"ஹலோ தலைவரே, எதிர் எதிர் துருவத்தில் இருக்கும் மாஜி முதல்வர்களான எடப்பாடியும் ஓ..பி.எஸ்.ஸும் மனக்குழப்பத்தில் இருக்காங்க.''”
"ஆமாம்பா, சென்னை வந்த பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தும், அவர்கள் நினைத்தது எதுவும் நடக்கலையே?''”
"சரியாச் சொல்றீங்க தலைவரே, சென்னை வந்த மோடியிடம் தங்களது அதிகார யுத்தம் பற்றிய பஞ்சாயத்தைக் கொண்டு போய், தங்களுக்கு அவரது ஆதரவைப் பெற்றுவிட வேண்டும்னு ரெண்டுபேருமே நினைச்சாங்க. அவங்களுக்குத் தோதா, சென்னை வந்த மோடியை வரவேற்கும் டீமில் எடப்பாடிக்கும், அவரை வழியனுப்பும் டீமில் ஓ.பி.எஸ்.ஸுக்கும் இடம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மோடியோ, அவர்கள் இருவரிடமும் எப்படி இருக்கீங்கன்னு நலம் விசாரித்துவிட்டு, வேறு எதுபத்தியும் பேசாமல் இறுக்கமாவே இருந்துட்டார். இருந்தும் விடாப்பிடியாக, அவரை வழியனுப்பச் சென்ற ஓ.பி.எஸ், உங்களை டெல்லியிலாவது சந்திச்சிப் பேசணும்னு அழாத குறையாகக் கேட்க, அப்போதும் அதைக் காதில் வாங்காதது போல் புறப்பட்டுவிட்டாராம் மோடி.''”
"அப்படி இருந்தும், கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டலைங்கிற மாதிரி எடப்பாடி காட்டிக்கிறாரே.''”
"ஆமாங்க தலைவரே, மோடி தன்னிடம் தனித்துப் பேசாததில் தனக்கு வருத்தமில்லைன்னு காட்டுகிற எடப்பாடி, தன்னை மோடி சந்தித்திருந்தால், ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்திருக்கும். குறிப்பாக, அ.தி.மு.க. பிரச்சனையை சால்வ் செய்ய, மோடியிடம் எடப்பாடி சரணாகதி அடைஞ்சிட்டாருன்னு பத்திரிகைல எழுதுவாங்க. அதனால் மோடியுடன் தனிச் சந்திப்பு நடக்காதது நல்லதுக்குதான்னு, தன் சகாக்களிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறாராம். அடுத்த கட்டமாக, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி, அந்தப் பதவியில் உட்கார்ந்துடண
"ஹலோ தலைவரே, எதிர் எதிர் துருவத்தில் இருக்கும் மாஜி முதல்வர்களான எடப்பாடியும் ஓ..பி.எஸ்.ஸும் மனக்குழப்பத்தில் இருக்காங்க.''”
"ஆமாம்பா, சென்னை வந்த பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தும், அவர்கள் நினைத்தது எதுவும் நடக்கலையே?''”
"சரியாச் சொல்றீங்க தலைவரே, சென்னை வந்த மோடியிடம் தங்களது அதிகார யுத்தம் பற்றிய பஞ்சாயத்தைக் கொண்டு போய், தங்களுக்கு அவரது ஆதரவைப் பெற்றுவிட வேண்டும்னு ரெண்டுபேருமே நினைச்சாங்க. அவங்களுக்குத் தோதா, சென்னை வந்த மோடியை வரவேற்கும் டீமில் எடப்பாடிக்கும், அவரை வழியனுப்பும் டீமில் ஓ.பி.எஸ்.ஸுக்கும் இடம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மோடியோ, அவர்கள் இருவரிடமும் எப்படி இருக்கீங்கன்னு நலம் விசாரித்துவிட்டு, வேறு எதுபத்தியும் பேசாமல் இறுக்கமாவே இருந்துட்டார். இருந்தும் விடாப்பிடியாக, அவரை வழியனுப்பச் சென்ற ஓ.பி.எஸ், உங்களை டெல்லியிலாவது சந்திச்சிப் பேசணும்னு அழாத குறையாகக் கேட்க, அப்போதும் அதைக் காதில் வாங்காதது போல் புறப்பட்டுவிட்டாராம் மோடி.''”
