இதோ தமிழக பத்திரிகை யாளர்களின் குரலாக உரத்து ஒலிக்க ஆரம்பித்துள்ளது சென்னை பத்திரிகையாளர் மன்றம். 1967ல் தி.மு.க. ஆட்சி அமைந்தபிறகு 1970ஆம் ஆண்டு அப்போதைய முரசொலி பத்திரிகையின் ஆசிரிய ரான முரசொலி மாறன், ஸ்டேட்ஸ் மேன் பத்திரிகையின் முன்னணி பத்திரிகையாளர் சாம் ராஜப்பா இருவரும் சேர்ந்து 1970ஆம் ஆண்டு ஆரம்பித்ததுதான் மெட்ராஸ் பிரஸ் கிளப் என்கிற பத்திரிகையாளர் அமைப்பு. 1978ஆம் ஆண்டு மன்றத் தின் தலைவராக முரசொலி மாறன் பதவியேற்றார். இதுதான் அவர் வகித்த முதல் பதவி. இப்படி வர லாற்றுச்சிறப்புமிக்க பல சங்கதி களை கொண்டுள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றம் என்று இன்று அழைக்கப்படும் சென்னை பிரஸ் கிளப்புக்கு வருகிற டிசம்பர் மாதம் 15ஆம் தேதி தேர்தல் நடத் தப்படும் என ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் அறிவித்திருக்கிறார்.
1970ஆம் ஆண்டு துவங்கப் பட்ட இந்த பிரஸ் கிளப், முறை யான சட்டதிட்டங்களுடன் இயங்க ஆரம்பித்தது 1997ஆம் ஆண்டுதான். அதன்பிறகு 1999ஆம் ஆண்டு மன்றம் ஒரு தேர்தலைச் சந்தித்தது. அதற்குப்பிறகு 2003ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பிரஸ் கிளப்புக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. தமிழகப் பத்திரிகையாளர்களின் மையக் குரலாக இயங்கிவந்த பத்தி ரிகையாளர் மன்றத்துக்கு கடந்த 25 வருடங்களாக தேர்தலே நடத்தப் படவில்லை. அந்த மன்றத்தின் சட்ட விதிகளின்படி இரண்டு வருடத் திற்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்படி தேர்தல் நடத்தப் படவில்லை என்றால் ஏற்கெனவே நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக் கப்பட்டவர்களின் பதவியும், அதி காரமும் தானாகப் பறிபோய்விடும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தரேசன் தனது அறிக்கையிலேயே குறிப்பிட்டு இருக்கிறார்.
ஏன் தேர்தல் நடத்தவில்லை எனக் கேட்டதற்கு, "தேர்தல் நடத்து வது தொடர்பாக பல வழக்குகள் நீதி மன்றங்களில் நிலுவையில் இருக்கின் றன. டைம்ஸ் ஆப் இண்டியா செல்வ ராஜ் என்பவர் வழக்குப் போட்டிருக் கிறார். மணிகண்டன் மற்றும் சுப்பையா என மொத்தம் மூன்று வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதனால் அந்த அமைப்புக்கு தேர்தல் நடத்த முடியவில்லை'' எனப் பதில் சொல்லப்பட்டது. இது சென்னை யிலுள்ள பத்திரிகையாளர்கள் மத்தி யில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. ஒரு பத்திரிகையாளர் அமைப்பு ஜனநாயக முறைப்படி தேர்தல் கூட நடத்தாமல் நீடிப்பது பத்திரிகையாளர்களுக்கு பெரிய அவமானம் என்கிற கூக்குரல் எழுந்தது.
