"ஹலோ தலைவரே, நாடே தேர்தல் தகிப்பில் இருக்கும் நேரத்தில் தமிழக அரசியல் கட்சிகளுக்குள் அதிருப்திகளைப் பார்க்க முடிகிறது''”

"ஆமாம்பா, சீட் விவகாரம் எல்லாக் கட்சியிலும் இருக்கே?''”

ll

"உண்மைதாங்க தலைவரே, முதலில் அ.திமு.க. குறித்த பிரச்சினைகளைப் பார்க்கலாம். எடப்பாடி அறிவித்த வேட்பாளர் பட்டியலில் வசதியான காண்ட்ராக்டர்கள்தான் அதிகமாக இருக்கிறார் களாம். அதிலும் நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களுக்கே அவர் அதிகமாக வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்னு, அந்தக் கட்சியில் இப்போது ஒரு சூறாவளி வீசிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக திருச்சியில், மணல் கரிகாலனின் சகோ தரரான கருப்பையாவை வேட்பாளராக நிறுத்தி யிருக்கிறார் எடப்பாடி. இங்கு வேறு கட்சிக்காரர் களே நமக்குக் கிடைக்கவில்லையா? என்று கட்சி நிர்வாகிகள் கொந்தளிக்கிறார்கள். அதேபோல் அ.தி.மு.க.வில் சீட் கேட்ட அன்வர்ராஜா, கோகுல இந்திரா மற்றும் தங்கள் வாரிசுகளுக்காக சீட் கேட்ட கே.பி.முனுசாமி, வளர்மதி, ராஜன்செல் லப்பா ஆகியோரையும் எடப்பாடி கண்டுகொள்ளா மல் புறக்கணித்துவிட்டாராம். எனவே அவர்களும் பற்களை நறநறக்கிறார்களாம்.''”

"தேனியில் களமிறங்கிய தினகரன், அங்கே கரன்சி மழை பொழிவேன்னு சொல்கிறாராமே?''”

"தான் களமிறங்கியிருக்கும் தேனி தொகுதி யில் 450 கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்வ தாக டி.டி.வி.தினகரன், தங்கள் கட்சி நிர்வாகிகளி டம் டமாரம் அடித்தாராம். இதைக்கேட்ட அவர் கள் நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார் கள். காரணம் அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில் நீதி மன்றம் அவருக்கு விதித்த 32 கோடி ரூபாயைக் கூட அவர் கட்டவில்லையாம். இதை எதிர்த்து அவர் அப்பீலுக்கு செல்லாததாலும் காலம் கடத்து வதாலும் இந்தத் தொகை ஏறத்தாழ மூன்று மடங்காகி விட்டதாம். இதுதவிர, மேலும் சில வழக்குகளின் நெருக்கடி யிலும் அவர் சிக்கியிருக்கிறா ராம். இந்த லட்சணத்தில் அவர் எப்படி இந்த அளவுக்குச் செலவு செய்வார்? என்று கேள்வி எழுப்பு கிறார்கள். இதற் கிடையே மன ஆறு தலுக்காக தினகரன், அண்மையில் சங்கராச்சாரியாரை சந்தித்து தன் நெருக்கடிகள் குறித்து முறையிட்டாராம். தினகரனை எதிர்த்து தேனியில் தி.மு.க. சார்பில் களமிறங்கியிருக்கும் தங்க.தமிழ்ச்செல்வன், தினகரனுக்கு கடுமையான டஃப் கொடுத்துவரு கிறார். தினகரனுடன் ஒரு காலத் தில் இவர் நெருக்கமாக இருந்த தால், தினகரனின் பலம் பலவீனம் இரண்டையும் அறிந்தவராக இருக்கிறார். எனவே, தினகரனின் மூவ்களுக்கு இவர் உரிய வகையில் முட்டுக்கட்டை போடுவார் என்று எதிர்பார்க்கிறது தி.மு.க.''”

"கோவையில் பா.ஜ.க. தரப்பு வசூலில் தூள் பரத்துகிறதே?''”

