"ஹலோ தலை வரே, கவர்னர் கொடுத்த குடியரசு தின விருந்தில் முதல்வர் கலந்து கொண்டதை பலரும் வியப்பாகப் பார்க்கறாங்க.''”
"கவர்னர் ஆர்.என். ரவி, தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழக அரசுக்கும் மதிப்பு கொடுக் காமல் நடந்தவராச்சே... அதனால்தான் அந்தத் திகைப்பு.''”
"உண்மைதாங்க தலைவரே, கவர்னர் கொடுத்த தேநீர் விருந்தை, தி.மு.க.வின் தோழமைக் கட்சிகள் அனைத்தும் புறக்கணித்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலி னும், துரைமுருகன், உதயநிதி உள்ளிட்ட ஐந்து அமைச்சர்களும் அந்த விருந்தில் கலந்துக்கிட்டாங்க. அதோட அங்கே அமைச்சர்கள் சகிதம் கவர்னரை ஸ்டாலின் தனியாகவும் சந்தித்துப் பேசினார். கவர்னர் தன் அணுகுமுறையைக் கொஞ்சம் சாஃப்ட் ஆக்கிக்கொண்டதால்தான், ஆளும்கட்சியும் அதையே எதிரொலித்தது. ஆனாலும் இதெல்லாம் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளிடம் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. அவர்களுக்குள் இது தொடர்பான விவாதமும் நடந்தது. டெல்-யோடு மோதல் போக்கு கூடாது என்பதால்தான் ராஜ்பவன் விசிட் நடந்ததுன்னு தி.மு.க. தரப்பில் சொல்லப்படுது.''
"டெல்லி குடியரசு தின விழா நிகழ்வில் தமிழக அரசின் ஊர்திகள் அணிவகுத்த விவகாரத்திலும் சலசலப்பு எழுந்திருக்கே?”
"ஆமாங்க தலைவரே, டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில், தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்ட அலங்கார ஊர்திகள் விசயத்தில் ஒரு சர்ச்சை வெடித்திருக்கிறது. அதாவது தமிழ்நாட்டின் ஊர்திகள் அணிவகுத்து வந்தபோது, அதில் தமிழகத்தின் நாட்டுப்புறக் கலைகளைப் பறைசாற்றும் வகையில் மதுரை சோமு என்பவரின் நாட்டுப்புறக் கலைக் குழுவினரும் வந்தனர். இந்த சோமு, தேர்தல் நேரத்தில் எல்லாம் தி.மு.க.வுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவராம். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ.’குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டபோது, அண்ணா சமாதியில், கலைஞரைக் கண்டித்து நூற்றுக்கணக்கான நாட்டுப்புறக் கலைஞர்களைத் திரட்டி உண்ணாவிரதம் இருந்தவராம்.''”
"ஆமாம்பா, நல்லா ஞாபமிருக்கு. கடவுள் வேடம் போட்டுக்கொண்டு, கலைஞரும் அவர் குடும்பத்தினரும் நாசமாகப் போவார்கள் என்று சாபம் விட்டு, அப்ப பெரும் விமர்சனத்தை அந்த சோமு சம்பாதிச்சாரே?''”
"ஆமாங்க தலைவரே, தற்போதைய தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இயல் இசை நாடக மன்றச் செயலாளராக அந்த சோமுவை தெரியாத்தனமாக நியமித்துவிட்டார்கள். அவரின் கடந்த கால எதிர்ப்பு குறித்தும் வன்மம் குறித்தும் ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டதால், அவர் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்ட இரண்டாவது நாளிலேயே நீக்கப்பட்டார். அப்படிப்பட்ட சோமு குழுவினரை, டெல்லி விழாக் கொண்டாட்டத்தில், தமிழ்நாடு சார்பில் கலந்துகொள்ள எப்படி அனுமதிச்சாங்க? ஆளும்கட்சிக்கு எதிரான மனநிலை கொண்ட அதிகாரிகள்தான் இதற்குக் காரணமா? என்ற கேள்விகள் இப்போது நாட்டுப்புறக் கலைஞர்கள் மத்தியிலேயே சுழன்றடிக்கிறது.''”