"அப்படி இருந்தும், கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டலைங்கிற மாதிரி எடப்பாடி காட்டிக்கிறாரே.''”
"ஆமாங்க தலைவரே, மோடி தன்னிடம் தனித்துப் பேசாததில் தனக்கு வருத்தமில்லைன்னு காட்டுகிற எடப்பாடி, தன்னை மோடி சந்தித்திருந்தால், ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்திருக்கும். குறிப்பாக, அ.தி.மு.க. பிரச்சனையை சால்வ் செய்ய, மோடியிடம் எடப்பாடி சரணாகதி அடைஞ்சிட்டாருன்னு பத்திரிகைல எழுதுவாங்க. அதனால் மோடியுடன் தனிச் சந்திப்பு நடக்காதது நல்லதுக்குதான்னு, தன் சகாக்களிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறாராம். அடுத்த கட்டமாக, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி, அந்தப் பதவியில் உட்கார்ந்துடணும்ங்கிற முயற்சியில் அவர் இப்ப தீவிரமா இருக்கார். 3 மாதத்திற்குள் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர்ங்கிற கெத்தோடு, ஓ.பி.எஸ்.ஸின் கண்ணு முன்னாடியே வலம் வந்து காட்டறேன்னும் அவர் சொல்லி வருகிறாராம்.'' ”
"எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்.சுக் கும் நேரம் கொடுக்காமல் அவர்களை, மோடி தொடர்ந்து அலைக்கழிக் கிறாரே?''”
"இதுபற்றி பா.ஜ.க. தரப்பில் விசாரித்தபோது, தி.மு.க.வுக்கு மாற்றாக அ.தி.மு.க. வலுவடைய வேண்டும்ன்னு மோடி விரும்புகிறார். அதனால் எடப்பாடியும் ஓ.பி.எஸ். ஸும் இணைந்து வந்தால்தான் சந்திப்பது என்கிற முடிவில் அவர் இருக்கிறார். அதேபோல் ஒருங் கிணைந்த அ.தி.மு.க. என்ற ஒன்று உருவாகி, அதில் சசிகலாவும் இருக்கணும் என்றும் மோடி விரும்புகிறார் என்கிறார்கள். இப்படி மோடி தொடர்ந்து நிர்பந்தம் கொடுத்தால், எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் விரைவில் கை குலுக்கிக் கொண்டாலும் ஆச்சரிய மில்லை என்று அவர்கள் சிரிக்கிறார்கள். இதற்கிடையே மாஜி மந்திரி வேலுமணி டெல்லி செல்ல, அவர் தனக்காக மோடியிடம் அப்பாயின்ட்மெண்ட் வாங்கத்தான் சென்றிருக்கிறார் என்று எடப்பாடி காத்திருந்தாராம். வேலுமணியோ, அண்மையில் ரெய்டில் சிக்கிய தனக்கு நெருக்கமான வடவள்ளி சந்திரசேகரன் உள்ளிட்டவர்களுக்கு இனியும் சிக்கல் தரவேண்டாம் என்று டெல்லியிடம் முறையிடவே சென்றாராம். இதை அறிந்த எடப்பாடி, வேலுமணி மீது செம கடுப்பில் இருக்கிறாராம்.''”
"சரிப்பா, முதல்வர் மு.க.ஸ்டாலினின் குடும்ப விவகாரங்களை எடப்பாடி சேகரிக்கிறாரே?''”
