"ஹலோ தலைவரே, விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் இருக்கும்னு தகவல்கள் வருது''”
"ஆமாம்பா, முதல்வரின் மருமகன் சபரீசன் நடத்திவரும் ’பென்’குழுதான் அமைச்சரவை மாற்றத்திற்கான பட்டியலைத் தயாரிக்கிதுன்னு சொல்றாங்களே?''”
"ஆமாங்க தலைவரே, இப்போதைய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்துத் தீவிரமாக அலசும் சபரீசன் டீம், முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க அமைச்சரவை மாற்றத்திற்கான ஒரு பட்டியலையும் தயார் செய்திருக்கிற தாம். இந்தப் பட்டியலின் படி, அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாற்றப்படலாம் என்றும், இடையில் பதவிப் பறிப்பிற்கு ஆளான ஆவடி நாசர் மீண்டும் அமைச்ச ராவார் என்றும் தகவல்கள் கசிகின்றன. அதேபோல் அமைச்சர்களுக்கான இலாகா மாற்றமும் இருக்கப் போகிறது என்கிறார்கள். அமைச்சரவை மாற்றத்தைப் போலவே தி.மு.க.வில் மா.செ.க்கள் மாற்றத்திற்கான பட்டியலையும் சபரீசன் டீம் தயார் செய்து வருகிறதாம். பரம்பரை பரம்பரையாக தான்தான் மா.செ. என்று மார்தட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு ஆப்பு வைத்து விட்டு, அவர்களுக்கு பதிலாக புதியவர்களுக்கு அந்தப் பொறுப்பைக் கொடுப்பதையே பிரதானமாகக் கருதுகிறதாம் சபரீசன் டீம்.''”
"நல்லது நடந்தா சரிதான். கலைஞர் நினைவுநாள் வருகிறதே?''”
"ஆமாங்க தலைவரே, கலைஞரின் நினைவுநாளான ஆகஸ்ட் 7-ல், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வழக்கம்போல் அமைதிப் பேரணி நடத்தப்படவிருக்கிறது. சென்னை சிம்சன் அண்ணா சிலை அருகே தொடங்கும் இந்த பேரணி, கலைஞரின் நினைவிடத்தில் நிறைவடைய இருக்கிறது. அங்கு ஸ்டாலின் தலை மையில் தி.மு.க. தலைவர்கள் கலைஞருக்கு மலரஞ்சலி செலுத்துகிறார் கள். இந்த ஆண்டு நடக்கும் பேரணியில் மு.க.அழகிரியைக் கலந்து கொள்ளுமாறு அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்துகிறார்களாம். ஆனால் அழகிரியோ, இன்னும் கட்சியில் முறைப்படி சேர்த்துக் கொள்ளப்படாத நிலையில், இந்தப் பேரணியில் நான் பங்கேற்பது, தம்பி ஸ்டாலினுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தலாம் என்று தயக்கத்தைக் காட்டுகிறாராம். கலைஞர் நூற்றாண்டில் வருகிற இந்த நினைவுநாள், அவருக்குப் புகழ் சேர்க்கும் வகையில் நடத்தப்பட இருக்கிறது.'' ”
"அண்மையில் நடந்த தி.மு.க. இளைஞரணி கூட்டத்தில் சீனியர் அமைச்சரான துரைமுருகன் கலந்துகொள்ளவில்லையே?''”
"ஆமாங்க தலைவரே, தி.மு.க. இளைஞரணிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அமைப்பாளர்களின் அறிமுகக் கூட்டத்தை கடந்த 29ஆம் தேதி சென்னை அறிவாலயத்தில் நடத்தினார் உதய நிதி. இதில் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். இந்தக் கூட்டத்துக்கு துரைமுருகனைத் தவிர தி.மு.க. தலைவர்கள் அனைவரும் வந்தி ருந்தனர். அன்று அவர் சென்னை யில் தன் வீட்டில் தான் இருந்தார். இதுகுறித்து விசாரித்தபோது, கட்சியின் பொதுச்செயலாளரான துரைமுருகனை, அந்தக் கூட்டத் திற்கு முறைப்படி அழைக்கவில்லை என்கிறார்கள். இதனால் ஏற்பட்ட ஆதங்க ஊடலால்தான் துரை முருகன், முதல்வர் ஸ்டாலின் அழைத்தும் கூட ஏதேதோ சாக்கு போக்கு சொல்லி, அதில் கலந்து கொள்வதைத் தவிர்த்துவிட்டார் என்கிறார்கள்.''”
