சினிமா கொட்டகை! டைரக்டர் -ரைட்டர் வி.சி.குகநாதன் (22)

cc

s

(22) "குட்ட'பொம்மன்?!

கொழும்புவில் நான் படித்துக்கொண் டிருந்த நாட்களில் நிறைய சினிமா பார்ப்பேன். சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த "வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தை ஏற்கனவே ஒன்பது முறை பார்த்துச் சிலிர்த்த நான், பத்தாவது முறையாக அந்தப் படத்தைப் பார்க்க மரதானை என்ற இடத்தில், "எல்பின்ஸ்சன்ட்' தியேட்டருக் குப் போய் பால்கனியில் அமர்ந்து படம் பார்த்தேன். சிவாஜியின் நடிப்பிலும் வசனத்திலும் ஒன்றிப்போய்... முதல் தடவை அந்தப் படத்தைப் பார்க்கிற ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஓடிக்கொண்டிருந்த படம் ரீல் அறுந்தது போல திடீரென நின்றது. மின்விளக்குகள் போடப் பட்டன. ரசிகர்கள் கூட்டத்திடம் கசகசவென ஒரே இரைச்சல். நான் பால்கனியிலிருந்து கீழே எட்டிப் பார்த்தேன். ரசிகர்களின் இரைச்சல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே வந்தது.

சில வினாடிகள் கழிந்த நிலையில்... மூன்று நபர்கள் வெண்திரையின் மேடை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். மேடையில் ஏறி, ரசிகர்கள் பக்கம் திரும்பியபோது... ரசிகர்களிடையே ஒரே ஆரவாரம்.

மேடையில் நின்றுகொண்டிருந்தவர் களில் முதலில் இருந்தவர் படத்தின் டைரக்டர் -தயாரிப்பாளர் பி.ஆர்.பந்துலு இரண்டாவதாக இருந்த சினிமா பிரமுகர் சித்ரா கிருஷ்ணசாமி, இவர்கள் இருவரை யும் பத்திரிகைப் புகைப்படங்களில் பார்த்திருக்கிறேன். அதனால் சட்டென்று புரிந்தது. ஆனால் மூன்றாவது நபரை எனக்கு அடையாளம் தெரியவில்லை. முழங்கைக்கு மேல் நீண்ட கதர்ச்சட் டையும், வேட்டியும் அணிந்திருந் தார். சற்று கருப்பாகவும் தெரிந் தார்.

"சிவாஜி... சிவாஜி' என்றார்கள்.

என்னால் நம்பவே முடியவில்லை. "இதோ... நான் பார்த்துக் கொண

s

(22) "குட்ட'பொம்மன்?!

கொழும்புவில் நான் படித்துக்கொண் டிருந்த நாட்களில் நிறைய சினிமா பார்ப்பேன். சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த "வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தை ஏற்கனவே ஒன்பது முறை பார்த்துச் சிலிர்த்த நான், பத்தாவது முறையாக அந்தப் படத்தைப் பார்க்க மரதானை என்ற இடத்தில், "எல்பின்ஸ்சன்ட்' தியேட்டருக் குப் போய் பால்கனியில் அமர்ந்து படம் பார்த்தேன். சிவாஜியின் நடிப்பிலும் வசனத்திலும் ஒன்றிப்போய்... முதல் தடவை அந்தப் படத்தைப் பார்க்கிற ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஓடிக்கொண்டிருந்த படம் ரீல் அறுந்தது போல திடீரென நின்றது. மின்விளக்குகள் போடப் பட்டன. ரசிகர்கள் கூட்டத்திடம் கசகசவென ஒரே இரைச்சல். நான் பால்கனியிலிருந்து கீழே எட்டிப் பார்த்தேன். ரசிகர்களின் இரைச்சல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே வந்தது.

சில வினாடிகள் கழிந்த நிலையில்... மூன்று நபர்கள் வெண்திரையின் மேடை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். மேடையில் ஏறி, ரசிகர்கள் பக்கம் திரும்பியபோது... ரசிகர்களிடையே ஒரே ஆரவாரம்.