"தன்னைச் சார்ந்தவர்களைக் குறிவைத்து வருமான வரித்துறை ரெய்டு நடத்தி, தொடர்ந்து அதிர்ச்சி வைத்தியம் தந்துவருவதால் மனம் நொந்துபோயிருக்கும் எடப்பாடி, இது போன்ற சிக்கலை முதல்வர் ஸ்டாலின் தரப்பும் சந்திக்கணுனும்னு நினைக்கிறார். அதற்காக, முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு எதிரான விவகாரங்களை எல்லாம் சேகரிக்கும் அசைன்மெண்ட்டைத் தன் மகன் மிதுனிடம் அவர் ஒப்படைத்திருக்கிறார். மிதுனோ, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் உதவியோடு விபரங்களைச் சேகரித்து வருகிறாராம். குறிப்பாக, கோடிகள் அதிகம் புழங்கும் முக்கியமான 6 துறைகளின் டெண்டர் விவகாரங்கள் மற்றும் இவற்றில் கைமாறிய கமிஷன்கள் பற்றிய தகவல்கள் எல்லாம் தொகுக்கப்படுகிறதாம். அசைன்மெண்ட் முழுதாய் முடிந்ததும் அதைப் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் எடப்பாடி.''”
"தமிழக அரசு முன்னின்று நடத்தும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி களை கட்டுதே..?''”
"அதற்கான விளம்பரமும் களைகட்டுதுங்க தலைவரே, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரங்களை, 4 விளம்பர ஏஜென்சிகள் மூலம் கொடுத்திருக்காங்க. அதிலும் அ.தி.மு.க. மாஜி மந்திரிகளான கடம்பூர் ராஜு, விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு நெருக்கமான 3 விளம்பர ஏஜென்சிகள் இருக்கின்றன. இதோடு கவிஞரின் சகோதரர் நடத்தும் விளம்பர ஏஜென்சியையும் சேர்த்து மொத்தம் 4 ஏஜென்சி களுக்கு மட்டுமே விளம்பரங்கள் கொடுக்கப் பட்டிருக்கு. மற்ற ஏஜென்சிகளுக்கு வாய்ப்பளிக்கப் படாதது செய்தித்துறை அமைச்சருக்குத் தெரியுமான்னு கோட்டைக்குள்ளே பேச்சு.''”
"ம்...''”
"இதே ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடந்த நேரு ஸ்டேடியத்துக்கான டெகரேசன் தொடங்கி, இன்னும் ஒரு சில வேலைகளுக்கான காண்ட்ராக்ட்டை தங்களுக்கு நெருக்கமான நபர்களுக்குத்தான் கொடுக்கணும்னு, பெரும் புள்ளிகள் இருவர் களமிறங்கினாங்க. இந்த விவகாரத்தால் ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் உரசலும் ஏற்பட்டிருக்கு. இதனால் அந்த இருவரில் ஒருவரான அந்த காவல்துறை உயரதிகாரியை 10-ஆம் தேதிக்குள் மாற்றியே ஆகணும்னு ஆட்சித் தலைமைக்கு இன்னொருவர் பிரஷர் கொடுக்கறாராம். ஆனால் கோட்டையில் உள்ள முக்கிய அதிகாரி, அந்த காவல்துறை அதிகாரியை மாற்றவேண்டாம்ன்னு பிரேக் பிடிக்கிறாராம். இந்த விவகாரத்தில் ஆட்சித் தலைமை இன்னும் ஒரு முடிவுக்கு வரலையாம். இது தொடர்பான முதல்வர் குடும்பத்திற்கும் கோட்டை வட்டாரத்திற்கும் மனத்தாங்கலாம்.''”
"தே.மு.தி.க. சைடில் பரபரப்பு தெரியுதே?''”
