"ஹலோ தலைவரே, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்திருக்குது.''”

"ஆமாம்பா, முதல்வர் என்ன சொன்னாராம்?''”

"சட்டமன்றத்தை ரொம்பவும் கண்ணியமாக நடத்தணும்னு நினைக்கிறார் முதல்வர். அதனால் தனது கட்சி எம்.எல்.ஏக்களிடம், எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வினர் நமக்கு எதிரான விமர்சனங்களைத்தான் வைப்பார்கள். அப்போது அவர்கள் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகப்படுத்தி, நம் உணர்ச்சிகளைத் தூண்ட முயலலாம். அதை எதிர்க்கிறோம்கிற பேரில், நீங்கள் யாரும் உணர்ச்சி வசப்பட்டு, எல்லை மீறக்கூடாதுன்னு அழுத்தம் திருத்தமாக அறிவுறுத்தி இருக்கார்.''”

Advertisment

rs

"சரிதானே...''”

"அதுமட்டும் இல்லீங்க தலைவரே, அ.தி.மு.க.வினரின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் பதில் சொல்வார்கள். அதனால் ஆளாளுக்கு முண்டியடிக்க வேண்டாம்னு சொன்ன ஸ்டாலின், வருகிற 30-ஆம் தேதி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மண்டல குழுக்களுக்கான தேர்தல் நடக்கப்போகுது. அதற்கு முன்பாக, நம் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராகப் போட்டியிட்டு ஜெயித்த, தி.மு.க.வினரும், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நின்று, வெற்றி பெற்ற தி.மு.க.வினரும் கண்டிப்பாக ராஜினாமா செய்ய வேண்டும். அதற்கான முயற்சியை நீங்கள் எடுக்கணும்னு எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தினார்.''”

"முதல்வர் சொல்லியும் இன்னமும் பலர் ராஜினாமா செய்யலையேப்பா?''”

Advertisment

r

"ஆமாங்க தலைவரே, அதனால்தான் கட்சியின் கட்டுப்பாட்டைக் காக்கும் விதமா, அவர்களை ராஜினாமா பண்ணும்படி அழுத்தம் கொடுக்குது கட்சித் தலைமை. குறிப்பா, உடுமலைப்பேட்டை நகராட்சி சேர்மன் பதவிக்கு ஜெயக்குமார் என்பவரை அறிவித்தது தி.மு.க. தலைமை. ஆனால், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. நகரச் செயலாளர் மத்தீன், அ.தி.மு.க வாக்குகளை பர்ச்சேஸ் செய்து சேர்மன் பதவியைக் கைப்பற்றிவிட்டார். அறிவா லயம் உத்தரவிட்டும் அவர் பதவி விலகலை. லோக்கல் கட்சிக்காரர்கள் செல்வாக்கு தனக்குத்தான் இருக்குங்கிறாராம். இதே கதைதான் பண்ருட்டியிலும் நடக்குது. அதேபோல, திருப்போரூர் பேரூராட்சி துணைத் தலைவர் பதவி விடுதலை சிறுத்தைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையிலும் அங்கு தி.மு.க நிர்வாகி ஒருவர் போட்டியிட்டு ஜெயித்து விட்டார். இதெல்லாம்தான் ஸ்டாலினின் கறார் அறிவுறுத்தலுக்குக் காரணம்.''”

"புதிய வரி ஏதுமில்லாத பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனி வேல் தியாகராஜன் தாக்கல் செய்து, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி உள்ளிட்ட பலரது பாராட்டையும் பெற்றிருக்கிறாரே?''”