Advertisment

ff

"பா.ஜ.க.வில், கோவை தொகுதி தேர்தல் அலுவலகப் பொறுப்பாளராக அங்குள்ள வேட்பாளர் தனது கையாளான அமர்பிரசாத் ரெட்டியை நியமித்திருக்கிறாராம். மேலும் இவர் தரப்பு ’மணல்’ கரிகாலனிடம் தேர் தல் செலவுக்காக மிகமிக வெயிட்டான தொகையை வாங்கியிருக்கிறதாம். இதே போல் பெரிய பெரிய தொழி லதிபர்கள், காண்ட்ராக்டர்கள் என்று பணப் பார்ட்டிகளிடம் ஏகத்துக்கும் அங்கே வசூல் நடக்கிறதாம். தமிழகம் முழுக்க நாங்களே செலவு செய்யவேண்டியிருக்கிறது. அதனால் தாராளமாக அள் ளிக் கொடுங்கள் என்று கை ஏந்துகிறார்களாம். ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் சிறைக்குச் சென்ற அதன் நிர்வாகிகளில் ஒருவரான ஹரீஸ் இப்போது கோவைக்கே சூட்கேஸோடு வந்து தேர்தல் வேலை பார்க்கிறாராம். இவர்கள் தரப்பு வசூலித்ததே ஏறத்தாழ 300 கோடி ரூபாய் அளவுக்கு இருக் கும் என்று பா.ஜ.க. நிர்வாகிகளே ஆதங்கத்துடன் சொல்கிறார்கள்.''”

"தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் பா.ஜ.க. மீது கடும் கோபத்தில் இருக்கிறார்களே?''”

Advertisment

"தென்காசியில் போட்டியிட ஆசைப்பட்ட தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. தொழிலதிபர் ஆனந்தன் ஐயாசாமிக்கு சீட் கொடுக்காமல், அங்கே ஜான்பாண்டியனுக்கு கமலாலயத் தரப்பு சீட் கொடுத்ததில் அந்த சமூகத்தினர் மத்தியில் கடும் அதிருப்தி உருவாகியிருக்கிறது. அந்த சமூகத்தின் நிர்வாகிகளோ, கோவையில் களமிறங்குபவர் தொடங்கி எல்.முருகன், பொன்னார், நயினார் உட்பட பா.ஜ.க.வின் முக்கிய தலைகளைத் தோற்கடிப்போம் என்று சபதம் எடுத்திருக்கிறார்களாம். இது பா.ஜ.க.வில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. அதேபோல் திருவள்ளூரில் நிறுத்தப்பட்டுள்ள பொன்.பாலகணபதியோ, சசிகலா புஷ்பா சம்பந்தப்பட்ட ஏடாகூட வில்லங்க வீடியோவில் சிக்கியவராம். இப்படிப் பட்டவருக்கு சீட்டா என்கிற எரிச்சலில், அப்பகுதி பா.ஜ.க. வினர் இருக்கிறார்களாம்.''”

"விஜயபாஸ்கர் வீட்டில் அண்மையில் ரெய்டு நடந் தது குறித்தும் பல்வேறு தகவல்கள் உலவுகிறதே?''”

"உண்மைதாங்க தலைவரே, விஜயபாஸ் கரைக் குறிவைத்து நடத்தப்பட்ட அமலாக் கத்துறையின் ரெய்டுகளுக்குக் காரணம், வேல்ஸ் கல்லூரி அதிபரான ஐசரி கணேஷ், ஒரு மெடிக்கல் கல்லூரி தொடங்க முயன்றபோது, தான் அமைச்ச ராக இருந்த காலத்தில் போலியான ஆவணங்கள் மூலம் அவருக்கு அனுமதி வழங்கினா ராம் விஜயபாஸ்கர். இது தொடர்பாகப் போடப்பட்ட வழக்கையும், குட்கா ஊழல் வழக்கையும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கையும் அடிப்படையாக வைத்துதான் இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டதாம். பா.ம.க.வுட னான கூட்டணியை, பா.ஜ.க .வுக்கு அமைந்ததற்கு ஐசரி கணேஷும் பின்னணியில் இருந்து உதவினாராம். இவர் பா.ம.க. தரப்போடு மிக நெருக்கமாக இருப்பவர். தனக்கு அம்மா, அப்பாவே ராமதாஸ் தான் என்று சொல்லிவருபவர். இப்படிப்பட்ட ஐசரிகணேஷின் அலுவலகத்திலும் அண்மையில் ரெய்டு நடந்ததைக் கண்ட பா.ம.க. தரப்பு எரிச்சல் அடைந்ததாகவும், சொல் கிறார்கள்.''”