"நெய்வேலியில் பா.ம.க. அன்புமணி நடத்திய போராட்டம், அவர் தரப்பினருக்கு பதட்டத்தைக் கொடுத்திருக்கிறதே?''
"ஆமாங்க தலைவரே, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் நில எடுப்புக்கு எதிராக பா.ம.க. அன்புமணி நடத்திய போராட்டம், அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக எதிர்விளைவுகளை உருவாக்கி இருக்கிறது. போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய அன்புமணியை விடுவித்த காவல்துறை, அவர் பேச்சைக் கேட்டு மூர்க்கமாகப் போராடிய 56 பேர் மீது, கொலை முயற்சி வழக்கைப் பதிவுசெய்து பதட்டப்படுத்தி இருக்கிறது. ’எங்களை தேவையில்லாமல் அன்புமணி சிக்கலில் சிக்க வச்சிட்டாரே...’ என்று, இதனால் பா.ம.க.வினரும் விவசாயி களும் அவர் மீது கடும் எரிச்சலில் இருக்கிறார்களாம். அதேபோல், என்.எல்.சி.க்கு எதிராகப் போடப்பட்ட வழக்கிலும், விவசாயிகள் எதிர்பார்த்த தீர்ப்பு வராததில் அவர்களின் விரக்தி பல மடங்காகி இருக்கிறதாம். மொத்தத்தில் தங்கள் செல்வாக்கு வளரும் என்று கணக்குப்போட்டு அன்புமணி நடத்திய போராட் டம், அவர் இமேஜை டேமேஜ் பண்ணிவிட்டது.''”
"மதுரையில் எடப்பாடி நடத்தும் அ.தி.மு..க. பொன்விழா மாநாட்டைப் பிசுபிசுக்க வைக்க ஓ.பி.எஸ்.சும், தினகரனும் கைகோர்த்துக்கொண்டு வரிஞ்சி கட்டறாங்களே?''”
"உண்மைதாங்க தலைவரே, ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் தங்கள் மாநாட்டை பிரமாண்டப் படுத்தணும்னு எடப்பாடி, பல்வேறு முயற்சிகளில் இருக்கார். அதே நேரம், இந்த மாநாட்டிற்கு தென்மாவட்டங்களைச் சேர்ந்த முக்குலத்தோர் சமூக அ.தி.மு.க.வினர் கலந்துகொள்ளக் கூடாதுன்னு, ஓ.பி.எஸ்.சும், தினகரனும் கூட்டு சேர்ந்து கொண்டு காய்களை நகர்த்திக் கொண்டு இருக்கிறார்கள். இதற்காக, தங்கள் சமூகத்தின் பெயரில் இயங்கும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகளிடம், கூட்டத்துக்கு நம் ஆட்கள் யாரும் போகக்கூடாது; ஏதேதோ சொல்லி அழைப்பார் கள்; நீங்கள் மயங்கிவிடக் கூடாது. நம் சமூகத்தை ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டும் எடப்பாடிக்கு, இந்த மாநாட்டைப் புறக்கணிப்பதன் மூலம் நாம் பாடம் புகட்டவேண்டும் என்றெல்லாம், வேப்பிலை அடித்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே கொடநாடு வழக்கில் எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஓ.பி.எஸ். தரப்பு முன்னெடுத்த போராட்டம், எடப்பாடிக்கு பகீரைக் கிளப்பியிருக்கிறது.''”
"ஆனாலும், முக்குலத்தோர் தரப்பை எடப்பாடி விடாமல் துரத்துகிறதே?''”
