‘வந்தாரை வாழவைக்கும் சென்னை’ என்று பெயரெடுத்த தமிழகத் தலைநகரின் பெருமையை, இந்த கொரோனா ‘வேறு மாதிரி’ பேச வைத்துவிட்டது. பிழைப்பு தேடிவந்த தங்களை, இதுநாள் வரையிலும் அரவணைத்து வந்த அன்னையாம் சென்னையை விட்டுவிட்டு, மூட்டை முடிச்சுகளுடன் சொந்த ஊருக்கே திரும்பிவிட்டார்கள், லட்சோப லட்சம் பேர். அதுவும் இ-பாஸ் ஈஸியான பிறகு, வாடகை கார்களில் பயணிகளும், குட்டியானையில் அவர்கள் வீட்டுப் பொருட்களும் பயணிப்பதை பார்க்க முடிகிறது.
பெற்றோரின் அன்பு மட்டுமே ஆறுதல்!
திண்டுக்கல் இளைஞரான அசோக்குமார், ""சென்னைல தனியா ரூம் எடுத்து தங்கி, ஒரு பிரைவேட் கம்பெனில வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். கொரோனாவால ஊரடங்கு வந்தாலும் வந்துச்சு. வேலையில்லாம போச்சு. கையில பணமில்லாம... ரூம் வாடகையும் கொடுக்காம, எத்தனை நாளைக்கு காலம் தள்ள முடியும்? சாப்பாட்டுக்கு வழியில்லாம போனதும், சொந்த ஊரு நினைப்பு வந்திருச்சு. பேப்பர் வண்டி, பால் வண்டி, காய்கறி வண்டின்னு மாறி மாறி பிடிச்சு, ஊருக்கு வந்து சேர்ந்தேன். வயசான காலத்துல எங்க பக்கத்துல இருந்தாலே போதும்னு பெத்தவங்க காட்டுற அன்பு மட்டும்தான் ஒரே ஆறுதல். கொரோனாவுக்கு எப்ப முடிவு கட்டுவாங்களோ? அப்பத்தாங்க வேலை பார்த்து சம்பளம் வாங்கி கையில பணம் புரளும். அதுவரைக்கும் உள்ளூர்ல வேலை ஏதாச்சும் கிடைக்குமான்னு தேடிக்கிட்டிருக்கேன். சிட்டி லைஃபை தொலைச் சிட்டேன்'' என்றார் பரிதாபமாக.
‘மவுஸ்’ பிடித்த கையில் சிமெண்ட் மூடை!
சென்னையில் ‘வீடியோ எடிட்டிங்’ வேலை
‘வந்தாரை வாழவைக்கும் சென்னை’ என்று பெயரெடுத்த தமிழகத் தலைநகரின் பெருமையை, இந்த கொரோனா ‘வேறு மாதிரி’ பேச வைத்துவிட்டது. பிழைப்பு தேடிவந்த தங்களை, இதுநாள் வரையிலும் அரவணைத்து வந்த அன்னையாம் சென்னையை விட்டுவிட்டு, மூட்டை முடிச்சுகளுடன் சொந்த ஊருக்கே திரும்பிவிட்டார்கள், லட்சோப லட்சம் பேர். அதுவும் இ-பாஸ் ஈஸியான பிறகு, வாடகை கார்களில் பயணிகளும், குட்டியானையில் அவர்கள் வீட்டுப் பொருட்களும் பயணிப்பதை பார்க்க முடிகிறது.
பெற்றோரின் அன்பு மட்டுமே ஆறுதல்!