"உண்மைதாங்க தலைவரே, ஆனாலும், நிதியமைச்சர், கடன் வாங்கித்தான் அரசை நடத்த முடியும் என்பதை பட்டவர்த்தனமாக அறிவித் திருக்கிறார். கடந்த அ.தி.மு.க. அரசு, 4.85 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் சுமையை வச்சிட்டுப் போயி ருக்கு. தி.மு.க ஆட்சிக்கு வந்த கடந்த 10 மாதங்களில் மட்டும் 85 ஆயிரம் கோடிகளைக் கடன் வாங்கியிருக்கு. நடப்பு நிதியாண்டில் 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குக் கடன் வாங்க இலக்கு நிர்ணயித்திருக்கிறார்கள். இதனால் தமிழகத்தின் மொத்த கடன் சுமை அதிகரிக்கப் போகுது. அத னால்தான், பல்வேறு வரிகளையும், கட்டணங் களையும் உயர்த்த அனுமதிக்கணும்னு நிதியமைச்சர், பட்ஜெட்டுக்கு முன்பாகவே முதல் வர் ஸ்டாலினிடம் கேட்டிருக்கிறார். அதற்கு முதல்வர் சம்மதிக்கவில்லை என்கிறார்கள்.''”

"பல கட்சிகளிலும் இருக்கும் பிரமுகர்கள், தி.மு.க.வுக்குப் படையெடுக்க நினைக்கிறாங்களே?''’

"உண்மைதாங்க தலைவரே, உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலவற்றிலும் இந்த நிலைமை வெளிப்படுது. வேற பல கணக்குகளுடனும் சிலர் ஆளுங்கட்சியில் ஐக்கியமாகத் துடிக்கிறாங்க. குறிப்பா, ஸ்மார்ட் சிட்டி ஊழலில் வசமாக சிக்கி இருக்கும் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.வான தி.நகர் சத்யா, சிறைக்கு செல்வதைத் தவிர்க்க, தி.மு.க.வில் சேரத் துடிக்கிறாராம். இதற்காக சீனியர் அமைச் சர் ஒருவரை அப்ரோச் செய்து வருகிறாராம். அதேபோல், தே.மு.தி.க பிரமுகர்களும், தி.மு.க.வில் இணையத் தூதுவிட்ட நிலையில், தனது நண்பரான விஜய் காந்த் மீதான நட்பின் காரணமாக, இப்போ தைக்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டா ராம் ஸ்டாலின்.''”

"அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலுமணி வீட்டில் அதிரடியாக ஆவணப் புதையல் கிடைச்சிருக்கே?''”

"ஆமாங்க தலை வரே, முதல்முறையாக கடந்த ஆகஸ்ட்டில் வேலுமணி தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டு நடத்திய போது, அவருக்கு முன் கூட்டியே தகவல் போயி டுச்சு. அதனால் உஷாரான வேலுமணி, மறைக்க வேண்டிய ஆவணங்களை எல்லாம், ஒரு வாகனத் தில் ஏற்றி, அதை எங்கும் நிறுத்தாமல் சுற்றிக் கிட்டே இருக்கச் செய்ததால், ரெய்டுக்குப் போன டீம், பெரிதாக எதையும் கைப்பற்றலை. உடனே, என்னிடம் எதுவும் இல்லை. வேண்டுமென்றே பழிவாங்க இந்த ரெய்டு நடத்தப்பட்டதுன்னு யோக்கிய சிகாமணி மாதிரி வேலுமணி எகிறிக் குதித்தார். ஆனால் இந்த முறை, அதாவது கடந்த 16-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. பவானீஸ்வரி, ரொம்பவும் சீக்ரெட்டா இந்த ரெய்டு ஆபரேசனைக் கையாண்டார்.”

"ஆமாம்பா, எதிர்பாராத நபர்களிடம் இருந்து எதிர்பார்த்த ஆவணங்கள் கட்டுக்கட்டா கிடைச்சிருக்கே?''”

