cc

(17) கொழும்பு... கொழுப்பு!

சென்னை -புரசைவாக்கம் வெள்ளாளத் தெருவில், எங்கள் அண்ணன் ராஜசிங்கம் வீட்டு வாச-ல் எம்.ஜி.ஆரின் கார் வந்து நின்றது. அடையாளம் கண்டுகொண்ட மக்கள் எம்.ஜி.ஆரின் காரை சூழ்ந்துவிட்டனர்.

நான் வெளியே வந்து டிரைவரிடம் விசாரித்தேன்.

Advertisment

"குகநாதன்...'

"நான்தான்...'

"உங்களை எம்.ஜி.ஆர். சார் கூட்டி வரச்சொன்னார்'

Advertisment

நான் மகிழ்ச்சியில் மலைத்துப்போனேன். திகைப்பில் திளைத்துப்போனேன். கூடவே... "எதுக்காக தலைவர் நம்மள வரச்சொல்றாரு' என குழம்பியும்போனேன்.

உடனடியாக வீட்டுக்குள்போய் உடை மாற்றிக்கொண்டு, ஷூ மாட்டிக்கொண்டு கிளம்பி, காரில் ஏறினேன்.

நெப்ட்யூன் ஸ்டுடியோவுக்குள் (இன்றைய சத்யா ஸ்டுடியோ) நுழைந்த கார், ஒரு அறையின் முன்பு நின்றது.

"உள்ளதான் இருக்காரு' என்று சொன்னதும்... உள்ளே போனேன்.

பீதாம்பரம் அவர்கள் எம்.ஜி.ஆருக்கு மேக்-அப் போட்டுக்கொண்டிருந்தார்.

நான் பின்னால் நின்று... பெரிய கண்ணாடி யில் தெரிந்த எம்.ஜி.ஆரின் உருவத்தைப் பார்த்தேன். அவரின் முகம், தங்கத்தையே தரம் குறைப்பதுபோல் ஜொ-த்துக்கொண்டிருந்தது.

கண்ணாடி வழியாகவே என்னைப் பார்த்து, "உட்காருங்க'' என்றார். பின்னால் இருந்த சோபாவில் உட்கார்ந்தேன்.

எம்.ஜி.ஆரின் பாதுகாவலர்களாக இருந்த ஒரு ஸ்டண்ட்மேன், என்னைப் பார்த்து கண் ஜாடையில் ஏதோ சொன்னார்... எனக்குப் புரியவில்லை.

மறுபடி, மறுபடி அவர் ஜாடை காட்டியதில் புரிந்துகொண்டேன். நான் பிரிட்டிஷ்காரன் நடத்தின ஸ்கூல்ல படிச்சவன், பச்சையப்பாவில் படித்துக்கொண்டிருந்த மாணவன்... அதனால் கெத்தாக ஷூவுடன் ஒப்பனை அறைக்குள் வந்துவிட்டேன். "ஷூவை வெளியே கழட்டி விட்டுவிட்டு வரச்சொல்கிறார் அந்த ஸ்டண்ட்மேன்' என்பதைப் புரிந்து கொண்டேன்.

ஷூவை அறைக்கு வெளியே கழட்டி வைத்துவிட்டு மீண்டும் வந்து அமர்ந்தேன்.

கண்ணாடி வழியாகவே என்னைப் பார்த்துக் கேட்டார் எம்.ஜி.ஆர்.

"எந்த ஊரு?''

"கொழும்பு...''

"அதான் கொழுப்பா?'' என லேசாகப் புன்னகைத்தார்.

"படிச்சிட்டு என்ன செய்யப்போறீங்க?'' என கேட்டார்.

ck

நடிக்கணும்னுதான் இலங்கைல இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தேன்'' என தொண்டைக்குழி வரை வந்துவிட்ட பதிலை வெளியிடாமல் பதுக்கிக் கொண்டேன்.

நான் காஞ்சியில் பி.யு.சி. படிக்கும்போதும், சென்னையில் பி.காம். படிக்கும்போதும் "பெஸ்ட் ஸ்போர்ட்ஸ்மேன்' அதனால் வெயி-ல் விளையாடி கருத்து, கன்னங்கள் ஒட்டியிருந்த நான்,"நடிக்கிறதுக்காகத்தான் வந்தேன்'னு சொன்னா... "கொள்ளை அழகும், கட்டுடலும் கொண்ட தலைவர் சிரித்துவிடு வாரோ?' என எண்ணி மௌனமாக இருந்தேன்.

"அரசியலுக்கு வர்றீங்களா?''

"இல்ல சார்... வேண்டாம்''

"பின்ன...?!''

"கதை எழுதுவேன், எனக்கு ஒரு வாய்ப்பு குடுங்க சார்...''

நான் அப்படிச் சொன்னதும், சிறிதும் தயங்கவில்லை.

"நல்ல கதையா ரெடிபண்ணிட்டு வாங்க'' என்றார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு... ஒரு கதையை எழுதிக்கொண்டு போய் கொடுத்தேன்.

"ரெண்டு நாள் கழிச்சு வாங்க. அதுக்குள்ள கதையைப் படிச்சிட்டு சொல்றேன்'' என்றார்.

இரண்டு நாட்கள் கழித்துச் சென்று சந்தித்தேன்.

"என்னோட ரசிகர்னு சொல்றீங்க. ஆனா இந்தக் கதை "ஹீரோயின் சப்ஜெக்ட்டா இருக்கே' என்றார்.

"நீங்க... "நல்ல கதையா எழுதிட்டு வாங்க'னுதானே சொன்னீங்க... அதான் சார்...''

