ராங்கால் அதிகாரி மாற்றம் ராஜ்பவனில் சந்தேகப் புயல்! அண்ணாமலை ஆரம்பித்த புது பிஸ்னஸ்!

dd

"ஹலோ தலைவரே, ராஜ்பவன் பெரும் பரபரப்பில் மூழ்கி யிருக்கு''”

"ஆமாம்பா, அங்கே சந்தேகப் புயல் வீசியதா தகவல் வருதே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, கவர்னர் ஆர்.என்.ரவியின் முதன்மைச் செயலாளராக, ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆனந்தராவ் விஷ்ணு பாட்டீல் இருந்து வந்தார். இவர் திடீரென ஒன்றிய அரசின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறி வுத் துறையின் இணைச் செயலாளராக கடந்த 15ஆம் தேதி மாற்றப்பட்டி ருக்கிறார். இதுகுறித்து விசாரித்தபோது, ராஜ்பவனின் ரகசியங்கள் பலவற்றையும் அவர் தமிழக அரசுக்கு லீக் பண்ணுவ தாக கவர்னர் ரவிக்கு கொஞ்ச நாளாகவே சந்தேகம் இருந்துவந்ததாம். அதனால் மன உளைச்சல் அடைந்த அவர், ஆனந்தராவை என்ன பண்ணுவது என்று யோசித்தாராம். அந்த நேரத்தில், ராஜ்பவன் செலவினங்களில் ஊழல்கள் நடப்பதாக கவர்னர் காதுக்கு ஒரு தகவல் வர, இதையெல் லாம் மனதில் வைத்து, உடனடியாக ஆனந்தராவை மாற்றும்படி தமிழக அரசிடம் கவர்னர் ரவி கேட்டுக்கொண் டிருக்கிறார். அதேநேரம், இப்படிப்பட்ட கவர்னரிடம் பணியில் தொடர் வதை விரும்பாத ஆனந்தராவும், தன்னை ஒன்றிய அரசுப் பணிக்கு மாற்றும்படி தமிழக அரசிடம் விண்ணப்பம் வைத்தாராம். இதைத் தொடர்ந்து தான் அவர் மாற்றப்பட்டிருக்கிறார். தற்போது நிம்மதிப் பெருமூச்சு விடும் கவர்னர், ஆனந்தராவ் இடத்திற்கு நம்பகத்தன்மைமிக்க தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை கேட்டுப் பெறலாமா? என்ற ஆலோசனையில் இருக்கிறாராம்.''”

"ரஜினி குடும்பத்தில் காதுகுத்து வைபவம் நடந்திருக்கே?''”

rr

’"ஆமாங்க தலைவரே, நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கும், பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக் கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்குதான் கோவை சூளூரில் இருக்கும் தங்கள் குல தெய்வக் கோயிலில் கடந்த 17ஆம் தேதி மொட்டையடித்து காது குத்தியிருக்கிறார்கள். இதில் கலந்துகொள்ள இரு வீட்டாரும் முதல்நாளே கோவைக்குச் சென்று விட, ரஜினியும் அவரது மனைவி லதாவும் நிகழ்ச்சியன்று கோவை சென்றனர். அங்கு உறவினர்கள் புடைசூழ கா

"ஹலோ தலைவரே, ராஜ்பவன் பெரும் பரபரப்பில் மூழ்கி யிருக்கு''”

"ஆமாம்பா, அங்கே சந்தேகப் புயல் வீசியதா தகவல் வருதே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, கவர்னர் ஆர்.என்.ரவியின் முதன்மைச் செயலாளராக, ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆனந்தராவ் விஷ்ணு பாட்டீல் இருந்து வந்தார். இவர் திடீரென ஒன்றிய அரசின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறி வுத் துறையின் இணைச் செயலாளராக கடந்த 15ஆம் தேதி மாற்றப்பட்டி ருக்கிறார். இதுகுறித்து விசாரித்தபோது, ராஜ்பவனின் ரகசியங்கள் பலவற்றையும் அவர் தமிழக அரசுக்கு லீக் பண்ணுவ தாக கவர்னர் ரவிக்கு கொஞ்ச நாளாகவே சந்தேகம் இருந்துவந்ததாம். அதனால் மன உளைச்சல் அடைந்த அவர், ஆனந்தராவை என்ன பண்ணுவது என்று யோசித்தாராம். அந்த நேரத்தில், ராஜ்பவன் செலவினங்களில் ஊழல்கள் நடப்பதாக கவர்னர் காதுக்கு ஒரு தகவல் வர, இதையெல் லாம் மனதில் வைத்து, உடனடியாக ஆனந்தராவை மாற்றும்படி தமிழக அரசிடம் கவர்னர் ரவி கேட்டுக்கொண் டிருக்கிறார். அதேநேரம், இப்படிப்பட்ட கவர்னரிடம் பணியில் தொடர் வதை விரும்பாத ஆனந்தராவும், தன்னை ஒன்றிய அரசுப் பணிக்கு மாற்றும்படி தமிழக அரசிடம் விண்ணப்பம் வைத்தாராம். இதைத் தொடர்ந்து தான் அவர் மாற்றப்பட்டிருக்கிறார். தற்போது நிம்மதிப் பெருமூச்சு விடும் கவர்னர், ஆனந்தராவ் இடத்திற்கு நம்பகத்தன்மைமிக்க தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை கேட்டுப் பெறலாமா? என்ற ஆலோசனையில் இருக்கிறாராம்.''”