"உண்மைதாங்க தலைவரே, வேலுமணியின் நட்பு வட்டத்தில் இருந்தாலும், சந்தேகப் பட்டிய லில் இல்லாத கோவையைச் சேர்ந்த அவரது உதவியாளர் சந்தோஷ் மற்றும் அவர் தொடர்பில் இருக்கும் வழக்கறிஞர் நவீன் ஆகியோரின் வீடு களுக்குள் ரெய்டு டீம் அதிரடியாகப் புகுந்திருக்கு. அங்கதான் ஆவணப் புதையல்கள் கட்டுக்கட்டா கிடைச்சிருக்கு. அவற்றைப் பார்த்த அதிகாரிகளே அதிர்ச்சியில் வாயைப் பிளந்திருக்காங்க. காரணம், கிடைத்த ஆவணங்கள் அரசிய லையே புரட்டிப் போடக்கூடிய அளவுக்கு முக்கியமானவையாம்.''

"என்னென்ன ஆவணங்கள்?''

"சொல்றேங்க தலைவரே, வேலுமணி தொடர்பான சொத்து ஆவணங்களை மட்டும் தேடிப்போன ரெய்டு டீமிற்கு, புதிய புதிய ஆவணங்கள் லட்டு லட்டா கிடைச்சிருக்கு. குறிப்பா, மாஜி முதல்வர் எடப்பாடி தொடர்பான பல ஆவணங்கள் அதில் இருந்திருக்கு. அதேபோல் கொடநாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்களும் அங்கே இருந்திருக்கு. இதுதவிர ஈஷா மைய ஜக்கிவாசுதேவ் தொடர்பான அரிய ஆவணங்களும் கிடைச்சிருக்கு. அந்த ஆவணங் களின்படி, நித்தியானந்தா பாணியில் மாலத்தீவு அருகே ஜக்கியும் ஒரு தீவை வாங்கியிருக்காராம். இதெல்லாம் பிடிபட்டதால் ஷாக்கான வேலுமணி மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர், இந்த விவகாரத் தில் இருந்து தப்பிக்க மத்திய மண்டலத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சரின் சகோதரர் மூலமும், தென் மாவட்ட அமைச்சர் ஒருவர் மூலமும் ஆட்சித் தலைமையிடம் தூதுவிட்டிருக்காங்க. ஆனால், அவர்களுக்கு சாதகமான சிக்னல் கிடைக்காததால் அவர்களின் பதட்டம் தொடருதுதாம்.''”

"அமைச்சர் ஒருவரிடம் முதல்வர் ஸ்டாலின் தீவிர விசாரணை நடத்தி இருக்காரே?''”

"ஆமாங்க தலைவரே, கடந்த முறையே போக்குவரத்துத் துறை துணை ஆணையர் நடராஜன் அலுவலகத்தில் லஞ்சப்பணம் கைப்பற்றப்பட்டது பற்றி நாம் பேசிக்கிட்டோம். அப்ப, துறை அமைச்சருக்கு பெரும் சிக்கல் வந்து, அவர் மயிரிழையில் தப்பிய செய்தியையும் நாம் பகிர்ந்துக்கிட்டோம். இதைத் தொடர்ந்து, அதிகாரி நடராஜன் மீது, தற்போது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இவர் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் வலது கையாக செயல்பட்டவர் என்பதால், இந்த விவகாரம் முதல்வர் கவனத்துக் குப் போக, அவர் அமைச்சரைக் கூப்பிட்டு தீவிரமாக விசாரித்ததோடு, கடுமையாக எச்சரித்ததாக வும் கோட்டை வட்டாரத்தில் டாக் அடிபடுது.''”

rr

"சசிகலா, தினகரன் உரசல் உச்சத்துக்கு வந்திருக்கே?''’

