கொழும்புவில் சலூன் கடை நடத்திவந்த தஞ்சை மாவட்ட நண்பர்கள் மூலம் "இந்தியா செல்லவேண்டும்; தமிழ் சினிமாவிற்குள் நுழையவேண்டும்' என்கிற உந்துதல் அதிகரித்துக்கொண்டேயிருந்தது.
அந்த சமயம் "கல்கண்டு' பத்திரிகையில், "கட்டபொம்மனுக்கு எதிராகவும், பூலித்தேவனுக்கு ஆதரவாகவும் சான்றாதாரங்களுடன் தொடர்ந்து எழுதிவந்தார் தமிழ்வாணன். பூலித்தேவன் என்னைக் கவர்ந்ததால் அதை நாடகமாக எழுதி, சினிமா பாடல் மெட்டுக்களில் நாடகப் பாடலை உருவாக்கினேன். இந்த நாடக வசனங்களுக்கு எனக்கு ஊக்கமளித்தது நான் பார்த்த, கேட்ட... கலைஞரின் திரைப்பட வசனமே!
13 வயதில் "பூலித்தேவன்' நாடகம் போட்டு நடித்தேன். நாடகம் பெரும் வெற்றி. அதனால் பலமுறை அந்த நாடகத்தை நடத்தினேன். எனக்கு ஏகப்பட்ட மரியாதை. "யாழ் நகர் சிவாஜி' என இலங்கை பத்திரிகைகள் எழுதின.
பள்ளி விடுமுறையில் என் அம்மாவின் அம்மா, தங்கம்மா பாட்டி வீட்டிற்குச் செல்வேன். அவரை அன்பாக இருந்தாலும்; ஆத்திரமாக இருந்தாலும் "தம்பி அம்மா' என்றுதான் நான் அழைப்பேன். "நான் தம்பி; அவர் அம்மா' என்ற பொருளில் நானே இப்படி ஒரு உறவுப் பெயரை உருவாக்கி அழைத்தேன்.
தினம்... தினம்... நான் யாருக்கும் தெரியாமல் உட்கார்ந்து அழுவேன். "தமிழ்நாட்டுக்குப் போகமுடியலையே' என்கிற வேதனையில் விம்முவேன். ஒருநாள்... தம்பிஅம்மா நான் அழுவதைப் பார்த்து விட்டார்.
"
கொழும்புவில் சலூன் கடை நடத்திவந்த தஞ்சை மாவட்ட நண்பர்கள் மூலம் "இந்தியா செல்லவேண்டும்; தமிழ் சினிமாவிற்குள் நுழையவேண்டும்' என்கிற உந்துதல் அதிகரித்துக்கொண்டேயிருந்தது.
அந்த சமயம் "கல்கண்டு' பத்திரிகையில், "கட்டபொம்மனுக்கு எதிராகவும், பூலித்தேவனுக்கு ஆதரவாகவும் சான்றாதாரங்களுடன் தொடர்ந்து எழுதிவந்தார் தமிழ்வாணன். பூலித்தேவன் என்னைக் கவர்ந்ததால் அதை நாடகமாக எழுதி, சினிமா பாடல் மெட்டுக்களில் நாடகப் பாடலை உருவாக்கினேன். இந்த நாடக வசனங்களுக்கு எனக்கு ஊக்கமளித்தது நான் பார்த்த, கேட்ட... கலைஞரின் திரைப்பட வசனமே!
13 வயதில் "பூலித்தேவன்' நாடகம் போட்டு நடித்தேன். நாடகம் பெரும் வெற்றி. அதனால் பலமுறை அந்த நாடகத்தை நடத்தினேன். எனக்கு ஏகப்பட்ட மரியாதை. "யாழ் நகர் சிவாஜி' என இலங்கை பத்திரிகைகள் எழுதின.
பள்ளி விடுமுறையில் என் அம்மாவின் அம்மா, தங்கம்மா பாட்டி வீட்டிற்குச் செல்வேன். அவரை அன்பாக இருந்தாலும்; ஆத்திரமாக இருந்தாலும் "தம்பி அம்மா' என்றுதான் நான் அழைப்பேன். "நான் தம்பி; அவர் அம்மா' என்ற பொருளில் நானே இப்படி ஒரு உறவுப் பெயரை உருவாக்கி அழைத்தேன்.
தினம்... தினம்... நான் யாருக்கும் தெரியாமல் உட்கார்ந்து அழுவேன். "தமிழ்நாட்டுக்குப் போகமுடியலையே' என்கிற வேதனையில் விம்முவேன். ஒருநாள்... தம்பிஅம்மா நான் அழுவதைப் பார்த்து விட்டார்.