"ரஜினி குடும்பத்தில் காதுகுத்து வைபவம் நடந்திருக்கே?''”

rr

’"ஆமாங்க தலைவரே, நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கும், பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக் கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்குதான் கோவை சூளூரில் இருக்கும் தங்கள் குல தெய்வக் கோயிலில் கடந்த 17ஆம் தேதி மொட்டையடித்து காது குத்தியிருக்கிறார்கள். இதில் கலந்துகொள்ள இரு வீட்டாரும் முதல்நாளே கோவைக்குச் சென்று விட, ரஜினியும் அவரது மனைவி லதாவும் நிகழ்ச்சியன்று கோவை சென்றனர். அங்கு உறவினர்கள் புடைசூழ காதுகுத்து நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்திருக்கிறது. நிகழ்ச்சிக்கு முன்னதாக வணங்காமுடியின் சகோதரரும் தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மறைந்த பொன்முடி யின் நினைவுகளைப் போற்றும் வகையில் அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்திருக்கிறார் ரஜினி. அப்போது பொன்முடியின் அரசியல் செயல்பாடுகளைப் பற்றி தனது சம்பந்தி வணங்கா முடியிடம் ஆர்வமாக ரஜினி கேட்டறிந்தாராம். பேரக்குழந்தையின் காதுகுத்தின் போது ரஜினியிடம் கொப்பளித்த உற்சாகம், அங்கிருந்த அனைவரையும் தொற்றிக்கொண்டதாம்.''

"பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை புதிய தொழிலில் கோடிக்கணக்கில் கல்லாக் கட்டுகிறார்னு தகவல் பரவுதே?''”

ff

"ஸ்ரீபெரும்புதூரில் பெரிய பெரிய தொழிற் சாலைகள் இருக்கின்றன. இதைக் கவனித்த பா.ஜ.க. அண்ணாமலை, அங்கே இரும்புக் கழிவுகளை எடுக்கும் கிராப் தொழிலை அசோக் என்பவர் பெயரில், பெரிய அளவில் ஆரம்பித்திருக்கிறாராம். அங்கு நிலவும் தொழில் போட்டியையும், அந்தப் பகுதியில் கோலோச்சும் தாதாக்களையும் மீறி இந்தத் தொழிலில் ஒருவர் புதிதாக களமிறங்குவது கடினமானது என்கிறார்கள். ஆனால் பா.ஜ.க. அண்ணாமலையோ, காவல்துறை அதிகாரிகள் சிலரின் ஆதரவோடு, இந்தத் தொழிலில் குதித்திருக்கிறாராம். கோடிக்கணக்கில் வருமானம் புரளும் இப்படிப்பட்ட தொழில்கள்தான் அண்ணா மலையின் அரசியல் இலக்கு என்கிற பா.ஜ.க. தரப்பினர், மாநிலத் தலைவர் பதவி கைவிட்டுப் போவதற்குள் முடிந்தவரை வருமான வழிகளை எல்லாம் கைப்பற்றிவிடுவார். இதன் மூலம் தமிழகத்தின் மிகப்பெரும் தொழிலதிபர் என்கிற பெருமையை அவர் விரைவில் பெற்றுவிடுவார் என்றும் ஏக்கத்தோடு சொல்கிறார்கள்.''”

"பிரதமர் மோடி பெயரிலும் கலெக்ஷன் புகார் எழுந்திருக்கிறதே?''”

dd

"பா.ஜ.க.வின் விழுப்புரம் கோட்டப் பொறுப் பாளராக இருப்பவர் வினோஜ் பி செல்வம். இவர் நமோ எஜுகேசனல் அண்ட் சேரிட்டபிள் ட்ரஸ்ட் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை நடத்தி வரு கிறார். பொதுவாக, பா.ஜ.க.வின் கட்சிப் பொறுப் பில் இருப்பவர்கள், கல்வி அறக்கட்டளை எதுவும் நடத்தக்கூடாதாம். ஆனால், இவரோ ஒன்றிய அமைச்சர் எல்.முருகனின் ஆதரவாளர் என்பதால் அவரது சப்போர்ட்டுடன் அந்த அறக்கட்டளை யை நடத்திவருகிறார். இந்த நிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், தனது அறக்கட்டளை சார்பில் ’கோ தானமாக’ 70 பசுமாடுகளை தானம் செய்யும் நிகழ்ச்சியை 16 ஆம் தேதி சென்னை சைதாப்பேட் டையில் உள்ள தக்கர்பாபா வித்யாலயாவில் நடத்தினார். அந்த விழாவில் அவர் ஒன்றிய அமைச்சர் முருகனையும், வட மாநிலங்களை சேர்ந்த எம்.பி.க்கள் சிலரையும் அழைத்திருந்தார். அதே சமயம், கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தரப்பில் இருந்து இவர் யாரையும் அழைக்காமல் புறக்கணித்துவிட்டாராம்.''”

