cc

(34) மூதறிஞர் ராஜாஜியின் கவலை!

1962. பேரறிஞர் அண்ணா அவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட் டத்துக்கு மூதறிஞர் ராஜாஜி அவர்கள் காஞ்சிபுரம் வந்திருந்தார். மேடை யிலே அவரும் அண்ணாவும் அருகருகே அமர்ந்திருந்த கண்கொள்ளா காட்சியை, அன்று நான் பார்த்தது என்றும் என் நினைவிலே இருக்கும்.

அன்றைய கூட்டத்தில் அண்ணா அவர்கள் ராஜாஜி அவர்களுக்கு முன்னால் பேசினார்.

Advertisment

பற்று வேறு, பிடிவாதம் வேறு என்பதை ஒரு சிறு கதையோடு விளக்கிச் சொல்லி, "தற் போது தேச விடுதலைக் காகப் போராடிய காங்கிரஸ் இல்லை. கெட்டுப்போன காங்கிரஸ்தான் இருக்கிறது. ஆகவே அதற்குப் பிடிவாதமாக ஓட்டுப் போனால், ஓட்டு போட்டால் தேசம் கெட்டுவிடும். மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லி, நான் இன்று சுருக்கமாக என் பேச்சை முடிக்கிறேன் என்றார், பேரறிஞர் சொன்னார்... மூதறிஞர் ராஜாஜி அவர்கள் உங்களிடம் நிறைய நேரம் பேசவேண்டும்' என தன்னுரையை முடித்துக் கொண்டார்.

அன்றுதான் நான் முதன்முதலாக மூதறிஞர் ராஜாஜி அவர்களுடைய பேச்சைக் கேட்டேன். ஆனால், அதற்கு முன்பாக அவர் எழுதிய "வியாசர் விருந்து' நூலை பல தடவைகள் விரும்பிப் படித்திருக்கிறேன். ராஜாஜி அவர்கள் எழுதி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பாடிய "குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா... குறையொன்றும் இல்லை கண்ணா... குறையொன்றும் இல்லை கோவிந்தா' எனக்கு மிகவும் பிடித்த பாடல். தமிழ்நாட்டில் பிறந்து இந்திய நாட்டில் முதல் கவர்னராக இருந்தவர் ராஜாஜி அவர்கள். நல்ல அறிவாற்றல் பெற்றவர். அவரை எனக்குப் பிடிக்கும்.

சென்னையில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது, ராமாயணத்தை வியாசர் விருந்தாக எழுதியவர். மகாபாரதத்தை ராஜாஜி அவர்கள் எழுதிவருகிறார் என்பதையும் நான் அறிந்தேன். அவரைப் பார்த்து பேசவேண்டும் என்ற ஆவல் ஏனோ என்னுள் இருந்தது. என்னோடு நாடகங்களிலே நடித்த ஒரு ஆசிரியர்... அவர் பிராமணர். தான் அடிக்கடி ராஜாஜி அவர்களை சந்திப்பதாக என்னிடம் சொன்னார். ஒரு தடவை என்னையும் கூட்டிப் போகும்படி நான் அவரிடம் கேட்டேன். அவர் சம்மதித்து, ஒருநாள் என்னை பசுல்லா ரோட்டில் இருந்த ராஜாஜி அவர்கள் வீட்டுக்கு அழைத்துப் போனார்.

Advertisment

cc

மாடியில் ஏகப்பட்ட புத்தகங்கள் அலமாரியிலும், மேஜைகளிலும், தரையிலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ராஜாஜி அவர்கள் ஒரு மூலையிலே போடப்பட்டிருந்த சிறு மேஜை முன்னால் அமர்ந்து எதையோ எழுதிக்கொண்டிருந்தார்.

என்னோடு வந்த ஆசிரியர் தன் தோளிலிருந்த துண்டை எடுத்து இடுப்பிலே கட்டிக்கொண்டு சாஷ்டாங்கமாக ஏதோ மந்திரத்தை முனகியபடியே ராஜாஜி அவர்களுடைய காலிலே விழுந்தார். அவர் ஏதோ சொல்லி அவரை ஆசிர்வாதம் பண்ணினார்.

