"ஹலோ தலைவரே, 10 சத இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் தமிழகம் தீவிரமாக எதிர்வினை ஆற்றத் தயாராயிடிச்சி.''”
"ஆமாம்பா, உயர்வகுப்பினரின் நலனுக்காகவே ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டுவந்திருக்கும் சட்டத் திருத்தம் தமிழக அரசியல் கட்சிகளை விழிக்க வச்சிருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தத்துக்கு உச்சநீதிமன்றம் பிரேக் போடும்னு எதிர்பார்த்ததுக்கு மாறாக, ஒன்றிய அரசின் குரலை அது வழிமொழிந்து ஷாக் கொடுத்திருக்கு. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் ஸ்டாலின் விவாதித்தார். அப்போது ஏழைகள் என்பவர்கள் யார்? என்பது குறித்து ஒன்றிய அரசு கொடுத்த வரையறையை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின், சமூக நீதிக்கு எப்படியெல்லாம் இந்த இடஒதுக்கீட்டு தீர்ப்பு வேட்டு வைக்கிறது என்பதைத் தெளிவாக விவரித்தார். கூட்டத்தின் முடிவில், தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் தமிழகத்தின் சார்பில் ஒரு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்யலாம்கிற முடிவு எடுக்கப் பட்டிருக்கு.''”
"ஆமாம்பா, அதுபோல் சமூக நீதிக் கொள்கை மீது ஆர்வமுள்ள ஒவ்வொரு கட்சியும் கூட தனிப்பட்ட முறையில் சீராய்வு மனுவை தாக்கல் செய்யலாம்னு அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, இதையொட்டி சில அரசியல் கட்சிகளும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யத் தீர்மானிச்சிருக்கு. மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை எடப்பாடி, ஓ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க.வின் இரண்டு அணி களும், பா.ஜ.க.வும் புறக்கணித்து விட்டன. ஒன்றிய பா.ஜ.க., அரசின் 10 சதவீத ஒதுக்கீட்டை எதிர்த்தால், அதன் வெறுப்பை சம்பாதிக்கணு மேன்னுதான் அ.தி.மு.க. தரப்பு இந்தக் கூட்டத்தில் தலைகாட்டலை. தி.மு.க. மற்றும் ஏனைய கட்சிகள் சீராய்வு மனுவை தாக்கல் செய்யும் பணிகளை முன்னெடுத்திருக்கும் நிலையில், இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை மாநில அரசுப் பணிகளில் அமல்படுத்த மாட்டோம்கிற அதிரடி முடிவும் அரசுத் தரப்பால் எடுக்கப்பட்டிருக்கு.''”
"இது பெரியார் மண்ணல்லவா? அதனால்தான் அது வீரியத்தைக் காட்டுது. அது சரி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் மீது முதல்வர் ஸ்டாலின் அதிருப்தியில் இருக்கிறாரே?’''’
"உண்மைதாங்க தலைவரே, அண்மையில் ஒரு சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரியை அமைச்சர் ஒருவர் சந்திக்க நினைத்தாராம். ஆனால் அந்த அதிகாரியோ, அரை மணி நேரம் வெயிட் பண்ணுங்கன்னு அமைச்சரைக் காத்திருக்க வச்சிட்டாராம். இதைக் கேள்விப்பட்ட முதல்வர் ஸ்டாலின், எக்காரணம் கொண்டும் அமைச்சர் களை இழிவு செய்வதை ஏற்க முடியாதுன்னு காட்டமாகி இருக்கிறார். இதுபோல் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அமைச்சர்கள் சொல்வதை அலட்சியப்படுத்துவதும் மதிக்காமல் நடந்து கொள்வதும் அவரை ரொம்பவே காயப்படுத்தி இருக்கு. அதனால் அப்படிப்பட்ட அதிகாரிகளை துறை மாற்றும் முடிவை அவர் எடுத்திருக்காராம். அதனால் விரைவில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் டிரான்ஸ்பர் லிஸ்ட் வெளிவரலாம்னு கோட்டைத் தரப்பு சொல்லுது.''”
