"நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி என பா.ஜ.க.வின் தேசிய தலைமை தீர்மானித்திருந்தாலும், அதில் உறுதி இல்லை. அதனால்தான் அண்ணாமலையை வைத்து அ.தி.மு.க.வுடன் மோதல் போக்குகளை கையாளுகிறது பா.ஜ.க. தலைமை' என்கிறார்கள் பா.ஜ.க.வின் அறிவுஜீவிகள்.
தமிழகத்தில் குறைந்தபட்சம் 5 எம்.பி.க்கள் கிடைக்க வேண்டும் என காய்களை நகர்த்தி வருகிறது பா.ஜ.க. "ஆசை இருக்கு தாசில் பண்ண; ஆனா, அம்சம் இருக்கு கழுதை மேய்க்க' என தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். அப்படித்தான் இருக்கிறது பா.ஜ.க.வின் ஆசை. அந்த 5 எம்.பி.க்களை பெற 12 இடங்களில் போட்டியிட தீர்மானிக்கிறார்கள். தி.மு.க. -அ.தி.மு.க. ஆகிய இரண்டு பிரதான கட்சிகளுடன் கூட்டணி சேராமல் இது சாத்தியமில்லை என உணர்ந்து எடப்பாடியை கையிலெடுத்தபடி அரசியல் செய்துவருகின்றனர் பா.ஜ.க. தலைவர்கள்.
பா.ஜ.க.வின் டெல்லி மேலிடங்களோடு தொடர்புடைய அறிவுஜீவிகளிடம் நாம் விசாரித்தபோது, "அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தாலும் பா.ஜ.க.வுக்கு ஒரு தொகுதியில்கூட வெற்றி கிடைக் காது' என மத்திய உளவுத்துறை சில மாதங்களுக்கு முன்பே ரிப்போர்ட் தந்திருக்கிறது. காரணம், கூட்டணி வைத்தாலும் அ.தி.மு.க. வாக்குகள் பா.ஜ.க.வுக்கு இடம்மாறுவதில்லை.
ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் பிரதமர் வேட்பாளரை சுட்டிக்காட்டி வாக்கு கேட்க வேண்டுமென் பதற்காகவும், தங்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிப்பதற்காகவும்தான் பா.ஜ.க.வை கூட்டணியில் சேர்த்துக் கொள்கிறோம் என ஒப்புக் கொண்டார் எடப்பாடி பழனிச் சாமி. அதேசமயம், அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தியும் வருகிறார்.
அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி என வருகிறபோது, பா.ஜ.க. விரும்புகிற எண்ணிக்கையிலும் சரி, கேட்க நினைக்கிற தொகுதிகளையும் சரி…எடப்பாடி கொடு
"நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி என பா.ஜ.க.வின் தேசிய தலைமை தீர்மானித்திருந்தாலும், அதில் உறுதி இல்லை. அதனால்தான் அண்ணாமலையை வைத்து அ.தி.மு.க.வுடன் மோதல் போக்குகளை கையாளுகிறது பா.ஜ.க. தலைமை' என்கிறார்கள் பா.ஜ.க.வின் அறிவுஜீவிகள்.
தமிழகத்தில் குறைந்தபட்சம் 5 எம்.பி.க்கள் கிடைக்க வேண்டும் என காய்களை நகர்த்தி வருகிறது பா.ஜ.க. "ஆசை இருக்கு தாசில் பண்ண; ஆனா, அம்சம் இருக்கு கழுதை மேய்க்க' என தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். அப்படித்தான் இருக்கிறது பா.ஜ.க.வின் ஆசை. அந்த 5 எம்.பி.க்களை பெற 12 இடங்களில் போட்டியிட தீர்மானிக்கிறார்கள். தி.மு.க. -அ.தி.மு.க. ஆகிய இரண்டு பிரதான கட்சிகளுடன் கூட்டணி சேராமல் இது சாத்தியமில்லை என உணர்ந்து எடப்பாடியை கையிலெடுத்தபடி அரசியல் செய்துவருகின்றனர் பா.ஜ.க. தலைவர்கள்.