பின்னர் ஆசிரியர் என்னை, மூதறிஞர் ராஜாஜி அவர்களுக்கு அறிமுகம் செய்தார். நான் கைகூப்பி வணங்கினேன். பின்னர் "வியாசர் விருந்தில்' நான் மிகவும் ரசித்த பகுதிகளைச் சொன்னபோது, அவர் என்னை ஆச்சரியமாக ஏற இறங்கப் பார்த்தார்.

பேச்சு அவர் எழுதிக்கொண்டிருக்கும் மகாபாரதம் நூல் பற்றி திரும்பியது.

நான் அவரிடம்... ""மகாபாரதத்தில் ஏதா வது மாறுதல் இருக்குமா? இல்லை அப்படியே அதற்கு விளக்கவுரை எழுதுகிறீர்களா?'' என்னு கேட்டேன்.

அப்போது அவர் சொன்னதுதான் எனக்கு மாபெரும் அதிசயமாக இருந்தது.

"மகாபாரதத்தில் ஒவ்வொரு எபிசோடுக்குப் பின்னாலும் அந்தப் பகுதி, அந்த எபிசோடு எதற்காக நடந்தது? அதனுடைய நோக்கம் என்ன? அதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய தர்மம் எது? என்பதனை ராஜாஜி அவர்கள் சாமானியனுக்கும் புரியும்படியாக அந்த ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் எழுதியிருப்பதாக' சொன்னார்கள். அவர் உள்ளன்போடு என்னிடம் பேசினார்.

""பெரும் பணியை கையிலே எடுத்து விட்டேன். என் காலம் முடிவதற்குள் இப்பணியை முடித்தாக வேண்டுமே என்ற கவலையும் எழுந்துள்ளது'' என அவர் சொன்னபோது, என் மனம் சற்று சலனப் பட்டது.

ஆனால் அவர் அப்பணியை முடித்த பின்னரே, தன் வாழ்வை முடித்துக்கொண்டார். ராஜாஜி அவர்கள் எழுதிய மகாபாரதம் புத்தகம் வெளிவந்ததும் நான் வாங்கிப் படித்தேன். அவர் சொன்னதுபோல, ஒவ்வொரு அத்தியாயம் முடிந்ததும், அந்த அத்தியாயத்தின் நோக் கத்தை பாமரனும் புரியும் வண்ணம் எழுதியிருப்பது அவரின் நல்லெண்ணத்தை எடுத்துக் காட்டியது. மகாபாரத படைப்பு மக்களுக்கு எதை புரியவைக்க எழுதியது என்பதை, ராஜாஜி அவர்கள் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள்.

அவர் இல்லத்தில் அவரை நான் சந்தித்துப் பேசி மகிழ்ந்த நாளை என்னால் மறக்கவே முடியாது!

(திரை விரியும்)

படம் உதவி: ஞானம்

_____________

மறக்க முடியாத சிறுகதை மன்னன்!

ங்கே வேடன் வில்லை வளைச்சிட்டான்... நீ

இங்கே வெண்புறாவை பறக்கவிடாதே...!

