ராங்கால் : எச்சரித்த முதல்வர்! வியர்த்த அமைச்சர்கள்! குஷ்புவின் ராஜினாமா ஏன்?

ss

"ஹலோ தலைவரே, நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டிருக்கு.''”

"ஆமாம்பா, சென்னை கோட்டை கொத் தளத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், தேசியக் கொடியை உற்சாகமாக ஏற்றி வைத்திருக்கிறாரே''”

’"ஆமாங்க தலைவரே, இந்த ஆண்டும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின சிறப்பு அணிவகுப்புகளைப் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு, பாரதியார் பாடலுடன் தனது சுதந்திரதின உரையைத் தொடங்கினார், மாநில முதல்வர்களுக்கு இந்த நாளில் கொடி ஏற்றும் உரிமையை 50 ஆண்டு களுக்கு முன் பெற்றுக்கொடுத்தவர் என்று நூற்றாண்டு நாயகர் கலைஞரை நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்த அவர், அதுவும் ஒரு சுதந்திரப் போராட்டம்தான் என்றார். இதைத் தொடர்ந்து, சீனியர் அரசியல் தலைவரான குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கினார் ஸ்டாலின். வீல்சேரில் அமர்ந்தபடி அதைப் பெற்றுக்கொண்ட குமரியாரிடம் நெகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது. அதேபோல் வீரதீர செயல்களைச் செய்த பலரும் சிறப்பிக்கப்பட்டனர். கடந்த ஆண்டைப் போலவே கவர்னர் ஆர்.என்.ரவி கொடுத்த சுதந்திர தின தேநீர் விருந்தை தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் புறக்கணித்துவிட்டன..''”

raang

"அமெரிக்கா செல்ல இருக்கும் ஸ்டாலின், அமைச்சரவைக் கூட்டத்தில் சாட்டையைச் சுழற்றியிருக்கிறாரே?''”

’"ஆமாங்க தலைவரே, 27ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருக்கும் முதல்வர் ஸ்டாலின், அது தொடர்பான பரபரப்புக்கு நடுவிலும் 13ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார். அமைச்சர் உதயநிதி வெளிநாட்டுப் பயணத்தில் இருப்பதால், அவர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வில்லை. இதில் சில நிதித் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. 50 நிமிடங்கள் கூட்டத்தை நடத்திய ஸ்டாலின், இதன் பிறகுதான் சீரியஸ் ஆகி

"ஹலோ தலைவரே, நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டிருக்கு.''”

"ஆமாம்பா, சென்னை கோட்டை கொத் தளத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், தேசியக் கொடியை உற்சாகமாக ஏற்றி வைத்திருக்கிறாரே''”

’"ஆமாங்க தலைவரே, இந்த ஆண்டும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின சிறப்பு அணிவகுப்புகளைப் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு, பாரதியார் பாடலுடன் தனது சுதந்திரதின உரையைத் தொடங்கினார், மாநில முதல்வர்களுக்கு இந்த நாளில் கொடி ஏற்றும் உரிமையை 50 ஆண்டு களுக்கு முன் பெற்றுக்கொடுத்தவர் என்று நூற்றாண்டு நாயகர் கலைஞரை நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்த அவர், அதுவும் ஒரு சுதந்திரப் போராட்டம்தான் என்றார். இதைத் தொடர்ந்து, சீனியர் அரசியல் தலைவரான குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கினார் ஸ்டாலின். வீல்சேரில் அமர்ந்தபடி அதைப் பெற்றுக்கொண்ட குமரியாரிடம் நெகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது. அதேபோல் வீரதீர செயல்களைச் செய்த பலரும் சிறப்பிக்கப்பட்டனர். கடந்த ஆண்டைப் போலவே கவர்னர் ஆர்.என்.ரவி கொடுத்த சுதந்திர தின தேநீர் விருந்தை தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் புறக்கணித்துவிட்டன..''”

raang

"அமெரிக்கா செல்ல இருக்கும் ஸ்டாலின், அமைச்சரவைக் கூட்டத்தில் சாட்டையைச் சுழற்றியிருக்கிறாரே?''”

’"ஆமாங்க தலைவரே, 27ஆம் தேதி அமெரிக்கா செல்லவிருக்கும் முதல்வர் ஸ்டாலின், அது தொடர்பான பரபரப்புக்கு நடுவிலும் 13ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார். அமைச்சர் உதயநிதி வெளிநாட்டுப் பயணத்தில் இருப்பதால், அவர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வில்லை. இதில் சில நிதித் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. 50 நிமிடங்கள் கூட்டத்தை நடத்திய ஸ்டாலின், இதன் பிறகுதான் சீரியஸ் ஆகியிருக் கிறார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை எல்லாம் வெளியே அனுப்பிவிட்டு, அமைச்சர்களிடம் கறார் குரலில் பேசிய ஸ்டாலின், "நீங்கள் ஒவ்வொருவரும் என்னென்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் முழுதாக அறிவேன். உங்கள் ஒவ்வொரு அசைவும் எனக்குத் தெரியும். அதனால், யாரை எங்கே வைப்பது என்பதெல்லாம் நான் தெரிந்து வைத்திருக்கிறேன். அமைச்சர்களான நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். இல்லையென்றால் அதற்குரிய நடவடிக்கை கட்டாயம் இருக்கும்' என்று அவர்களை எச்சரிக்கும் வகையில் சொல்லியிருக்கிறார். முதல்வரிடம் அப்போது வெளிப் பட்ட ரௌத்திர முகம், அமைச்சர்கள் சிலரை வியர்க்க வைத்துவிட்டதாம்.''”