எம்.ஜி.ஆர். ஸ்டைலாக என்னைப் பார்த்து ஒரு லுக் விட்டார். அப்போது "எங்கவீட்டுப் பிள்ளை' டைரக்டர் சாணக்யா அவர்கள் அங்கே வந்தார்.

"நான் இவருக்கு ஒரு சான்ஸ் தரப்போறேன். அதுவரைக்கும் இவரை உங்ககூட வச்சுக்கிட்டு சினிமா நுட்பத்த இன்னும் கத்துக் குடுங்க'' என்றார்.

நான் எம்.ஜி.ஆருக்கு நன்றி சொல்-விட்டு, சாணக்யாவுடன் சென்றேன்.

சாணக்யாவின் முழுப்பெயர் தாபி சாணக்யா. "எங்கவீட்டுப் பிள்ளை' படத்தின் இந்தி ரீ-மேக் ஆன 'RAM AUR SHYAM' (ராம் அவுர் ஸ்யாம்) படத்தையும் திலீப்குமாரை வைத்து சாணக்யாதான் இயக்கினார்.

வாஹினி ஸ்டுடியோவில் ரெக்கார்டிங் நடந்துகொண்டிருந்தது. அங்கிருந்த பெரிய செட்டில் சிவந்த நிறத்தில் ஒரே ஒருவர் மட்டும் உருளை வடிவ தலையணையில் கைவைத்து கையில் தலையைத் தாங்கி பெட்டில் சாய்ந்தபடி யோசனை செய்துகொண்டிருந்தார்.

"அட... திலீப்குமார்!'

நான் அவருக்கு வணக்கம் தெரிவித்தேன். அவர் புன்னகைத்த படி ஆங்கிலத்தில் என்னோடு சில வாக்கியங்கள் உரையாடினார்.

cc

படப்பிடிப்பின்போது சினிமா குறித்த நுட்பமான விஷயங்களை நான் சாணக்யாவிடம் கற்றுக் கொண்டேன்.

கரீஷ்மாகபூர், கரீனாகபூர் ஆகிய இன்றைய நடிகைகளின் தாயார் பபிதா கபூர் கதாநாயகியாக நடித்த இந்திப் படம் 'BIKHRE MOTI' (பிக்ரே மோத்தி). நான் எழுதிய கதை. இந்தக் கதையை தயாரிப்பாளர் அகுஜாவிடம் என்னையே சொல்லச் சொன்னார் சாணக்யா. இது வெற்றிப்படமாக அமைந்தது.

பிற கதாசிரியர்களிடம் கதை கேட்டு தேர்வு செய்யும் பொறுப்பையும் என்னிடம் ஒப்படைத்தார் சாணக்யா. இதனால் பிரபல கதாசிரியர்களுடன் அறிமுகமும், கதைகளை கணிக்கும் அனுபவமும் எனக்குக் கிடைத்தது.

என் நண்பரான டி.என்.பாலுவும், நானும் சேர்ந்து ஒரு கதையை உருவாக்கினோம். தயாரிப்பாளர்களான ஜே.ஆர்.மூவிஸ் நிறுவனத்திற்கும், சாணக்யாவிற்கும் கதை பிடித்துப்போனது.

எம்.ஜி.ஆரிடம் கதை சொல்ல நேரமும் வாங்கினோம். டி.என்.பாலுதான் கதையைச் சொன்னார். ஆனால் எம்.ஜி.ஆர்., என்னையே பார்த்தபடி கதையைக் கேட்டுவிட்டு, "இதைவிட வேற ஒரு கதையை ரெடிபண்ணலாமே?' எனச் சொல்-விட்டார்.

ஏற்கனவே டி.என்.பாலுவின் கதையில் வந்த "குமரிப் பெண்' படம் ஹிட். அதனால் டைரக் டர் டி.ஆர்.ராமண்ணாவுக்கு ஒரு கதையை உடனடியாக கொடுக்கவேண்டிய சூழல் பாலுவுக்கு. எங்கள் அனுமதியோடு நாங்கள் உருவாக்கிய கதையைச் சொன்னார். அதுதான் ரவிச்சந்திரன், ஜெயல-தா நடிப்பில் "நான்' என்ற பெயரில் வெளியாகி வெற்றிபெற்றது.

"நான்' படத்தை மூன்று முறை தியேட் டரில் பார்த்தேன். பொழுது போக்குப் படமாக இருந்தது.

"எம்.ஜி.ஆர். ஏன் இந்தக் கதையை நிராகரித்தார்?' என நீண்ட யோசனைக்குப் பிறகே, என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. காதல் சுவை, நகைச்சுவை, பொழுதுபோக்குச் சுவை என எல்லாம் "நான்' கதையில் இருந்தாலும் கூட... "மக்களுக்கு நல்ல விஷயங்களை தன் படம் மூலம் சொல்ல வேண்டும்' என்ற கொள்கை யுடைய மக்கள் திலகத்தின் எண்ணம் "நான்' கதையோட்டத்தில் இல்லை. இதனால் எம்.ஜி.ஆர். நிராகரித்தார்.

இன்னொரு காரணம்... "உனக்கு ஒரு வாய்ப்பு தருவதாகச் சொன்னேனே... அதை பயன்படுத்திக்கொள்' என்பதற்காக, அவர் என்னையே பார்த்து "நான்' கதையை நிராகரித்ததையும் புரிந்துகொண்டேன்.

எம்.ஜி.ஆருக்காக ஒரு கதையை எழுதியே ஆகவேண்டும் என்கிற வைராக்கியத் துடன்... "ஓட்டை உடைசல் சாமான்கள் போட்டு வைக்கும் ஒரு அறைக்குள் பேப்பர் கட்டும், பேனாக்களும் எடுத்துக் கொண்டு போய் உட்கார்ந்தேன்...

(திரை விரியும்...)

படம் உதவி: ஞானம்