"வீட்டு வசதித்துறை செயலாளரும் தொடர்ந்து சர்ச்சையில் அடிபடறாரே?''”
"ஆமாங்க தலைவரே... வீட்டு வசதித்துறை செயலாளரான ஹிதேஷ் குமார் மக்வானாவுக்கு அண்மைக்காலமாக அரசியல் ஆசையும் அமைச்சராகும் தாகமும் அதிகரித்திருப்பது பற்றி சமீபத்தில் நாம் பேசிக்கிட்டோம். இவர், பிரதமர் மோடியின் ஊர்க்காரர். அதனால் மோடியின் தயவில் வரும் நாடாளுமன்றத் தேர் தலில் குஜராத்தில் போட்டி யிட ஆசைப்படுகிறார். எனவே, அண்மையில் காந்தி கிராமப் பல்கலைக்கழக விழாவுக்காக திண்டுக்கல் வந்த பிரதமர் மோடியை, மக்வானா தனியாகச் சந்திக்க விரும்பினார். ஆனால் மோடியோ, நீங்கள் டெல்லியிலோ, குஜராத்திலோ வந்து என்னை சந்தியுங்கள்னு சொல்லிவிட்டாராம். இப்படி தனியாக இவர் லாபி செய்வது குறித்தும் ஸ்டா லின் கவனத்துக்குப் போயிருக்கிறது. எனவே டிரான்ஸ்பர் பட்டியலில் இவர் பெயரும் இருக்கிறதாம். இப்படிப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பாதுகாக்க நினைக்கும், உயர் பதவியில் இருக்கும் ஒரு சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் இவர்களோடு சேர்ந்து மாற்றப் படலாம் என்று தலைமைச் செயலக வட்டாரம் கிசுகிசுக்குது.''”
"ஆளுங்கட்சியான தி.மு.க. இப்பவே தேர்தல் வேலையைத் தொடங்கிடிச்சே?''”
"ஆமாங்க தலைவரே, தேர்தல் களம் காண இப்பவே தி.மு.க. தயாராகுது. தேர்தல் வெற்றிக்கு அடித்தளமா இருப்பது பூத் கமிட்டிகளின் வலிமையும் உழைப்பும்தான். அதனால், தமிழகம் முழுக்க இருக்கும் தி.மு.க.வின் பூத் கமிட்டி நிர்வாகிகள் மத்தியில், ஸ்டாலின் காணொலி மூலம் உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் மா.செ.க்களும், எம்.எல்.ஏ.க்களும் கூட கலந்துக்கிட்டாங்க. இதில் பேசிய ஸ்டாலின், தொண்டர்கள் தான் கட்சி. அதனால் அவர்கள் நன்றாக இருந்தால்தான் கட்சி நன்றாக இருக்கும். பூத் கமிட்டிக்கும் அவர்கள்தான் அடிநாதம்னு வெகுவாகப் பாராட்டிப் பேசினார். அது கட்சியினருக்கு புதிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கு.''”
"அதேசமயம், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு அட்வைசையும் ஸ்டாலின் கொடுத்திருக்காரே?''”
"உண்மைதாங்க தலைவரே, ஒரு பூத் கமிட்டியில் 25 பேர் உறுப்பினராக இருக்கணும். ஆனால் சில கமிட்டி களில் அந்த எண் ணிக்கை குறைவாக இருந்தது ஸ்டா லின் கவனத்துக் குப் போயி ருக்கு. அதனால் அதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தக் குறையைச் சரிசெய்யும் படி அட்வைஸ் செய்ததோடு, தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் நீங்கள்தான் பொறுப்பு. அது குறித்து உங்களைத்தான் கேட்பேன்னு எச்சரிக்கையும் செய்தார். அதுமட்டும் இல்லாமல், அவர்களின் மன ஓட்டத்தை அறிந்தவராக, ’உங்களுக்குத் தேவையானதை மா.செ.க்களும், நகரச் செயலாளர்களும் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் ஓரளவேனும் தன்னிறைவாக இருந்தால்தான், உற்சாகமாகச் செயல்பட முடியும் என்பது எனக்குத் தெரியும் என்றும் சொல்லி இருக்கார். இது, பூத் கமிட்டியினரை ரொம் பவே உற்சாகப்படுத்தி இருக்கு.”