"ஏன் அழுறே?''
"இந்தியாவுக்குப் போகணும்; தமிழ் சினிமாவுல பெரிய ஆளா வரணும்... ஆனா, என் அப்பாவும், அம்மாவும் என்னை டாக்டருக்கு படிக்க வைக்கணும்னு லட்சியத்தோட இருக்காங்க. அதனால் என்னோட லட்சியமான சினிமாவுக்கு என்னை விடமாட்டாங்க'' நான் சொன்னதையும், என் மனநிலையையும் உணர்ந்த பாட்டி, சிறிதுநேரம் யோசித்தார்.
"இத்தனை வருஷமா உனக்குத் தெரியாத ஒரு விஷயத்த நான் சொல்றேன்...'' என்றார் பாட்டி.
என்னையும் அறியாமல் விழிகள் அகல விரிந்தது. பாட்டியின் அருகாமையில் சென்று, அவரின் முகத்தையே பார்த்தேன்.
"என்னோட அண்ணன் -தம்பி, சொந்த -பந்தங்கள் பலபேர் மெட்ராஸ்லயும், நாகர்கோயில்லயும், சிவகங்கை யுலயும் இருக்காங்க'' என்றார்.
எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. பாட்டி சொன்ன விபரங்களின்படி... என் பாட்டி தங்கம்மாவின் தம்பி வஜ்ரவேலு சென்னை பிரசிடென்சி காலேஜில் பட்டம் படித்துவிட்டு, சிவகங்கையில் போலீஸ் சர்க்கிள் இன்ஸ் பெக்டராக பணியாற்றியிருக்கிறார்.
என் பாட்டியோட அம்மாவின் தாத்தா மாசிலாமணி பிள்ளை, பிரிட்டிஷார் ஆட்சியில் "ராவ் பகதூர்' பட்டம் பெற்றவர். மெட்ராஸ் ஹைகோர்ட்டில் நீதிபதியாக இருந்திருக்கிறார். என் அம்மாவின் மாமா சின்னத்தம்பி, சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வராக (பிரின்ஸிபல்) இருந்திருக்கிறார்.
பாட்டி இதையெல்லாம் சொல்லவும்... "உடனே என்னை இந்தியாவுக்கு அனுப்புங்க'' என்றேன்.
"எனக்கு நீ ஒரு வாக்குறுதி குடுப்பியா? அதை காப்பாத்துவியா? நான் உங்க அப்பா -அம்மாகிட்ட பேசி சமாதானப்படுத்தி... மெட்ராஸுக்கு அனுப்பி வைக்கிறேன்...''
"சரி... பாட்டி...''
"முதல்ல நீ படிப்புல கவனம் செலுத்தணும். நீ டாக்டருக்கு படிக்கலேன்னாலும், ஒரு பட்டப் படிப்பாவது படிச்சிடணும்..''
"கண்டிப்பா தம்பிஅம்மா!''
சொன்னபடி பாட்டியும், தாத்தாவும் வந்து விமானம் மூலம் யாழ்ப்பாணத்திலிருந்து திருச்சிக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சி ஏர்போர்ட்!
தாய் மண்ணை, தாயார் மண்ணை; என் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிற தமிழ் மண்ணை என் 13 வயதில் முதன்முதலில் மிதித்ததும், எனக்குள் இனம்புரியா உணர்வு... கண்களில் ஆனந்தத்தால் நீர் சொட்டியது. நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினேன் மண்ணை. திருச்சியிலிருந்து ரயில் மூலம் சென்னை வந்தேன்.
என்னை வரவேற்க என் பெரியம்மா ராஜராஜேஸ்வரி யம்மாவின் மகன் ராஜசிங்கம் அண்ணன் வந்திருந்தார். இதற்கு முன் நாங்கள் ஒருவரையொருவர் பார்த்ததில்லை. ஆனாலும் நான் சரியாக அடையாளம் கண்டு அழைத்தேன் அண்ணனை!
புரசைவாக்கம் வெள்ளாள தெருவில்தான் எங்கள் பெரியம்மா வீடு இருந்தது. (எதிர்வீடு ... பின்னாளில் அமைச்சராக இருந்த க.அன்பழகன் அவர்களின் வீடு)
"நீ எங்க படிக்கப்போறே?'' என அண்ணன் கேட்டார்.
