"முன்னாள் அமைச்சரையே தோற்கடித்துவிட் டேன். எனக்குக் கட்டுப்பட்டவர்களாக கட்சியினர் இருக்கவேண்டும் என்ற மனநிலையில் நடந்து கொள்கிறார், ராஜபாளையம் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன்'’என புகார் வாசித்த அக்கட்சியின் சீனியர்கள், ராஜபாளையம் நகர்மன்றத் தலைவர் பவித்ராவின் கணவர் ஷ்யாம்ராஜா இறப்பை சம்பந்தப்படுத்தி குமுறலைப் பகிர்ந்தனர்.
"தனக்கு வேண்டியவர்களை கட்சிக்குள் கொண்டுவந்த தங்கப்பாண்டியன், பாரம் பரியமாக கட்சியில் இருப்பவர்களை ஓரம் கட்டினார். நகராட்சி கழிப்பறை பராமரிப்பு ஒப்பந்தக்காரர்கள் மூலம், மாமூலாக ஒரு தொகை பிரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக் குப் போய்ச் சேர்கிறது. ‘"என்கிட்ட இல்லாத ஒண்ணு அவகிட்ட இருக்கா?'’என்று பலர் முன்னிலையில் பெண் உறுப்பினர் கேட்டதெல்லாம் நடந்தது. நகர்மன்றத் தேர்தலில் 42 வார்டுகளிலும் செலவுக்காக ரூ.10 லட்சம் வீதம் தந்து ரூ.4 கோடிக்கு மேல் செலவழித்தார் ஷ்யாம்ராஜா. இதுபோக, வார்டுகளின் ஏற்ற இறக்கங்களைச் சமாளிப்பதற்காக ரூ.2 கோடி எம்.எல்.ஏ. தரப்பிடம் கொடுத்தார். அதில் ரூ.50 லட்சத்தை மட்டும் செலவழித்துவிட்டு, ரூ.1.5 கோடியை லபக் செய்துவிட்ட எம்.எல்.ஏ. தரப்பு, தேர்தல்நாள் நெருக்கத்தில் "செலவு அதிகமாகிவிட்டது' எனச் சொல்லி, மேலும் ரூ.50 லட்சத்தை ஷ்யா மிடம் கேட்டது. அப்போது ஷ்யாம் "நான் கொடுத்த முழுப்பணத்தையும் நீங்கள் செல வழிக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். ரூ.50 லட்சத்தை நீங்க திருப்பித் தந்தால் நல்லது'’என்று பரிதவிப்புடன் கேட்டார்.
ராஜபாளையம் நகராட்சி திட்டப் பணிகளுக்காக ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடான நிலையில், அதில் கமிஷன் கேட்டது எம்.எல்.ஏ. தரப்பு. நகர்மன்றத் தலைவர் பவித்ராவின் கணவர் என்ற முறையில் அவர்களிடம் ஷ்யாம், "நானே மாசம் ரூ.12 தீ லட்சம் வட்டி கட்டிட்டு ரொம்ப சிரமத்துல இருக்கேன். நகராட்சிக்குள்ள வந்து கமிஷன் கேட்டா எப்படி?'’என்று எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி. தரப்பிடம் ஆதங்கப்பட்டார். இதன் பின்னணியில் நகரச் செயலாளர்கள் இருவர் இருந்தனர். இந்த விஷயத்தை தெற்கு மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம், ஷ்யாம் சொன்னார். கட்சி நலனைக் கருத்தில்கொண்டு, அவர் "பொறுமையாக இரு. எம்.எல்.ஏ.வை அனுசரித்துப் போ'’எனச் சொல்லியிருக்கிறார்.
அன்று நகரச்செயலாளர் மணிகண்ட ராஜாவுடன் காரசாரமாகப் பேசிய ஒரு மணி நேரத்தில் ரத்த அழுத்தம் அதிகமாகி, ஷ்யாமுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்பல்லோ மருத்துவ மனையில் சேர்த்தார்கள். சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்துவிட்டார். ஷ்யாம்ராஜா "உடலுக்கு இறுதி மரியாதை செய்ய மணிகண்ட ராஜாவோ, எம்.எல்.ஏ. தங்கப்பாண்டி யனோ வரக்கூடாது' என உறவினர்கள் கொதிநிலையில் இருந்தபோது, இருவரும் வந்தனர். அந்தச் சூழலை உணர்ந்து, வந்த வேகத்தில் இருவரும் கிளம்பினர். அடுத்து, மாவட்ட செயலாளர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆரும் தங்கம் தென்னரசுவும் துக்க வீட்டுக்கு வந்தபோது, எம்.எல்.ஏ. தங்கப்பாண்டி யனும் உடன்வந்தார். அப்போது, ஷ்யாம்ராஜாவின் முக்கிய உறவினர்களை அமைச்சர்கள் இருவரும் சமாதானப் படுத்தினர். ‘"இனிமேல் ராஜபாளையம் நகராட்சி விஷயத்தில் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் தலையீடு இருக்காது...'’ என்று உறுதி அளித்திருக்கிறார்கள்''’என்றனர்.