"காங்கிரஸ் கட்சி தன் வேட்பாளர்களை அறிவிப்பதில் திணறலைப் பார்க்க முடிந்ததே?''”

ff

"ஆமாங்க தலைவரே, தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் என அரசியல் கட்சிகள் பலவும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டு, தேர்தல் பிரச்சாரத்தில் விறு விறுப்பை காட்டிவருகிற சூழ லில், தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி மட்டும் வேட்பாளர்களை அறிவிக்கத் திணறிக்கொண்டிருந்தது. பலகட்ட இழுபறி மற்றும் விவாதங்களுக்கு பிறகு 23ஆம் தேதி இரவு 7 தொகுதிகளுக் கான முதல் பட்டியலை சத்ய மூர்த்திபவன் வெளியிட்டது. அப்படியும் மயிலாடு துறை, நெல்லை ஆகிய 2 தொகுதிகளுக்கான வேட் பாளர்களை அறிவிப்பதில் போராட்டம் இருந்தது. இதனால் 25ஆம் தேதி காலைவரை இந்த தொகுதிகளுக்கான வேட்பாளரை முடிவுசெய்ய முடியாமல் காங்கிரஸ், திணறிக்கொண்டிருந்தது . 27ஆம் தேதி வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசி நாள் என்பதால் பரபரப்பு கூடிக்கொண்டேயிருந்தது.''

"முதலில் தயாரித்த காங்கிரஸ் பட்டியலை ராகுல்காந்தி கோபத்தோடு கிழித்தெறிந்து விட்டார்னு தகவல் வருதே?''”

ff

ஆமாங்க தலைவரே, காங்கிரஸில் சீட் வாங்க கடும் முட்டல் மோதல் இருந்தது. கட்சி நிர்வாகிகள் பலரும் டெல்லியில் முகாமிட்டு கட்சி யின் முக்கியமான தலைவர்களை மொய்த்தனர். அதோடு டீலிங்கிலும் இறங்கினர். குறிப்பாக நெல்லை மற்றும் மயிலாடுதுறையைக் கைப்பற்ற முக்கியமான இரண்டு நிர்வாகிகள் சீட்டுக்கு 50 கோடிவரை கொடுக்கத் தயாராக இருப்பதாகப் பேரம் பேசினர். அதேபோல, வேட்பாளர்கள் தேர் வுக் கமிட்டியில் இருப்பவர்களிடமும் இந்த பேரம் நடந்தது. மேலும், கட்சியின் மூத்த தலைவரும் ராகுல்காந்திக்கு நெருக்கமானவருமான ஒருவர், ’நான் சீட் வாங்கித் தருகிறேன். அதற்கு 25 கோடி ரூபாய் தரவேண்டும்’ என்று தனியாக வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதன்படி சிலர் அட்வான்ஸ் தொகையையும் கொடுத்திருக்கிறார் கள்.அதற்கேற்ப, பணம் கொடுத்த அந்த நபர்களின் பெயரை முதலிடத்தில் வைத்து வேட்பாளர் பட்டியலைத் தயாரித்து, ராகுல்காந்தியின் பார் வைக்கும் அனுப்பி வைத்தனர். இந்த கரன்ஸி விளையாட்டுகள் பற்றிய தகவல்கள் எல்லாம் ராகுல் காந்தியின் காதுக்கு அப்படியே போய்விட்டதாம்.''

"ஓ...''”