மேடையில் நின்றுகொண்டிருந்தவர் களில் முதலில் இருந்தவர் படத்தின் டைரக்டர் -தயாரிப்பாளர் பி.ஆர்.பந்துலு இரண்டாவதாக இருந்த சினிமா பிரமுகர் சித்ரா கிருஷ்ணசாமி, இவர்கள் இருவரை யும் பத்திரிகைப் புகைப்படங்களில் பார்த்திருக்கிறேன். அதனால் சட்டென்று புரிந்தது. ஆனால் மூன்றாவது நபரை எனக்கு அடையாளம் தெரியவில்லை. முழங்கைக்கு மேல் நீண்ட கதர்ச்சட் டையும், வேட்டியும் அணிந்திருந் தார். சற்று கருப்பாகவும் தெரிந் தார்.

"சிவாஜி... சிவாஜி' என்றார்கள்.

என்னால் நம்பவே முடியவில்லை. "இதோ... நான் பார்த்துக் கொண் டிருக்கும் "வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் கட்டபொம்மனாக நடித்திருக்கும் சிவாஜி குறைந்தபட்சம் ஆறரை அடி உயரமாவது இருப்பார்' என அந்த வயதில் எனக்குள் ஒரு கணிப்பு இருந்தது. அதனால்... மேடையில் நிற்பவரை கட்டபொம்மனாக என் னால் கற்பனை செய்ய முடியவில்லை. கட்ட பொம்மனா நடிச்சவரா? இம்புட்டு குட்டையா இருக்காரு... ஊஹும்...' என எண்ணினேன்.

மேடையிலிருந்த மூவரும் ரசிகர்களுக்கு கைகாட்டிவிட்டு, கீழே இறங்கி... தியேட்டரின் உள் அரங்கை விட்டு வெளியேற, படம் மீண்டும் ஓடத்தொடங்கியது.

cc

நான் கீழே இறங்கி ஓடினேன்.

அவர்கள் மூவரும் வராந்தாவில் நின்றபடி, தியேட்டரின் அதிபரும் விநியோகஸ்தருமான சிற்றம்பலம் கார்டினலோடு பேசிக்கொண்டிருந் தார்கள். நான் மெதுவாக அங்கே சென்று சிவாஜியின் பின்புறம் நின்றேன்.

ரொம்ப தயக்கம்தான், ஆனால் என் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வது எனக்கு மிகமிக முக்கியமாக இருந்தது. சிவாஜியின் புஜப்பகுதியில் தொட்டேன். (தோள்பட்டை)

"சட்'டென அவர் திரும்பி என்னைப் பார்த்தார். நான் நேருக்கு நேராக அவரின் கண்களையே உற்றுப்பார்த்தேன். என் சந்தேகம் தீர்ந்தது.

அதே... பெரிய கண்கள்!

ஆயிரம் கதை சொல்லும் கண்கள்

Expression Eyes

"மனோகரா', "உத்தமபுத்திரன்', "பராசக்தி', "அமரதீபம்', "காவேரி', "மக்களைப் பெற்ற மகராசி' என எத்தனை படங்களில்... அந்தக் கண்கள் காட்டிய எத்தனையோ ரகமான பாவனைகளைப் பார்த்து வியந்திருக்கிறேன். என்னை மறந்து கைதட்டி மகிழ்ந்திருக்கிறேன்.

"இவ்வளவு சாதாரணமாகத் தெரிகிற இவரால் இவ்வளவு கம்பீரமான கட்டபொம்ம னாக எப்படி அசத்தி, ஆர்ப்பரித்து, கொதித்து, கொந்தளிக்க முடிகிறது?!' என வியப்பு தாங்க வில்லை. அப்படிப்பட்ட கலைஞனை தொட்டுப் பார்த்த மகிழ்ச்சியை என்னால் தாங்க முடிய வில்லை.