"ஆமாங்க தலைவரே, தே.மு.தி.க.வின் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டுவதற்குத் திட்டமிட்டிருக்கிறார் அக்கட்சியின் பொருளாள ரான பிரேமலதா. கட்சித் தலைவரான விஜயகாந்திற்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால், அவரது அரசியல் பணிகள் வருடக் கணக்கில் முடங்கிடிச்சி. இந்த நிலையே இப்போதும் தொடர்வதால், கட்சியைத் தூக்கி நிமிர்த்த பிரேமலதாவே, கட்சியின் பொதுச்செயலாளரா கப் பொறுப்பேற்கணும்னு அந்தக் கட்சியின் சீனியர் மா.செ.க்கள் பலரும் வலியுறுத்த ஆரம்பிச்சிட்டாங்க. பிரேமலதாவும் இப்ப அந்த யோசனையை ஏற்கும் மன நிலைக்கு வந்திருக் கிறார் என்கிறார்கள். இதனால், தே.மு. தி.க.வின் பொதுக்குழு விரைவில் கூட் டப்படும் என்கிற எதிர்பார்ப்பு, கட்சி யினர் மத்தியில் அதிகமா இருக்குது.''”
"கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நில மோசடிக்கு எதிராகப் போராடிய பெண் அதிகாரி ஒருவர், இப்போதும் நீதிக்காகப் போராடி வருகிறாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறையின் அமைச்சராக இருந்தவர் வீரமணி. அவரது ஆசியோடு, சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி நிலங்கள், போலி பட்டா மூலம் ஏகத்துக்கும் விற்கப்பட்டிருக்கு. இதை தென் சென்னை மாவட்டப் பதிவாளராக இருந்த சிவப்பிரியா எதிர்த்ததோடு, இந்த மோசடி குறித்த ஆதாரங்களை சென்னை உயர்நீதிமன்றத்தின் கவனத் துக்கும் எடுத்துச் சென்றாராம். இதனால் எரிச்சலான மாஜி வீரமணி, சிவப்பிரியாவுக்கு எதிராக போலீஸில் பொய்ப் புகார் கொடுத்ததோடு, அவரை சஸ்பெண்ட் செய்யவும் வைத்தார். இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் சிவப்பிரியா. அவர்மீது போடப் பட்டது பொய்வழக்கு என்றும், அவர் குற்றமற்றவர் என்றும் சொல்லி, அவர் மீதான எஃப்.ஐ.ஆரை நீக்க உத்தரவிட்டது நீதிமன்றம். இருந்தும் அவர் மீதான சஸ்பெண்ட் உத்தரவை இன்னும் ரத்து செய்யாமலும் மீண்டும் பணி வழங்காமலும் இழுத்தடித்து வருகிறார்கள் அரசு அதிகாரிகள்.''”
"அரசியலும் அதிகாரமும் எப்படி வேண்டுமானாலும் மாறும். அது பற்றிய செய்தியோடுதான் வந்திருக்கேன். ஒரு காலத்தில், ஜெயலலிதாவால் "உதிர்ந்த ரோமம்' என விமர்சிக்கப்பட்ட நால்வரில் ஒருவர் பண்ருட்டி ராமச்சந்திரன். சசிகலாவும் அவரது கணவரும்தான் ஜெயலலிதாவை ஆட்டி வைக்கிறாங்கன்னு அந்த நால்வரில் சில பேர் குற்றம் சாட்டியதும் உண்டு. ஜெ.வுடன் சசிகலா இருந்ததாலேயே அ.தி.மு.க.வில் நீடிக்க முடியாமல் போன சீனியர்களில் பண்ருட்டி ராமச்சந்திரனும் ஒருவர். இப்போது அந்த பண்ருட்டி ராமச்சந்திரனை சசிகலா போய் சந்தித்து உடல்நலன் விசாரித்திருக்கிறார். அ.தி.மு.கவுக்குள் ஏற்பட்டிருக்கும் சர்ச்சைகளை சரியாக காய் நகர்த்தி, தன் கஸ்டடிக்குள் மறுபடியும் கட்சியைக் கொண்டு வர முடியுமாங்கிற கணக்கில்தான் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்திருக்கிறார் சசிகலா. மேலும், அரசியல் ஆசானாக இருந்து தனக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் பண்ருட்டியாரை கேட்டுக்கொண்டாராம். எம்.ஜி.ஆருக்கே ஆலோசனை வழங்கிய பழைய சாணக்கியர்தான் பண்ருட்டி ராமச்சந்திரன்.''”