சினிமா கொட்டகை! டைரக்டர் -ரைட்டர் வி.சி.குகநாதன் 27

ss

ck

27. தி.மு.க.வின் மூன்று முகம்!

னக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று சொல்வதில் பெருமைகொள்ளும் பழக்கம் என்னிடம் எப்போதும் கிடையாது. இதனை அவரிடம் கற்றுக்கொண்டேன், அதனை இவரிடம் கற்றுக்கொண்டேன் என சொல்வது என் வழக்கம். ஆரம்ப காலகட்டங்களில் திரைக்கதை எழுதும்போது... பல காட்சிகளை தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் பாராட்டுவார்கள். உடனே சில காட்சிகளை நான் உருவாக்க உத்வேகமாக, உண்மை நிகழ்ச்சிகளோ, வேற்றுமொழிப் படங்களோ, நாவலோ, சிறுகதையோ இருந்திருந்தால், அதையும் மறைக்காமல் சொல்லிவிடுவேன். அதை பலபேர் பாராட்டியுள்ளார்கள். ஒரு பிரபல தயாரிப்பாளர் மட்டும், "குகநாதன்... தேவையில்லாமல் நாம தெரிஞ்சுக்க விரும்பாத ஒன்றைச் சொல்லி ஏன் உங்க கதை மேல உள்ள மரியாதையை குறைச் சுக்கிறீங்க'' என கேட்பார். ஆனாலும் இன்றுவரை, நான் அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை.

என்னுடைய இந்தப் பழக்கத்தை தெரிந்து வைத்திருந்த என் இளவயது நண்பர்... பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வாழ்ந்தவர் என்னை சந்திக்க வந்தார். பல மணி நேரம் பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்ட பின்னால் ஒரு கேள்வி யைக் கேட்டார்... "உன் எழுத்துக்களிலும், படங்களிலும் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். பற்றி சொல்லத் தவறுவ தில்லை. இந்த மூவரிடமிருந்தும் நீ என்ன கற்றுக்கொண்டாய்?'' என கேட்டார். அத்தோடு நிறுத்தாமல்... "பெரிய பிரசங்கமா ஆரம்பிச் சிடாதே! சுருக்கமா நாலே நாலு வரியிலே சொல்லு'' என கேட்க....

"ஒற்றை வார்த்தையில் சொல்கிறேன்'' என்றேன்.

"அப்படியா சொல்லு'' என கேட்க...

அண்ணா -சிந்திக்கச் சொன்னார்

எம்.ஜி.ஆர். -சந்திக்கச் சொன்னார்

கலைஞர் -முந்திக்கச்

ck

27. தி.மு.க.வின் மூன்று முகம்!

னக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று சொல்வதில் பெருமைகொள்ளும் பழக்கம் என்னிடம் எப்போதும் கிடையாது. இதனை அவரிடம் கற்றுக்கொண்டேன், அதனை இவரிடம் கற்றுக்கொண்டேன் என சொல்வது என் வழக்கம். ஆரம்ப காலகட்டங்களில் திரைக்கதை எழுதும்போது... பல காட்சிகளை தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் பாராட்டுவார்கள். உடனே சில காட்சிகளை நான் உருவாக்க உத்வேகமாக, உண்மை நிகழ்ச்சிகளோ, வேற்றுமொழிப் படங்களோ, நாவலோ, சிறுகதையோ இருந்திருந்தால், அதையும் மறைக்காமல் சொல்லிவிடுவேன். அதை பலபேர் பாராட்டியுள்ளார்கள். ஒரு பிரபல தயாரிப்பாளர் மட்டும், "குகநாதன்... தேவையில்லாமல் நாம தெரிஞ்சுக்க விரும்பாத ஒன்றைச் சொல்லி ஏன் உங்க கதை மேல உள்ள மரியாதையை குறைச் சுக்கிறீங்க'' என கேட்பார். ஆனாலும் இன்றுவரை, நான் அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை.

