ck

(36) நஷ்டம்... ஆனாலும் இஷ்டம்!

நான் தயாரிப்பாளர் ஆனதே... எதிர்பாராமல் நடந்ததுதான். என் னைப் படம் தயாரிக்கச் சொல்லி ஊக்கமும், உதவியும் செய்ததே ஏவி.எம்.மெய்யப்பன் அப்பச்சிதான். எனது படத்தை உருவாக்கும் யூனிட்டினர் பெயர்களை எழுதும் போதே, என் இனிய நண்பர் எஸ்.பி.முத்துராமன்தான் இயக்க வேண்டும் என விரும்பி அவ ருடைய பெயரையும் எழுதி அப்பச்சியிடம் கொடுத்தேன். லிஸ்ட்டைப் பார்த்தவர் எஸ்.பி.முத்து ராமன் பெயரை அடித்துவிட்டு, "வேற டைரக்டர் பேர் சொல்லுங்க'' என்றார். நான் நொடிப்பொழுதும் தாமதிக்காமல் "புட்டண்ணா கனஹல்' என்றேன். திகைப்பும், வியப்புமாய் என் முகத்தைப் பார்த்த அப்பச்சி, "அவரைத் தெரியுமா?'' என்று கேட்டார்.

"பழக்கமில்லை, ஆனா அவரோட எல்லா கன்னடப் படங்களையும் பார்த்திருக்கிறேன்'' என்றேன்.

Advertisment

புட்டண்ணாவை வைத்து தமிழில் படம்பண்ண விரும்பியிருக்கிறார் அப்பச்சி. தோது அமையவில்லை. அவருக்கு "உயர்ந்த மனிதன்', "பூவா தலையா?' உட்பட சில படங் களைக் காட்டி, தெலுங்கு அல்லது கன்னடத் தில் அந்தப் படங்களில் ஒன்றை இயக்கித் தரும்படி கேட்டிருக்கிறார். அந்தளவுக்கு புட்டண்ணாவின் இயக்கும் திறமை மீது அப்பச்சிக்கு மதிப்பு. ஆனால் அப்பச்சி போட் டுக் காட்டிய படங்கள், புட்டண்ணாவுக்குப் பிடிக்கவில்லை. அதன்பின், பரிசுபெற்ற குறுநாவலான "சிலிர்ப்பு' கதையின் உரிமையைப் பெற்றுக் கொடுக்க, அந்தக் கதை புட்டண்ணா வுக்கு மிகவும் பிடித்துப்போனது.

நாதஸ்வர கச்சேரியை நம்பி வாழும் ஒரு குடும்பத்தின் கதை அது. அதனால் "நாதஸ்வர கலைஞர்கள் வாழும் பகுதியில் குறைஞ்சது ஆறு மாசமாவது தங்கியிருந்து, அவங்களோட பழக்க வழக்கங்களை முழுமையாக தெரிஞ்சுக் கிட்ட பின்னாடிதான் என்னால "சிலிர்ப்பு' கதை யை இயக்க முடியும்'' எனச் சொல்லிவிட்டார். அதனால் புட்டண்ணாவை தமிழுக்கு அழைத்து வரும் அந்த முயற்சியும் கைகூடவில்லை.

"உங்களை நான் தயாரிப்பாளராக்குறேன். நீங்க கதை சொல்லி அவரை சம்மதிக்க வச்சிட்டா... உடனே ஷூட்டிங் கிளம்பலாம்'' என்றார் ஏவி.எம்.

Advertisment

நான் சம்மதித்தேன்.

உடனே தொலைபேசி வாயிலாக புட்டண்ணாவை தொடர்புகொண்டு பேசினார் ஏவி.எம்.

மைசூர், தாசப்பிரகாஷ் ஓட்டலில் தங்கி யிருந்த புட்டண்ணாவை, உடனடியாக சென் னையிலிருந்து காரில் கிளம்பிப் போய் ஏவி.எம். கொடுத்த கடிதத்துடன் சந்தித்தேன். புட்டண் ணாவின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அதே ஓட்டலில் எனக்கு அறை ஒதுக்கப்பட்டு, "எப்போது கதை கேட் பாரோ?' என்கிற எதிர்பார்ப்புடன் தங்கியிருந் தேன். ஐந்து நாட்கள் கழித்து, அதிகாலை நாலரை மணிக்கு கதவு தட்டும் சத்தம்... திறந் தேன். புட்டண்ணா கனஹல் புன்சிரிப்புடன் உள்ளே வந்தார். கதையைச் சொல்லச் சொன்னார். சொல்ல ஆரம்பித்தேன்.

நான் கதை சொல்ல ஆரம்பித்ததும் கண் களை மூடிக்கொண்டார். கதை சொல்லும் போது கேட்பவரின் கண்களைப் பார்த்தபடி கதை சொல்வது எனது வழக்கம். புட்டண்ணா கண்களை மூடிக்கொண்டது சற்று சங்கடமாக இருந்தாலும், கதையின் முதல் பாகத்தைச் சொல்லி முடித்து, "இந்த இடத்தில் இடை வேளை'' என்றேன்.