"பா.ஜ.க. அண்ணாமலையுடன் நேரடியாக வானதி சீனிவாசன் மல்லுக்கட்ட ஆரம்பித்திருக் கிறாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, மாநில பா.ஜ.க. தலைவரான அண்ணாமலை குறித்த இமேஜ், டெல்லித் தலைமையிடம் முழுவது மாக சரிந்துவிட்டது. காரணம், கட்சியின் சீனியர்கள் அண்ணாமலையின் வார் ரூம் அரசியல் குறித்தும், அவர் நடத்தும் ஆபாச யுத்தம் குறித்தும், கிரிமினல் களுடன் அவர் வைத்திருக்கும் நெருக்கம் குறித்தும், வசூல் விவகாரங் கள் குறித்தும், புகார்களைத் திரட்டி டெல்லியில் கொடுத்துவிட்டார்கள். அதனால் எரிச்சலான பா.ஜ.க. தலைமை, அண்ணாமலைக்கு எதிரான மனநிலையில் இருக்கும் வானதி சீனிவாசனுக்கு, "ம்... ஆரம்பிக்கலாம்'னு சிக்னல் கொடுத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து மறை முகமாக அண்ணாமலையை எதிர்த்துவந்த வானதி, இப்போது பகிரங்கமாகவே மோத ஆரம்பித்துவிட்டார். அண்ணாமலை, ஏப்ரலில் பாதயாத்திரை நடத்தப்போவதாக அறிவித் திருக்கும் நிலையில், அதற்கு முன்பே வானதி தமிழ்நாடு முழுக்க யாத்திரை நடத்த ரெடியாகிவிட்டாராம். தனது நாற்காலி ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டதை அறிந்தும் கூட, தன் ஆட்டத்தைக் குறைத்துக்கொள்ளவில்லையாம் அண்ணாமலை.''”
"முதல்வரின் மருமகன் சபரீசன் ரிங் மாஸ்டர் ஆகிறார்னு சொல்றாங்களேப்பா?''”
"ஆமாங்க தலைவரே, இதுவரை தி.மு.க.வில் திரைமறைவாக இயங்கிவந்த முதல்வரின் மருமகன் சபரீசன், நேரடியாக அரசியல் களத்துக்கு வருகிறாராம். அண்மையில் தமிழகத்தின் 50 எம்.எல்.ஏ.க்களையும், 20 மேயர்களையும் நேர்காணலுக்கு அழைத்த சபரீசன், அவர்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்தும், தமிழக மக்கள் தி.மு.க. ஆட்சியிடம் எதிர்பார்ப்பது குறித்தும் விசாரித்திருக்கிறார். இவை கவனமாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் விரும்பும் அம்சங்கள், தமிழக பட்ஜெட்டில் எதிரொ-க்கும் என்கிறார்கள். இந்த நேர்காணலின் போது, அமைச்சர்கள் சிலரின் ஊழல் குறித்தும், சில அமைச்சர்கள் கட்சியினரை அலட்சியப்படுத்துவது குறித்தும் கட்சிப்பிரமுகர்கள் தங்கள் ஆதங்கத்தை சபரீசனிடம் கொட்டினார்களாம். அதற்கு அவர், அவர்களை நான் பார்த்துக்கறேன் என்று அழுத் தம் கொடுத்துச் சொன்னாராம். இதையொட்டி, சபரீசன் தி.மு.க.வின் ரிங் மாஸ்டர் ஆகறார் என்று எம்.எல்.ஏ.க்களே விறுவிறுப்பாகப் பேசிக்கொள்கிறார்கள். இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனையும், தமிழர் வாழ்வுரி மைக் கட்சித் தலைவர் வேல்முருகனையும் கூட அழைத்து விசாரித்திருக்கிறார் சபரி. கள்ளக்குறிச்சி, வேங்கை வாசல் விவகாரங்களில் போலீஸின் செயல் பாடு திருப்தியாக இல்லைனு அவர் கள் சபரீசனிடம் குறைபட்டுக்கொண்டார்களாம்.''”
"புதிய தலைமைச் செயலாளருக்கான மூவ்கள் வேகமெடுத்திருக்குதே?''”
"ஜூனில் ஓய்வுபெறும் இறையன்பு ஐ.ஏ.எஸ்.ஸுக்குப் பின், புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட இருப்பவர் யார் என்ற கேள்வி பெரிதாக எழுந்திருக்கிறது. தற்போது நிலவும் ராஜ்பவனுடனான பிரச்சினைகளையும், ஒன்றிய அரசுடனான உறவுகளையும் சரிசெய்ய வேண்டிய பொறுப்பு, புதிய தலைமைச்செயலாளருக்குக் காத் திருக்கிறது. இந்த நிலையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் சீனியர் அதிகாரியான ஹன்ஸ்ராஜ் வர்மாவுக்கும், ஜூனியர் அதிகாரியான முருகானந்தத்திற்கும் இடையில்தான் போட்டி நிலவுகிறது. ஹன்ஸ்ராஜ்வர்மா முதல்வரின் குட்புக்கில் இருப்பவர். முருகானந்தம் ஜூனியர் என்றபோதும் முதல்வரின் முதன்மைச்செயலாளரான உதயசந்திரனின் நெருங்கிய நண்பர். அதிலும் தமிழ் அதிகாரி. எனவே அவரை அந்தப் பதவியை நோக்கி நகர்த்தும் முயற்சிகளும் நடக்கிறது. ஓய்வுக்குப்பின் இறையன்பு, தகவல் அறியும் உரிமை ஆணையத்துக்கு நியமிக்கப்படலாம் என்ற பேச்சு இப்போதே எழுந்திருக்கிறது.'”
"ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு டெல்லி பிரபலங்களும் வர்றாங்க போலிருக்கே?''”