"கலைஞரின் நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படவிருக்குதே?''”

"ஆமாங்க தலைவரே, சென்னையில் வருகிற 18ஆம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நினைவு நாணயத்தை, ஒன் றிய அமைச்சர் ராஜ்நாத்சிங் வெளியிடவிருக்கிறார். இதற்காக ஏற்பாடு செய்யப்படும் விழாவில், கருத்து வேறுபாடுகள் இல்லாமல் அனைத்துக் கட்சிகளும் கலந்துகொள்ளணும்னு முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார். அதற்காக எடப்பாடி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் தி.மு.க. தலைமை அழைத்திருக்கிறது. இந்த கலைஞர் நினைவு நாணயம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருமாங்கிற கேள்வி அனைத்துத் தரப்பிலும் எழுந்திருக்கு. அதனால் இதுபற்றி விசாரித்தபோது, ’கலைஞர் நினைவு நாணயம் வெளியிடப்படுவதோடு சரி... மக்கள் புழக்கத்துக்கு வராது என்றனர்.''”

"இந்தக் கலைஞர் நினைவு நாணயத்தை வாங்க ஆசைப்படுகிறவர்களுக்கு என்ன வழி?''”

"அப்படிப்பட்டவர்களுக்கு கலைஞர் நினைவு நாணயம் தேவை என்றால், அவர்கள் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு சென்று வாங்கிக் கொள்ளலாமாம். 100 ரூபாய் மதிப்புள்ள கலைஞர் நினைவு நாணயம் ஒன்றின் விலை 2,600 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக சொல் கிறார்கள். ஆனால், இந்த நாணயம் எப்பொழுதில் இருந்து விற்பனைக்கு வரும் என்கிற அறிவிப்பு, அதன் வெளியீட்டு விழாவின்போது அறிவிக்கப்பட லாம் என்கிறார்கள். கலைஞர் உருவம் பொறித்த நாணயங்கள், வெறும் நினைவு நாணயங்களாக இல்லாமல், மக்களின் பயன்பாட்டுக்குக் கிடைக்க, தமிழக அரசுதான் முயற்சி எடுக்கவேண்டும். ஆனால், அதற்கான முயற்சியில், அரசின் உயரதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை என்ற குமுறலும் தி.மு.க. நிர்வாகிகள் தரப்பில் இப்பவே கேட்க ஆரம்பிச்சிருக்கு.''”

"நடிகை குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப் பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறாரே?''”

rr

"ஆமாங்க தலைவரே, கொஞ்ச நாட்களாக பா.ஜ.க. தலைமையிடமிருந்து விலகி நிற்கும் நடிகை குஷ்பு, தனது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். எனினும், தமிழக பா.ஜ.க. தலைவராக குஷ்பு அமர இருப்பதால்தான் இந்த ராஜினாமா என்கிற தகவல் சட்டென கமலாலயத் தரப்பிலேயே பரவ ஆரம்பித்தது. ஆனால் குஷ்புவுக்கு நெருக்கமானவர் களோ, அவருக்கு உடல்நலம் சரியில்லாததால்தான் ராஜினாமா செய்திருக்கிறார் என்கிறார்கள். ஆனால் இன்னும் சிலரோ, நடிகர் விஜய்யிடம் நல்ல நட்பில் இருக்கும் குஷ்பு, அவரது தமிழக வெற்றிக் கழகத் தில் இணைந்து செயல்படத் திட்டமிட்டிருக்கிறார். அதனால்தான் பா.ஜ.க. கொடுத்த மகளிர் ஆணையப் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என்று அடித்துச் சொல்கிறார்கள். எது எப்படியோ, குஷ்புவின் ராஜினாமா, தமிழக அரசியல் களத்தில் சுவாரஸ்யமான பரபரப்பு அலைகளை ஏற்படுத்தி யிருக்கிறது.''”

"சரிப்பா, அரசுப் பணியாளர்கள் தேர்வாணை யத்துக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டிருப்பதற்கு, கோட்டை வட்டாரத்தில் விதவிதமான டாக்குகளும் அடிபடுகிறதே?''”