"தனக்கு வந்த தகவலின் அடிப்படையில் பணம் கொடுத்த நபர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டி ருப்பதைக் கண்ட ராகுல், கடுமையான கோபத்துக்கு ஆளாகிவிட்டாராம். ‘என்ன நடக்குது? நீங்க எப்படி இந்தப் பட்டியலைத் தயாரிச்சிருக்கீங்கன்னு எனக்கு நல்லாத் தெரியும். இதை நான் ஏத்துக்குவேன்னு நினைச்சீங்களா? என்றபடி, அந்த வேட்பாளர் பட்டியலைக் கிழித்து எறிந்திருக்கிறார். தேர்வுக்குழுவினரிடம் கடும் கோபத்தைக் காட்டிய ராகுல், சரியான வேட்பாளர்களை நேர்மையாகத் தேர்ந்தெடுத்து புதிதாக ஒரு பட்டியலைக் கொண்டு வாருங்கள்னு சொல்லி இருக்கிறார். இதனால் மிரண்டுபோன தேர்வுக்குழுவினர், அடுத்து ஒரு பட்டியலைத் தயார் செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட கூத்துகள் எல்லாம் நடந்ததால்தான், காங்கிரஸின் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதமானது என்கிறார்கள்.''”

"காங்கிரஸில் சிட்டிங் எம்.பி.க்கள் ஐந்து பேருக்கு மட்டும் சீட் கொடுக்கப்பட்டிருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 9 சீட்டுக்களில் 5 சிட்டிங் எம்.பி.க் களுக்கு மட்டும் மீண்டும் சீட் வழங்கப்பட்டிருக் கிறது. குறிப்பாக, சிவகங்கை, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 4 தொகுதிகளில் சிட்டிங் எம்.பி.க்களே போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. அதேசமயம் ஆரணி தொகுதி எம்.பி.யான டாக்டர் விஷ்ணுபிரசாத்துக்கு ஆரணி தொகுதி கிடைக்கவில்லை. அதை தி.மு.க. எடுத் துக்கொண்டது. அதனால், விஷ்ணுபிரசாத்துக்கு இந்தமுறை சீட் இருக்காது என்ற டாக் பரபரப்பாக அடிபட்டது. இந்த நேரத்தில் வன்னியர் சமூகத் தைச் சேர்ந்த சிலர் விஷ்ணுவுக்கு எதிராக காய் களை நகர்த்தினர். மேலும், கடலூர் தொகுதியை எனக்காகத்தான் தி.மு.க. ஒதுக்கியது. அதனால் எனக்கு எம்.பி. சீட் வேண்டும் என டெல்லியிலுள்ள கட்சித் தலைமையிடம் ஏகத்துக்கும் மல்லுக்கட்டி னார் கே.எஸ்.அழகிரி. விஷ்ணுவுக்கு எதிராக அழகிரி மற்றும் வன்னியர் சமூக பிரமுகர்கள் வரிந்து கட்டியும், விஷ்ணுவை விட்டுக்கொடுக்காத ராகுல்காந்தி, அவருக்கு கடலூர் தொகுதியை ஒதுக்கியிருக்கிறார். விஷ்ணுவைத் தொடர்பு கொண்ட ராகுல், கடலூருக்கு உங்கள் பெயரை டிக் அடித்திருக்கிறேன்... ஜெயித்து வாருங்கள் என்று வாழ்த்தையும் சொல்லியிருக்கிறார்.''”

"ராகுலின் நண்பருக்கே காங்கிரஸில் சீட் கிடைக்கவில்லையே?''

"ஆமாங்க தலைவரே, மயிலாடுதுறை தொகுதியில் தனது நண்பரான ப்ரவீன் சக்கரவர்த்தி யை நிறுத்தணும்னு ராகுல்காந்தி ஆசைப்பட்டார். அதை இங்கிருக்கும் நிர்வாகிகளிடம் சூசகமாகச் சொன்னார். ஆனால், இவரை நிறுத்தினால் வெற்றிபெறுவது கஷ்டம். அதனால் இவருக்கு சீட் தரக்கூடாதுன்னு கட்சியின் சீனியர்களான மணிசங்கர் அய்யர், கே.எஸ். அழகிரி, பட்டுக் கோட்டை ராஜேந்திரன் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுதவிர தங்களுக்கு மயிலாடு துறையை ஒதுக்கணும்னு அவர்கள் அடம்பிடித் தனர். இவர்களைப் போலவே காங்கிரசின் முன்னாள் பொருளாளரான யாதவ சமூகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நா.சே.ராமச்சந்திரனும் சீட்டுக்கு மல்லுக்கட்டினார். இதையெல்லாம் பார்த்த தேர்வுக் கமிட்டியினர், தலையைப் பிய்த்துக்கொண்டனர். அதனாலும் மயிலாடு துறைக்கு வேட்பாளரை தேர்வுசெய்வதில் இழுபறி நீடித்தது.''”