என்னுடைய இந்தப் பழக்கத்தை தெரிந்து வைத்திருந்த என் இளவயது நண்பர்... பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வாழ்ந்தவர் என்னை சந்திக்க வந்தார். பல மணி நேரம் பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்ட பின்னால் ஒரு கேள்வி யைக் கேட்டார்... "உன் எழுத்துக்களிலும், படங்களிலும் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். பற்றி சொல்லத் தவறுவ தில்லை. இந்த மூவரிடமிருந்தும் நீ என்ன கற்றுக்கொண்டாய்?'' என கேட்டார். அத்தோடு நிறுத்தாமல்... "பெரிய பிரசங்கமா ஆரம்பிச் சிடாதே! சுருக்கமா நாலே நாலு வரியிலே சொல்லு'' என கேட்க....

"ஒற்றை வார்த்தையில் சொல்கிறேன்'' என்றேன்.

"அப்படியா சொல்லு'' என கேட்க...

அண்ணா -சிந்திக்கச் சொன்னார்

எம்.ஜி.ஆர். -சந்திக்கச் சொன்னார்

கலைஞர் -முந்திக்கச் சொன்னார்

என்றேன் நான்.

அவன் கைதட்டி, கட்டிப் பிடித்துப் பாராட்ட... நாலுமணி நேரம் இதன் விளக்கங் கள் பற்றிப் பேசினோம்.

அண்ணா என்ற மேதையின் முன்னால் பேதையாக போய் நின்றவன் நான். காஞ்சியை விட்டு சென்னை வரும்போது எதிர்காலத்தில் என்ன ஆகப்போகிறோம் என்பதை தெரிந்து கொண்ட இளைஞனாக, பல நூறு நூல்களை வாசித்து விரிந்த அறிவு படைத்தவனாக, பல பிரபல தலைவர்களின் மேடைப் பிரசங்கங் களை நூற்றுக்கணக்கில் கேட்டு தெளிவு பெற்றவனாக, "திராவிட நாடு', "ஹோம் லேண்ட்' பத்திரிகைகளை தொடர்ந்து படித்து நல்ல பயனுள்ள கட்டுரைகளை எழுதத் தெரிந்தவனாக, அண்ணாவின் "ஆரிய மாயை' என்று நூலை ஐம்பது தடவைக்கு மேல் வாசித்தவனாக... "நீ நடிக்கும் எண்ணத்தை கைவிட்டு கதை எழுத முயற்சி செய்... நல்லா வர வாய்ப்புகள் ஏராளம்' என்ற அண்ணாவின் ஆசியோடு சென்னையை வந்தடைந்தேன்.

சினிமா மோகம் வேறு, சினிமா கற்பது வேறு. மோகத்துக்கு கனவு காணத் தெரிந்தாலே போதும். கற்பதற்கு சிந்திக்கத் தெரிந்திருக்க வேண்டும். அதைத்தான் அண்ணாவிடம் கற்றுக்கொண்டேன். வெறுமனே சிந்தித்து விட்டால் போதாது, புதுமையாக சிந்திக்க வேண்டும். நமது சிந்தனை மக்களால் போற்றப்பட வேண்டும், அது அவர் களுக்கு பயன்படவும் வேண்டும்.

ck

மாற்றங்களையும், மறு மலர்ச்சியையும் தன் சிந்தனை களால் ஏற்படுத்தியவர் அண்ணா. தேய்ந்துபோன தத்துவங்களை சீர்செய்ய சிந்தித்தவர் அண்ணா. என்னைப் போன்ற லட்சோப லட்சம் இளைஞர்களுக்கு சிந்திக்க கற்றுத் தந்தவர் அண்ணா.