"அண்ணாமலைக்கும் ஒன்றிய அமைச்சர் முருகனுக்கும் ஏழாம்பொருத்தம் என்பதால்தான் இந்தப் புறக்கணிப்பா?''”

"சரியா யூகிச்சிட்டீங்க தலைவரே, இதனால் வினோஜ் மீது ஏகக்கடுப்பில் இருக்கும் அண்ணா மலை ஆதரவாளர்கள், அவர் பிரதமர் பெயரைச் சொல்லி, கோ தானம் செய்யும் சாக்கில் ஏகத்துக்கும் வசூல் மேளாவை நடத்தியதாக ஜே.பி.நட்டா வரை தேசியத் தலைமைக்குப் புகாரை அனுப்பி, அவ ருக்கு எதிராக பரபரப்புச் சூறாவளியை ஏற்படுத்தி யிருக்கின்றனர்.இது குறித்து அவர்கள் தரப்பில் விசாரித்த போது, ’"வினோஜ், மோடிக்காக கோ தானம் செய்வதாகச் சொல்லி, தொழிலதிபர்களி டம் 2 கோடியே 25 லட்ச ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறார். ஆனால் இவர் ஒரு பசு மாட்டை 25 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து வாங்கிய வகையில், அவர் கொடுத்த 70 பசுமாடுகளுக்கான தொகை அதிகபட்சம் 21 லட்சம்தான் ஆகியிருக்கும். விழாச் செலவு 4 லட்ச ரூபாய்ன்னு வச்சிக்கிட்டாக் கூட 25 லட்சத்தில் விழாவை முடிச்சிட்டு, 2 கோடி ரூபாயை லம்பாக சுவாஹா பண்ணியிருக் கிறார் வினோஜ். இதை நாங்கள் சும்மா விடப்போவதில்லை'’ ன்கிறார்கள் காட்டமாக.''”

"ஆளுங்கட்சி சேர்ம னுக்கும் கவுன்சிலருக்கும் நடந்த ஃபைட், காரைக்குடியைப் பரபரப்பாக்கி இருக்கிறதே?''”rr

"ஆமாங்க தலைவரே, காரைக்குடி நகராட்சித் தலைவர் முத்துதுரையிடம் கோபத்தோடு சென்ற 3-ஆவது வார்டு தி.மு.க. கவுன்சிலரான மைக்கேல் ராஜ், "என் வார்டுக்கு செய்யவேண்டிய வேலை களைச் செய்வீர்களா? மாட்டீர்களா?'’ என்று கேட்க, இதில் கடுப்பான சேர்மன் முத்துதுரை ’"என்ன அதிகாரமாப் பேசுறே..?'’ என்று பதிலுக்குக் காட்டம் காட்டினார். இதில் இவர்களுக்கு இடையே வார்த்தைகள் முற்றி, அது கைகலப்பாக மாறியிருக்கிறது. மைக்கேல்ராஜின் முகத்தில் சேர்மன் குத்துவிட, பதிலுக்கு சேர்மனை இழுத்துக் கீழே போட்டு, தாக்கி இருக்கிறார் கவுன்சிலர். இதைத் தொடர்ந்து வாய் கிழிந்த நிலையில் திருப்புத்தூரி லுள்ள அமைச்சர் பெரியகருப்பன் வீட்டிற்கு கவுன்சிலர் மைக்கேல் ஓட, அவர் பின்னாலேயே சேர்மனும் அங்கே ஓடிவந்தார். இருவரின் கோலத்தையும் கண்டு பதறிப்போன அமைச்சர், இரவுவரை பஞ்சாயத்து பேசி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி இருக்கிறார். இருப்பினும் இவர்களின் ஃபைட் விவகாரம் காரைக்குடியையே சூடாக்கியிருக்கிறது.''”

"ரெய்டில் சிக்கிய அ.தி.மு.க. மா.செ. பஞ்சப்பாட்டு பாடி புலம்புகிறாராமே?''”