ராஜபாளையம் நகர தி.மு.க. செயலாளர் மணிகண்டராஜாவை தொடர்புகொண்டோம். “"ஷ்யாமுக்கு மூணு வருஷமா உடம்பு சரியில்லாம இருந்துச்சு. எங்களுக்குள்ள பேசுறதுக்கு என்ன இருக்கு? ஊர்ல யார்கிட்டயும் நான் பணம் கேட் டதே இல்ல. எனக்கு நேர்மைன்னா நேர்மைதான். பழைய காங்கிரஸ் ஆளுங்க என்னைப் பத்தி சும்மா சொல்லுவாங்க. சுப்பாராஜா பீரியட்ல நாங்க செஞ்சோம்ல. அதை மனசுல வச்சிகிட்டு பேசுவாங்க. 40-வது வார்டுல என் சீட்ட ஷ்யாமுக்கு விட்டுக் கொடுத்து ஜெயிக்க வச்சேன். இவ்வளவும் கொடுத்துட்டு என்னத்த பேசப் போறோம்? சில யோசனைகள சொல்லுவோம். இப்படி பண் ணுங்க; அப்படி பண்ணுங்கன்னு சொல்லுவோம். எனக்கும் ஷ்யாமுக்கும் வேற எதுவும் கிடையாது. சேர்மன் பவித்ரா எனக்கு அண்ணாச்சி பொண்ணுதான். சும்மா எவனாவது ஏதாவது சொல்லுவான்''” என்று சலித்துக்கொண்டார்.
ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியனிடம் பேசினோம்.
"ராஜபாளையம் தொகுதி, நகராட்சி மக்கள் பணி நல்லபடியா நடக்குது. இங்க யாரும், யாரையும் டார்ச்சர் பண்ணல. எந்த பிரச்சனையும் கிடையாது. உங்களுக்கு வந்தது பொய்யான தகவல். கட்சியோட வளர்ச்சிக் காக சில நடவடிக்கைகள எடுக்கவேண்டி யிருக்கு. இங்கே எம்.எல்.ஏ., எம்.பி. இருக்கோம். கட்சியோட வளர்ச்சி பாதைய பார்ப்போம். நாங்க எல்லாரும் சேர்ந்துதான் பண்ணுறோம். மக்களுக்கு என்ன தேவையோ அதைத்தான் செய்றோம். இதுல மாற்றுக் கருத்துன்னு யாருக்குமே இருக்காது. 100 பெர் சன்ட் கிடையாது. என்மேல யாரும் எதுக்கு டென்ஷனா இருக்கப்போறாங்க. நகராட்சிக்கு ஐடியா கொடுக்கிறோம். சேர்மன் சொன்னதக் கேட்டுக்கிறோம். இதுல என்ன இருக்கு? நக ராட்சி கழிப்பறை பணியை மகளிர் குழுவுக்கு கொடுத்திருக்கோம். அந்த கழிப்பறைய வச்சி கட்சிக்காரங்க குடும்பத்த ஓட்டிக்குவாங் கன்னு கொடுத்திருக்கோம்... அவ்வளவு தான்''’எனப் பட்டும் படாமலும் பேசினார்.
அந்த சீனியர்கள் நம்மிடம், “"தி.மு.க. வில் நகரப் பொறுப்புக்கு வருவதற்கென்று விதிமுறைகள் உள்ளன. மணிகண்டராஜா வைத்திருப்பது 2020-ல் கட்சியில் சேர்ந்த ஆன்லைன் உறுப்பினர் அட்டை. அவரால், விதிமீறலாக இங்கே நகரச் செயலாளர் ஆக முடிகிறது. மொத்தத்தில் ராஜபாளையத்தில் கட்சி நிலைமை கொஞ்சம்கூட சரியில்லை. தலைமை கவனம் செலுத்தி கட்சியை சீர்படுத்தவேண்டும்''’என்றனர்.
ஆளும்கட்சி என்றால் ஊருக்கு, ஊர் புகைச்சல் இல்லாமலா?