அவர் கண்களைத் திறந்து பார்த்து, "மீதிக்கதையை பின்னர் கேட்கிறேன். கதை பிடித்துவிட்டது. எப்போது ஷூட்டிங் என்பது பற்றி ஏவி.எம்.மிடம் பேசுகிறேன் என்று சொல்லிவிடுங்கள்'' எனச் சொல்லிவிட்டு ஷூட்டிங் கிளம்பினார். நான் துள்ளிக் குதித்தேன். அப்பச்சியிடம் விஷயத்தைச் சொன்னதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.

ck

புட்டண்ணாவிடம் நான் சொன்ன கதை என்ன? என்ன படம் அது?

ஜெமினிகணேசனின் மனைவி இறந்துவிட மகனையும், மகளையும் வசதி குறைந்தாலும் அன்புக்குப் பஞ்சமின்றி வளர்க்கிறார். தனியார் வங்கி ஊழியரான ஜெமினி, மற்றவர்களின் கையெழுத்தை அச்சு அசலாக போடும் திறமையுள்ளவர். இதை எம்.ஆர்.ஆர்.வாசு தெரிந்துகொண்டு... ஜெமினிக்கு ஆசைகாட்டி பிறர் காசோலைகளைத் திருடி... அந்த சொந்தக்காரர் போல் கையொப்பமிட வைத்து பணம் சம்பாதித்து, அதில் ஒரு பங்கை ஜெமினிக்கு கொடுப்பார்.

ஒருதடவை வங்கியில் ஒருவரின் செக்கை மாற்ற முயற்சிக்கும்போது கையும் களவுமாக பிடிபடு கிறார். போலீஸ் வருவதற்குள் தப்பி ஓடிய ஜெமினி, தன் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வேறு மாநிலம் போய்விட ரயிலேறுகிறார். ஒரு ஸ்டேஷனில் தண்ணீர் பிடிக்க இறங்கிய ஜெமினியை போலீஸ் சுற்றிவளைத்து பிடித்து கையில் விலங்கு மாட்டுகிறது. அதற்குள் ரயில் போய்விடுகிறது. வேறு ஊரில் குழந்தைகள் இறங்கி அப்பாவைத் தேடுகின்றனர். தங்கை ஜெயாவை எந்தத் துன்ப மும் நெருங்காமல் அண்ணன் முத்துராமன் வளர்க்கிறார். ஜெயிலிலிருந்து விடுதலையான ஜெமினியை காத்திருந்து எம்.ஆர்.ஆர்.வாசு கூட்டிப்போய் கள்ள நோட்டை வங்கியிலேயே மாற்றும் தொழிலில் ஈடுபடுத்துகிறான்.

இதற்குள் முத்துராமன், தான் வேலை செய்யும் பண்ணையின் முதலாளியம்மாவின் மகனை தன் தங்கைக்கு கட்டிவைக்கிறார். அவன் படித்தவன் என்பதால், பட்டணத்தில் ஒரு வங்கியில் கேஷியர் வேலை கிடைக்கிறது. தான் வேலையில் சேர்ந்த பின் ஒரு வீடு பார்த்து ஏற்பாடுகளை செய்துவிட்டு, பின்னர் வந்து மனைவியை கூட்டிப்போவதாக சொல்லிவிட்டுப் போகிறார் புதுமாப்பிள்ளை. அதே வங்கியில் நோட்டு மாத்த வந்த ஜெமினி, கேஷியரை தங்கள் இருப்பிடம் அழைத்துப்போய் தங்கள் நோட்டு மாற்றும் தொழிலில் பங்கு தருவதாகச் சொல்ல... மறுத்துப் போராடுகிறார் புது மாப் பிள்ளை. அவன் தப்பிப் போய் விட்டால் தாங்கள் மாட்டிக் கொள்வோமே என்ற பயத்தில் பாட்டிலால், தன் மாப்பிள் ளைதான் "கேஷியர்' என்பது தெரியாமல் அடித்துவிட... அவன் இறந்து விடுகிறான். பட்ட ணத்துக்கு அழைக்கப் பட்ட முத்துராமன் வங்கிக்கு வர... வங்கி மேனேஜர், முத்துராமனை மார்ச்சுவரிக்கு அழைத்துப்போய் மாப்பிள்ளை உடலைக் காட்ட, கத்திக் கதறுகிறார் முத்துராமன். தங்கைக்கு விஷயம் தெரிந்தால் அவள் நிச்சயம் இறந்துவிடுவாள் என்பது முத்துராமனுக்குத் தெரியும். அதனால் மாப்பிள்ளைக்கான ஈமக் கிரியைகளை பட்டணத்திலேயே முடித்துவிட்டு ஊருக்கு வருகிறான். அங்கே தங்கை கர்ப்பம் என்பது தெரியவருகிறது. முத்துராமன் அதிர்ச்சிகளை மனதுக்குள் புதைத்துக்கொண்டு... பிறக்கப்போகும் குழந்தை மேல் தங்கை உயிரை வைக்கவேண்டும்... அந்த பிள்ளைமேல் பாசத்தை உருவாக்கி மெதுமெதுவாக கணவன் மேல் உள்ள அன்பை மறக்க வைக்கும் திட்டத்தோடு முத்துராமன் போராடுகிறார்.