நான் சென்னைக்கு வருவேன்; சிவாஜி படங்களுக்கு கதை எழுதுவேன்; சிவாஜியே என்னைக் கூப்பிட்டு கால்ஷீட் தந்து "ராஜபார்ட் ரங்கதுரை' படத்தை தயாரிக்க வைப்பார்; என சிவாஜியைத் தொட்டுப் பார்த்த அன்று... கனவிலாவது நான் நினைத்திருப்பேனா?

நான் சிவாஜி பட கதாசிரியராக, தயாரிப் பாளராக பணியாற்றிய போதும்... ஒருநாள் கூட நான் இலங்கையில் அவரைத் தொட்டுப் பார்த்த நிகழ்வைச் சொன்னதில்லை. சமீபத்தில் "களம் கண்ட கவிஞன்' நூல் வெளியீட்டு விழாவில், ராம்குமார் சிவாஜி உள்ளிட்ட பல பிரபலங்கள் நிறைந்த சபையில் பேசும்போது... இந்த நிகழ்வைச் சொன்னேன். ஏகப்பட்ட வரவேற்பு.

அண்ணன் எம்.ஜி.ஆருக்கு நான் கதை எழுதிய; நான் கதாசிரியராக அறிமுகமான "புதிய பூமி' படம் 1968ல் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

தனது ரசிகனான என்னை, தனது பட கதாசிரியராக உயர்த்திய எம்.ஜி.ஆரிடம் கேட்கா மல் நான் எதையும் செய்யமாட்டேன். சிவாஜி சார் படங்களுக்கு கதை எழுதுவதையும் முன்கூட்டியே அவரிடம் சொல்லிவிடுவேன். ஆனால், பத்திரிகை நண்பர் களோ... "நீங்க உருவாக்கி விட்ட குகநாதன் "சிவாஜி கேம்ப்'பிற்கு போய் விட்டார்' எனச் சொல்லியிருக்கிறார்கள்.

எதையும் எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட் டுச் செல்கிற நான்... தயா ரிப்பாளராக ஆனதை மட்டும் சொல்லவில்லை. "இந்த சின்ன வயசுல... எதுக்கு பெரிய சுமையை சுமக்கிற?' என எம்.ஜி.ஆர். திட்டுவாரோ... என்கிற பயம்தான்.

சிவாஜி சாரின் அரவணைப்பினாலும், டைரக் டர் பி.மாதவன் அவர்களின் நட்பினாலும் "ராஜ பார்ட் ரங்கதுரை' படத்தை தயாரிக்கத் தொடங் கினேன். ஏவி.எம். செட்டியார் அப்பச்சி ஃபைனான்ஸ் பண்ணினார். சிவாஜி சாரும், சிவாஜியின் கால்ஷீட்டை கவனித்துக்கொண்டிருந்த சிவாஜியின் தம்பி சண்முகம் சாரும், ஏவி.எம். ஸ்தாபனத்துடன் சிறு மனக்கசப்பில் இருந்ததால் "ராஜபார்ட் ரங்கதுரை' படப்பிடிப்பு தாமதமானது.

எனக்காக சிவாஜி சாரிடம் கோரிக்கை வைத்த அண்ணன் எம்.ஜி.ஆர்.

(திரை விரியும்...)

படம் உதவி: ஞானம்

___________

கலைஞரும் காட்சியும்...!

scs

திரையில் கலைஞர் உருவாக்கிய பல காட்சிகள் எனக்கு நல்ல பயனுள்ள படிப்பினையைத் தந்திருக் கின்றன.

சிலப்பதிகாரம் தந்த காட்சி.