‘மாற்றத்துக்கான ஊடக மையம்’ என்கிற பத்திரிகை யாளர் அமைப்பு ஒரு கூட்டத்தை இதற்காகக் கூட்டியது. இந்து என். ராம், மூத்த பத்திரிகையாளர் பகவான் சிங், நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆகியோர் தலைமையில் சென்னை மைலாப்பூரில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் கூட்டப்பட்ட கூட்டத்தில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு தேர்தல் நடத்துவது தொடர்பான நடவடிக்கைகள் எடுப்பது என முடிவு செய்யப்பட்டது. அதற்காக இந்து என்.ராம், பகவான் சிங், நக்கீரன் ஆசிரி யர் கோபால் போன்ற முன்னணிப் பத்திரிகையாளர்கள், சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகளுடன் தேர்தல் நடத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அவர்கள் முன்வைத்த ஆலோசனைப்படி சென்னை பத்திரிகையாளர் மன்றம் 11 உறுப்பினர்கள் அடங்கிய பொது மகாசபைக் கூட்டத் தைக் கூட்டி, அவர்களது சிபாரிசின்படி போடப்பட்ட உறுப்பினர்களையும் ஒன்று சேர்த்து 12 பேர் கொண்ட கமிட்டியை தேர்தல் நடத்து வது சம்பந்தமான நடவடிக் கைகளுக்காக அமைத்தார்கள். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி அமைக் கப்பட்ட இந்த கமிட்டியில் இந்து என்.ராம், பகவான் சிங், நக்கீரன் கோபால், இந்து சுரேஷ், சாவித்திரி கண்ணன், கவிதா முரளிதரன், லட்சுமி, முருகேசன், சண்முகப் பிரியன், சிகாமணி, நூருல்லா, குபேந் திரன் ஆகியோர் இடம் பெற்றனர். இந்த கமிட்டியின் முயற்சியில் தேர்தல் நடத்து வதற்கு எதிராக வழக்கு போட்டிருந்த செல்வராஜ், மணிகண்டன், சுப்பையா ஆகியோர் தங்களது வழக்கை வாபஸ் பெற்றார்கள்.
நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடத் துவதற்காக 7 உறுப்பினர்கள் அடங்கிய ஒரு சப் கமிட்டி உருவாக்கப்பட்டது. இந்து என்.ராம், பகவான் சிங், நக்கீரன் கோபால் தலைமையில் அமைக்கப்பட்ட அந்த கமிட்டி மொத்தமுள்ள பழைய உறுப் பினர்கள் அனைவரது மெம்பர்ஷிப்பை யும் பரிசீலனை செய்தது. பத்திரிகையாளர் மன்றத்தின் சட்ட விதிகளின்படி புதிய உறுப்பினர்களையும் சேர்த்தது. ஏகப் பட்ட இடர்பாடுகள், தடைகள் அனைத் தையும் தாண்டி ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் அவர்களை தேர்தல் அதிகாரியாக நியமித்து வருகிற டிசம்பர் 15ஆம் தேதி தேர்தல் நடக்கும் என பத்திரிகையாளர் மன்றத்தின் நோட்டீஸ் போர்டில் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது.
சென்னை பத்திரிகையாளர் மன்றம் 1970ஆம் ஆண்டு தொடங் கப்பட்டாலும், சிறந்த ஆளுமை கள் அதன் தலைவர்களாகப் பதவி வகித்தாலும், மொத்தம் இரண்டு முறைதான் தேர்தலை சந்தித்திருக் கிறது. கிட்டத்தட்ட 25 ஆண்டு களுக்கு மேலாக தேர்தலே நடத்த முடியாத சூழலை முறியடித்து, இந்து என்.ராம், பகவான் சிங் மற் றும் நக்கீரன் கோபால் ஆகியோர் அடங்கிய கமிட்டி வெற்றிகரமாக தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள் ளது. பத்திரிகையாளர்கள் மத்தியில் இது மிகப்பெரிய ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது.
பல மாதங்கள் நீடித்து நின்ற இம்முயற்சிக்கான செலவுகளில் ஒற்றை நயா பைசாவைக் கூட சென்னை பத்திரிகையாளர் மன்றத் திலிருந்து இந்த கமிட்டி பெற வில்லை. “முன் முயற்சி எடுத்தவர் களின் சொந்த செலவில் அர்ப் பணிப்புடன் கூடிய உழைப்பில் தமி ழகத்தின் மிகப்பெரிய பத்திரிகை யாளர் அமைப்பான சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் வேர்களில் ஜனநாயகம் எனும் நன்னீரைப் பாய்ச்சுவது என்பது சாதாரணமான செயல் இல்லை” என்கிறார்கள் தமிழகப் பத்திரிகை யாளர்கள்.