"ஆமாங்க தலைவரே, டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நிய மிக்கப்பட்டிருக்கும் பிரபாகர், 1989 ஆம் ஆண்டு பேட்ஜ் அதிகாரி. முன்னாள் உள்துறைச் செயலாளரான இந்த பிரபாகர், எடப்பாடிக்கு மிக நெருக்க மானவர் என்கிறார்கள். இந்துத் துவா அமைப்புகளுடனும் தீவிர நெருக்கம் வைத்திருக்கும் இவரது நியமனம் இஸ்லாமியத் தரப்பையும் சங்கடப்படுத்தி வருகிறது. இவருக்கு இன்னும் ஒன்னரை ஆண்டுகாலம் மட்டுமே சர்வீஸ் இருக்கிறது. அப்படிப்பட்ட பிரபாகரை எதற்கு இப்படியொரு பதவியில் அமர்த்தணும்னு சிலர் கேள்வி எழுப்பறாங்க. அமைச்சர் எ.வ.வேலுவின் சிபாரிசில்தான் இவருக்கு இந்தப் பதவி கிடைத் திருப்பதாக சிலர் சொல்லிவரும் நிலையில், இதை அறிவாலயத் தரப்பு மறுக்கிறது. இதே தேர்வாணை யத்தில் காலியாக இருக்கும் 4 உறுப்பினர் பணியிடங்களை நிரப்பவும் முதல்வர் அலுவலகம் கோப்புகளை நகர்த்திவருகிறது. அந்தப் பணியிடங் களைக் கைப்பற்ற சில தி.மு.க. வழக்கறிஞர்களும் சில கல்வியாளர்களும் கிச்சன் கேபினெட்டை அணுக ஆரம்பித்திருக்கிறார்களாம்.''”

"ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரத்தில் தேடப்படும் சம்பவ செந்தில் உயிருக்கு, ஆபத்து காத்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறதே?''”

"ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் சம்பவ செந்தில் இன்னும் பிடிபடாததால், வழக்கில் ஒரு தேக்கம் தெரிகிறது. இந்த விவகாரத்தில் அண்மையில், இளைஞர் காங்கிரஸ் பிரமுகரான வழக்கறிஞர் அஸ்வத்தாம னையும், அவரது தந்தையான பிரபல ரவுடி நாகேந்திரனையும் கைது செய்திருக்கிறார்கள். இந்த ரவுடி நாகேந்திரனிடம் ஒருமுறை "உன் மகன் அஸ்வத்தாமனைக் கொன்றுவிடுவேன்'’என்று ஆம்ஸ்ட்ராங் மிரட்டியதாகவும் சொல்கிறார்கள். இதையும் மோட்டிவ் வாக போலீஸ் பார்க்கிறதாம். இப்படி சிலருக்கு மோட்டிவ் இருந்தாலும், கொலைக்கு ரூட் போட்டுக் கொடுத்தது சம்பவ செந்தில் தான் என்கிறது போலீஸ். அவர்தான் முக்கிய குற்றவாளி என்பதால், அவர் சிலரால் குறிவைக்கப்பட்டு இருப்பதாக வும், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் சம்பவ செந்திலை உயிருடன் பிடிக்க முயற்சித்து வருவதாகவும் தற்போது போலீஸ் தரப்பு சொல்ல ஆரம்பித்திருக்கிறது.''’

"தமிழகத்தின் மூத்த அமைச்சரின் இலாகாவில் பணியிட மாறுதலுக்கான வசூல் களை கட்டுதாமே?''…”

rr

"ஆமாங்க தலைவரே, கிட்டத்தட்ட 900 பணியிடங்களுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருதாம். அதிலும் பதவிக்கு ஏத்தமாதிரி குறைந்தபட்சம் 8 லட்சத்திலிருந்து 50 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டு வசூலிக் கிறாங்களாம். இந்தப் பணிகளில் துடிப்பாக செயலாற்றிக்கொண்டிருந்த ஒரு இடைத்தரகரிடம் பேசியபோது, "உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பணியிட மாறுதல் ஏதாவது வேணும்னா சொல்லுங்க போட்டுக் கொடுத்துவிடலாம்’என கேசுவலாகக் கூறினார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் எப்போது பிரச்சனையாக வெடிக்கப்போகுதோ தெரியலை.''”

’"நானும் அறிவாலயத் தரப்பிலிருந்து கசிந்த ஒரு ரகசியத் தகவலைப் பகிர்ந்துக்கறேன். முக்கிய மாவட்ட அமைச்சராக இருப்பவரை, தனிப்பட்ட முறையில் அழைத்த ஸ்டாலின், ’நீங்கள் செய்ததெல்லாம் எனக்குத் தெரியும். யார், யாருடன் எப்படி எப்படியெல்லாம் பேசினீர்கள் என்பதையும் நான் அறிவேன். இனியாவது மாறுங்கள், உங்கள் பிள்ளையின் எதிர்காலம் பாதிக்காத வகையில் நடந்துகொள்ளுங்கள்... அதுதான் உங்களுக்கு நல்லது’ என்று எச்சரிக்கைக் குரலில் பேசினாராம். அதில் இருந்த கடுமையைக் கண்ட அந்த அமைச்சர், ஸ்டாலினிடம் உளப்பூர்வமாக வருத்தம் தெரிவிக்க, அவர் மன்னிக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள்.''”

nkn170824
இதையும் படியுங்கள்
Subscribe