"இரு தரப்பிலுமே அந்த ஆர்வமும் முயற்சிகளும் இருக்குது. குறிப்பா, காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு பிரச்சாரம் செய்ய, அக்கட்சியின் ஸ்டார்களான ராகுல்காந்தியையும், பிரியங்காவையும் வரவழைக்க முயற்சிகள் நடக்குது. இது தொடர்பாக வேட்பாளரான இளங்கோவனும் கட்சித் தலைமைக்கு வேண்டுகோள் வச்சிருக்காராம். ஆனால், வடகிழக்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மேலிடம் பிசியாக இருப்பதால், இளங்கோவனின் கோரிக்கைக்கு இன்னும் க்ரீன் சிக்னல் கிடைக்கவில்லை என்கிறார்கள் கதர்சட்டைத் தரப்பினர். அதேசமயம், இருவரில் ஒருவராவது வரவேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தரப்பிலிருந்து கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் வலியுறுத்தி இருக் கிறார்கள். பா.ஜ.க. தரப்பிலும் இது போன்ற மூவ் நடக்குது.''”
"கமலின் மக்கள் நீதி மையத்திலும் சலசலப்பு தெரியுதே?''”
"கமல் கட்சியினர் இடைத்தேர்தலில் களமிறங்கணும்னு நினைக்கிறாங்க. அதனால் கமல், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததை அவர்களில் பெரும்பாலானோர் விரும்பவில்லை. கமலின் இந்த முடிவை மய்யத்தின் மாநில நிர்வாகிகளும், ஈரோடு மாவட்ட நிர்வாகிகளும் ரசிக்கலை. வெற்றியோ, தோல்வி யோ களத்தில் நின்று, பலத்தைக் காட்டவேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள். இந்தக் கருத்தை கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே கமலிடம் அவர்கள் தெரிவித்தார்களாம். எனினும் கமல், தங்கள் கருத்தைச் செவிமடுக்கவில்லை என்ற ஆதங்கம் அவர்களிடம் இருக்கிறது. ஆனால் கமலோ, இடைத்தேர்தலில் அதிரடி முடிவுகளை எடுக்க முடியாது. நான் எடுத்த முடிவு கட்சியின் எதிர்காலத்துக்கு ஆரோக்கியமானது என்று சொல்லிவருகிறார்.''”
"காரைக்குடி பக்கம் கட்டப் பஞ்சாயத்து, கந்துவட்டி தீவிரமா தலைதூக்குதாமே...?''
"சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி, மீட்டர் வட்டினு சமூக விரோதச் செயல்கள் நிறைய நடக்கிறதாம். வலிமையை உணர்த்தும் பெயரைக் கொண்ட தனிநபர் ஒருவரின் கீழ், கந்துவட்டி கட்டப்பஞ்சாயத்து விவகாரங் களை நடத்துவதற்காகவே தனி டீம் ஒன்று இயங்கி வருகிறதாம். நடவடிக்கை எடுக்க வேண்டிய காரைக்குடி வடக்கு காவல் துறையும் அந்த சமூக விரோத டீமுடன் கைகோத்துக் கொண்டு இயங்குவதால், மாவட்டத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வெடிக்கும் அபாயம் சூழ்ந்திருக்கிறதாம். இது தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க்குக்கு தெரியுமா? என்கிறார்கள், காவல்துறை ஆட்களே.''”
"நானும் ஒரு தகவலை பகிர்ந்துக்கிறேன். கடந்த நக்கீரன் இதழில் "மோசடி வழக்கு! அண்ணாமலை கைதா? பதட்டத்தில் பா.ஜ.க!' என்ற கட்டுரையில் முத்துராம-ங்கத் தேவர் குருபூஜையில் நடந்த சம்பவங்களைக் குறிப்பிடும்போது, தேவர் நினைவிடம் என்பது தேவர் சமாதி என தவறுத லாக இடம் பெற்று விட்டதுங்கிறதைச் சொல்-க்கிறேன்...''
________
இறுதிச் சுற்று!
உத்தமர் காந்தியடிகளின் 76-வது நினைவு தினத்தை (30/1/23 திங்கள்கிழமை) அனுஷ்டிக்கும் வகையில் சென்னை எழும்பூரில் இருக்கும் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலினும் ஆளுநர் ஆர்.என். ரவியும் இணைந்து மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியின்போது முதல்வரும் ஆளுநரும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக்கொண்டனர். அருங்காட்சியகத்தில் அமைக்கப் பட்டிருந்த காந்தியடிகளின் நினைவுகளைக் கூறும் புகைப்படக் கண்காட்சியினை இருவரும் இணைந்து திறந்துவைத்தனர். காந்திஜியை பற்றிய புகைப்படக் காட்சிகளை இருவரும் ஒருசேரப் பார்வையிட்டனர். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் சாமிநாதன், சேகர்பாபு, அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, தயாநிதிமாறன் எம்.பி., அரசு அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டார்கள். இதனையடுத்து, தியாகிகள் தினத்தை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் உள்ள ராணுவ வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீண்டாமை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார் முதல்வர் ஸ்டாலின்.
-இளையர்