திண்டுக்கல் இளைஞரான அசோக்குமார், ""சென்னைல தனியா ரூம் எடுத்து தங்கி, ஒரு பிரைவேட் கம்பெனில வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். கொரோனாவால ஊரடங்கு வந்தாலும் வந்துச்சு. வேலையில்லாம போச்சு. கையில பணமில்லாம... ரூம் வாடகையும் கொடுக்காம, எத்தனை நாளைக்கு காலம் தள்ள முடியும்? சாப்பாட்டுக்கு வழியில்லாம போனதும், சொந்த ஊரு நினைப்பு வந்திருச்சு. பேப்பர் வண்டி, பால் வண்டி, காய்கறி வண்டின்னு மாறி மாறி பிடிச்சு, ஊருக்கு வந்து சேர்ந்தேன். வயசான காலத்துல எங்க பக்கத்துல இருந்தாலே போதும்னு பெத்தவங்க காட்டுற அன்பு மட்டும்தான் ஒரே ஆறுதல். கொரோனாவுக்கு எப்ப முடிவு கட்டுவாங்களோ? அப்பத்தாங்க வேலை பார்த்து சம்பளம் வாங்கி கையில பணம் புரளும். அதுவரைக்கும் உள்ளூர்ல வேலை ஏதாச்சும் கிடைக்குமான்னு தேடிக்கிட்டிருக்கேன். சிட்டி லைஃபை தொலைச் சிட்டேன்'' என்றார் பரிதாபமாக.
‘மவுஸ்’ பிடித்த கையில் சிமெண்ட் மூடை!
சென்னையில் ‘வீடியோ எடிட்டிங்’ வேலையில் பிசியாக இருந்த யோகபாண்டி, சொந்த ஊரான மதுரையில் ‘சித்தாள்’ வேலைக்குப் போவதை, வேதனையோடு சொன்னார். ""ஆறு வருஷமா சென்னைல ஒரு போட்டோ லேப்ல வேலை பார்த்து... கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகி, மேரேஜும் பண்ணிக்கிட்டேன். புது வாழ்க்கைய ஆரம்பிச்ச நேரம் பார்த்து, சென்னை முழுக்க கொரோனா வந்திருச்சு. எங்களால 15 நாள்கூட தாக்குப்பிடிக்க முடியல. பஸ், ரயில்னு எதுவுமே இல்ல. கொஞ்ச லக்கேஜோட பொண்டாட்டி கைய பிடிச் சிக்கிட்டு, ரொம்ப தூரம் நடந்தே வந்தேன். அப்புறம்... அந்த வழியா வாழைக்காய ஏத்திட்டு வந்த சரக்கு வண்டி, எங்க மேல பரிதாபப்பட்டு, கூட்டிட்டு வந்து மதுரைல விட்ருச்சு. இங்கே மட்டும் என்ன வாழுதாம்? ஒரு வேலையும் இல்ல. அப்பத்தான்... ஃப்ரண்ட் ஒருத்தன்... சேலத்துல பாலம் கட்டுறாங்க.. சித்தாளு வேலைக்கு வர்றியான்னு கூப்பிட்டான். கட்டிடமே கட்டக்கூடாதுன்னு கவர் மெண்ட் அறிவிச்சிருக்கு. சேலத்துல மட்டும் வேலை எப்படி நடக்குதுன்னு கேட்டேன். அது எடப்பாடி ஊருடா... சட்டமெல்லாம் தனியாருக்குத்தான். கவர்மெண்ட் கான்ட்ராக்ட் வேலை யெல்லாம் அதுபாட்டுக்கு நடந்துக் கிட்டிருக்கும்னு சொன்னான். ஏ.சி. ரூம்ல, கம்ப்யூட்டர் எடிட்டிங்ல, மவுஸ் பிடிச்ச கையால, சிமென்ட் மூடை தூக்குற நெலம வந்துச்சு. அந்த வேலை பிடிக்காம, மதுரைக்கு வந்துட்டேன். திருமண நிகழ்ச்சியோ, கோவில் விழாவோ, ஏதாச்சும் நடந்தா.. போட்டோ, வீடியோ எடுக்க போகலாம். இந்த அளவுக்கு லோல் படுவேன்னு கனவுல கூட நான் நினைச்சதில்ல'' என்றார் சோகமாக.
