தி.மு.க. அரசுக்கும் ஆளுநருக்குமிடையே நீடிக்கும் மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியிருக் கிறது. சட்டப்பேரவையில் நடந்த சம்பவங்களை என்னால் ஜீரணிக்க முடியவில்லை என ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த 9-ந் தேதி கூடியது. பேரவையின் மரபுப்படி கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றிய ஆளுநர் ரவி, தமிழக அரசால் தயாரித்து அளிக்கப்பட்ட உரையை முழுமையாகப் படிக்காமல் தாவிச் சென்றதும், தனக்குத் தோன்றிய கருத்துக்களை இணைத்துப் படித்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ss

Advertisment

ஆளுநரின் இந்த செயல்முறையை கண்டிக்கும் வகையில்,’"தமிழ்நாடு அரசு தயாரித்த முழுமையான உரையைப் படிக்காதது சட்டமன்ற மரபுகளை மீறிய செயல். பேரவை விதி 17-ஐ தளர்த்தி, அச்சிடப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் பேரவைத் தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியவை மட்டுமே அவைக் குறிப்பில் ஏறவேண் டும். மாறாக, ஆளுநர் இணைத்துப் படித்த பகுதிகள் இடம்பெறாது'’என்று தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றினார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த தீர்மானத்தால் சட்டமன்றமே குதூகல மானது. அ.தி.மு.க., பா.ஜ.க. உறுப்பினர்கள் தவிர, தி.மு.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் உறுப்பினர்களும், பா.ம.க. உறுப்பினர் களும் மேஜையைத் தட்டி ஆர்ப்பரித்தனர்.

Advertisment

பேரவையில் என்ன நடக்கிறது என புரியாமல் திகைத்தபடி தனது இருக்கையில் இறுக்கமாக அமர்ந் திருந்த ஆளுநர் ரவி, அருகில் இருந்த தனது செயலாளர் விஷ்ணுஆனந்த் பாட்டிலிடம் இதுகுறித்துக் கேட்க, தமிழில் முன்மொழிந்த முதல்வரின் தீர்மானத்தையும், பேரவையில் நடப்பதையும் ஆங்கிலத்தில் விவரித்துக் கூறினார் ஆனந்த் பாட்டில்.

ஆளுநரால் இதனை ஜீரணிக்க முடியவில்லை. இதனால் கோபமடைந்த அவர், தேசிய கீதம் இசைத்து சபையை முடித்து வைப்பதைத் தவிர்த்துவிட்டு, அவசரம் அவசரமாக பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். அவர் வெளியேறு வதை பெருமிதமாகப் பார்த்தார் முதல்வர் ஸ்டாலின். தி.மு.க. அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட சில உறுப்பினர்கள் ஆளுநரை விமர்சித்தனர். "வெல்க தமிழ்நாடு' என்ற முழக்கம் சபையில் ஆக்ரோஷமாக எழுந்து அடங்கியது.

தமிழ்நாடு அரசு தயாரித்தளித்த உரையை முழுமையாக வாசிக்காமல் தவிர்த்தது, ஆளுநரின் உரைக்கு அவையில் எழுந்த எதிர்ப்பலைகள், ஆளுநரின் செயலைக் கண்டித்து முதல்வர் தீர்மானம் நிறைவேற்றியது, சபை முடியும்வரை இருக்காமல் ஆளுநர் வெளியேறியது என பேரவையில் அரங்கேறிய அனைத்து சம்பவங்களும் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த சம்பவங்களால் சட்டமன்ற மரபுகள் குறித்த விவாதங்கள் சூடு பிடித்தன. ஆளுநர் தரப்பு சொன்னதாக சில தகவல்களும், அதற்கு பதிலடி தரும் வகையில் தி.மு.க. அரசு தரப்பில் சொல்லப்பட்டதாக சில தகவல் களும் வைரலானது. மேலும், ஆளுநருக்கு எதிராக சோசி யல் மீடியாக்களில், "கெட்அவுட் ரவி' என்பதை ட்ரெண் டிங் ஆக்கியது தி.மு.க.வின் ஐ.டி. விங்க். அதேசமயம், ஆளுநருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டி தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினார்கள் உடன்பிறப்புகள்.

இந்த நிலையில், மரபுகளை மீறியது யார்? என்கிற விவாதம் தேசிய அளவில் எதிரொலித்து வரும் நிலையில், இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆதித்விஜய்யிடம் கேட்டபோது,’"ஆளுநர் உரை என்பது அரசாங்கம் தயாரித்த உரை. அதனை முழுமையாக ஆளுநர் படிக்க வேண்டும் என்பது மரபு.

gg

ஆனால், அப்படி படிக்காமல் தவிர்த்ததும், சிலவற்றை இணைத்துப் படித்ததும் மரபு மீறல்தான். மேலும், தேசிய கீதம் இசைத்து சபையை முடித்து வைக்காமல் ஆளுநர் வெளியேறியது மரபு மீறல் மட்டுமல்ல, சட்டமன்ற ஜனநாயகத்துக்கும் உகந்தது கிடையாது'' என்றார்.

