"ஹலோ தலைவரே, சின்னதா ஒரு தனி நாட்டை இலங்கையில் உருவாக்கி இருக்கு சீனா.''”
"ஆமாம்பா, ’ஹம்பன் தோட்டா’ துறைமுகப் பகுதி, சீனாவின் சுயாட்சிப் பிரதேசமா அறிவிக்கப்பட்டிருக்கு. இது நமக்கு மிகப் பெரிய ஆபத்தாச்சே.''”
"உண்மைதாங்க தலைவரே, உலக வல்லரசாக தன்னை நிலைநிறுத்துற சீனா, எல்லையில் இந்தியாவை சீண்டுவதோடு, நம்ம நாட் டைச் சுற்றி இருக்கும் 12 நாடு களில் தன்னோட ராணுவ முகாமையும் அமைச்சிருக்கு. இலங்கைக்கு நிறைய நிதி மற்றும் தளவாட உதவிகளைச் செய்து, அதை தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்துடுச்சி. இலங்கை தலைநகர் கொழும்புப் பகுதியில் உள்ள ‘ஹம்பன் தோட்டாவில் பிரம்மாண்டமான துறைமுகம் ஒன்றை உருவாக்கிடிச்சி. இந்தப் பகுதியைத் தான், தனது சுயாட்சி கொண்ட பிரதேசமா சீனா அறிவிச்சிருக்கு.''”
"அங்க ராணுவத் தளவாடத்தையும் சீனா கட்டமைக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, துறைமுகத்தின் அருகிலேயே, சீனாவின் ராணுவத்தளமும் அமைக்கப்பட்டு வருது. அங்கு இலங்கைக் காரர்கள் செல்வதென்றால்கூட அதற்குத் தனியா பாஸ்போர்ட் வாங்க வேண்டுமாம். அங்குள்ள ராணுவ முகாமில் இருந்து கொண்டு சீனா இந்தியாவை தாக்கக்கூடிய ஆபத்தும் இருக்குது. தாக்குதல் நடந்தால் பாதிக்கப்படப் போவது தமிழகம்தான். அண்டை நாடான இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை கண்காணித்து, அதன் முயற்சிகளைத் தடுக்கவேண்டிய மோடி அரசோ, தூக்கக் கலக்கத்தில் கொட்டாவி விட்டுக்கிட்டு இருக்கு.''”
"இலங்கைக்குப் பதிலா, மோடி அரசின் கவனமும் கண்காணிப்பும் தமிழகத்தின் பக்கம் தீவிரமாத் திரும்பியிருக்கே?''”
"தி.மு.க. அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் சுற்றியே பா.ஜ.க.வின் பார்வை குவிந்திருக்குதாம். காரணம், ஸ்டாலின், அதிரடி ஆக்ஷன்கள் மூலம் தமிழக மக்களை வெகுவாகக் கவர்ந்து வருவதை பா.ஜ.க. மேலிடத்தால் ரசிக்க முடியலையாம். எனவே, டி.ஜி.பி. திரிபாதி மூலம், தமிழக அரசின் அன்றாட செயல்பாடுகள் மற்றும் ஸ்டாலினின் மூவ்கள் பற்றிய தகவல் களைப் பிரதமர் அலுவலக ஜாயிண்ட் செகரட்டரி ஒருவர், தினமும் கலெக்ட் செய்து, அதை மோடியின் டேபிளுக்குக் கொண்டுபோகிறாராம்.''”
"ஓ...''”
"அந்த அதிகாரியால் இங்கே டி.ஜி.பி.யானவர்தான் திரிபாதி. இப்போதைய உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யான டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் தரும் அத்தனை ரிப்போர்ட்டும், டி.ஜி.பி. மூலம் இப்படி டெல்லிக்குப் போவது சிக்கலானது என்கிறது அதிகாரிகள் தரப்பு. மாநில அரசின் பலம் -பலவீனம் பற்றிய உளவு ரிப்போர்ட் டுகளை வைத்து தி.மு.க. அரசுக்கு எதிராக ஒரு சூறாவளியை உருவாக்க டெல்லி முயற்சிக்கலாம். புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு உள்ளிட்ட மத்திய அரசுத் திட்டங்களை தி.மு.க. அரசு அழுத்தமாக எதிர்ப்பதால், இப்படிப்பட்ட கண்காணிப்பைச் செய்கிறதாம் டெல்லி.''”