பா.ஜ.க.வின் டெல்லி மேலிடங்களோடு தொடர்புடைய அறிவுஜீவிகளிடம் நாம் விசாரித்தபோது, "அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தாலும் பா.ஜ.க.வுக்கு ஒரு தொகுதியில்கூட வெற்றி கிடைக் காது' என மத்திய உளவுத்துறை சில மாதங்களுக்கு முன்பே ரிப்போர்ட் தந்திருக்கிறது. காரணம், கூட்டணி வைத்தாலும் அ.தி.மு.க. வாக்குகள் பா.ஜ.க.வுக்கு இடம்மாறுவதில்லை.
ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் பிரதமர் வேட்பாளரை சுட்டிக்காட்டி வாக்கு கேட்க வேண்டுமென் பதற்காகவும், தங்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிப்பதற்காகவும்தான் பா.ஜ.க.வை கூட்டணியில் சேர்த்துக் கொள்கிறோம் என ஒப்புக் கொண்டார் எடப்பாடி பழனிச் சாமி. அதேசமயம், அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தியும் வருகிறார்.
அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி என வருகிறபோது, பா.ஜ.க. விரும்புகிற எண்ணிக்கையிலும் சரி, கேட்க நினைக்கிற தொகுதிகளையும் சரி…எடப்பாடி கொடுக்க மாட்டார் என்பதையும் உணர்ந்துள்ளது பா.ஜ.க. தலைமை. இப்படிப்பட்ட புறச்சூழல்களில்தான், மக்களை ஈர்க்கும் முகமாக அண்ணாமலையை வைத்து நடைபயணத் திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படிதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறார் அண்ணாமலை.
தனது நடைபயணத்தில் தி.மு.க.வை தாக்குவது மட்டுமல்ல; அ.தி.மு.க.வையும் சீண்டுகிறார். குறிப்பாக எடப்பாடிக்கு எதெல்லாம் டென்சனை ஏற்படுத்துமோ அதையே செய்கிறார் அண்ணாமலை. அதாவது, "ஓ.பி.எஸ். நல்ல அரசியல் தலைவர். மூன்றுமுறை முதல்வராக இருந்தவர். அவர் மீது எனக்கு நல்ல மரியாதை உண்டு. அவரை நாங்கள் ஒதுக்கிவைக்கவில்லை. அனைவரையும் அரவணைத்தே செல்கிறோம்' என ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக பேசினார் அண்ணாமலை.
அவர் நினைத்த மாதிரியே டென்சனானார் எடப்பாடி. அவர் மட்டுமல்ல அ.தி.மு.க. தலைவர்கள் பலரும் கடுப்பானார்கள். ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவான அண்ணாமலையின் பேச்சை அ.தி.மு.க.வின் ஒருவரும் ரசிக்கவில்லை. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "அண்ணாமலைக்கும் எங்களுக்கும் என்ன இருக்கிறது. எங்களுக்கு தெரிந்தவர்கள் மோடி ஜி, அமீத்ஷாஜி, நட்டாஜி மட்டும்தான்'' என வெளிப்படையாகவே அண்ணாமலையை விமர்சித்தார்.
இதை ஊதிப்பெரிதாக்க வேண்டும் என நினைத்த அண்ணாமலை, "சிலபேர் அரசியல் விஞ்ஞானிகளாக தங்களை நினைத்துக்கொள் கிறார்கள். அவர்களுக்குப் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை'' எனச் சொல்ல, "அண்ணாமலை ஒரு அரசியல் கத்துக்குட்டிங்கிறது எல்லோருக்கும் தெரியும். அ.தி.மு.க.வில் நான் படிப்படியாக வளர்ந்து பொறுப்புகளுக்கு வந்தவன். அதனால் அண்ணாமலையை நான் பொருட்படுத்துவதில்லை. எங்கள் மீது ஒரு துரும்பு எறிந்தால் பதிலுக்கு நாங்கள் இரும்பை வீசுவோம். தமிழகத்தில் தங்களுக்கான இடம் என்ன என்பதை உணர்ந்து விமர்சிக்கவேண்டும்'' என பதிலடி கொடுத்தார் செல்லூர் ராஜு.
