உள்ஒதுக்கீடு அரசிதழில் வெளியிடப் பட்டாலும் அரசு எடுத்துள்ள முடிவின்படி 6ம் வகுப்பு முதல் +2வரை அரசுப் பள்ளியில் படித்தவர்கள் மட்டுமே உள் ஒதுக்கீட்டிற்கு தகுதி பெற்றவர்கள். அரசு உதவிபெறும் பள்ளியில் படித்தவர்களும் தனியார் பள்ளி கணக்கிலேயே வருவார்கள் என்று கூறியதால் உடைந்துள்ளனர் பல ஏழை மாணவர்கள்.
300 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 17 வது இடத்திலும் புதுக்கோட்டை மாவட்ட அளவில் முதலிடத்திலும் உள்ள அறந்தாங்கி அரசுப் பள்ளி
உள்ஒதுக்கீடு அரசிதழில் வெளியிடப் பட்டாலும் அரசு எடுத்துள்ள முடிவின்படி 6ம் வகுப்பு முதல் +2வரை அரசுப் பள்ளியில் படித்தவர்கள் மட்டுமே உள் ஒதுக்கீட்டிற்கு தகுதி பெற்றவர்கள். அரசு உதவிபெறும் பள்ளியில் படித்தவர்களும் தனியார் பள்ளி கணக்கிலேயே வருவார்கள் என்று கூறியதால் உடைந்துள்ளனர் பல ஏழை மாணவர்கள்.
300 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 17 வது இடத்திலும் புதுக்கோட்டை மாவட்ட அளவில் முதலிடத்திலும் உள்ள அறந்தாங்கி அரசுப் பள்ளி மாணவன் மகாதீர்கான். இடையில் சில வருடங்கள் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்துள்ளதால் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கிறார். இதே நிலைதான் கீழாத்தூர் மாணவி புவனரோஷினிக்கும்.
இந்த நிலையில்தான் நெல்லை மணிமூர்த்திஸ்வரம் மாணவி ப்ரீத்தி, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த எங்களுக்கும் உள் ஒதுக்கீட்டில் இடம் வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன், ""சமூகநீதியை நிலைநாட்டிய அரசுக்கு நன்றி. அரசு உதவிபெறும் பள்ளியில் படித்தோரும் பயன்பெறும் வகையில் உரிய தெளிவாணையை அரசு வெளியிட வேண்டும். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை எந்த வகுப்பில் அரசுப் பள்ளியில் சேர்ந்து இருந்தாலும் அவர் களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்'' என்றார்.
இது குறித்து தொடர்ந்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய முன்னாள் தி.மு.க அமைச்சர் தங்கம் தென்னரசு... ""அரசுப் பள்ளி மாணவர் களுக்கு... ஆய்வுக் குழு 10 சதவீதம் இடஒதுக்கீடு கொடுக்கச் சொன்ன பிறகு 7.5 சதவீதம் கொடுப்பதாக சட்டமன்றத்தில் ஆளுந்தரப்பு சொன்ன போதே 2.5 சதவீதத்தை ஏன் குறைக்கணும் என்று நானும், மாசிலாமணியும் கேள்வி எழுப்பினோம் பதில் சொல்லவில்லை. அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தினோம். இப்போது, அரசு உதவி பெறும் பள்ளியும் தனியார் பள்ளிதான் என்று முதலமைச்சர் சொல்லி இருப்பது வேடிக்கையாக உள்ளது. 1996ல் முதலமைச்சர் கலைஞர் கிராமப்புற மாணவர் களுக்காக 15 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிய போது அதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என்றுதான் வழங்கினார். இதில் எந்தப் பாகுபாடும் பார்க்க வேண்டியதில்லை. அதனால் ஆய்வுக்குழு பரிந்துரைத்த 10 சதவீதத்தில் 7.5 போக மீதமுள்ள 2.5 சதவீதத்தை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதே சரியாக இருக்கும்'' என்றார்.
-இரா.பகத்சிங்