"ராஜீவ் வழக்கில் விடுதலையானவர்களில் ஒருவருக்கும் நாம் தமிழர் சீமானுக்கும் ஆகலைன்னு டாக் அடிபடுதே?''”
"ஆமாங்க தலை வரே, தற்போது விடு தலையான நளினி உள்ளிட்ட 6 பேரில், ரவிச்சந்திரனும் ஒருவர். ஆரம்பத்தில் இருந்தே ராஜீவ் வழக்கில் விடு தலை கேட்டு சட்டப் போராட்டம் நடத்தி யவர்களில் இவர் முக்கியமானவர். வழக்குக்காக தனது சொத்துக் களை விற்று கடுமையாக செலவு செய்திருக்கிறார். அதேபோல் இப்போது விடுதலையான அத்தனை பேருமே அவரவர் சட்டச் செலவுகளை தங்கள் நகை நட்டு, சொத்து பத்துக்களை விற்று அவரவரே பார்த்துக் கொண்டார் கள். இந்த நிலையில் விடுதலை யான 6 பேரையும் மற்றவர் களோடு சேர்ந்து நாம் தமிழர் கட்சியினரும் வரவேற்றனர். இதன்பின் சீமான், அந்த 6 பேரையும் தனியாக சந்திக்க விரும்பியபோது, இந்த ரவிச் சந்திரன் மட்டும், என் பாடு என்னோடு போகட்டும் என்றபடி அவரை சந்திக்க மறுத்துவிட் டாராம். அதனால் சீமான் தரப்பு அவர்மீது கடுப்பில் இருக்கிறதாம்.''
"விடுதலையான 6 பேரும் இன்னும் முழுமையாக விடுவிக்கப் படவில்லையே?''”
"ராஜீவ் வழக்கில் 6 பேரும் விடுதலையான நிலையில், வேலூர் மற்றும் சென்னை புழல் சிறையில் இருந்து விடுதலையான முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விடுதலை அறிவிப்பு வந்த அன்று இரவு 11:25 மணிக்கே, திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இருக்கும் சிறப்பு முகாமுக்குக் கொண்டுவரப்பட்டாங்க. இவர்களை உறவினர்கள் உட்பட மற்றவர்கள் சந்திக்கத் தடை இல்லை என்றாலும், இவர் கள் மீது சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந் தது தொடர்பான பாஸ்போர்ட் வழக்கு, நிலுவை யில் இருக்கு. இது தொடர்பான விசாரணை கள் முடிந்த பின்னர், மாநில அரசு பரிந்துரைத்து, ஒன்றிய உள்துறை முடிவெடுத்தால் முழுமையாக விடுதலை பெற்று சுதந்திரமாக நடமாடலாம் என்கிறது சிறை வட்டாரம்.''”
"தமிழக காங்கிரஸுக்குள் ஊழல் புகார்கள் வெடிச்சிருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொதுக்குழு உறுப் பினர்களை நியமிப்பதில் ஊழல் நடந் திருக்குன்னு அந்தக் கட்சியில் இருக்கும் சிலர், ஆதாரங்களைத் திரட்டினார்கள். இதை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் கொடுக்க டெல்லிக்குப் பறந்தார்கள். திட்டமிட்டபடியே அவர்கள் கார்கேவை சந்தித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராகவும், அவர் பேரைச் சொல்லி வசூல் வேட்டை நடத்திய கட்சியின் எஸ்.சி., எஸ்.டி.பிரிவைச் சேர்ந்த ஒரு நிர்வாகிக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகளை வச்சிருக்காங்க. இதை கவனமாகக் கேட்டுக்கிட்ட கார்கே, அதை சோனியா, ராகுலிடம் கவனத்துக்குக் கொண்டுபோறேன்னு சொல்லி இருக்கார். ஆனால், விடாத புகார்தாரர்கள், நீங்கதானே தலைவர், உங்களுக்குன்னு அதிகாரம் இல்லையான்னு’ அவரிடமே ஆத்திரப்பட்டு அவரை மிரள வச்சிட்டாங்களாம்.''”
"இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனப் பவள விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக்கிட்டாரே?''”
"இந்தப் பவளவிழா கொண்டாட்டத்துக்கு முதலில் அமித்ஷாவை, இதன் உரிமையாளர் அழைத்தபோது அவர் முயற்சி பலிக்கலை. அதனால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச் செயலாளரும் அமித்ஷா மகனுமான ஜெய்ஷா மூலம் இதற்கான முயற்சியை சீனிவாசன் எடுத்தார். அதனால் வேறு வழியில்லாமல் அமித்ஷா சென்னையில் நடந்த அந்தப் பவள விழாவில் கலந்துக்கிட்டார். இதனால் இந்தியா சிமெண்ட் சீனிவாசன் தரப்பு மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் இருக்குது. கிரிக்கெட் வாரியத்திலேயே இருக்கும் சீனிவாசனுக்கு எதிர்த்தரப்பு அவரின் மூவ்களைக் கண்காணிச்சிக்கிட்டே இருக்குது.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலை உன் மூலம் பகிர்ந்துக்கறேன். கடந்த ஆண்டு அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு பற்றிய சர்ச்சைகளும் ஊழல் புகாரும் எழுந்ததால், இந்த ஆண்டும் அதுபோன்ற சிக்கலில் சிக்கிவிடக் கூடாதுன்னு முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார். அதனால், தமிழக கூட்டுறவுத்துறை மற்றும் உணவுத்துறை அமைச்சர் களான ஐ.பெரியசாமி, சக்கரபாணி மற்றும் துறையின் உயரதிகாரிகளுடன் இது பற்றி அவர் ஆலோசித்தார். அப்போது, வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கு பதில் ரொக்கமாகவே 1000 ரூபாய் வீதம் கார்டுதாரர்களுக்கு வழங்கலாம்னு முடிவெடுக்கப்பட்டிருக்கு. அதனால், இந்த முறை பரிசுத் தொகுப்புக்கு பதில் ரொக்கப் பணம் மக்கள் கைக்கு வரப்போகுது.''”
_________
இறுதிச் சுற்று!
அரசு கேபிள் டி.வி. வாரியத் தலைவராக இருந்த ஈரோடு குறிஞ்சி சிவகுமாரை அப்பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கிவிட்டு, அப்பொறுப்பிற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியான தகவல் தொழில் நுட்பத்துறை கூடுதல் செயலாளர் நீரஜ் மிட்டலை நியமித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தி.மு.க. பொதுச்செயலாளரான அமைச்சர் துரைமுருகன் பரிந்துரையின் பேரில் கேபிள் டி.வி. வாரியத் தலைவராக ஈரோடு குறிஞ்சி சிவகுமார் நியமிக்கப்பட்டார். கேபிள் டி.வி.வாரிய இயக்குனராக பொறுப்பு வகித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெயசீலனுக்கும் குறிஞ்சி சிவகுமாருக்கும் ஒற்றுமையில்லாத நிலை நீடித்து வந்துள்ளது. இந்நிலையில் வாரியச் செயல்பாடுகளில் பணப்பலன், உள்ளூரில் உள்ள அதிருப்தி என உளவுத்துறை, சிவகுமார் மீது பல குற்றச்சாட்டுகளை முதல்வர் கவனத்திற்கு கொண்டுசெல்ல... பதவி பறிபோயிருக்கிறது.
"அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ்களை மக்களுக்கு இலவசமாக வழங்கலாம். அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும்' என குறிஞ்சி சிவகுமார் கூறியதாகவும், இதை ஏற்றுக்கொள்ளாத ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவாக முதல்வரிடம் தவறான தகவலைப் போட்டுக்கொடுத்து நீக்க வைத்துவிட்டார்கள் என குறிஞ்சி சிவகுமார் தரப்பு கூறுகிறது.
-ஜீவாதங்கவேல்