இத்துடன் இந்த மோதல் முடிந்துவிடவில்லை. அ.தி.மு.க.வின் மா.செ.க்கள் கூட்டத்தை கடந்த வாரம் நடத்தினார் எடப்பாடி. இதில், அண்ணாமலையின் அரைவேக்காட்டு அரசியலை கடுமையாக கண்டித்துப் பேசினார். எடப்பாடியின் அனுமதியுடன், கூட்டம் முடிந்ததும் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அ.தி.மு.க.வை தொட்டால் கெட்டார். செல்லூர் ராஜுவை மட்டுமல்ல அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டனை யார் விமர்சனம் செய்தாலும் சகித்துக் கொள்ள மாட்டோம். எதிர் விமர்சனங்களை சந்திக்க நேரிடும்'' என கடுமையாக எச்சரித்தார்.
இப்படி அ.தி.மு.க. -அண்ணாமலை மோதல் வலுத்து வருகிறது. பா.ஜ.க.வின் தேசிய தலைமையின் விருப்பம் இல்லாமல் எடப்பாடிக்கு எதிராக இப்படி அண்ணாமலை மல்லுக்கட்டமாட்டார். இதற்கு சில காரணம் இருக்கிறது. அதாவது, தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையில்தான் கூட்டணி இருக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்.ஸும் பா.ஜ.க.வும் விரும்புகிறது. தமிழக பா.ஜ.க.வில் உள்ள ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியான அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகத்தின் மூலம் அதனை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. அதனைத்தான் அண்ணாமலை பிரதிபலிக்கிறார்.
அண்ணாமலைக்கும் எடப்பாடியின் அரசியலில் விருப்பமில்லை. அதனாலேயே, நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தினால் 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை நாம் பிடிக்கலாம். அதற்கு, இந்த தேர்தலில் அ.தி.மு.க. பலவீனமாக வேண்டும் அல்லது எடப்பாடி பலவீனமாக வேண்டும். அவர் தலைமையில் கூட்டணியில் சேர்ந்து எடப்பாடிக்கு எதற்கு நாம் உயிர்க்கொடுக்க வேண்டும்? நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி கணிசமாக வெற்றி பெற்றுவிட்டால், பா.ஜ.க.வுக்கு லாபமில்லை; அவருக்குத்தான் லாபம். அதை வைத்து பா.ஜ.க.வை அவர் மிரட்டவும் செய்வார்.
அதனால் இந்த தேர்தலில் அ.தி.மு.க.வை விட்டுவிட்டு பா.ஜ.க. தலைமையில் ஒரு அணியை நாம் உருவாக்கினால், தேர்தல்களம் குழம்பிய நிலையில் இருக்கும். அது பா.ஜ.க.வுக்கு சாதகமாக லாம். அதனால், பா.ஜ.க. தலைமைக்கு எடப்பாடி ஒப்புக்கொண்டால் ஓ.கே! இல்லையெனில், அவரை விட்டுவிட்டு பா.ம.க., த.மா.கா., தே.மு.தி.க., ஓ.பி.எஸ்., தினகரன், தலித் அரசியல் அமைப்புகள் ஆகியவைகளை வைத்து பா.ஜ.க. தலைமையில் ஒரு அணியை உருவாக்கலாம்.
எடப்பாடிக்கு எதிரி என்பதற்காக ஓ.பி.எஸ்.ஸையும் தினகரனையும் நாம் ஏன் எதிரியாக பார்க்க வேண்டும்? எல்லோரையும் சமமான தூரத்தில் வைத்தே தேர்தல் கூட்டணியை அணுகலாம் என அமித்ஷாவிடம் விவாதித் திருக்கிறார் அண்ணாமலை. அதனை அமித்ஷாவும் ஏற்றுக் கொண்டதால்தான், அ.தி. மு.க.வை சீண்டுகிறார். இதில் இன்னொரு விசயமும் அடங்கி யிருக்கிறது. அதாவது, அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி நீடித்து, அதில் நாம் போட்டி யிட்டால் எடப்பாடி நம்மை ஜெயிக்க வைக்கமாட்டார் என அண்ணாமலை உணர்ந்துள் ளார்.