ee

இது "புதிய பூமி' படத்தின் வசனகர்த்தா அண்ணன் எஸ். எஸ். தென்னரசு எழுதிய வசனம். எனக்கு கதை எழுதும் வாய்ப் பினை வழங்கிய வள்ளல், கட்சிக் காரனான எஸ்.எஸ்.தென்னரசு அவர்கள் வசனம் எழுதும் வாய்ப் பினை வழங்கினார். அவர்தான் வில்லன் நம்பியார் பெயரை காங்கேயன் என மாற்றினார். "சிறு கதை மன்னன்' என பெயர்பெற்ற அண்ணன் தென்னரசு அவர் களும், நானும் மகாபலிபுரத்தில் தங்கியிருந்து வசனம் முழுவதை யும் எழுதினோம். அந்த காலகட் டத்தில் அவர் என்னை தன் தம்பி போல் கருதிப் பழக ஆரம்பித்தார். படப்பிடிப்பு தளத்தில் வசனங் களை மாற்றும் உரிமையையும் தந்தார். அந்தப் படத்தில் கவிஞர் முத்துக்கூத்தன் உதவி இயக்குந ராகப் பணியாற்றியதுடன், ஒரு நகைச்சுவை பாத்திரத்திலும் நடித்தார். அவரும் எனக்கு நல்ல ஒத்துழைப்பு நல்கினார், நண்ப ராகவும் பழகினார். என்னோடு நடிப்பு பள்ளியில் படித்த சோ அவர்களும், ஜெயலலிதா அவர் களும் என்னைப் பற்றி எம்.ஜி.ஆர். அவர்களிடம் சொன்னதை நான் தெரிந்துகொண்டேன். அதேபோல் கலை இயக்குநர் அங்கமுத்து அவர்களும், ஸ்டண்ட் மாஸ்டர் மாடக்குளம் தர்மலிங்கமும் எம்.ஜி. ஆர். அவர்களிடம் அதிகமாக நெருங்கிப் பழக காரணமாயிருந் தார்கள். எல்லாத்துக்கும் மேலாக தயாரிப்பாளர்கள் தென்காசி சகோதரர்கள் சங்கரன், ஆறுமுகம் இருவரும் எம்.ஜி.ஆர். முன்னிலை யில் என்னிடம் காட்டிய பாசத்தை யும், அன்பையும், பழகும் விதத்தை யும் பார்த்து, ஒருநாள் என்னிடம் ""குகா அவங்க உனக்கு உறவுக் காரங்களா?'' என கேட்டுள்ளார் எம்.ஜி.ஆர்.

அண்ணன் தென்னரசு அவர்களுடன் தங்கபாண்டியன் ஸார், செ.மாதவன், பில்லப்பன், பி.எச்.பாண்டியன், ரத்னவேல் பாண்டியன், திருஞானம் இப்படி அன்றைய அரசியல் பிரபலங்கள் பலர் வருவார்கள். அத்தனை பேரிடமும் என்னை நல்லமுறையில் பழக வைத்து நட்புணர்வை ஏற் படுத்திவிட்டவர் தென்னரசு அவர்கள். அதுமட்டுமல்ல அடிக்கடி என்னை தன்னோடு கோபாலபுரம் கலைஞர் வீட்டுக்கு அழைத்துப் போவார். என் திறமைகளை தயங்காமல் கலைஞரிடம் அடிக்கடி சொல்வார். தென்னரசு அவர்கள் என் முன்னேற்றத்தில் காட்டிய அக்கறையை குறைத்து மதிப்பிட முடியாது.

அவர் அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டவர். நான் சினிமாவில் மட்டுமே அக்கறை காட்டியவன். அதனால் இறுதி வரை அவரோடு என்னால் பயணிக்க முடியாத நிலை. அதிலும் எம்.ஜி.ஆர். அவர்கள் தனிக்கட்சி ஆரம்பித்த பின்னால் எஸ்.எஸ். தென்னரசு அவர்களுடனான தொடர்பு குறையத் தொடங்கியது. அடிக்கடி மதுரை போவதும், தென் னரசு அவர்களோடு காலேஜ் ஹவுசில் தங்குவதும் முத்தண் ணன், பழனீவேல் ராஜன் போன்ற பிரபலங்களை சந்திப்பதும் குறை யத் தொடங்கியது. திருக்கோஷ்டி யூர் போவதும் குறைந்துபோனது. பலகுரல் மன்னன் சிவகங்கை சேதுராசன் போன்றோரையும் சந்திப்பது குறைந்தது.

சினிமாவில் தனிக்கம்பெனி ஆரம்பித்து என் பயணம் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்கள் நோக்கிப் போனது. தென்னரசு அவர்கள் மறைந்தபோது... நான் இந்த நாட்டிலேயே இல்லை. அண் மையில் பிள்ளையார்பட்டி போன போது, திருக்கோஷ்டியூர் போயி ருந்தேன். சில மணிநேரம் அவர் வீட்டுத் தெருவிலும், கோவிலிலும் உலவினேன். மறக்க முடியுமா சிறுகதை மன்னனை. எனக்கு ஏணி அமைத்தவர்களில் அந்த மாமனிதரும் ஒருவர். நான் பல உயரங்களை தொடுவேன் என நம்பியவர்களில் அவர் முக்கிய மானவர். பல முக்கியமான மாமனி தர்களுடன் எனக்கு நட்பு ஏற்பட காரணமானவரும் அவரே!