அண்ணாவின் "இதயக்கனி' எம்.ஜி.ஆர். அவர்களின் ரசிகன் நான். அவரால் அரவணைக்கப்பட்டு திரையுலகில் கதாசிரிய னாக அறிமுகப்படுத்தப்பட்டவன். அவரின் அளவற்ற பாசத்துக்கும் நேசத்துக்கும் ஆளாக்கப்பட்டவன். திரையுலகில் சரியான பாதையை எனக்குக் காட்டி, "ஏவி.எம். கதை இலாகாவில் சேர்ந்துவிடு'' என அறிவுறுத்தியவர். என் படங்களுக்கு அவர் ஆட்சிக்காலத்தில் பல விருதுகள் கிடைத்தன. "கலைமாமணி' விருதும் அவர் காலத்தில் எனக்கு வழங்கப்பட்டது. தன் புதிய படத்துக்கு கதை ஒன்று தேவைப்பட்ட போது, தயாரிப்பாளரை நான் படிக்கும் கல்லூரிக்கு அனுப்பி கதை வாங்க வைத்தவர் எம்.ஜி.ஆர். ஈழப் போராளிகளுக்காக ஆதரவு கேட்டு நான் போனபோது, தெளிவாக விஷயங் களை என்னிடம் மட்டுமல்ல... அதுபற்றித் தெரிந்த வேறு பலரிடமும் கேட்டுத் தெரிந்து கொண்டு... வேறு யாரும் செய்ய முடியாத அளவுக்கு உதவிகளைச் செய்தவர். "அரசிய லுக்கு வா' என அவர் அழைத்தபோது... நான் மறுத்துப் பேசியதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் திரையுலகில் நான் வளர உதவி யவர். என் நன்றிக்கடனாக "மாங்குடி மைனர்' என்ற படத்தை எடுத்தேன். அது சென்சாரால் தடை செய்யப்பட்டபோது என்னை அழைத்து, "தடைகளை உடைக்கப் பழகு', எதிர்ப்புகளை விட்டு விலகிப் போகக்கூடாது... சந்தித்துப் பழகு' என்று சொல்லித் தந்தவர். படத்தை வந்து பார்த்து மனமகிழ்ந்து பாராட்டி, என் கைகளைப் பிடித்து 'ஏர்க் இப்ங்ள்ள்' எனச் சொன்னவர்.

"உங்களை எதிர்ப்பவர்களை நீங்க அழிச்சிடுவீங்க என்றெல்லாம் சிலர் பேசுறாங்களே...அது ஏங்க?'' என கேட்டபோது...

"அதை நீ நம்புறியா?'' என திருப்பிக் கேட்டார்.

"நம்புறவனா இருந்தா... நேரடியா உங்ககிட்டே கேட் பனா?'' எனக் கேட்டேன். வழக்கமான சிரிப்பை சிரித்து விட்டு... "காலைச் சுற்றின நல்லபாம்பு தலையைத் தூக்கி படத்தை விரிச்சா... பார்த்துக்கிட்டு சும்மா நிற்கணுமா? அல்லது அடுத்த காலாலே அதோட தலையை மிதிக்கணுமா?'' நான் புரிந்துகொண்டேன்.

எதிர்ப்பையும், எதிரிகளையும், நம்மை ஒதுக்கிவிட நினைப்பவர்களையும்தான், அவர் சொல்லித் தந்தபடி சந்தித்துத்தான் தாண்டி வந்தேன். தைரியமாக எதையும் சந்திக்க கற்றுத் தந்தவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.

முத்தமிழறிஞரிடம் முடியாதது என்று எதுவுமே கிடையாது. தன் வாழ்நாளில் மூன்று லட்சத்துக்கு மேலான பக்கங்களை எழுதிக் குவித்தவர் கலைஞர் என ஆய்வு நூல்கள் கூறுகின்றன. அவரோடு என் சந்திப்பு 1962ல் காஞ்சியில் ஏற்பட்டது. அதனால்தானோ என்னவோ, இன்றுவரை அவர் என்னோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். என் எழுத்துக்களை அவர் பாராட்டியதுண்டு. என் நூறாவது படமான "மைக்கேல்ராஜ்' நூறாவது நாள் விழாவில் தலைமையேற்று, பேசியபோது... "இல்லாதவன் சொல்லாமல் எடுத்தா திருட்டு, சொல்லிப்பிட்டு எடுத்தா சோஷலிசம்! இல்லாதவன் பொல்லாதவனாயிட்டா சோஷலிசம் சொல்லாமலே நடைமுறைக்கு வந்திடும்'' -இது தம்பி குகநாதன் இந்தப் படத்தில் எழுதியிருக்கும் வசனம். எனக்கு மிகவும் பிடித்த வசனம் என பாராட்டியதோடு, தமிழுக்கும் திரையுலகுக்கும் தம்பி குகநாதன் தொடர்ந்து பணியாற்றிடல் வேண்டும் என்றும் சொன்னார்.