"சென்னையில் படிச்சா சினிமா நினைப்பு ஜாஸ்தியா இருக்கும், அதனால காஞ்சிபுரத்துல படிக்கிறேன்'' என (சினிமா நாட்டம் இல்லாதவன் போல) சொன்னேன்.
அங்கே நான் தங்குவதற்கு வீடு பார்க்கச் சொல்லிவிட்டு பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள். மறுநாள்... ஒரு பெரிய காரில் பெரியம்மா, அண்ணன், அண்ணி, நான் ஆகியோர் கிளம்பினோம்.
சின்ன காஞ்சிபுரத்தில் அங்கே சீனு முதலியார் வீட்டுக்குச் சென்றோம். அவரின் வீடு பிரபல தலைவரின் வீட்டுக்குப் பின்புறம் இருந்தது.
"தம்பிக்கு முன்பக்கத்துலதான் வீடு பார்த்திருக்கு'' எனச் சொல்லி அழைத்துச் சென்றார்.
அட... நான் தங்கும் வீடு, அந்த தலைவரின் வீட்டுக்கு அடுத்த வீடு. மாடியில் ஏறிப் பார்த்தேன். அங்கே... அண்ணா, அவர் வீட்டு மாடியில் யோசித்தபடி இருப்பதைப் பார்க்க முடிந்தது.
என் அம்மாவின் மாமா சின்னத்தம்பி சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வராக பணியாற்றிய காலத்தில்தான் அண்ணா அங்கே படித்திருக்கிறார். கல்விக் கட்டணம் கட்டுவதில் சிரமம் ஏற்படவே... படிப்பை பாதியில் நிறுத்தவிருப்பதாகச் சொல்ல... "நீ தொடர்ந்து படி! உன் கல்விக் கட்டணத்தை நான் கட்டுறேன்' என பிரின்சிபல் சின்னத்தம்பி சொல்ல... அண்ணா படிப்பைத் தொடர்ந்திருக்கிறார்.
(நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற என் பாட்டியின் அம்மாவோட தாத்தா மாசிலாமணி பிள்ளையை பச்சையப் பன் கல்லூரி ட்ரஸ்ட்டிகளில் ஒருவ ராக்கியிருக்கிறார் சின்னத்தம்பி. மாசிலாமணி பிள்ளையின் முயற்சியால் தான்... சென்னை ராஜா அண்ணாமலை புரம் பகுதியில் சிறியதாக இருந்த பச்சையப்பன் கல்லூரி, இப்போதைய பெரிய இடத்திற்கு வந்திருக்கிறது)
அண்ணா, அரசியல் பணிகளுக்கு மத்தியில் நாடகங்களுக்கும், சினிமாவுக்கும் எழுதிக்கொண்டிருந்தார். அவரிடம் என்னை அறிமுகப்படுத்தினால் படிப்பில் கவனமாக இருக்கமாட்டேன் என நினைத்து, காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரியில் பி.யு.சி. வகுப்பில் சேர்த்துவிட்டு சென்னை கிளம்பிவிட்டனர்.
ஆனால்...
* அண்ணாவுடன் பழக்கம்...
* கலைஞருடன் பிரச்சாரம்!
(திரை விரியும்...)
__________
முதன்முதலா பார்த்த ஹீரோ!
சென்னையிலிருந்து அறிஞர் அண்ணாவை சந்திக்க காஞ்சிபுரம் வரும் பிரபலங்கள் இரவு தங்க நேர்ந்தால், அண்ணாவின் வீட்டுக்கு எதிரே இருந்த; அண்ணா நடத்திவந்த'HOME LAND' ஆங்கில பத்திரிகை அலுவலகத்தில்தான் தங்குவார்கள். ஒருநாள் காலையில் எழுந்து மாடிக்குச் சென்றபோது, எதிரே பத்திரிகை அலுவலக மாடியில் நின்றுகொண்டிருந்தவரைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சி! அன்றைய திரையுலகிலும், நாடக உலகிலும் கொடிகட்டிப் பறந்த, திராவிட முன்னேற்றக் கழக கலைப்பிரமுகர்களில் ஒருவரான "நடிப்பிசைப் புலவர்' என அழைக்கப்பட்ட 'K.R.R.' எனப்படும் கே.ஆர்.ராமசாமி அவர்கள். கருப்பு; குள்ளம்; வெள்ளைப்பட்ட உதடு! ஆயினும் வசீகரமாக இருந்தார் கே.ஆர்.ஆர்.