நாம் தோற்றுப்போனால் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் நம்மை வெச்சி செய்யும் என்றும், அதன்பிறகு தமிழகத்தில் வலிமையாக அரசியல் செய்யமுடியாது என்றும் நினைக்கிறார். அதனால்தான் பா.ஜ.க. தலைமையில் ஒரு அணியை கட்டமைக்க முயற்சிக்கிறார் அண்ணாமலை. அப்படி ஒரு அணி உருவாகி, அதில் போட்டி யிட்டாலும் நாம் தோற்றுப்போவோம் என்பதும் அவருக்கு தெரிந்தே இருக்கிறது.
அதனால்தான், "நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை' என சமீபத்தில் தனது முடிவை வெளிப்படுத்தியிருக்கிறார் அண்ணாமலை. ஆக, பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர்களின் க்ரீன் சிக்னல் படிதான் அ.தி.மு.க.வுக்கு எதிரான அரசியலை கட்டமைத்து பா.ஜ.க. தலைமையில் ஒரு அணியை உருவாக்குவதில் தீவிரம்காட்டுகிறார் அண்ணா மலை. இது எந்தளவுக்கு அண்ணாமலைக்கு பயன்படும்கிறது தேர்தல் நெருங்க நெருங்கத்தான் தெரியவரும்‘’ என்று விரிவாக சுட்டிக்காட்டு கிறார்கள் டெல்லியோடு தொடர்புடைய பா.ஜ.க. அறிவுஜீவிகள்.
பா.ஜ.க.வின் அரசியல் குறித்து மேலும் நாம் விசாரித்தபோது,‘’"எடப்பாடியின் அ.தி.மு.க.வை பலவீனப்படுத்த திட்டமிடுவது போல, தி.மு.க. கூட் டணிக்குள் விரிசலை உருவாக்கவும் மோடி- அமித்ஷா கூட்டணி ஆலோசித்திருக்கிறது. குறிப் பாக, தி.மு.க. கூட்டணியிலிருந்து கம்யூனிஸ்டுகளை வெளியே கொண்டுவர முயற்சித்துள்ளது. கம்யூனிஸ்டுகளை பொறுத்தவரை, தங்களுடைய கூட்டணி கட்சி ஆட்சியில் இருந்தாலும் ஆட்சிக்கு எதிராக மக்கள் பிரச்சனைகளை போராட்டமாக முன்னெடுப்பது அவர்களின் கொள்கை. ஆனால், தமிழகத்தில் அப்படிப்பட்ட போராட்டங்களை முன்னெடுக்க முடிவதில்லை என சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகளின் அகில இந்திய தலைமைகளுக்கு ஒரு ஆதங்கம் இருக்கிறது.
அதனால், அந்த கட்சிகளை தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியே கொண்டு வருவதற் கான முயற்சியை எடுத்துள்ளனர். இதற்காக, பிரதமர் அலுவலத்தி லுள்ள முக்கிய உயரதிகாரி ஒருவர் மூலம் கம்யூனிஸ்டுகளின் அகில இந்திய தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள் ளது. கம்யூனிஸ்டுகள் வெளியேறி பா.ஜ.க. அல்லாத அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால், தி.மு.க.வை ஆதரிக்கும் முஸ்லீம் கட்சிகள், அமைப்புகள், தலித் கட்சிகளும் அ.தி.மு.க.வுக்கு செல்லும் வாய்ப்பு உண்டு. அப்போது தி.மு.க. கூட்டணி வலிமையிழக்கும். இதனால் தேர்தலில் வாக்குகள் சிதறும். அப்போது இந்துக்களின் வாக்குகளை ஒருமுகப்படுத்த முடியுமா என்பதை ஆராயலாம். அதனால், ஜெயலலிதா பாணியில் தமிழகத்தில் ஒரு மக்கள் நல கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளது பா.ஜ.க. தலைமை''‘என்கிறார்கள் டெல்லி சோர்ஸ்கள்.
ஆக... நாடாளுமன்றத் தேர்தலை வைத்து, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற பாணியில் அரசியல் திட்டங்களை வகுத்து வருகிறார்கள் பா.ஜ.க. தலைவர்கள்.