கோலிவுட், பாலிவுட், மல்லுவுட், டோலிவுட் இப்படி எல்லா வுட் சினிமாக்களின் மெகா ஸ்டார்களை கொரோனா விதி பிடித்து ஆட்டுவதால் வீட்டை விட்டு வெளியே வருவதற்குப் பயப்படுகிறார்கள். ஆனால் 60 பேர் மட்டுமே அனுமதி என்ற அரசாங்கத்தின் கட்டுப்பாடு களுடன் டெலிவுட் ஏரியாவான டி.வி. சீரியல்களின் ஷூட்டிங் சென்னையிலும் சில அவுட்டோர் லொகேஷன்களிலும் பரபரப்பாகவும் பாதுகாப்பாகவும் நடந்து வருகிறது.

சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் "கண்மணி', ’"கல்யாண வீடு', "பாண்டவர் இல்லம்', விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் "பாரதி கண்ணம்மா' போன்ற சீரியல்களின் ஷூட்டிங் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. அதேசமயம் "அழகி' சீரியலை நிறுத்தும் முடிவில் சன் டி.வி. இருப்பதால் ரேவதியும் தலைவாசல் விஜய்யும் அப்செட்டில் இருக்கிறார்கள்.

cc

சீரியல் ஷூட்டிங் ஏரியாக் களிலும் விஜயகுமார், தேவயானி, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன் போன்ற சீனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் கொரோனா பயத்தால் கலந்துகொள்வதில்லை.

ஆனால் மாஜி கவர்ச்சி நடிகையான "மடிப்பு அம்சா' விசித்ரா மட்டும் துணிச்சலாக வெளியே வந்து 10 நாட்கள் "ராசாத்தி' ஷூட்டிங்கில் கலந்துகொண்டு நடித்துள்ளார். அத்துடன் சினிமாவிலும் மீண்டும் ஒரு ரவுண்டு வர தீவிர சான்ஸ் வேட்டையிலும் இறங்கிவிட்டாராம்.

பி.ஆர்.ஓ. ராஜேஷ் மூலம் விசித்ராவை தொடர்புகொண்டு, "உங்களுக்கு கொரோனா பயம் இல்லையா?' என்றோம்.

""பயந்தா பொழப்பு என்னாகுறது? ரஜினி சாரின் "முத்து', சத்யராஜ் சாரின் "வில்லாதி வில்லன்', பிரபு சாரின் "பெரிய குடும்பம்', ஏவி.எம். தயாரித்த "வாழ்க்கை' டி.வி. சீரியலில் பானுப்ரியாவுடன் இப்படி ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டிருந்த பீக் பீரியடில்தான் மேரேஜ் பண்ணினேன். கணவருடன் மைசூரில் செட்டிலாகிவிட்டேன். இப்ப இரண்டு பசங்களும் வளர்ந்து பெரிய ஆளாகிவிட்டார்கள்.

20 வருஷமா சினிமாவுக்கும் எனக்கும் கனெக்ஷன் விட்டுப்போயிருந்த நிலையில்தான், திடீர்னு ஒருநாள் டைரக்டர் ராஜ்கபூர் சார் என்னை கான்டாக்ட் பண்ணினார். “சன் டி.வி.யில் "ராசாத்தி'ங்கிற சீரியல் மெகா பட்ஜெட்டில் தயாராகப்போகுது... அதுல உனக்கு வில்லி வேஷம்னு சொன்னதும் உடனே ஒத்துக்கிட்டேன். வில்லி சிந்தாமணி கேரக்டர் என்னை பிரபலப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில்தான் கொரோனா பிராப்ளம் வந்து "ராசாத்தி' ஷூட்டிங்கும் நின்னுப்போச்சு.

ஜூன் மாசம் லாக்டவுனில் சில ரிலாக்சேஷன் கிடைத்ததால் 10 நாட்கள் "ராசாத்தி' ஷூட்டிங் நடந்துச்சு. அதில் 8 நாட்கள் என்னோட போர்ஷன் என்பதால் ஹேப்பியா கலந்துக்கிட்டேன். இதுபோல சினிமாவிலும் மீண்டும் ஒரு ரவுண்ட் அடிக்க முடிவுபண்ணிட்டேன். வில்லி, குணசித்ரம், அக்கா, அண்ணி, அம்மா, சித்தி இப்படி எந்த வேஷம்னாலும் ஓ.கே.தான். சில லீடிங் டைரக்டர்களிடமும் பேசியிருக்கேன். எனது கணவர், குழந்தைகளை கொச்சின்ல செட்டில் பண்ணிவிட்டு, நான் சென்னையிலேயே செட்டில் ஆகிட்டேன்''’என்றார் விசித்ரா.