திரும்பவும் மொதல்ல இருந்து..!
மாமனார் ஊரான காரைக் குடிக்கு இடம் பெயர்ந்திருக்கும் சென்னைவாசியான சிவராம கிருஷ்ணன். “சென்னை யுனிவர் சிடில பி.ஏ. வரலாறு படிச்சிட்டு, ஏர்டெல் பிராட்பேண்ட் பிரிவில் வேலை பார்த்து கை நிறைய சம்பாதிச்சேன். என்னதான் நான் சம்பாதிச்சாலும் அப்பாதான் குடும்பத்த காப் பாத்தினாரு. அவரு இறந்ததும், பொருளா தாரத்துல ரொம்பவும் சிரமப்பட்டேன். 2014-ல காரைக்குடி பெண்ணான அபிராமிய கல்யாணம் முடிச்சேன். மனைவியும் குழந்தை யும் திருவிழாவுக்காக காரைக்குடி வந்தாங்க. அப்ப லாக்டவுன் அறிவிச்சதுனால அவங்க ளால சென்னைக்கு திரும்ப முடியல. என்னால யும் போக முடியல. இருக்கிறத வச்சு சாப்பிட் டேன். மே மாச கடைசில எப்படியோ காரைக்குடிக்கு வந்து சேர்ந்தேன். அத்தனை நகையவும் அடகு வச்சாச்சு. இப்பத்தான் ஜொமட்டோ கம்பெனில வேலை கிடைச்சது. ஒரு நாள் சம்பளம் ரூ.150. கல்யாணம் ஆனதுல இருந்து எந்தவொரு வேலைக்கும் போகாத என் மனைவி, இப்ப வேலைக்குப் போறாங்க. சென்னையில் எல்லாரும் நிம்மதியா வாழ்ற அளவுக்கு என் சம்பளம் இருந்தது. இப்ப ரெண்டு பேரு வேலைக்கு போனாலும் சிரமப்படறோம். மீண்டு வந்திருவோம்கிற நம்பிக்கை இருக்கு. திரும்பவும் மொதல்ல இருந்து வாழ்க்கையைத் தொடங்குற மாதிரி ஆயிருச்சு...''’என்று விட்டத்தைப் பார்த்தார்.
எல்லாமே அன்னியமாகத் தெரிகிறது!
""இங்கே வந்துட்டதுனால... வீட்டுச் சாப்பாடு தான். சுற்றியும் உறவுக்காரங்க இருக்காங்க. ஆனா... எல்லாமே அன்னியமாப்படுது... ஏன்னா... யாருகூடவும் ஒட்டாம வாழ்ந்து பழகிட்டேன்'' என்றார் சங்கரன் கோவில்காரரான குமரன். ஏரோநாட்டிகல் டிசைனர் வேலை. அங்கே 8 மணி நேர வேலைன்னா... இங்கே 11 மணி நேர வேலை. சக்கையா பிழிஞ்சிடறாங்க. லீவு இல்ல. ஒண்ணுமில்ல. நிம்மதிங்கிறது கொஞ்சம்கூட இல்ல. எப்படா கொரோன ஒழியும். திரும்பவும் சென்னைக்கு போவோம்னு ஒரே தவிப்பா இருக்கு''’என்றார்.
போரடிக்கிறது வாழ்க்கை!
ஐ.டி. ஊழியரான கோவில்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், ""சென்னைல லாக்டவுன் நேரத்துல தோசை வாங்கினா சாம்பார் கிடைக்காது. வாடகை முழுசா வேணும்னு வீட்டு ஓனர் ரொம்ப கெடுபிடி பண்ணுனாரு. அங்கே பார்த்த வேலைல முதுகு வலி.. கண்ணுல குறைபாடுன்னு எல்லா நோயும் வந்திருச்சு. கொரோனாவும் வந்து தொலைச்சிடக் கூடாதுன்னு உசிர கையில பிடிச்சிக்கிட்டு ஊரு வந்து சேர்ந்தேன். பீச்... மால்ன்னு சுற்றி பழகிட்டேனா? இங்கே சுத்துறதுக்கு என்ன இருக்கு? ரொம்ப போரடிக் குது''’என்று சலித்துக்கொண்டார்.