"ஆமாங்க தலைவரே, ஓ.பி.எஸ்.ஸும், தினகரனும் தங்களுக்கு எதிராக நடத்திவரும் மூவ் களை அறிந்து கொண்ட எடப் பாடி, அதை முறியடிக்கும் படி, அ.தி. மு.க.வின் மா.செ.க்களை முடுக்கிவிட்டு வருகிறார். இவர்களுக் கிடையிலான இந்த பங்காளிச் சண்டையில் புழுதி பறக்கிறது. இந்த மதுரை மாநாட்டில், ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மற்றும் தினகரனின் கட்சியை சேர்ந்தவர்கள் பலரையும் கொண்டு வந்து, தங்கள் கட்சியில் சேர்க்கும் வைபவத்தையும் நடத்தி, அவர்கள் இருவருக்கும் ஷாக் கொடுக்கவும் எடப்பாடி திட்டமிட்டிருக்கிறார். இதற்காக, அவர்கள் தரப்பிலிருந்து ஆட்களைத் தூக்கும் அசைன்மெண்டு களுடன் எடப்பாடி ஆட்கள், தென்மாவட்டங்களில் ரவுண்டு கட்டி வருகின்றனர். அ.தி.மு.க.வில் இருக்கும் முக்குலத்தோர் சமூக மாஜிக்களையும் எடப்பாடித் தரப்பு வளைத்து வருகிறது. குறிப்பாக, தினகரன் ஆதரவாளராக இருந்து, பிறகு தி.மு.க.வில் இணைந்து, தற்போது முக்கிய பொறுப்பில் இருக்கும் முக்குலத்தோர் பிரமுகரான முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரை அ.தி.மு.க.வுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது எடப்பாடி தரப்பு.''”
"புதுவையில் இருக்கும் என்.ஆர்.காங்கிரஸ், தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கிறதே?''”
’"ஆமாங்க தலைவரே, அகில இந்திய என்.ஆர்.காங்கிரசின் தலைவரும், புதுச்சேரியின் முதல்வருமான ரெங்கசாமி, பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறார். இவர் தனது கட்சியை, தமிழ்நாட்டிற்குள் விரிவுபடுத்தத் திட்டமிட்டிருக்கிறார். அதற்காக, தமிழகத்தில் உள்ள தனது ஆதரவாளர்களை பாண்டிச்சேரிக்கு அழைத்து அடிக்கடி ஆலோசனைகளையும் அவர் நடத்துகிறார். ஆகஸ்ட் 4ஆம் தேதி ரெங்கசாமியின் பிறந்தநாள் வருவதால், இந்தமுறை அதை சென் னையிலும் கொண்டாட அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டிருக் கிறார்கள். இதுவரை ரெங்கசாமியின் பிறந்தநாள் சென்னையில் முன்னெடுக்கப்பட்டதில்லை. முதன்முறையாக இப்போதுதான் சென் னையில் நடத்துகின்றனர். இந்த சாக்கிலாவது தங்கள் நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் நடத்தி, அதில் பூரிப்பு காண்கிறது ரெங்கசாமி தரப்பு.''”
"தி.மு.க.வில் கடைக்கோடித் தொண்டர்கள் வரை ஒருவித அதிருப்தியில் இருக்கிறார்களே?''”
"ஆமாங்க தலைவரே! எம்.பி. தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில், தி.மு.க.வின் பல மட்டத்திலும் அதிருப்தியைப் பார்க்க முடிகிறது. காரணம், கட்சியினர் ஏதாவது நியாயமான வேலை வாய்ப்பு, டிரான்ஸ்பர் சிபாரிசுக்குச் சென்றால்கூட அமைச்சர்கள் கண்டுகொள்வ தில்லையாம். குறிப்பாக, மருத்துவத்துறை, மின்சாரம், கல்வித் துறைகளில் டிரான்ஸ்பர் விஷயமாகச் சென்றால் கூட, டி.என்.பி.எஸ்.சி. மூலமாகத்தான் முடியும் என காரணம் சொல்லி தட்டிக் கழிக்கிறார்களாம். கட்சிக்காரர்கள் கண்டுகொள்ளப்படாததால், தலைமைச் செயலக கேன்டீன் பகுதிகளில் கரைவேட்டித் தொண்டர்களை இப்போ தெல்லாம் அதிகம் பார்க்க முடிவதில்லை. முதல்வரைச் சுற்றி உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். டீம், தடுப்புச் சுவரை எழுப்பி இருப்பதால் கட்சியினர், அவர் தரப்பை நெருங்கவே முடிவதில்லைன்னு மூத்த அமைச்சர்கள் சிலரும், தி.மு.க. நிர்வாகிகளும், அதி காரிகளுக்கென்ன கையக்கழுவிட்டுப் போயிருவாங்க. கட்சிக்காரன வச்சு வேலை வாங்குறது நாங்கதான... அவங்க திருப்தியா இருந்தாத்தானன்னு ரொம்பவே வருத்தப்படுறாங்களாம். மேலும், இதை முதல்வரின் கவனத்துக்கு எப்படியாவது கொண்டு செல்லவேண்டும் என்பதிலும் மும்முரமா இருக்காங்க.''”