"உண்மைதாங்க தலைவரே, சசிகலா இல் லாமலே தன்னால் கூட்டத்தைக் கூட்ட முடியும் என்றும், தனியே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டு இயங்க முடியும் என்றும் காட்ட நினைக் கிறார் தினகரன். கடந்த 20-ந் தேதி எம்.நடராஜ னின் நினைவு நாள் என்பதால், தஞ்சாவூருக்கும் அவரது சொந்த கிராமமான விளாருக்கும் போனார் சசிகலா. அங்கே போனவருக்கு கடும் அதிர்ச்சி. காரணம், அவருக்குப் போட்டியாக தனியாக ஒரு நினைவு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார் தினகரன். அதுமட்டுமில்லாமல் டாக்டர் வெங்கடேஷ், இளவரசி மகன் விவேக்குன்னு ஆளாளுக்கு அங்கே தனித்தனி கோஷ்டியாக இருந்து, சசிகலாவைக் கண்டுகொள்ளலையாம். இதில் பலமான அப்செட்டாம் சசிகலா.''”

rang

"டெல்லி பா.ஜ.க.வுக்கு சசிகலா தூது விட்டிருக்காராமே?''”

"உண்மைதாங்க தலைவரே, அ.தி.மு.க.வுக்குள் நுழைந்து அதன் லகானை விரைவில் கைப்பற்றி விடவேண்டும் என்று துடியாய்த் துடிக்கும் சசிகலா, அக்கட்சியில் என்னை சேர்த்துக் கொள்ளச் சொல் லுங்கள்னு, அ.தி.மு.க. மாஜி எம்.பி. தம்பிதுரையை டெல்லிக்குத் தூதுவிட்டார். தம்பிதுரையும் பிரதமர் மோடியைச் சந்தித்து விபரத்தைச் சொல்ல, வேற செய்தி இருக்கான்னு, அலட்சியமாக அவரைத் திருப்பி அனுப்பிவிட்டாராம் மோடி. அடுத்து தம்பிதுரை சந்தித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ, நீங்க வந்தது எடப்பாடிக் கும் ஓ.பி.எஸ்.சுக்கும் தெரியுமான்னு கேட்க, ம்.. ஆம்... என மழுப்பிவிட்டுக் கிளம்பிவிட்டாராம் தம்பிதுரை. இவரின் இந்த டெல்லி விசிட், எடப்பாடி, ஓ.பி.எஸ். தரப்பை ஏகத்துக்கும் கடுப்பாக்கி இருக்குதாம்.''”

rr"ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது உளவுத்துறை கண் வச்சிருக்குதே?''”

"ஆமாங்க தலைவரே, முதல்வர் ஸ்டாலின் தொடங்கி, தலைமைச்செயலாளர் இறையன்பு உள்ளிட்டவர்கள் கூட தங்கள் காரின் சைரனை ஒலிக்கச் செய்யாமல், சைலண்டாகவே சென்று வருகிறார்கள். ஆனால் தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநரான வீரராகவராவ், தனது சொந்த மாநிலமான ஆந்திராவுக்கு அடிக்கடி காரின் சுழல் விளக்குடன் சைரன் ஒலிக்க, டூர் அடிக்கிறாராம். அவருடன் நிழலுலக மனிதர்கள் தொடர்பில் இருக்கிறார்கள் என்று காவல்துறையினரே சந்தேகத்தைக் கிளப்ப, அவரை உளவுத்துறையின் கண்கள் கூர்ந்து கவனிக்குதாம்.''”

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக் கறேன். சுஷில் ஹரி பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்ட போலிச்சாமியார் சிவசங்கர் விவகாரத்தை விசாரித்த ஒரு ’குணமில்லா அதிகாரி, அந்த விவகாரத்தை வைத்து லாபம் பார்த்ததால், அவரை சென்னை மாநக ராட்சி லிமிட்டுக்கு தூக்கியடித்தனர். அங்கும் ஒரு பெண் ஹெட் கான்ஸ்டபிளுடன் லூட்டி அடித்துக்கொண்டிருக் கும் அவர், டிரான்ஸ்பரில் தூக்கி அடிக்கப்பட்ட அந்த பெண் காக்கியை, மீண்டும் தன் அருகிலேயே அழைத்துக் கொண்டு பழைய ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டாராம்.''”