கவர்னர் உரையாகத் தயாரித்து அளிக்கப்பட்டதில் சில பத்திகளை வாசிக்காமலும், சிலவற்றை இணைத்து ஆளுநர் பேசியதும், ஆளுநரின் உரைக்கு உடனடியாக எதிர் தீர்மானம் ஒன்றை தமிழக முதல்வரே வாசித்ததும், அதில் ஆளுநர் தனது மரபை மீறிவிட்டார் எனக்கூறி, அவரது உரைக்குப் பதிலாக, ஏற்கனவே தமிழக அரசால் அனுப்பப்பட்ட உரையே அவைக்குறிப்பில் இடம் பெறும் என்றும் முதல்வர் தெரிவித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானமும், முதல்வர் தீர்மானத்தை வாசிக்கும்போதே அவையிலிருந்து கவர்னர் வெளியேறியதும் தமிழக சட்டசபை இதுவரை காணாதது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

மேலும், "முதல்வர் வாசிப்பதன் அர்த்தத்தை முழுமையாக ஆளுநர் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். அதனை உணர்ந்து ஆளுநர் பதில் சொல்லியிருக்கலாம். அதற்கு மாறாக, பேரவையிலிருந்து அவர் வெளியேறியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தை அவமதித்தது போல இருந்தது. சட்டமன்றத்தையும் அரசியல் ரீதியாக அவர் அணுகத் துடிக்கிறார் என்பதாகத்தான் பார்க்க முடிகிறது'' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இந்த நிலையில், சட்டமன்றத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து முதல்வரும் ஆளுநரும் சட்ட நிபுணர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். இதனையடுத்து, ஆளுநருக்கு எதிராக சட்டப் பேரவையில் எதுவும் பேசக்கூடாது என தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அட்வைஸ் பண்ணியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதேசமயம், சபாநாயகர் மூலமாக சில கருத்துக்களை பேரவையில் பதிவு செய்யவும் முடிவுவெடுக்கப்பட்டது.

அதன்படி 11-ந் தேதி கூடிய பேரவைக் கூட்டத்தில் பேசிய சபாநாயகர் அப்பாவு, "உரையை வாசிப்பதற்கு மட்டுமே கவர்னருக்கு அனுமதி; உரிமை. அத்துடன் அவரது கடமை முடிந்துவிடும். உரையை மாற்றுவதற்கு அனுமதி இல்லை. சில பகுதிகளை அவர் படிக்காமல் கடந்து சென்றதால்தான் அசாதாரண சூழல் ஏற்பட்டது. முதல்வரின் மதிநுட்பத்தால் சட்டசபையின் மாண்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலுள்ள அனைத்து மாநில சட்டசபைகளின் மாண்பையும் காத்துள்ளார் முதல்வர். கவர்னர் உரையின்போது காட்டிய கண்ணியத்திற்காக முதல்வரின் துணிவை தமிழ்நாடே பாராட்டுகிறது. எனவே, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசும் எம்.எல்.ஏ.க்கள், அவையின் மாண்பைக் காக்கும் வகையில் கண்ணியத்துடன் பேசவேண்டும்'' என்பதை பதிவு செய்தார். மேலும், கவர்னர் உரைக்கு நன்றி கலந்த வருத்தத்தை பதிவு செய்யும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே, சட்டமன்றத்தில் நடந்தவை கள் குறித்து ஆளுநர் ரவியை தொடர்புகொண்டு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பேசியிருக்கிறார்கள். நடந்தவை குறித்து ரிப்போர்ட் அனுப்பச் சொல்லி ஆளுநருக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறது. அதேசமயம், கடந்த 9-ந்தேதி இரவு பிரதமர் அலுவலகமும் உள்துறை அமைச்சகமும் தமிழ்நாடு சம்பவங்கள் குறித்து ஆழமாக விவாதித்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்து அழைக்கப்பட்டிருக்கும் ஆளுநர் ரவி, பொங்கல் பண்டிகை முடிந்ததும் டெல்லிக்கு செல்கிறார்.

இந்த பயணத்தில் மோடியையும் அமித்ஷா வையும் தனித்தனியாக சந்திக்கும் ஆளுநர், தமிழக அரசு தயாரித்த அந்த உரை குறித்து கடந்த 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை தமிழக அரசுக்கும் தனக்கும் இடையே நடந்த உரையாடல்கள், அனுப்பப்பட்ட தகவல்கள், அதற்கான ஆதாரங்கள் என பலவற்றையும் விவரிக்கும் வகையில் ரிப்போர்ட்டை தயாரித்திருக்கிறார். அந்த ரிப்போர்ட்டினை அமித்ஷாவிடம் ஒப்படைக்கும் போது, பேரவையில் திட்டமிட்டே தன்னை அவமானப்படுத்தியதாக தி.மு.க. அரசு மீது குற்றம் சுமத்தவும் ஆளுநர் தயாராகியிருப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் 12-01-2023 வியாழன் காலை, டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை டி.ஆர்.பாலு தலைமையில் அமைச்சர் ரகுபதி, எம்.பி.க்கள் ஆ.ராசா, வில்சன், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் சந்தித்து, அரசியல் சாசனத்தை மீறிச் செயல்படும் ஆளுநருக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டுமெனக் கூறியவர்கள், இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கிய கடிதத்தை அவரிடம் வழங்கினர்.