"மாற்றுத்திறனாளிகள் தரப்பில் இருந்தும் சலசலப்பு கேட்குதே?''”
’"மாற்றுத்திறனாளிகள் துறையின் செயலாளராக இருக்கும் ஆனந்தகுமார் ஐ.ஏ.எஸ், மாற்றுத் திறனாளிகளை மோசமாக நடத்துவதாகப் புகார்கள் எழுந்திருக்கின்றன. கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களுக்கு, பணி நிரந்தரம் செய்துதர வேண்டும் என்று அரசாணை இருக்கிறதாம். இதைக் கூட அவர் கண்டு கொள்வதே இல்லையாம். இதுபோல் மாற்றுத் திறனாளிகளின் நியாயமான கோரிக்கைகளை எல்லாம் ஆனந்த குமார் ஏற்க மறுப்பதாகவும் அவர்கள் தரப்பில் இருந்து குற்றச் சாட்டுக் குரல்கள் எழுந்துகொண்டே இருக்கின்றன.''”
"சென்னையில் திடீர்னு என்கவுண்டர் நடந்திருக்கே?''”
"சமீபத்தில் சென்னை கூடுவாஞ்சேரி பகுதியில் வாகன சோதனையின்போது, காவல்துறையினரைத் தாக்க முயன்ற சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய இரண்டு ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்பட்டதாக காவல்துறையினர் அறிவித்தனர். உண்மையில் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர்களைப் பிடித்துச் சென்று, திட்டமிட்டு இப்படியொரு டெரர் டிராமா அரங்கேற்றப்பட்டதாக காக்கிகள் தரப்பிலேயே டாக் அடிபடுகிறது. கொல்லப்பட்ட அவர்கள் இருவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அது ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவத்துக்கு முதல்நாள், தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ், டி.ஜி.பி. தலைமையில் நடந்த ஒரு சட்டம் ஒழுங்குக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது, தாம்பரத்தில் இருக்கும் ரவுடிகள் க்ரைம்களை நடத்துவதாக இண்டலிஜன்ஸ் அதிகாரிகள் புகார்களை வாசித்தனராம். இதன் பின்னணியில்தான் அந்த என்கவுண்டர் நடந்திருக்கிறதாம்.''”
"நானும் என் காதுக்கு வந்த ஒரு ஏடாகூடத் தகவலைப் பகிர்ந்துக்கறேன். அண்மைக்காலமாக சென்னையில் முறைகேடான மசாஜ் சென்டர்கள் பெருத்துவிட்டன. அங்கு சிவப்பு விளக்கு பகிரங்கமாகவே எரிகிறதாம். குறிப்பாக, அழகு நிலையம் நடத்தும் பெண்மணி ஒருவர் தலைமையில்தான் இந்த சிவப்புத்தொழில் அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது. அவருக்கு, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மனோரஞ்சிதமான ஒரு போலீஸ் உயரதிகாரியின் ஆசி பலமாக இருக்கிறதாம். இந்தத் தொழிலுக்கு ஏதேனும் பிரச்சனை வந்தால், அந்த உயரதிகாரி நேரடியாகவே தலையிட்டு சரிசெய்கிறாராம்.''’