் படப்பிடிப்போடு அந்தப் படத்தை நிறுத்தி விட்டேன். அந்த ஒளிப்பதிவாளருக்கு அதன் பின்னால் இரண்டு படங்கள் கொடுத்தேன். இன்று வரை அவர் பிரபலமடையவும் இல்லை... படங்கள் அதிகமாக செய்யவும் இல்லை.

-வி.சி.குகநாதன்