’"சரிப்பா, காங்கிரஸைப் பத்தி அதிகமா பேசிட்டோம். வேற திசைக்குப் போவோம். தமிழகத்தில் மோடி நாடகம் போடுகிறார்னு அ.தி.மு.க. தரப்பு விமர்சிக்கிதே?''”

"நாகையில் உள்ள தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம், ஜெயலலிதா காலத்தில் 2012-ல் உருவாக்கப்பட்டது. அவரது மறைவுக்கு பிறகு முதல்வரான எடப்பாடி, அந்தப் பல்கலைக் கழகத்துக்கு ஜெயலலிதா பெயரைச் சூட்டுவதாக சட்டமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றினார். இதற்கு அப்போதைய ஆளுநர் அனுமதி தரவில்லை. இந்த நிலையில், இப்போதைய தி.மு.க. ஆட்சியும் அந்தப் பல்கலைக் கழகத்துக்கு ஜெ.’பெயரை சூட்டும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநர் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இதைக் கிடப்பில் வைத்திருந்த ஆளுநர், 2 மாதங்களுக்கு முன்பு, ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அனுப்பிவிட்டார். ஆனால் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார் முர்மு. இதற்கான கடிதமும் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அந்த தகவல் தமிழக அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது. இது அ.தி.மு.க. தரப்பை டென்சனாக்கியிருக்கிறது. பிரச்சாரத்துக்காக அடிக்கடி தமிழகம் வரும் பிரதமர் மோடி... எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் ஆஹோ, ஓஹோ என புகழ்ந்தாலும், ஜெ.’பெயர் வைப்பதற்கான மசோதாவை நிராகரிக்கச் செய்துவிட்டார். மோடி இங்கே ஜெ.வை புகழ்வதெல்லாம் டிராமாதான்னு அ.தி.மு.க.வினர் மோடியைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.''”

"ஈரோடு ம.தி.மு.க. முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி பரபரப் பாகியிருக்கே...?''

"ஆமாங்க தலைவரே... தி.மு.க.விலிருந்து விலகியபோது வைகோவுடன் சென்ற 9 மாவட்டச் செயலாளர்களில் மிக முக்கியமானவர் ஈரோடு கணேசமூர்த்தி. அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். சமீபமாக தனக்கு உரிய மரியாதையும், அங்கீகார மும் கட்சியில் இல்லை யென்று அவ்வப்போது தனது நண்பர்களிடம் கூறிவந்திருக்கிறார். இந்த முறை தி.மு.க.வில் வழங் கப்பட்ட ஒரு சீட்டையும் துரை வைகோவுக்கு வழங்கி விட்டதால் மனமுடைந்திருந்தார். சொந்தக் கட்சி யான ம.தி.மு.க. தன்னை உதாசீனப்படுத்தி விட்டது என ஆதங்கத்தோடு கூறிவந்த நிலையில்... இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கோவை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் கணேசமூர்த்தியை அன்று மாலையே நேரில் சென்று பார்த்த வைகோ, "எம்.பி. சீட் எதிர்பார்த்தார் அதைவிட பெரிய பொறுப்பு முதல்வரிடம் பேசி தரலாம் என நினைத்திருந்தேன். அவர் இந்த முடிவை எடுத்தது வருத்தத்துக்குரியது" என கூறியிருக்கிறார்.