இதற்கடுத்து ‘தைரியசாலி’ சீரியல் நடிகை ஃபரினா ஆஸாத். சன் டி.வி.யில் ஒளிபரப்பான "கிச்சன் கலாட்டா' ஷோ மூலம் டி.வி. ஏரியாவுக்குள் என்ட்ரியானவர் ஃபரினா. அதன்பின் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான "பாரதி கண்ணம்மா' சீரியலில் வில்லி வெண்பா’கேரக்டர் ஃபரினாவை பாப்புல ராக்கியது. "பாரதி கண்ணம்மா' ஷூட்டிங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஃபரினாவிடம் பேசினோம்…

""லாக்டவுன் பீரியடில் வீட்டுக்குள்ளே இருந்துட்டு, இப்ப கொரோனா பீதியிலும் தைரியமா வெளில வந்துட்டீங்களே'' என்றோம்.

""என்ன சார் பண்றது? நாம சும்மா இருந்தாலும் வயிறு சும்மா இருக்க விடாதே. லாக்டவுன் பீரியடில் கூட நான் குடியிருக்கும் மதுரவாயல் பிளாட்டில் நாலைந்து பேருடன் சேர்ந்து தினமும் 30 ஏழைகளுக்கு உணவு சமைத்து கோயிலில் கொண்டுபோய் கொடுத்தோம். பிளாட்பார வாசிகளுக்கு என்னால் முடிந்த உதவி செய்ததில் மனசுக்கு திருப்தி.

இப்ப பதினஞ்சு நாளா "பாரதி கண்ணம்மா' ஷூட்டிங் நடக்குறதால கொஞ்சம் தெம்பா இருக்கு. என்னைப் போன்ற வளர்ந்துவரும் சீரியல் நடிகைகளுக்கு மாசத்துல 20 நாள் ஷூட்டிங் இருந்தா போதும். ஏதோ கொஞ்சம் சமாளிச்சு பொழப்ப ஓட்டிக்கிருவோம்.

இப்ப வெப்சீரிசில் நடிப்பதற்கு பேசிக்கிட்டிருக்கேன். சினிமாவுக்கும் முயற்சி பண்ணிக்கிட்டிருக்கேன்'' என்ற ஃபரினா, கொஞ்சம் கிளாமர் ஃபயரான ஸ்டில்களையும் நமக்கு அனுப்பியிருந்தார்.

பெங்களூர் பார்ட்டியான சஞ்சிதா ஷெட்டி, கன்னட சினிமாவிலும், தமிழ், தெலுங்கு, மலை யாளப் படங்களில் துண்டு துக்கடா கேரக்டர்களில் நடிதுவந்தார்.

"கொள்ளைக்காரன்' படத்தில் ஹீரோயினாக வந்தாலும் "தில்லாலங்கடி' படத்தில் தமன்னாவுக்கு தங்கச்சியா வந்து பளிச் சென தெரிந்தார்.

அடுத்து "சூது கவ்வும்' படத்தில் "மாமோய்' இவரை பிரபலமாக்கினாலும் எதிர்பார்த்த ஹீரோயின் சான்ஸ் கிடைக்காததால் சென்னையைக் காலி செய்துவிட்டு பெங்களூரில் செட்டிலாகி விட்டார். இனிமே சினிமா எப்படி இருக்குமோ? நல்லபடியா ஆரம்பமானாலும் நமக்கு ஹீரோயின் சான்ஸ் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் சஞ்சிதா ஷெட்டி.

தமிழ் டி.வி. சீரியல்கள் மும்முரமாய் நடப்பதைக் கேள்விப்பட்டு பெங்களூருவிலிருந்து தனது ஃபர்ஸ்ட் ரவுண்ட் போட்டோக்களை கோலிவுட் பி.ஆர்.ஓ. மூலம் டெலி வுட்டில் உலவவிட்டுள்ளார். இதற்கு கிடைக்கும் ரிசல்ட்டைப் பொறுத்து, அடுத்து ரவுண்ட் போட்டோக்களை அதிரிபுதிரியாக ரிலீஸ்பண்ண ரெடியாகிவிட்டாராம் சஞ்சிதா ஷெட்டி.

-ஈ.பா.பரமேஷ்வரன்

Advertisment

___________

டெலிவுட் சீக்ரெட்!

சினிமாவில் ஹீரோயினாக ஜொலிக்க முடியாமல் திணறி சின்னத்திரைக்குள் என்ட்ரியானவர். திடீர் திடீர் என தற்கொலைக்கு முயற்சி செய்து பீதியைக் கிளப்புவார். ‘எனது இந்த நிலைக்குக் காரணம் அவர்தான்’ என்பார். சினிமா-அரசியல் இரண்டிலும் தொடர்புடைய ‘அவர்’ ஆட்கள் இவர் மீது பாய்வார்கள்.

Advertisment

இவர்தான் இப்போது சென் னையில் 100 நாட்களுக்கு மேலாக ஒரு இடத்தில் தனது குடும்பத்துடன் தங்கியுள்ளார். தங்கும் இடத்தின் வாடகை லட்சக்கணக்கில் எகிறியதால், ஹீரோயினின் ஆரம்பகால ஹீரோ ஒருவர் சீக்ரெட்டாக 2 லட்சம் கொடுத்து விட்டாராம். இடத்தின் ஓனரும் ஹீரோயினிடமும் அவர் சிஸ்டரிடமும் பேசிவிட்டாராம்.