“"ஆமாங்க தலைவரே, வடசென்னை அ.தி.மு.க. மா.செ.வான ராஜேஷ் வீட்டிலும் அண் மையில் லஞ்ச ஒழிப்புத்துறையின் ரெய்டு நடந்தது, அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத் தியது. காரணம், அவர் வறுமையில் வாடுவதாகவும், மனைவியின் நகைகளை விற்று கட்சிக்கு செல விட்டதாகவும் வீடு முழுக்க அடமான ரசீதுகளே இருப்பதாகவும் சொல்லிவந்தார். இந்த நிலையில் நடந்த ரெய்டின்போது, அவர் வீட்டில் கொஞ்சம் பணத்தைக் கைப்பற்றிய அதிகாரிகள், ஜி ஸ்கொயர் நிறுவனத்திடம் அவர் 3 கோடி ரூபாய் கொடுத்து வீடு வாங்கியதற்கான ஆவ ணங்களையும் கைப்பற்றி, விவகாரத்தை வெளிச்சத்துக் குக் கொண்டு வந்தனர். இதனால், தி.மு.க.வினருக்குச் சொந்தமான அந்த நிறு வனத்தில் அ.தி.மு.க. மா.செ,. வீடு வாங்கலாமா? என ராஜேஷை, அவர் கட்சி யினரே கிண்டல் செய்தனர். இதையறிந்த ராஜேஷ், கட்சிக் கூட்டமொன்றில் மேடையேறி, "தி.மு.க. காரர்களிடம் இருந்து ஒரு நல்ல பொருள், நியாய மான விலையில் கிடைத்தால், அதை வாங்கக் கூடாதா? வர்த்தகத்தில் எதற்குக் கட்சி பாகுபாடு?'’ என்று எகிறியடித்து அவர்களைத் திகைக்க வைத்ததோடு, இப்போதும் நான் கஷ்டத்தில்தான் தவிக்கிறேன்’ என்றும் புலம்பினாராம்.''”

"அண்மையில் நடந்த ஒரு என்கவுன்ட்டர் காவல்துறைக்கு எதிராக பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறதே?''”

dd

"ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள சுங்குவார் சத்திரம் காவல் நிலைய போலீஸ் டீம், விஷ்வா என்கிற ரவுடியை அண்மையில் என்கவுண்டர் செய்த விவகாரம், பெரும் சர்ச்சையை எழுப்பி இருக்கிறது. சம்பவத்துக்கு முன்னதாக, அந்த காவல்நிலைய இன்ஸ்பெக்டரும் எஸ்.ஐ.யும், சம்மந்தப்பட்ட நபரிடமே ’"உன்னைச் சுட்டுவிடு வேன்'’என்று மிரட்டும் ஆடியோ ஒன்று பரபரப்பாக இணைய தளங்களில் வலம்வருகிறது. அதேபோல், அந்த விஷ்வாவும் "நான் கொல்லப் பட்டால் இந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளும் தான் காரணம்'’ என்று தன் கைப்படவே கடிதம் எழுதி வைத்திருக்கிறாராம். காஞ்சி எஸ்.பி. சுதாகர், முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதாவிடமும் எடப்பாடியிடமும் முன்பு பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவராம். இவர், துறையில் இருக்கும் சில உயரதிகாரிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தவே, இப்படிப்பட்ட சர்ச்சைகள் உருவாக வழிவகுத்திருக்கிறார் என்கிற பேச்சு காவல்துறையினரிடமே அடிபடுகிறது. இப்படிப் பட்ட என்கவுன்ட்டர்கள் நடந்தால் அதை எக்ஸிகியூட் மாஜிஸ்திரேட் விசாரிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால், இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் என்கவுண்டர் விவகாரத்தை எளிதாகத் துடைத்துப் போட்டிருக்கிறார்கள்.''”

"காங்கிரஸ் தரப்பில் இருந்து என் காதுக்கு வந்த செய்தி ஒன்றை, நானும் உன் மூலம் பகிர்ந்துக்கறேன். காங்கிரஸின் சீனியரான ப.சிதம்பரமும், அவர் மகன் கார்த்தி சிதம்பரமும் அண்மையில் சோனியா, ராகுலிடம் ஒரு கோரிக்கை வைத்தார்களாம். அதாவது, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையை எங்களிடம் ஒப்படையுங்கள். கட்சி நடத்துவதற்கு எவ்வளவு செலவானாலும் நாங்கள் பார்த்துக் கொள் கிறோம். அதேபோல் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான செலவுகளையும் நாங்களே கவனித்துக் கொள்கிறோம் என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்களாம். இதையறிந்த காங்கிரஸ் நிர்வாகிகள், ’ப.சி.யின் திட்டத்தை தேசியத் தலைமை அனுமதிக்கக் கூடாது’ என்று இப்போது குமுறலை வெளிப்படுத்த ஆரம்பித்திருக் கிறார்கள்.''

nkn200923
இதையும் படியுங்கள்
Subscribe