"என் காதுக்கு வந்த சில தகவல்களை நானும் பகிர்ந்துக்கறேன். அதிமு.க. வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகளாக ஈரோட்டையும் திருப்பூரையும் கருதுகிறதாம். அதேபோல் பா.ஜ.க. தரப்போ, தாங்கள் இரண்டாம் இடத்திற்கு வரக்கூடிய தொகுதிகளாக கன்யாகுமரி, வேலூர், தருமபுரி ஆகியவற்றைக் கருதுகிறதாம். தருமபுரியில் முதலில் பா,.ம.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட்ட அரசாங்கம், என்னால் செலவழிக்க முடியாது. என்னை விட்டுவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டதால்தான், அவருக்கு பதில் சவுமியா அன்புமணியை பா.ம.க களமிறக்கி இருக்கிறதாம். தனது மனைவி சவுமியாவை முதலில் சேலத்தில் நிறுத்தும் எண்ணத்தில்தான் இருந்தாராம் அன்புமணி. டாக்டர் ராமதாஸுக்கோ அரசாங்கத்தை விடுவிக்க விருப்பமில்லையாம். அன்புமணிதான், தொகுதியில் உள்ள பா.ம.க. நிர்வாகிகளைப் பேசவிட்டு அவரை சமாதானம் செய்தாராம்.''’

________________

கெஜ்ரிவால் கைது! ஒன்றுதிரண்ட இந்தியா கூட்டணி!

திர்க்கட்சிகளை வழக்கு நெருக்கடியிலும், சிறையில் வைத்தபடியும் தேர்தலை நடத்தி ஆதாயம் தேட நினைக்கிறது பா.ஜ.க. அரசு.

ff

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ஆம் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்காக கைதுசெய்தது. முந்தைய தினம் உயர்நீதிமன்றத்தை அணுகிய கெஜ்ரிவால் தரப்பு தன்னை கைதுசெய்ய அமலாக்கத் துறைக்கு இடைக்காலத் தடைவிதிக்கக் கோரியது. ஆனால் இதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

தனது கைது சட்டவிரோதமானதென கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து ஏற்கெனவே ஆம் ஆத்மி கட்சியினர் தொடர் போராட்டம் நடத்திவரும் நிலையில், கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக டெல்லி ராம்லீலா மைதானத்திலிருந்து கிளம்பி மார்ச் 31ஆம் தேதி இந்தியா கூட்டணி சார்பில் மெகா பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவும் மார்ச் 15-ஆம் தேதி கைதுசெய்யப்பட்டுள்ளார். தமிழகத்திலும் மக்களவைத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், 2ஜி வழக்கை மீண்டும் கையிலெடுத்துள்ளது சி.பி.ஐ. காங்கிரஸும் தங்களது 11 வங்கிக் கணக்கு களை பா.ஜ.க. முடக்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. இப்படி எதிர்க்கட்சியினர் மீது திட்டமிட்டு வழக்குகளைப் பதிந்தோ, சிறையில் அடைத்தோ முடக்கி தேர்தல் வெற்றியை அடைய பா.ஜ.க. நினைப்பதாக இந்தியா கூட்டணி குற்றம்சாட்டியுள்ளது.

இந்த வழக்கில் டெல்லியின் துணைமுதல்வர் ஒரு வருடத்துக்கும் அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சிசோடியா உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். உச்சநீதிமன்ற நீதிபதி, அமலாக்கத் துறையிடம், “மனிஷ் சிசோடியாவை குற்றம்சாட்ட வலுவான ஆதாரங்கள் உள்ளனவா? மதுபான மொத்த விற்பனையாளர்கள் கொடுத்த பணம்தான் கோவா தேர்தல் செலவுக்குப் பயன்படுத் தப்பட்டது என்பதை எப்படி நிரூபிப்பீர் கள்?’என்பது உள்ளிட்ட கடுமையான கேள்விகளை எழுப்பினார். அப்போது, வழக்கை 6 மாதங்களுக்குள் நடத்திமுடிப்ப தாக அமலாக்கத்துறை உறுதியளித்தது.

உறுதியளித்து 6 மாதங்கள் கடந்துவிட்டன. வழக்கும் முடியவில்லை. கூடுதலாக அரவிந்த் கெஜ்ரிவாலையும் கைதுசெய்திருக்கிறது.

நாட்டின் விசாரணை அமைப்புகள், ஒருதலைப் பட்சமானவை என்ற சந்தேகம் எழுவது நாட்டுக்கும் நல்லதல்ல... ஜனநாயகத்துக்கு நல்லதல்ல!