அரண்மனை பொற் கொல்லர்தான் கண்ணகி யின் கால்சிலம்பு பிரச் சினைக்கு காரணமானவர். கோவலன் கொலையுண்ட துக்கும் அவரே பொறுப் பாளி என இளங்கோ அடிகள் காட்டுகிறார். ஒரு சாமானிய திருடனுக்கு சிலம்பு பற்றி அதிக விளக்கம் தெரியாமலிருக்கலாம். பொற்கொல்லர் என்று சொன்னால் சிலம்பின் தர மதிப்பீடு, தராதரம் தெரிந்தவராக இருப்பார் என்பதால், இளங்கோ அடிகள் அந்தக் கதா பாத்திரத்தை அப்படி படைத்திருக்க லாம். வேறு எந்த உள்நோக்கமும் அவருக்கு இருக்க வாய்ப்பில்லை. இந்த கதாபாத்திரமும், இதன் செயல்பாடும் பொற்கொல்லர் இனத்துக்கு ஒரு வடுவையும், அவப்பெயரையும் ஏற்படுத்தியிருக்க வாய்ப்புண்டு. கலைஞர் அவர்கள் தன் பூம்புகாருக்காக இந்தக் காட்சியை எழுதும்போது, கோவலன் கொலையுண்டதற்கு காரணம் பொற்கொல்லர் அல்ல... பாண்டிய நெடுஞ்செழியனின் அரண்மனைக் காவலன் ஒருவனே என மாற்றி யமைத்தார். கலைஞரின் இந்த காட்சி யமைப்பு சமூக நீதியை காப்பதற்கான மாற்றமே! பொற்கொல்லர் சமூகத்தின் மீது வெறுப்பு தொடர்ந்து வளர வேண்டாம் என்ற நல்லெண்ணமே கலைஞரின் காட்சி மாற்றம் காட்டு கின்ற உண்மையாகும்.

அதேபோல் பெண் கதாபாத்தி ரங்களை உயர்த்தி சித்தரிப்பதில் ஒரு தனி வழியைக் கையாண்டார் கலைஞர். உதாரணமாக "பராசக்தி' படத்தில் தன் தங்கையின் பரிதாப நிலையைப் பார்த்து அவர் கலங்கும் போது, பண்டரிபாய் கதாபாத்திரத்தை சந்திக்கிறார். அப்போது பண்டரிபாய் கதாபாத்திரத்தின் மூலம் கதாசிரியர் கலைஞர், தன் கருத்தைப் பேசுகிறார்.

"உங்கள் தங்கையைப் போல் பல பெண்கள் தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். அவர்களைப் பற்றிய அக்கறை சிறிதளவாவது உங்களுக்கு இல்லையா?' எனக்கேட்டு... கதாநாயகி யின் மனதுக்குள் பொதுநல சிந்தனையைத் தூண்டிவிடு கிறார். "இதையெல்லாம் எங் கே கற்றீர்கள் என வினவ...', "அண்ணாவிடம் கற்றேன்' என்கிறார் பண்டரிபாய்.

இதேபோல் "மருத நாட்டு இளவரசி' படத்தில் எம்.ஜி.ஆருக்கு தீமையை அழிக்க வீரம் வேண்டும் என்று சொல்லி அவருக்கு வாள் சண்டை கற்றுக்கொடுப் பது நாயகி ஜானகிதான். "மனோகரா' படத்தில் சங்கிலியால் கட்டப்பட்டு தூணிலே இணைக்கப் பட்ட தன் மகனுக்கு வீரத்தை ஊட்டி, விவேகமாகப் பேசி சங்கிலியை அறுத்துப் போராட வைப்பது, தாய் கண்ணாம்பாள்தான்.

இதையெல்லாம் கலைஞரிடம் கற்றுக்கொண்டதால்தான் என்னு டைய பல படங்கள் போராடும் பெண்கள் பற்றியதாக இருந்தது. அவை வெற்றிப் படமாக அமைந்தன.

"எழுதுவதற்கு ஒரு இலக் கணம் வகுத்துக்கொள்ள வேண் டும். அந்த எழுத்து சமுதாயத்துக்கு பயன்படும் என்று தெரிந்தால் மட் டும் எழுதவேண்டும். கண்டதை எழுதி நம்முடைய நேரத்தையும், வாசகர் களின் பொன்னான நேரத்தையும் வீணாக்கக் கூடாது' என அண்ணா சொன்னார். இதனை திரை எழுத்தில் கலைஞர் கடைபிடித்தார். அவை எனக்கு பாடங்களாயின.

nkn210924
இதையும் படியுங்கள்
Subscribe