ஒருநாள் திடீரென "தென்பாண்டி சிங்கம்' என்ற அவர் எழுதிய சரித்திர நாவலை என்னிடம் தந்து "இதைப் படமா எடு' என்றார். அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. ஆனால் கவிஞர் இளையபாரதி என்னைத் தேடிவந்து, "அண்ணன் ஆற்காட்டார் ஆதரவுடன் இதே நாவலை சீரியலாக எடுத்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் பட வேலையை ஆரம்பித்துவிட்டால் நான் பெரிதும் பாதிக்கப்படுவேன்' என்றார். வேறு வழியில்லாத தால் நான் அந்த நாவலை படமாக்கும் எண்ணத்தை கைவிட்டேன்.

ck

நான் அகில இந்திய திரைப்பட தொழிலா ளர் மாமன்ற செயலாளராக இருந்தபோது தொழி லாளர்களுக்கு வீடுகள் கட்டவும், அவர்களுக் கென்று திரைப்படத் தளங்கள், கல்விக்கூடம், மருத்துவமனை கட்டவும்... ஒரு திரைப்பட நகரை உருவாக்கவும் நூறு ஏக்கர் நிலம் கேட்டேன். பையனூரில் தொண்ணூறு ஏக்கர் தந்ததோடு... ஹட்கோ வங்கியும், தமிழக அரசின் கூட்டுறவு சங்கத்தின் பங்களிப்போடு நானூற்று எழுபது கோடி கடன் பெறவும் உதவி செய்தார். பணிகள் தொடங்கும் முன் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது எந்த தலைவரும் சொல்லத் தயங்கும் விஷயத்தை வெளிப்படையாகச் சொன்னார்.

"குகா... திரைப்பட நகரை உருவாக்க நீ எடுக்கும் முயற்சிகள்... நாம் தோற்றுவிட்டால் வீணாகிவிடுமே' என சற்று கலக்கத்தோடு சொன்னார். அதற்குள் நான் ஒரு படப்பிடிப்புத் தளத்தை கட்டி முடித்து, இருபத்துநாலு சங்க பிரதிநிதிகளையும் அழைத்துப் போய் திறப்பு விழாவை நடத்திவிட்டேன். ஆனால் வீடுகள் கட்டும்போது அடுத்து வந்த அரசால் கிடப்பில் போடப்பட்டது. எப்போதும் கலைஞர் எனக்குச் சொல்வது "எதையாவது சொல்ல வேண்டும், செய்யவேண்டும் என எண்ணினால் முந்திக்கிட்டு சொல்லிவிடு... இல்லையென்றால் இன்னொருத்தன் அதையே சொல்லும்போது... நாம குந்திக்கிட்டு கேட்கிற நிலைமை வந்திடும்' என்று சொல்வார். நான் பல தடவை அத்தகைய நிலைக்கு ஆளாகியிருக்கிறேன்.

அண்ணா -எம்.ஜி.ஆர். -கலைஞர். இந்த மூவரும்தான் "தி.மு.க.' என்ற மூன்றெழுத்தின் முக்கியத்துவம் என்பது என் கணிப்பு.

வாலிபக் கவிஞர் வாலியின் வீட்டைச் சூழ்ந்த குண்டர்கள்!

(திரை விரியும்...)

nkn091024
இதையும் படியுங்கள்
Subscribe