பட்டணத்தில் கேஷியர் கொலைக்கு ஜெமினியே காரணமெனத் தெரிந்து அவரை போலீஸ் தேடுகிறது. அவர் பட்டணத்திலிருந்து தப்பி ஓடி இதே ஊரில் சேருகிறார். மகள் மயங்கிக் கிடக்கும் அப்பாவை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். வீட்டுக்கு வந்த பின்னர் தான் அவருக்கு அது தன் மகள் என்பதும், தான்தான் அவளை விதவையாக்கிவிட்டதும் தெரிகிறது. ஆனால் மகள் உண்மை தெரியாமல் சுமங்கலியாக அண்ணனால் வளர்க்கப்படுவது புரிகிறது.

அண்ணனின் போராட்டம் வென்றதா? தந்தையின் செயல் மகளுக்குத் தெரிந்ததா? மனப் போராட்டடங்களை மையமாக்கி... உணர்வு பூர்வமான கதாபாத்திரங்களை உருவாக்கி... மனதை உருக்கி எடுக்கும் காட்சிகளை அற்புத மாகப் படமாக்கி மிக மிக வித்தியாசமான முறை யில் திரைக்கதை அமைத்து என் முதல் தயாரிப்பான "சுடரும் சூறாவளியும்' படத் தை புட்டண்ணா கனகல் அவர்கள் இயக்கியுள்ளார். அத்தனை பாடல்களும் கண்ணதாசன் அவர்கள் எழுத, எம்.எஸ். வி. அவர்கள் இசையமைத்து பெரும் வெற்றி பெற்றன. அதில் "அன்பு வந்தது என்னை ஆள வந்தது' என்ற பாடல் படத்தில் மூன்று இடங் களில் வரும். இன்றும் அந்தப் பாடல் பலரால் விரும்பப்பட்டு... யூடியூபில் முன்வரிசையில் இருக்கிறது. ஜெயா சந்திரமோகன் என்ற இளம் ஜோடியை இப்படத்தில் அறிமுகப்படுத்தி னோம். இப்படத்தின் முதல் பிரதியை அதி காலையில் பார்த்த ஏவி.எம். அவர்கள், கண்கள் கலங்கிபடி வெளியே வந்து... புட்டண்ணா அவர்களை மனதார பாராட்டியதோடு, "உடனடியாக அடுத்த படத்தை ஆரம்பியுங்கள்' என்று சொன்னதோடு, புதுமுகம் ஜெயாவுக்கு முதலில் ஒரு தனி கார்டு டைட்டிலில் போடச் சொன்னார்... போட்டோம்.

cck

அந்த நேரத்தில் படத்தை விலைபேச பல விநியோகஸ்தர்கள் என்னை அணுகியிருந்தார் கள். ஆனால் அப்பச்சி அவர்கள் என்னைத் தனி யாக அழைத்து, "இப்படத்தை நாம் விற்கவேண் டாம்... நாமே ரிலீஸ் பண்ணினால் பெரும் பணம் கிடைக்கும்' எனச் சொன்னார். நானும் சம்மதித்தேன். பெரிய அளவில் விளம்பரங்கள் செய்தோம். பெருத்த எதிர்பார்ப்போடு ரிலீஸ் செய்தோம். படம் சுமாராகவே ஓடியது. நானும் முத்துôமனும் படம் ஓடிய எல்லா ஊர்களுக்கும் போனோம். மனம் உடைந்த நிலை எனக்கு. இருப்பினும் ஊரிலிருந்து திரும்பியதும் அப்பச்சியைப் போய் பார்த்தேன். அவர் எனக்கு ஆறுதல் சொன்ன பாங்கு இப்போது நினைத்தாலும் கண்கள் கலங்குகின்றன.

புட்டண்ணா அவர்கள் அடுத்த படத்தை இயக்க மறுத்துவிட்டார். எவ்வளவு நொந்து போயிருந்தால் அவ்வளவு பிடிவாதமாக ஏவி.எம். படத்தை இயக்க மறுத்திருப்பார். அண்மைக் காலத்தில் யூடியூபில் படத்தைப் பார்த்த பலர் பாராட்டுகிறார்கள். "இது எழுபது களில் எடுத்த படமாகத் தெரியவில்லை' எனச் சொல்கிறார்கள். படம் நன்றாகவே இருந்தது... ஆனால் பெருவெற்றியை ஈட்டாதது கவலையே!

இப்படத்தின் தயாரிப்பின்போது ஏற்பட்ட பல சிக்கல்களும், சுவாரஸ்யங்களும், தேர்வுக்கு வந்த இன்றைய பல பிரபலங்கள் பற்றியும் பின்னால் எழுதுகிறேன்.

(திரை விரியும்...)

படம் உதவி: ஞானம்