"சரிப்பா, தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபுவைக் கொண்டுவர ஒரு முயற்சி நடக்குதே?''”
"கடந்த அ.தி.மு.க. அரசுக்கு, அதிவிசுவாசமாக நடந்துகொண்ட டேவிட்சன் தேவ ஆசிர்வாதம், இப்ப இருக்கும் தி.மு.க. ஆட்சியில் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யாக அமர வைக்கப்பட்டிருக்கிறார். அவர் சமூகத்தைச் சேர்ந்த அமல்ராஜ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு மிக முக்கியமான பதவிகள் கொடுக்கப்பட்டிருக்குதாம். இப்போது இந்த வரிசையில் முன்னாள் டி.ஜி.பி. தேவாரத்தின் சிஷ்யரான சைலேந்திரபாபுவை, டி.ஜி.பி. நாற்காலியில் உட்காரவைக்கப் பெரும் முயற்சி நடக்குது.''”
"இந்தப் பதவிக்கு கரன்சின்ஹா வரலாம் என்றும் டாக் அடிபடுதே?''”
"ஐ.பி.எஸ். அதிகாரியான கரன்சின்ஹா, ஜெ.’ இருந்தபோதே கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்தவர். 2016 தேர்தலில் ஆட்சிக்கு வரமுடியாத தி.மு.க., சென்னையில் மட்டும் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அதனால் அவர், முக்கியத்துவம் இல்லாத பதவிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நேர்மையான அதிகாரியான அவரை, டி.ஜி.பி.யாக உட்கார வைக்கணும்னு அதிகாரிகளில் இன்னொரு தரப்பு முயல்கிறது. ஆனால், டெல்லிக்கு இதில் ஆர்வமில்லையாம்.''”
"தமிழக அரசின் பொதுத்துறைச் செயலாளர் நியமனம் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்குதே?''”
"தலைமைச் செயலாளர் பதவிக்கு அடுத்து பவர்ஃபுல்லான பதவி, பொதுத்துறைச் செயலாளர் பதவிதான். இந்தப் பதவியில் பேரிடர் மேலாண்மைத் துறையில் இருந்த டி.ஜெகநாதன், நியமிக்கப்பட்டிருக்கிறார். பொதுத்துறையின் ஸ்பெஷல் செக்ரட்டரியாக இருப்பவர் வெங்கடேசன் ஐ.ஏ.எஸ். இவர், 2001 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி. ஆனால், இவருக்கு மேலே பொதுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஜெகநாதன், 2010 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி. அதுவும் டைரக்ட் ஐ.ஏ.எஸ். கிடையாது. வெங்கடேசனைவிட ஜெகநாதன், 10 ஆண்டுகால ஜூனியர். இதனால் மன உளைச்சலில் வெங்கடேசன் இருப்பதாகக் கோட்டை வட்டாரம் சொல்லுது.''”
"சீனியாரிட்டியைத் தாண்டி ஜெகநாதன் நியமனத்தில் வேறு ஏதேனும் சர்ச்சை இருக்குதா?''”
"ஆமாங்க தலைவரே, ஜெகநாதன், பேரிடர் மேலாண்மைத் துறையில் இருந்தபோது, அரசின் மாஸ்க் கொள்முதல் தொடர்பான ஊழல் சர்ச்சையில் சிக்கினார். இந்த ஊழல் பற்றி தேர்தல் களத்தில்கூட ஸ்டாலின் விமர்சனம் செய்தார். அந்த ஊழலில் தொடர்புடைய அதிகாரி இப்படிப்பட்ட துறைக்கு வந்தது, அதிகாரிகள் மட்டத்தில் அதிர்ச்சியா இருக்குது. துறை அதிகாரிகளை ஒருமையில் மோசமா பேசுபவர் ஜெகநாதன்னு குற்றம் சாட்டுறாங்க. கடந்த ஆட்சியில் பல்வேறு சர்சைகளில் சிக்கிய அதிகாரிகள் பலரும் லாபி பண்ணி, இந்த ஆட்சியிலும் நல்ல பதவியில் உட்கார்ந்தால் ஸ்டாலினால் எப்படி நேர்மை யான வெளிப்படையான நிர் வாகத்தைத் தர முடியும்னு கோட் டையில் முணுமுணுப்பு கேட்குது.''”
"கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கோலோச்சிய காண்ட்ராக்டர்களும் இப்ப, இருக்கும் பவர்ஃபுல் புள்ளிகளை அணுகறாங்களே... இதற்கிடையில் நெடுஞ்சாலை துறையில் ஏதோ டீடெய்ல் கலெக்ட் பண்ணப்படுதாமே?''
"தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தனது சீட்டில் அமர்ந்ததுமே, கடந்த ஒரு வருடத்தில் நெடுஞ்சாலைத் துறையில் விடப்பட்ட டெண்டர்களின் விபரத்தையும், ஒரு வருடத்தில் நடந்துமுடிந்த திட்டப்பணிகள் பற்றிய விவரத்தையும், டெண்டர்களை எடுத்துள்ள காண்ட்ராக்டர்களின் விவரங்களையும், அவர்களின் பின்னணிகளையும் தொகுத்துத் தரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்காராம். ஏனென்றால், ஒழுங்காக பணிகள் நடக்குதான்னு தெரிஞ்சிக்கிறதோட, தி.மு.க.வைச் சேர்ந்த காண்டராக்டர்கள் கடந்த ஆட்சியில் ஏதேனும் கொஞ்சமாவது பயன் அடைஞ்சிருக்காங்களான்னு தெரிஞ்சிக்கவும் அவர் விரும்பறாராம். அதனால் தி.மு.க. காண்ட்ராக்டர்கள் தரப்பு, நமக்கான காலம் வந்துடுச்சுன்னு நம்பிக்கையோட, உற்சாகம் அடைஞ்சிருக்குதாம். ஆனால் அ.தி.மு.க ஆட்சிக்கால காண்ட்ராக்டர்களின் சிண்டிகேட்தான் கோட்டையில் இன்னமும் கொடிகட்டிப் பறக்குது.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். மத்திய அரசின் ஜி.எஸ்.டி. கவுன்சில், வரும் 28-ந் தேதிகூட இருக்குது. மாநிலத்திலுள்ள நிதி அமைச்சர்கள் இந்த கவுன்சில் கூட்டத்தில் கலந்துக்க இருக் காங்க. வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடக் கும் அந்த கூட்டத்தில், தமிழகத்தின் சார்பில் நிதி அமைச்சர் கலந்துகொள்வது பற்றிய முடிவு இன்னும் எடுக்கப்படலையாம். அப்படி நிதியமைச்சர் கலந்துக்கிட்டால் தமிழகத் திற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை, வலியுறுத்திக் கேட்பார்னு, துறை அதிகாரிகள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுது.''’
_____________
இறுதிச்சுற்று!
அதிரடி ஆக்ஷன்! அதிர்ச்சியில் கிறிஸ்டி ஃபுட்ஸ்!
தி.மு.க. அரசு, நடப்பு நிதியாண்டுக்கான பருப்பு கொள்முதலுக்கும், கொரோனா நிவாரண கிட்ஸ் கொள்முதலுக்கும் டெண்டர் அறிவிப்பை, சிவில் சப்ளை கார்ப்பரேசன் மூலம் செய்தது. இதில் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஊழல் சர்ச்சையில் சிக்கிய கிறிஸ்டி ஃபுட்ஸ் நிறுவனத்துக்கு மட்டுமே டெண்டர் கிடைக்கும் வகையில், அதன் நடைமுறைகள் இருப்பதை, அறப்போர் இயக்கத் தலைவர் ஜெயராம் வெங்கடேஷன், அரசின் கவனத் துக்குக் கொண்டு போனார். இதைத் தொடர்ந்து, டெண்டர் நடைமுறைகள் பொதுத்தன்மை யுடன் மாற்றியமைக்கப்பட்டன. இந்த நிலையில், 1 கிலோ துவரம்பருப்பு ஹோல்சேலில் 100 ரூபாய்க்கும் குறைவாகவும் கிடைக்கும் நிலையில், 143 ரூபாய்க்கு கடந்த அரசு, கொள்முதல் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் தற்போதும் தொடர்ந்த நிலையில், இதன்மூலம் 100 கோடி ரூபாய் ஊழல் நடக்கவிருந்ததை அறிந்து, மீண்டும் அறப்போர் இயக்கம் அரசின் கவனத்துக்கு இதைக் கொண்டுபோனது. அதனால், பருப்பு கொள்முதல் டெண்டரையே ரத்து செய்துவிட்டது தி.மு.க. அரசு. இதனால், ஹைவோல்ட் அதிர்ச்சியில் இருக்கிறது கிறிஸ் ஃபுட்ஸ்.