சக மனிதர்களை எதிரியாகப் பார்க்கும் கொடுமை!
""வர்ற அவசரத்துல வீட்டு ஓனர்கிட்ட சொல்லல. கொடுத்த அட்வான்ஸ திருப்பி வாங்கல. கேஸ் அடுப்பு, சிலிண்டரெல்லாம் அங்கேயே கிடக்கு''’ என்றார், குமரி மாவட்டம் - தக்கலையைச் சேர்ந்த தாஸ்.
""ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கிற கம்பெனில 23 வரு ஷமா வேலை பார்த்திட்டு இருந்தேன். ஊர்ல இருக்க அம்மாவுக்கு மாசம் தவறாம பணம் அனுப்புவேன். ஜி.எஸ்.டி.னால ஆட்குறைப்பு நடவடிக்கைங்கிற பேர்ல கொஞ்ச பேரை வேலைய விட்டு தூக்கினாங்க. கொரோனா வந்ததும் கம்பெனிய முழுசா பூட்டிட் டாங்க. எப்ப திறப்பாங்கன்னு இருந்து கண்ணு பூத்தி ருச்சு. கையிருப்ப வச்சு, மூணுவேளை சாப்பிட்டு, நாளைக் கடத்திட்டிருந்த எனக்கு, ஒருவேளை சாப்பாட்டுக்கே திண்டாடுற நெலம வந்திருச்சு. அதுக்குள்ள முழு ஊரடங்க கொண்டு வந்துட்டாங்க. பக்கத்து விட்டுக்குகூட போக முடியாது. 30 கி.மீ. தூரத்துல உறவுக்காரங்க இருக்காங்க. அங்கேயும் போக முடியாது. எல்லாருக்குமே கொரோனா பயம். சக மனுஷன எதிரியா பார்க்க வச்சிருச்சு கொரோனா. சாப்பாட்டுக்கு வழியில் லாம.. பயத்துல உடம்பு பாதி ஆயிருச்சு. நோய் வராமலே செத்திருவோம்கிற பயம் ஆட்டிப் படைச்சிருச்சு.
என்னைக் காப்பாத்துங்கன்னு அம்மாகிட்டயும், உறவுக்காரங்ககிட்டயும் அழுதேன். வீட்ல இருக்கிற சாமான்கள பார்சல் சர்வீஸ்ல கொடுத்து ஊருக்கு அனுப்பி வச்சேன். அப்புறம்.. தூத்துக் குடில இருந்து கோயம்பேடு மார்க்கெட் டுக்கு காய்கறி கொண்டுவந்த டெம்போ வுல ஊரு வந்து சேர்ந்தேன். இத்தனை காலமா என்னை வாழ வச்ச ஊரு சென் னை. சொந்த ஊரு மாதிரி சென்னையை யும் மறக்க முடியாது. நன்றிய மறந்தா நான் மனுஷனே இல்ல. சென்னைங்கிற பேரை சொல்லுறப்ப... நியூஸ் பேப்பர்ல எழுத்துல படிக்கிறப்ப... டிவில சென்னைய காட்டுறப்ப... என்னமோ மாதிரி மனச பிசையுது''’ என்று சிலிர்த்தார்.
சொந்த ஊரில் வாழ வழியின்றி, அங்கே போனால் பிழைத்துக்கொள்ளலாம்...’ என நம்பிக்கையோடு வருபவர்களை, அரவணைத்தே பழக்கப்பட்ட சென்னைக்கும், கொரோனா பரவலால் இது ஒரு சோதனைக் காலம்தான்!
-ராம்கி, சக்தி, அண்ணல், மணிகண்டன், நாகேந்திரன், ராம்குமார்